ஞாயிறு, 15 ஜூன், 2014

மனைவியை பத்துப்பேருடன் கற்பழித்த கொடூர கணவன்கொடூ

மத்தியபிரதேசத்தில் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலாய் போர்கேடி என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பழங்குடியின பெண் ஒருவர் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

நிலவிவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை கணவன் கோடாரியால் தாக்கியுள்ளான். இதில் காயம் அடைந்த பெண் பொலிசில் புகார் கொடுத்துவிட்டு, தனது மகனுடன் அருகே உள்ள கிராமத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர், அந்த கணவர் இருவரும் சமாதானமாகிவிடுவோம் என்று கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது, அதனை உண்மை என்று நம்பி தனது மகனுடன் அந்த பெண், கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததையடுத்து, கணவன் உள்பட 10 பேர் அந்த பெண்ணை கயிறால் கட்டி ஒரு அறையில் அடைத்து கொடூரமாக கற்பழித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், ஆனால் அந்த கொடூர கும்பல் மனித சிறுநீரை குடிக்க வற்புறுத்தியதோடு, அந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து அந்த 10 பேரையும் பொலிசார் கற்பழிப்பு குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிசார் இதுபற்றி கூறுகையில், கணவரின் வீட்டில் 3 நாட்கள் அடைத்துவைத்து கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். செய்திக்கு நன்றி:-லங்கசிறி-இன்டியன் நியூஸ்

எனது கருத்துரை:-
..
தெ.கு.தீரன்சாமி 
தில்லி மருத்துவ மாணவியின் வன்கொடுமை நமது தேசத்தை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கி எடுத்தது.அதன் பிறகு ஆயிரக்கணக்கான பாலியல் கற்பழிப்புகள் தொடர்ந்து நமது தேசத்தில் நடந்த வண்ணம் உள்ளது.சமீபத்தில் உ.பியில் இரண்டு சிறுமிகளின் கற்பழிப்பு மரணம்-இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது தலைமாட்டில்-நம் கண்ணருகிலேயே-பொள்ளாட்சியில் 10.12 வயதுடைய இரண்டு சிறுமிகள் கற்பழித்து கடித்து குதறப்பட்டுள்ளார்கள்.நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. 

ஆபாச பதிவுகளை வெட்கமில்லாமல் வெளியிட்டு தமது தளத்தை பிரபலபடுத்தி,பணம் சம்பாதிக்கும்,குரூர மனம் படைத்தவர்கள் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை கண்முன்னே கண்ட பிறகாவது திருந்துவார்கள் என நம்புவோம்.
best links in tamil
More than a Blog Aggregator