திங்கள், 9 ஜூன், 2014

பாலியல் வன்கொடுமை ?பாரத தேசமே!



ரௌத்திரம் பழகு....2

கருத்துரை:-க.சொளந்தரராஜன்

பெண்களை  போற்றுவதாக  சொல்லப்படுகின்ற நாடு இந்தியா....

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியியல் வன்கொடூரங்களுக்கு தீர்வு காண அரசு முழுவீச்சுடன் செயல்படாதது கண்டிக்கத்தக்கது. 


டெல்லி மருத்துவ மாணவியின் துயர சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும், அதாவது இன்று வரையிலும் ஒரு உறுதியான செயல்பாட்டையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவிதம் எதுவும், மீண்டும் இது போன்ற வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் என்றோ, குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தையோ  உருவாக்கும் என்றோ அமையவில்லை......


என்னுடைய தங்கைகளுக்கு,சகோதரிகளுக்கு,வீட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் வரை நமக்கும் அக்கறை இல்லை.

அரசுக்கு ஆபத்து வந்தால் அவசர சட்டம்(அப்போதைக்கு மட்டும்).

ஒரு வெட்கக்கேடான செயல்.....வயது பாராது வன்கொடுமை.....

இந்த புண்ணியத் திருநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போருக்கெல்லாம் ஒரு பின்னடைவு....

குற்றங்களின் தன்மையை பொறுத்து தண்டனைகள்...4 வயது குழந்தை,7 வயது குழந்தை.......இந்திய சட்ட வடிவமைப்பு இது போன்ற குற்றங்களை விரைந்து முடிக்கும் திறன் இல்லாதது...

உத்திரபிரதேச சம்பவம் கண்டிக்கத்தக்கது...ஆனால் அது இந்தியாவில் இது போன்ற கடைசி சம்பவமா...? அதற்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மகத்துவ, மாதவம் படைத்திட்ட பெண்களே....
நெஞ்சு பொறுக்குதில்லையே உம் நிலை கண்டு இன்று....!




 இந்திய மக்களவையின் தலைவர்......

16வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்கள் திறமையும், மக்களவை செயல்பாடுகளில் அனுபவமும் பெற்றவர். இந்தூர் தொகுதியின் உறுப்பினர் (8வது முறையாக..)
 
மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
 
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.
மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.
 
மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...



best links in tamil
More than a Blog Aggregator