கல்விக் கடன்பெற கடும் நிபந்தனைகள்: வங்கிகளை அணுகுவதில் கடும் சிக்கல்! தினமலர் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை:
கோவை பிரபு,திருநெல்வேலி ராஜகோபால் கிருஸ்ணசாமி ஆகிய இருவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
உங்களுக்கோ,உங்கள் குடும்பத்துக்கோ வங்கியில் கல்விக்கடன் தேவையில்லை எனில்!அமைதிகாக்கவும்!தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கல்விக்கடனுக்கு அலைய விடும் வங்கிகளைப் பற்றி விமர்சிக்கும் போதுதான்!வங்கி மேலாளர்கள் சிறிது அச்சப்பட்டு கல்விக்கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.
பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள் திறந்துள்ளன.ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கல்விக்கடன் விசயத்தில் சிறிது தாராளம் காட்டிய வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.
கல்விக்கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்று சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்!அத்தகைய நபர்களுக்கு ஒரு சில வரிகள்!தனி ஒரு மனிதன் ஆண்டிமுத்துராஜ செய்த ஊழல்? சுரேஸ்கல்மாடி செய்திருப்பது? இன்னும் வெளிச்சத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் ஊழல் பணம் எவ்வளவு?
கடந்த தி.மு.க ஆட்சியில் கோலோட்சிய அமைச்சர்களின் மொத்த வருவாய் தலா ஆயிரம் கோடிகளை தொடும் என்று சொல்லப்படுகிறது.பி.ஜெ.பி-யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுஸ்மாசுவராஜின் போற்றுதலுக்குரிய சிஸ்யர்களான கருநாடகாவின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் எத்தனை இலட்சம் கோடி?
இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் வராக்கடன் பலலட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும் அபாயத்தில் உள்ளது.உதாரணத்திற்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய இடத்திற்கு அறுபது கோடிரூபாய் கடன் வழங்கிய வங்கி மேலாளரும்,கடன்பெற்றவரும் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்கள்.
வெளியில் தெரிந்தது ஒன்று தெரியாமல் இருப்பது ஒன்பது!எழுத்தால் பூஜ்ஜியம் இட்டால் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு நமது தேசத்தின் வருவாய்,தேசியத்தின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவற்றை திரும்பப் பெற்று வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கினால் நமது தேசியத்தின் கண்மணிகளை உயர்கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க முடியும்.
எனவே இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடனும்,இனி மேல் கொடுப்பவைகளும் தள்ளுபடி செய்யத்தான் வேண்டும்.கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகளை வழிக்கு கொண்டு வர குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம்,நீதிமன்றங்கள்,ரிசர்வ் வங்கி,சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பரிகாரம் தேடலாம்.
குறிப்பாக 2007-ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும் தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன் லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.
தினமலர் செய்தி ஊடகம் தமிழக முதல்வரின் பார்வைக்கு இது சம்பந்தமாக ஒரு தலைப்புச்செய்தி வைக்கவேண்டும்.வாசகர்களாகிய நாம் அனைவரும் முதல்வருக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கல்விக்கடனுக்கு லோன்மேலா வேண்டி மின்னஞ்சல் அனுப்பி வைப்போம்.
இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.
இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை.
கோவை பிரபு,திருநெல்வேலி ராஜகோபால் கிருஸ்ணசாமி ஆகிய இருவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
உங்களுக்கோ,உங்கள் குடும்பத்துக்கோ வங்கியில் கல்விக்கடன் தேவையில்லை எனில்!அமைதிகாக்கவும்!தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கல்விக்கடனுக்கு அலைய விடும் வங்கிகளைப் பற்றி விமர்சிக்கும் போதுதான்!வங்கி மேலாளர்கள் சிறிது அச்சப்பட்டு கல்விக்கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.
பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள் திறந்துள்ளன.ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கல்விக்கடன் விசயத்தில் சிறிது தாராளம் காட்டிய வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.
கல்விக்கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்று சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்!அத்தகைய நபர்களுக்கு ஒரு சில வரிகள்!தனி ஒரு மனிதன் ஆண்டிமுத்துராஜ செய்த ஊழல்? சுரேஸ்கல்மாடி செய்திருப்பது? இன்னும் வெளிச்சத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் ஊழல் பணம் எவ்வளவு?
கடந்த தி.மு.க ஆட்சியில் கோலோட்சிய அமைச்சர்களின் மொத்த வருவாய் தலா ஆயிரம் கோடிகளை தொடும் என்று சொல்லப்படுகிறது.பி.ஜெ.பி-யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுஸ்மாசுவராஜின் போற்றுதலுக்குரிய சிஸ்யர்களான கருநாடகாவின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் எத்தனை இலட்சம் கோடி?
இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் வராக்கடன் பலலட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும் அபாயத்தில் உள்ளது.உதாரணத்திற்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய இடத்திற்கு அறுபது கோடிரூபாய் கடன் வழங்கிய வங்கி மேலாளரும்,கடன்பெற்றவரும் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்கள்.
வெளியில் தெரிந்தது ஒன்று தெரியாமல் இருப்பது ஒன்பது!எழுத்தால் பூஜ்ஜியம் இட்டால் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு நமது தேசத்தின் வருவாய்,தேசியத்தின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவற்றை திரும்பப் பெற்று வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கினால் நமது தேசியத்தின் கண்மணிகளை உயர்கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க முடியும்.
எனவே இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடனும்,இனி மேல் கொடுப்பவைகளும் தள்ளுபடி செய்யத்தான் வேண்டும்.கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகளை வழிக்கு கொண்டு வர குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம்,நீதிமன்றங்கள்,ரிசர்வ் வங்கி,சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பரிகாரம் தேடலாம்.
குறிப்பாக 2007-ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும் தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன் லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.
தினமலர் செய்தி ஊடகம் தமிழக முதல்வரின் பார்வைக்கு இது சம்பந்தமாக ஒரு தலைப்புச்செய்தி வைக்கவேண்டும்.வாசகர்களாகிய நாம் அனைவரும் முதல்வருக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கல்விக்கடனுக்கு லோன்மேலா வேண்டி மின்னஞ்சல் அனுப்பி வைப்போம்.
இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.
இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை.