2011-தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் சர்வதேச AtoZபுரோக்கர் நீராராடிய,
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இந்தியாவின் புகழை உலக அரங்கில் தலைநிமிரச்செய்த முன்னால் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்துராசா,தமிழுக்கு சங்கமம் கண்ட செம்மொழி நாயகி ஆகிய சரித்திர புருசர்கள் இணைந்து புதிய அரசியல் வியூகம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் ஆண்டிமுத்து ராசாவை கட்சி நிகழ்ச்சிகளிலும்,தொகுதிப் பணிகளிலும் செயல்பட வேண்டாம் என கட்சித்தலைமை அறிவுருத்தி உள்ளது.இதனால் ஒரு வகையில் தான் முடக்கப்பட்டுள்ளதாவே ராசா புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் முன்னனித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாரிசுகளுக்கு தொகுதி ஒதுக்கித் தரும்படி கட்சித் தலைமையை நெருக்கி வருவதாக செய்திகள் கசிகின்றன.இது ஆண்டிமுத்துராசாவை மேலும் யோசிக்க வைத்தது.இந்தயோசனை சங்கம நாயகியுடன் பகிரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.ஏன் நீராராடியாவுடன் கூட கலந்து ஆலோசித்து இருக்கலாம்.

படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி