ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

கல்விக்கடன்பெற லோன்மேலா நடத்த வேண்டும்!முதல்வருக்கு கோரிக்கை!

கல்விக் கடன்பெற கடும் நிபந்தனைகள்: வங்கிகளை அணுகுவதில் கடும் சிக்கல்! தினமலர் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை:

கோவை பிரபு,திருநெல்வேலி ராஜகோபால் கிருஸ்ணசாமி ஆகிய இருவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

உங்களுக்கோ,உங்கள் குடும்பத்துக்கோ வங்கியில் கல்விக்கடன் தேவையில்லை எனில்!அமைதிகாக்கவும்!தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கல்விக்கடனுக்கு அலைய விடும் வங்கிகளைப் பற்றி விமர்சிக்கும் போதுதான்!வங்கி மேலாளர்கள் சிறிது அச்சப்பட்டு கல்விக்கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.

பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள் திறந்துள்ளன.ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கல்விக்கடன் விசயத்தில் சிறிது தாராளம் காட்டிய வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.

கல்விக்கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்று சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்!அத்தகைய நபர்களுக்கு ஒரு சில வரிகள்!தனி ஒரு மனிதன் ஆண்டிமுத்துராஜ செய்த ஊழல்? சுரேஸ்கல்மாடி செய்திருப்பது? இன்னும் வெளிச்சத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் ஊழல் பணம் எவ்வளவு?

கடந்த தி.மு.க ஆட்சியில் கோலோட்சிய அமைச்சர்களின் மொத்த வருவாய் தலா ஆயிரம் கோடிகளை தொடும் என்று சொல்லப்படுகிறது.பி.ஜெ.பி-யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுஸ்மாசுவராஜின் போற்றுதலுக்குரிய சிஸ்யர்களான கருநாடகாவின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் எத்தனை இலட்சம் கோடி?

 இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் வராக்கடன் பலலட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும் அபாயத்தில் உள்ளது.உதாரணத்திற்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அருபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய இடத்திற்கு அறுபது கோடிரூபாய் கடன் வழங்கிய வங்கி மேலாளரும்,கடன்பெற்றவரும் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்கள்.

வெளியில் தெரிந்தது ஒன்று தெரியாமல் இருப்பது ஒன்பது!எழுத்தால் பூஜ்ஜியம் இட்டால் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு நமது தேசத்தின் வருவாய்,தேசியத்தின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவற்றை திரும்பப் பெற்று வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கினால் நமது தேசியத்தின் கண்மணிகளை உயர்கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க முடியும்.

எனவே இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடனும்,இனி மேல் கொடுப்பவைகளும் தள்ளுபடி செய்யத்தான் வேண்டும்.கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகளை வழிக்கு கொண்டு வர குடிமக்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம்,நீதிமன்றங்கள்,ரிசர்வ் வங்கி,சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பரிகாரம் தேடலாம்.

குறிப்பாக 2007-ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும் தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன் லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.

தினமலர் செய்தி ஊடகம் தமிழக முதல்வரின் பார்வைக்கு இது சம்பந்தமாக ஒரு தலைப்புச்செய்தி வைக்கவேண்டும்.வாசகர்களாகிய நாம் அனைவரும் முதல்வருக்கும்,மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கல்விக்கடனுக்கு லோன்மேலா வேண்டி மின்னஞ்சல் அனுப்பி வைப்போம்.

 இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை.
best links in tamil
More than a Blog Aggregator

ஆர்பரிக்கும் மக்கள்புரட்சி!ஆர்வத்துடன் நாமும் இணைவோம்!


 பல ரூபங்களில் கிளர்ந்தெழும் கசாரே போர்:எம்.பிக்கள்-அமைச்சர் வீடு முன்பு தர்ணா-

தினமலர் இணையதள செய்தி ஊடககத்தில் வெளியான பகுதிக்கு நான் எழுதிய கருத்துரை.

உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 65-வது சுதந்திர தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று முடிந்த ஆகஸ்ட் 15 -அன்று ஊழலலுக்கு எதிரான விடுதலைப்போராட்டம் தொடங்கி விட்டது. 1958-ல் "முந்த்ரா"நமது தேசத்தின் முதல் உழல்.நமது இந்தியப் பிரதமர் நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்.

முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பெரோஸ்காந்தி.இவர் நேருஜியின் மருமகன்,ரேப்ரேலி தொகுதியின் மக்களைவை உறுப்பினர்,ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இந்திரா அம்மையாரின் கணவர்,ராஜிவ் காந்தியின் தந்தை,சோனியாகாந்தியின் மாமனார்,ராகுல்ஜீயின் தாத்தா.

 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா" ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.

 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.

அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.

ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரியான இராமன்- முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.

முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.

  இதன் விளைவு தான் இன்று சுரேஸ்கல்மாடியின் தலைமையில் காமன்வெல்த் ஊழல்,தில்லியில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்,ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!

இப்படி முனை மழுங்கிப் மொளனம் சாதித்த மக்கள் கூட்டம் அண்ணா கசாரேவின் மந்திரப் புண்னகையில் கட்டுண்டு கொந்தளிக்கும் கடல் அலையாக,குமுரும் எரிமலயாக,சுழலும் சூறவழியாக,பாயும் புலியாக சீற்றமென பாயத்தொடங்கி விட்டது.

இந்தப் புலிப் பாயிச்சலை தொடர்ந்து வேகப்படுத்தி வரும் தினமலர் போன்ற செய்தி ஊடகங்களுக்கு நமது தேசத்தின் ஒட்டு மொத்த மக்களும் நன்றிக்குறியவர்களாக இருக்கவேண்டும்.

தமிழக மக்களாகிய நாம் மெகா ஊழலின் உச்சத்தை தொட்ட ஆண்டிமுத்துராஜ,கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களின் வீடுகளின் முன்பு ஆர்பாட்டம் நடத்தவேண்டும்.அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வேகப்படுத்துவோம்!

1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி"
என்ற மக்கள் கட்டமைப்பு அண்ணா கசாரே தலைமையில் நாடு முழுவதும் அணி அணியாக ஆர்பரித்து வருகிறது.

நம்மை அடிமைகளாக வைத்து ஆட்டிப்படைத்த அரசியல் கூத்தாடிகள் இன்று கிலி பிடித்து அலறிவருகிறார்கள்!வாருங்கள் நாமும் ஆர்பரிப்போம்!ஊழலை ஒழிப்போம்!அண்ணாவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator