வியாழன், 17 நவம்பர், 2016

மறந்துபோன மாவீரன் வ.வு.சி

செக்கிலுத்த கிரிமினல் வழக்கறிஞர்...
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
நவம்பர்-18 இன்று வ.வு.சியின் நினைவு தினம்.
மாவீரனுக்கு தமிழர் தனிப்படையின் சார்பில் வீர வணக்கத்தை பகிர்ந்து கொள்வோம்.
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு.

தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார்.



அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர். வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பிவருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.

வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்!

வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.

இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி

ரூ. 200-தான்! சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார். சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே!” என்று கர்ஜித்தார். சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது. ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர். வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.

பற்றியெரிந்த திருநெல்வேலி

தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள். இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது. வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.

முடக்கிப்போட்ட சிறை

ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடுசெய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாதபோது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார். சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பிவைத்தார் நெல்லையப்பர்.

விடுதலைக்குப் பின்னரும் துயரம்

1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள்

தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.

சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.

இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.

தமிழ்ப் பணி

பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.

வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார். வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது. இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக மட்டுமல்லாமல் கப்பலோட்டிய இந்தியராகவும் கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி.!

- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: murugan_kani@yahoo.com

   நன்றி:-விகடன்,தி இந்து தமிழ்
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 14 நவம்பர், 2016

இன்று...!நெஞ்சில் ஏந்துவோம்..!

நவம்பர்-14,இன்று
நமது தேசத்தின் முதல் பிரதமர்,லஞசம்,ஊழல்
கரைகளுக்கு அப்பார்பட்டவர்,

மிகப்பெரிய செல்வச்சீமான்
குடும்பத்தில் பிறந்தாலும்,விளிம்புநிலை
மக்களுடன் எழுமையாக வாழ்ந்தவர்,
மென்மையாக நாட்டை வழிநடத்தியவர்,
குழந்தைகளின் மீது பேரன்பு காட்டிய....
நமது ஜவகர்லால்நேரு அவர்கள் பிறந்ததினம்

இன்று சித்தர்பெருமகனார் குருநானக் பிறந்ததினம்.!

இவர்களின் வரலாற்றை
நெஞ்சில் ஏந்தி போற்றுவோம்..|

best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 4 நவம்பர், 2016

எண்ணங்கள்-5

எண்ணங்கள்-5
♦♦♦♦♦♦♦♦

நமது மனமும்.மனதில் எழக்கூடிய
எண்ணங்களும் நமது வாழ்வின்
நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன.

இன்று நம் முன் விரிந்துள்ள எண்ணற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலதனம் எது? தனிமனித மனதில்
இடைவிடாது உருவேற்றிய மந்திரங்கள்தான் (எண்ணங்கள்தான்)

அறிவியலால் சாதிக்கமுடிந்ததை
மனதில் எழும் எண்ணங்களால்
சாதிக்க முடியுமா.? முடியும்.!

நல்ல எண்ணங்களை மனதில்
உருவேற்றுங்கள்..!வெற்றிகரமான
பலன்கள் உங்கள் முன்னே
விரிந்து நிற்கும்..! செய்து பாருங்கள்
வெற்றி நிச்சயம்..!

நல்ல எண்ணங்களை உள் வாங்குவோம்.!
நாளும் நலமுடன் நல வாழ்வு
வாழ்வோம்..!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
(வெளிமாநில வாழ் தமிழர்களின்
பாதுகாப்புக்களம்)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 3 நவம்பர், 2016

பிரதமருக்கு சிறுவனின் கடிதம்.?

டியர் மோடி, என்னுடைய கிரமத்திற்கு வாருங்கள், குழந்தைகள் எப்படி உயிரிழக்கின்றனர் என்பதை பாருங்கள்,’ சிறுவன் உருக்கமான கடிதம்

 நீங்கள் உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள். எங்களுடைய கிராமத்திற்கு உங்களால் வரமுடியாதா

http://www.dailythanthi.com/News/India/2016/11/03163526/Dear-Modi-please-come-to-my-village-and-see-how-children.vpf

சிறுவனின் கடிதம் .நெஞ்சை உலுக்குகிறது.ஆப்பிரிக்கா நாடுகளின் நிலைமை நம் கண்முன் விரிகிறது.

உண்மை உலக அரங்கத்தை அதிரச்செய்கிறது...
இன்றைக்கு இந்தியக் கிராமங்களின் நிலைமை இதுதான்.

நம்முடைய கிராமங்கள் இன்றும்
சுகாதாரம்,சூழலியல் மாசுபாடுகள்
கல்விக்குறைபாடு உள்ளிட்ட
வளர்ச்சியின்மையை நோக்கியே
சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் பிழைப்புவாதிகளின் துணையோடு - இந்திய சுகாதாரத்துறை லஞ்சமும்,ஊழலும்
நிறைந்து நம்மை மெல்ல,மெல்ல
கொன்று கொண்டிருக்கிறது.

நமது கிராமத்திலிருந்து,நமது கிராம பஞ்சாயத்து அமைப்பகளுக்கு-நம்மால் நேரடியாக தேர்வு செய்யக்கூடிய நமது பக்கத்து வீட்டுகாரரரிலிருந்து
இந்த ஊழல் சீர்கேடு தொடங்குகிறது...

ஒரு ஐந்தாண்டுகாலம் உள்ளாட்சி
பிரதிநிதிகளாக இருந்தால்-பத்து இலட்த்திலிருந்து, நூறு கோடிவரை
சம்பாதிக்கிறார்கள்

உள்ளாட்சியைப் பொருத்தவரைஆளும்கட்சி,எதிர்கட்சி
என்ற பாகுபாடு கிடையாது. இவர்களில்
பெருபான்மையாக கூட்டுக்களவானிகளாக இணைந்தே செயல்படுகின்றனர்.

வாக்காளர்களாகிய நாமும்- நம்முடைய வேலைககாரர்களை(மக்கள் பிரதிநிதிகளை) எஜமானர்களாக்கி
நம்முடைய வாக்குகளை பதிவுசெய்ய
பணம்,குவாட்டர்,பிரியாணி என்று
அவர்களிடம் வரிசைகட்டி,கையேந்தி நிற்கிறோம்

மேலும், இது  போன்ற
படுபாதகங்களை மக்கள்முன் கொண்டுவர வேண்டிய ஓரு சில ஊடகங்கள் பணம்பறிக்கும் கூடாரங்களாக மாறிவிட்டது.

இதில் மோடியை குறைசொல்லி என்ன
பயன்.? நமது தேசம் இன்னொரு மிசாவை நோக்கி பயனிப்பதாகவே
நான் கருதுகிறேன்.

இவன்:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி.
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
செயல் உறுப்பினர்,
தமிழர் தனிப்படை.
♦♦♦♦♦♦♦♦♦♦♦
http//www.theeranchinnamalai.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

எண்ணங்கள்-4

பணத்தைப்பற்றி சிந்தித்தால்..!
பணம் கிடைக்கும்..!

வறுமையைப்பற்றி சிந்தித்தால்..!
வறுமை கிடைக்கும்..!

நல்லவர்களைப்பற்றி நினைத்தால்..!
நல்லவர்களின் நட்பு கிடைக்கும்..!

தீயவர்களைப்பற்றி நினைத்தால்..!
தீயவர்களின நட்பு கிடைக்கும்..!

மற்றானை கெடுக்க நினத்தால்..!
நமக்கு கெடுதல் வந்து சேரும்..!

நல்ல எண்ணங்களை உள் வாங்குவோம்.!
நாளும் நலமுடன் நல வாழ்வு
வாழ்வோம்..!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
(வெளிமாநில வாழ் தமிழர்களின்
பாதுகாப்புக்களம்)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 31 அக்டோபர், 2016

Dhanush win kodi political vedi !

கொங்குநாடு! சாம்பல்மேடா!
என்ற பாதுகைகள் ஏந்தி
சூழலியல் கேடுகளுக்கு எதிரான
போராட்டக்களமாக....
கொங்குநாட்டின் பொள்ளாட்சியை
கதைக்களமாக கொண்டுஅரசியல்
கதகளி ஆடியிருக்கும ...
நடிகர் தனுசுவின்
"கொடி" திரைப்படம்பற்றி ஒருபார்வை.==

படத்தின் திரைக்கதை இயக்கனர்
துரை.செந்தில்குமார் நமது கொங்குதமிழன்.

பொள்ளாச்சியில் செயல்படும்
பாதரசத் தொழிற்சாலை கழிவுகள்
மண்னையும் மக்களையும் காவு
வாங்குகிறது,

நடிகர் விஜயின் தந்தையும், எதிர்கட்சித்தலைருமான எஸ்.ஏ.சி இதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை
தலைமைதாங்கிநடத்துகிறார்.

இந்தப்போராட்டத்தில் வாய்பேச
முடியாத கருணாஸ் தீக்குளித்து
இறந்துபோகிறார்.அவரது மகனான (கொடி) தனுஷ் அவரது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற...தனது தந்தையின் தலைவரான எஸ்.ஏ.சியை
தனது உயிருனும் மேலான தலைவராக
ஏற்றுக்கொண்டு...கட்சியின் இளைஞர்அணி அமைப்பாளராக உயரந்து...பொள்ளச்சி இடைத்தேர்தலில்
கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

ஆளும்கட்சியாக உள்ள எதிர் முகாமில்
அமைதிப்படை அம்மாவாசை ஸ்டைலில(தீப்பொறி ருத்ரா) திரிஷா
ஜெட்வேகத்தில் வளர்ந்து மாவட்டமாகி
இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.எனக்கு திரிஷாவின்
கதாபாத்திரம் நமது மாப்பிள்ளை செந்தில்பாலாஜியை ஞாபகப்படுத்துகிறது.

திரிஷா-தனுஷ் சிறுவயது முதலே காதலர்கள்.இடைத்தேர்தலில்
இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கு பிறகு  நடப்பு அரசியல் சூழ்ச்சிகளை மையமாக வைத்து
திரைக்கதை ஜெட்வேகத்தில் நகர்கிறது.
இரட்டையர்களில் இன்னொரு (அன்பு)
தனுஷ்... கோவை இந்துஷ்த்தான் கல்லூரி லெக்சராக,பயந்தாகொள்ளி மனோபாவம் கொண்ட கதாபாத்தித்தில்
நடித்துள்ளார்.இவரின் காதலியாக "ப்ரேமம்" புகழ் அனுபாமா முட்டைவியாபாரியாக நடித்துள்ளார்.

கதைகளம் முழுவதும் கொங்குநாட்டை
சுற்றியும். கதாபாத்திரங்கள்.வசனங்கள்
கொங்குசாயலுடனும் நகர்கிறது.

மொத்தத்தில் "கொடி" சூழலியல் கேடுகளையும்,அதற்கு தூணைபோகும்
அரசியல் பின்னனிகளையும்.சமகால
அரசியல் பித்தலாட்டங்களையும்
பச்சையாக விவரிக்கிறது.
best links in tamil
More than a Blog Aggregator

மாநிலம்? பிரிக்கப்பட்ட 60-ம் ஆண்டு!

1956-நவம்பர்-01 ம் தேதி மதராஸ் ஸ்டேட் (சென்னை ராஜதானி) என்ற தமிழ் மொழி பேசும் தனி மாநிலம் உறுவாக்கப்பட்டு 60-ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

ஆனால்,தமிழ்நாடு என்ற பெயர் அன்றைய முதல்வர் அறிஞர்.அண்ணாவால் அதிகாரபூர்வமாக மழங்கப்பட்ட தினம
1967-ஜீலை-18.

மொழிவாரி மாநிலங்கள் உருவானவிதம்
அதனால் விளைந்த நன்மைகள் குறித்து
இளம் தமிழ் எழுத்தாளர் திரு.பூங்கொண்றனனின் -பூ.கொ வலைபக்கத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டதை தயவு செய்து படியுங்கள்.

நன்றி;-பூ.கொ

ஜோசப் ஸ்வார்ட்ஸ்பர்க்கின் கட்டுரையின் சாராம்சம் இந்த அறிமுகத்தில் தரப்படுகிறது:
இந்தியாவில் மொழிவாரி மாநிலம் என்கிற கோரிக்கையின் முக்கியமான அச்சாரம் வங்கப்பிரிவினையின் பொழுது ஏற்பட்டது. பல்வேறு மொழி பேசுபவர்கள் ஒன்றாக வழங்கிவருவதால் அவற்றைப் பிரிக்கலாம் என அப்பொழுதைய உள்துறை செயலாளர் ஹெர்பர்ட் ரிஸ்லே தெரிவித்தார். அப்படிப் பிரிக்கப்பட்டது உண்மையில் மொழி வளர்ச்சியைக் குறைத்தது, மீண்டும் வங்கம் சேர்க்கப்பட்ட பொழுது பல்வேறு மொழி பேசுபவர்கள் நிறைந்திருந்த பீகார், ஒரிசா பகுதிகள் ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டன. எனினும், அசாம் தனியாகப் பிரிக்கப்பட்டு அங்குள்ள வங்காளிகள் மொழிச்சிறுபான்மையினராக விடப்பட்டார்கள். காங்கிரஸ் முதல் மொழிவாரி மாநிலமாகப் பீகாரை 1908-ல் மாற்றியது.

ஒன்பது வருடங்கள் கழித்துச் சிந்த், ஆந்திரா மொழிவாரி மாநிலங்களாகக் காங்கிரஸ் செயல்பாட்டில் மாறின. காங்கிரஸ் காந்தி களத்துக்கு வந்த இருபதுகளில் துவங்கி மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில், 36-ல் சிந்த், ஒரிசா ஆகிய தனி மொழிவாரியான மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிந்து மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று தேசியவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

மெட்ராஸ் மாகாணத்தில் விடுதலைக்கு முன்னர் மொழிச்சிறுபான்மையினர் முறையே 1.77 கோடி தெலுங்கர்கள், நாற்பது லட்சம் ஒரியா மொழி பேசுபவர்கள், 37 லட்சம் மலையாளிகள், 17 லட்சம் கன்னடர்கள் இருந்தார்கள். மராத்தி மொழி பேசாத குஜராத்திகள், சிந்திக்கள், கன்னடர்கள் முறையே 34, 31,26 லட்சங்களில் இருந்தார்கள். மத்திய மாகாணங்களில் ஐம்பத்தி நன்கு லட்சம் மராத்தியர்களும், பஞ்சாபில் அறுபத்தி ஐந்து லட்சம் லஹ்நடா மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். ஆந்திராவை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று தெலுங்கு மொழி பேசுபவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், (1.77 கோடி) அவர்கள் தனி மாநிலமாக ஆனாலும், 25 லட்சம் தெலுங்கர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் தொடர்வார்கள் என்பதால் அதனை எதிர்த்தார்கள். எனவே, இந்த வகையான பிரிவினையை ஆங்கிலேய அரசு செய்ய மறுத்தது.

விடுதலைக்கு முன்னர்வரை மொழிவாரி மாநிலங்கள் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் மதரீதியாக நாடு துண்டாடப்பட்ட சூழலில் மொழிவாரியாக நாட்டைப் பிரிக்க யோசித்தது. அது நாட்டைப் பால்கன் பிரதேசங்கள் போலத் துண்டாடிவிடும் என்று அது பயந்தது, புதிய தேசத்தைக் கட்டமைப்பது, அகதிகளைக் குடியேற்றுவது, காஷ்மீர் சிக்கல், ஆங்கிலேயர் ஆளுகைக்குள் வராத 5௦௦க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகளை இணைப்பது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கல் ஆகியவற்றால் அதனைத் தள்ளிப்போட்டார்கள். விடுதலைக்குப் பிந்தைய வருடம் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை பற்றி ஆராய வேண்டிய குழு அது தேவையற்றது என்று அறிக்கை அளித்தது.

விடுதலைக்குப் பின்னர் மெட்ராஸ், பம்பாய், ஹைதராபாத் மாகாணங்களில் மொழிச் சிறுபான்மையினர் மொத்தமாக ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலே இருந்தார்கள். அடுத்துச் சென்னையில் அமர்ந்தபடி பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரா தனி மாநிலமாக வேண்டும் என்று போராட முதல் தனி மொழிவாரி மாநிலமாக அது உருவானது. 1955-ல் மொழிவாரி மாநிலங்களை இந்தியா முழுக்க அமைக்க அமைக்கப்பட்ட பாஸ்லி அலி தலைமையிலான குழுவின் முன்னர் 1,52,25௦ ஆவணங்கள் பல்வேறு தரப்புகளால் தரப்பட்டன. அவற்றில் இருந்து சலித்தெடுத்து மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவை புவியியல் தொடர்ச்சி, பொருளாதாரச் சாத்தியம், சமூககலாசாரத் தனித்துவம், ஜாதி, பகுதி, வர்க்க கூட்டணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மொழிவாரி மாநிலங்களைப் பரிந்துரைத்தது.

ஆந்திராவோடு தெலங்கானா இணைக்கப்பட்டது, மைசூர் மாநிலத்தோடு ஹைதராபாத், பம்பாய், மெட்ராஸ் பகுதிகளின் கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் ஹைதராபாத்தின் மராத்வாடா பகுதி, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள், மத்திய மாகாணத்தின் பீரார் ஆகியவற்றைச் சேர்த்து மராத்தி, குஜராத்தி இணைந்த இருமொழி மாநிலமாக ஆனது. பின்னர் மராத்திகள் பொங்கி எழுந்து தனி மாநிலமாக மாறினார்கள். மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் ஆகியவற்றை இணைத்து தனி இந்தி பெரும்பான்மை மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியது. மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் பகுதி திருவிதாங்கூர் பகுதியோடு இணைக்கப்பட்டுத் தனிக் கேரளா மாநிலமானது. PEPSU மாகாணத்தோடு பிரிவினைக்குப் பிந்தைய பஞ்சாப் சேர்க்கப்பட்டது.

வடகிழக்கில் பல்வேறு பழங்குடியின குழுக்கள் ஆயுதம் ஏந்தியது, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அருகில் அம்மாநிலங்களின் எல்லை இருந்தது, பன்முகக் கலாசாரம் ஆகியன மிகக்குறைந்த மக்கள்தொகை இருந்தும் தனித்தனி மாநிலங்களை உருவாக்க அனுமதித்தன. மகாராஷ்டிரா, குஜராத் பிளவுபட்ட சூழலில் பஞ்சாப் பகுதி சீக்கியர்கள் குருமுகி வரிவடிவத்தில் தங்களின் மொழியை எழுதி தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டினார்கள். மதரீதியாக இந்துக்களில் இருந்து தங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டது ஏற்கப்படாவிட்டலும் அதையே மொழிரீதியான கோரிக்கையாக மாற்றிய பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல பிரதேசம் என்று மாநிலங்கள் சுருக்கியும், விரித்தும் மாற்றப்பட்டன. சண்டிகார் பஞ்சாப், ஹரியானாவுக்குப் பொதுவான தலைநகர் ஆனது.

அறுபத்தி ஒன்றில் மைதிலி, மகதி, போஜ்புரி மொழிகள் பேசுபவர்கள் தங்களை இந்தியில் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொண்ட சூழலில், அடுத்தக் கணக்கெடுப்பில் அவற்றை இந்தியோடு சேர்க்கும் பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. மாநில மறுசீரமைப்புக்கான பாஸில் அலி குழு ஹிமாசல பிரதேசத்தைப் பஞ்சாபோடு இணைத்தால் அதிகத் தொழில் முனைவோர் மிக்கப் பஞ்சாப் அதனைச் சுரண்டும் என்று அதனைச் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார். தெலங்கானா, விதர்பா பகுதிகள் தனி மாநிலங்களாக ஆகவேண்டும் என்கிற அவரின் பரிந்துரை ஏற்கப்படாமல் போய் அவை இன்னமும் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளாக உள்ளதைக் காணலாம்.

கோலார் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்றாலும், அந்த மாவட்டம் வளர்ந்ததற்கும், அதற்கான மின்சாரம், பொருளாதார வளர்ச்சிக்கு மைசூர் மாநிலத்தைச் சார்ந்திருந்ததாலும் அதனோடு அது இணைக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தான் வங்கத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட சூழலில் டார்ஜீலிங், கூச் பீஹார், ஜல்பாய்குரி பகுதிகள் மேற்கு வங்கத்தோடு துண்டிக்கப்பட்ட சூழலில், இவை இரண்டையும் இணைக்க இந்தி பெரும்பான்மை மிக்கப் பூர்ணியா மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு வங்கத்துக்குத் தரப்பட்டது.

பழங்குடியினரில் மொழி சார்ந்து மாநிலங்களைப் பிரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று என்கிற அளவுக்குப் பல்வேறு மொழி சிறுபான்மையினர் அவற்றில் வழங்கி வருகிறார்கள். லடாக் பகுதியை அதனைப் போலவே புத்த மதத்தினர் அதிகம் மிகுந்த ஹிமாசல பிரதேசத்தின் லாகுல், ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதிகளோடு இணைக்கலாம் என்கிறார் ஆசிரியர். கச்சார் எனும் வங்காளிகள் பெரும்பான்மையாகயுள்ள அசாம் மாவட்டத்தை, திரிபுராவுடன் இணைக்கலாம்.
இதன்மூலம் பத்து லட்சம் வங்காளிகள் பயத்தில் இருந்து அசாம் விடுபடும். நேபாளி மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் டார்ஜீலிங் மாவட்டத்தை, சிக்கிம் உடன் இணைக்கலாம். கோவாவை கொங்கணி மொழியைப் பேசும் கர்நாடகாவின் துளு பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளை இணைத்து விரிவாக்கலாம். ரஷீதின் கான் எனும் பேராசிரியர் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட உத்திர பிரதேசத்தை ஐம்பத்தி ஒன்பது சுயாட்சி மிக்கச் சமூக, கலாசாரப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

நன்றி;-பூ.கொ

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மாவீரைனை உறுவாக்கிய மகராசி .===!

நமது மாவீரனை உறுவாக்கிய
மகராசி,மிசாவால் இந்தியாவை
உலுக்கி எடுத்த இரும்பு ராணி,
பாகிஸ்தானை கதிகலங்கச்செய்த
பாயும்புலி,ஆயுதக்களமாக இருந்த
பொற்கோவிலை துவசம் செய்த
துர்க்காதேவி,முன்னால் பாரதப்பிரதமர்
அண்னை இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.

நமது வீரவணக்கத்தை நெஞ்சில்
ஏந்துவோம்....!

இவன்;-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்.
தமிழர் தனிப்படை.
theeranchinnamalai.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 26 செப்டம்பர், 2016

25-இலட்சம் மக்கள்...பிரமாண்டப்பேரணி...

Maratha Protest For Quota Snowballs, Huge Rally Held In Pune - http://www.ndtv.com/pune-news/maratha-community-holds-silent-march-in-pune-1466273?via=whatsapp (Sent via NDTV)

Maratha Protest For Quota Snowballs, Huge Rally Held In Pune - http://www.ndtv.com/pune-news/maratha-community-holds-silent-march-in-pune-1466273?via=whatsapp (Sent via NDTV)

முக்கயச்செய்தி:-

25-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பிரமாண்டப் பேரணி...

மகாராஸ்ட்ரா மாநிலம்,புனே மாநகரில் மராத்தா சமூகத்தினர் நடத்திய பிரமாண்டப் பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.இந்தப் பேரணியின்
 பார்வையாளனாக நானும் இருந்தேன்.

சுமார் 25-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்...புனேவை சுற்றியுள்ள புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளிலிருந்து காலை 8-மணி முதலே
இருசக்கரம்,நான்கு சக்கரம்,பேருந்து,பயணிகள்
ரயில்கள் மூலமாக சாரை,சாரையாக புனே நகரை
நோக்கி நாலபுறங்களிலிருந்தும் கடல் அலையாக
வந்து குவியத்துவங்கினார்கள்.

சத்திரபதி சிவாஜீ மகாராஜவின் உருவம் பொதித்த காவிநிறக் கொடிகளை கையில் ஏந்தியவாரு..."சிவாஜீ மகாரஜ்க்கே ஜே...ஏ மாராத்த ஜே"..என்று கோசங்களை எழுப்பியவாரு
டெக்கான் ஜிம்கானாவில் தொடங்கி...
லஷ்மிரோடு..வழியாக புனே மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் வந்தடைந்தது.

சுமார் 6-கிலோ மீட்டர் நீளம் அமைதியாக நடந்து முடிந்தது.காவல்துறையின் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக புனே நகரில் நுழையும் 10-
பிரதான சாலைகளும் மூடப்பட்டன.இங்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

ஒரு சமயம் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட பேரணியினர்..அமைதியாக..தடங்களின்றி
ஆம்புலன்ஸ் செல்வதற்கு விலகிநின்று வழி விட்டனர்.

சரி.எதற்காக இந்தப்பேரணி...?யார் இந்த மராத்தா
சமூகத்தினர்..?

மாராட்டியில் வாழும் 35-சதம் மக்கள்...75-சதம்...நிலப்பரப்பை..அதாவது ஓன்று..இரண்டு...மூன்று ஏக்கர் என விவாசாய நிலப்பரப்பை கொண்டுள்ள சிறு விவசாயிகள்.

மராத்தா மக்களிடம் ஒரு சில உட்பிரிவுகள் இருந்தாலும்..இவர்களுக்கு கல்வியிலும்...வேலை
வாய்ப்பிலும் இட ஓதுக்கீடு என்பது கிஞ்சித்தும்
கிடையாது..ஓப்பன் கோட்டாவில் என்ன பலன்
கிடைக்கும்...என்பதை உங்களின் சிந்தனைக்கே
விட்டுவிடுகிறேன்.

மேலும் வன்கொடுமைதடுப்புச்சட்டம்..
நம்மைப்போன்று மராத்தா மக்களையும்..பெரிதும்
துன்புறுத்துகிறது...

இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் அகமத்நகர் மாவட்டம்,கோபர்டியில் மராத்தா சமூகத்தை சார்ந்த சிறுமி தலித் சமூகத்தை
சார்தவனால்..கற்பழித்து கொலை செய்யப்பட்டாள்..அதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை..

இது மராத்தா மாணவர்களிடமும், இளைஞர்,இளம்பெண்களிடமும்..சமூக வளைதளங்களில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது..

அதன் தொடர்சியாக..தங்களை ஓ.பி.சி கோட்டாவில் இணைத்து கல்வி-வேலை வாய்ப்பில்16-சத இட ஒதுகீடு வழங்க வேண்டும்,
கோபர்டியில் தலித் சமூகத்தால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மராத்தா சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்,
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை
நீக்கவேண்டும் என மூன்று முக்கியக்கோரிக்கைகளை வழியுருத்தி பிரமாண்டப் பேரணி நடத்தப்பட்டது...

இதிலருந்து நமது சமூகம பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்..என்ற நல்ல நோக்கில்
இந்தப்பதிவை வெளியிடுகிறேன்..

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி ..இந்தப்பேரணியில் அரசியல் சாயம்
எதுவும் இல்லை..தன்னெழுச்சியான மக்கள்
புரட்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை...
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 24 செப்டம்பர், 2016

சீரடி.சாய்நாதவிடம்...பிராத்தனை...

இன்று பிறந்தநாள் காணும் எனக்கு வாழ்த்துக்களை பதிவுசெய்த அனைவருக்கும்
எமது நெஞ்சார்ந்த நன்றி...நன்றி..

நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண உடல்நலம் பெற வேண்டி...சீரடி.சாய்பாபாவை
பிராத்தித்துள்ளோம்.

மேலும்..சர்வ அம்மாவாசை தினமான வரும் 29-ம் தேதி அன்று..மராட்டி மாநிலம்,நாசிக் மாவட்டத்தில்
உள்ள சீரடி.சாய்பாபவின் ஜீவசமாதியில் எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சென்று
பிராத்தனை செய்ய உள்ளோம்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 12 செப்டம்பர், 2016

செப்.13---இந்த நாள்..?

செப்-13.இஸ்லாமிய மக்களின்...பக்கிரீத் பண்டிகை..மலையாள மக்களின் ஓணம் பண்டிகை.. இனிய உற்சாகத்துடன்  விழாக்காணும் மக்களை கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்...

பக்கிரீத் பண்டிகையால் ஆடு வளர்க்கும் விவசாயப்பெருமக்களான நாம் வருவாய் பெறும் நாளாகும்..

ஓணம் பண்டிகையால் பூ மற்றும் காய் உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களான நாம் பெரிதும்
பயன்பெறும் நாளாகும்..

இவ்விழாவில் புதுத்துணிகளை மக்கள் அணிவதன் மூலம் ..நமது நெசவாளிகளின் வருவாய் பெறுகும் நேரம்...

அதனால் மீண்டும் ஒருமுறை விழாக்காணும் மக்களை வாழ்த்துவோம்..

இவன்:-
டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை..
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

நம்மை ஆளும் நவக்கிரகங்களை மாற்ற முடியுமா ...?

நமது முன்னோர்களின் மரபணுக்கள்..நவக்கிரகங்களின்
கட்டமைப்பாக..நமது எண்ணங்கள் என்ற விதியை
விதிக்கிறது.அந்த விதி நமது வாழ்வின் இன்பமாமவும்
துன்பமாகவும் செயல்படுகிறது.

இது இயற்கையின் ஒழுங்குமுறை சட்டமாகும்...நம்மை நாடும்
கெட்ட விதிகளை மாற்ற முடியுமா..?

முடியும்..நிச்சயமாக மாற்ற முடியும்...எப்படி?
நமது எண்ணங்களை மாற்றினால்..அதாவது                                                                                            நாளும்..பொழுதும்..வினாடியும் நல்ல எண்ணங்களை உள் வாங்கினால் நல்ல (விதி) செயல்கள் விளைந்து...வாழ்வில் இன்பம்  மலரும்...

இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.
best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன்.மகாகவி நினைவு தினம்....

செப்.11 இன்று
உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோம்...என்று முழங்கிய
மாவீரன்.மகாகவி.பாரதியாரின் நினைவு தினம்...
மகாகவிக்கு நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும்
தமிழர் தனிப்படையின் சார்பில் வீரவணக்கத்தை சமர்பிப்போம்...
இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
செயல் உறுப்பினர, தமிழர் தனிப்படை.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

செப்டம்பர்-5-இந்த நாளின் சிறப்பு.....

5-9-16,இன்று விநாயகர் சதுர்த்தி,இந்தியாவின் முதல் ஜனாதிபதிடாக்டர்.இராதகிருஷ்ணன்.பிறந்தநாள்,
சுதந்திரப்போராட்ட மாவீரன்,கப்பலோட்டிய தமிழன் வ.வூ.சி பிந்தநாள்,புனிதர் அன்னைதெரசா நினைவுநாள்....என்று இந்த நாள் இந்த வருடத்தின் மிகச்சிறந்த நாளாகும்....

இவன்:-டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி மற்றும்
செயல் உறுப்பினர் தமிழர் தனிப்படை (வெளிமாநிலவாழ் தமிழர்களின் பாதுகாப்புகளம்)
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 3 செப்டம்பர், 2016

தேசிய நீர்வழிச்சாலை..

[9/4, 8:39 AM] T.K.Theeransamy.K.T.K: அதிகமாக பகிரவும் பிரண்ட்ஸ்...இந்தமாதிரி விசயங்களில் நமக்கு ஒற்றுமை இல்லாதுதான், அரசின் மெத்தனத்திற்க்கு காரணம்..!! ஏதாவது ஒரு பட்டனை தட்டிவிடுங்க...உலகம் முழுவதும் செல்லட்டும். என்பெயரில் பகிர மனம் இல்லையென்றால் Copy-Paste செய்து உங்கள் பக்கத்தில் பகிருங்கள்.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு நவீன நீர்வழிச் சாலை திட்டம்தான் நிரந்தர தீர்வு: முதல்வருக்கு பொறியாளர் ஏ.சி.காமராஜ் கடிதம்..!!!

தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் வரைபடம். (உள்படம்) ஏ.சி.காமராஜ்.
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தினால் யாரிடமும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டாம். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு இது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று நவீன நீர்வழிச்சாலை பேரியக்கத்தின் தலைவர் பொறி யாளார் ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

நதிகளை இணைக்கும் விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை. ஆனால், பொறியாளர் ஏ.சி.காம ராஜ் தலைமையிலான வல்லுநர் குழு உருவாக்கி இருக்கும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தைத் தென் மாநிலங்கள் வரவேற்றுள்ளன. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு நீரை அனுப்பலாம்; திரும்பப் பெறமுடியாது. ஆனால், நவீன நீர்வழிச் சாலை திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக் கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏ.சி.காமராஜ் கூறியதாவது:

நவீன நீர்வழிச் சாலை திட்டம் என்பது ‘பவர் கிரிட்’ போன்றது. தேவையில்லாதபோது நீரைத் தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். இதனால் யாருடைய பங்கீட்டு உரிமையும் பறிபோகாது. மாறாக, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்க லாம். மற்ற மாநிலங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் அதைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம்.

கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குப் போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் டிஎம்சி வீணானதாக ஆந்திர மாநில தலைமைப் பொறியாளர் என்னிடம் கூறினார். கர்நாடகாவிடம் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம். ஆனால், அவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரை கடலில் விடுகிறார்கள்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த போராட வேண்டி இருக்கிறது. ஆனால், கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2.400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.

இந்த மூன்று மாநிலங்களும் தெலங்கானாவும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்து வது குறித்து எங்களோடு ஆர்வத் துடன் பேசிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்ற மாநிலங்கள் ஒத்துவராமல் போனாலும் தனது மாநிலத்துக் குள்ளேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராக இருக் கிறார். தமிழக முதல்வர் ஜெய லலிதா, 2011 தேர்தல் வாக்குறுதி யிலேயே இத்திட்டத்தைச் சேர்த்திருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து பல இடங்களில் பேசினார். ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தரப்பில் இன்னமும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், மாநில அரசு ரூ.500 கோடி செலவழித்தால் போதும். மீதமுள்ள தொகையை மத்திய அரசும் தனியார் நிறுவனங் களும் செலவழிக்க தயாராக இருக்கின்றன. இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் நீர்வளம் செழிப்ப தோடு நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சாரம் உள்ளிட்ட வேறு பல வழிகளிலும் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

எனவே, இனியும் காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை செயல்படுத் தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண் டும் என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். எதிர்காலத் தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச் சினைகளுக்கு இத்திட்டம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.

குள.சண்முகசுந்தரம்

Shared by http://m.tamil.thehindu.com/tamilnadu/
[9/4, 8:39 AM] T.K.Theeransamy.K.T.K: திரு.காமராஜ்,அய்யா அவர்களை வைத்து எமது கொங்கு தமிழர் கட்சி சார்பில் முன்பு இரண்டு கூட்டங்களை நடத்தினோம்....நதிநீர் இணைப்பின்
முக்கியத்துவம் ...அய்யா அவர்களின் அறிவுசார் திட்டங்கள் அற்புதமானவை...

அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் அம்மா அவர்களை எமது கொங்கு தமிழர்
கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை
வைக்க உள்ளோம்...

மேலும்..கடந்த மாதம் ஆந்திரா முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களை நாங்கள் நேரில் சந்தித்தபோது...அய்யா..காமராஜ்
அவர்களின் திட்டங்களை நதிநீர் திட்டங்களை
செயல்பாட்டுக்கு கொண்டுவர உறுதியுடன்
இருப்பதாக தெரிவித்தார்..

மேலும்...ஜீ.வி.இதழில் பணியாற்றி தற்போது
தமிழ் இந்து நாளிதழில் எழுத்தப்பணிகளை
தொடரும் திரு.குள.சண்முகசுந்தரம் போன்ற
துடிப்பான நண்பரகள் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த களத்தில் தொடர்ந்து
பணியாற்ற வேண்டும்..

இவன்:-டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி மற்றும்
செயல் உறுப்பினர் தமிழர் தனிப்படை (வெளிமாநிலவாழ் தமிழர்களின் பாதுகாப்புகளம்)
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எண்ணங்கள்_2

எண்ணங்களை நாம் எண்ணியவுடன்...அதன் இலக்கை
தாக்கும்..வல்லமையுடையது...

இலக்கை தாக்கிய எண்ணங்கள்...திருப்பி எய்த இடத்தையே
தாக்கும் வல்லமையுடையது...

நல்ல எண்ணங்களை எய்தால்..நல்ல  இலக்கையே
நாம் திரும்பப் பெறமுடியும்...

பிறரை அழிக்கும் எண்ணங்களை எய்தால்...
நம்மை அழிக்கும் எண்ணங்களை நாம் திரும்பப் பெறமுடியம்...
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 1 செப்டம்பர், 2016

எண்ணங்கள்

நமது எண்ணங்கள்..என்னும் சிற்பி
நமது வாழ்க்கை என்னும் சிலையை செதுக்குகிறது.

நமது வாழ்வின் எல்லா நிலைகளும்..நமது எண்ணங்களின்
நிகழ்வாக நிற்கிறது...

அது..இன்பமாக..துன்பமாக..எதுவானலும்
நாம் முன்பு எண்ணிய..எண்ணங்களே..காரணமாகும்
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 7 மே, 2015

+2-தேர்வு முடிவு கொங்கு தமிழகம் முதல் மூன்று இடங்கள்

  +2-தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.அதில் திருப்பூர் பவித்ரா,கோவை மாணவி நிவேதா 1192 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

விக்னேஸ்வரன்,பிரவீன்,சரண்ராம்,வித்யாவர்சினி,ஆகிய நால்வரும் 1190 -மதிப்பெண்கள் பெற்று 2-.இடத்தையும்,பாரதி என்ற மாணவி-1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடதையும் வென்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் கொங்கு தமிழகத்தின் சிங்கங்கள் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியையும்,மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 22 ஏப்ரல், 2015

ஏப்ரல்-22 உலக புவிதினம்..

சாயநீர் ஓடும் நொய்யல் நதி

ஏப்ரல்-22 உலக புவிதினம்.புவியை பாதுகாப்பது!.
புவியை பாதுகாப்பதுன? நம்ம ஏன் புவியை பாதுகாப்ப வச்சுக்கனும்?.                                                                                                                                                

அரசாங்கம் எதுக்கு இருக்கு? எம்.எல்.ஏக்கள்,பஞ்சாயத்துக்கள்,அமைச்சர்கள்,அதிகார மையங்கள்னு-நம்மோட வரிப்பணத்தில் 99-விழுக்காடு சம்பளமா வாங்கிக்கிறாங்கா!
ஊழலா..லஞ்சமா..மீதியை கொள்ளையடிக்கிறாங்கா! அவங்க புவியை பாதுகாக்கட்டுமே! அவங்களுக்கு என்ன வேலை?

உங்க ஆதங்கம்..கோபம் எனக்கு புரியுது...ஆனா..பாருங்க புவின்னு சொன்ன..

நம்ம சித்தர்கள் கணக்கில மண்(உடல்),நீர்(இரத்தம்),நெறுப்பு(உடல் வெப்பம்),காற்று(ஆக்சிசன்),ஆகாயம்(உயிர்) என்று ஐந்து பொருள்கள்,பஞ்ச பூதங்கள்,பொளதீக பிரிவுகள்னு சொல்லாறங்கா..

இப்ப இந்த ஐந்து பிரிவுகளின் சேர்க்கை தான் நம்ம உயிருள்ள உடலா இருக்கு..அப்போ..இவைகளை மாசுபடுத்தாம..முடிந்த அளவு ஒவ்வொரு தனிமனிதனும் அக்கரை எடுத்துக்கிட்ட..புவியை சுத்தமா வச்சுக்க முடியும்...மேலும் மரக்கன்றுகள் நிறைய நடனும்..இன்றைய புவிதினத்தில் இதை உறுதிமொழியா ஏற்றுக்கொள்வோம்... 

கீழே பாருங்கா தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி.(ஏப்ரல்-22)

காகிதங்கள்,காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால் அவை பூமியைவிட்டு நீங்க 1-முதல் 2-மாதங்கள் ஆகும்.
தெர்மாகூல் கப்புகளை போட்டால் 50- ஆண்டுகள்..பிளாஸ்டிக் கேன்கள் 80-முதல் 200 ஆண்டுகள்,பிளாஸ்டிக் பைகள் 50-முதல் 1000 ஆண்டுகள்..,
பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள்,..ஆகும்.

இதில் பிளாஸ்டிக் பொருள்கள் அணுகுண்டைவிட அபாயகரமானவை...

கீழே உள்ள புகைப்படம்-மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம்நாடு,மேலப்பாளையம் கிராமத்தில் பாய்ந்து ஓடும் இயற்கையின் அருற்கொடையான பாசன வாய்க்கால்.....

best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.


ஏப்ரல்-17 மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா,கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த காங்கேயம் நாடு மேலப்பாளையத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தேசிய இளையோர் பிரிவு செயலாளர் டி.எஸ்.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர்.தங்கவேல்,மாநில
கைத்தறிப்பிரிவு செயலாளர் கே.எஸ்.செல்வராஜ்,செயற்குழு உறுப்பினர் பி.மோகன்,குண்டடம் ஒன்றிய அமைப்பாளர் பி.ராமசாமி,தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் பொன்னுச்சாமி,கரூர் மாவட்ட அமைப்பாளர் சி.சண்முகம்உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மேலப்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— with தெ.கு.தீரன்சாமி தேசிய அமைப்பாளர் கொங்குதமிழர்கட்சி.
best links in tamil
More than a Blog Aggregator