ஞாயிறு, 3 மே, 2020

https://youtu.be/J04lkLBBR5s #SSI, #MSME, #SME, #கைத்தறி, #விசைத்தறி, #தானியங்கிதறி, #பனியன் தொழில் சார்ந்த சிறுஉரிமையாளர்களின் உள்ளக் குமுறல்? #Kongunews007


best links in tamil
More than a Blog Aggregator

#Chaina vs #India #covind19 தொற்று முடிவுக்கு பிறகு சீனா vs இந்தியா தொழில் யுத்தம் தொடங்குமா?


best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 1 மே, 2020

#SBI குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் விளம்பரம்! இது ஏமாற்றுவேலை குமுறும்மக்கள்! #Homeloan #RBI ? ராஜ் டெக் வலைதளத்தில் மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் எஸ்பிஐ விளம்பரம் .. இல்லை! இல்லை இது ஏமாற்று வேலை என்று ஏராளமான பின்னூட்டங்களின் தொகுப்பு


best links in tamil
More than a Blog Aggregator

காசியின் காமவேட்டை 50க்கும் மேற்பட்ட பெண்களோடு உல்லாசமா? இன்னொரு பொள்ளாச்சி பாலியல் சம்பவமா? குமரி போலீஸ் தீவிர விசாரணை? நடந்தது என்ன? #Kasi #kumarpolice #sexualHarassment


best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு:- வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் #CoronaVirus | #Covid_19india

http://www.nonresidenttamil.orgதமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு:- வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்
#CoronaVirus | #Covid_19india
best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன் பிரபாகரன் பற்றிய விமர்சனத்தில் மன்னிப்பு கேட்டாராம் துல்கர் சல்மான்? வாரணம் அவசியம் உண்டு மலையாளப்படத்தில் நடந்தது என்ன? Kongu news-007 YouTube சேனலை பாருங்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள்.



best links in tamil
More than a Blog Aggregator

புதன், 29 ஏப்ரல், 2020

Write. Off -Waive. Off. அப்படின்னா என்னங்க? 68,600 கோடி தள்ளுபடி என்பது உண்மையா வாங்க பார்க்கலாம் kongunews007 YouTube. சேனலை


best links in tamil
More than a Blog Aggregator

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும் கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=3344014158945562&id=100000110338616&sfnsn=wiwspmo

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும்  கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் நம் மரியாதைக்குரிய மாப்பிள்ளை எழுத்தாளர் தியாகு அவர்களின் கடந்தகால அசைவுகளை உற்று கவனியுங்கள்.

மாணவர்களையும், இளைஞர்களையும், நடு வயதினர்களையும், தள்ளாத வயதினர்களையும், சாராய போதையிலிருந்து மீட்கப்பட வேண்டும்.

தினந்தோறும் செத்து, செத்து பிழைக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற படவேண்டும். நிரந்தர குடிகாரர்கள் கூட கடந்த முப்பது தினங்களாக குடி இல்லாமல் வாழ்ந்து காட்டி விட்டார்கள். குடிக்கடைகளை நிறுத்துவதற்கு இதை விட  சான்று வேறு என்ன வேண்டும்?

 டாஸ்மாக் பூட்டப்பட்டது,,பூட்டப் பட்டதாகவே இருக்கட்டும். இதற்கு பூரண மதுவிலக்கு அரசாணையை எடப்பாடியார் அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் மது ஒழிப்பில் தமிழகஅரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். உலகெங்கும் பரவட்டும் உணர்வோடு பகிருங்கள்! 
இவன்:- டி.கே தீரன்சாமி, தேசிய அமைப்பாளர், கொங்கு தமிழர் கட்சி
#Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

#Weaverpower #நெசவாளர் ஷக்தி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

https://chat.whatsapp.com/Hdm9NGtuHBzH9DQfH1FMp5.   
  இந்த லிங்கை பயன்படுத்தி நெசவாளர் சக்தி வாட்ஸ்அப் குரூப்பில் இணையவும்
கைத்தறி, சிறுவிசைத்தறி சொந்தமாக அமைத்து கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்கள்தான் இன்றைக்கு இந்தியாவின் விவசாயத்திற்கு அடுத்த பெரும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்பாக உள்ளது.

 40 நாட்கள் நெசவுத்தொழில் இல்லாமல் ஊசலாட்டத்தின்  விழிம்பில் சீரழிந்து கொண்டிருக்கும் எம் நெசவாளர் சொந்தங்களை காக்க மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

இதை நாங்கள் அரசிடம் இனாமாக கேட்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் வரி வருவாயில் 20 விழுக்காடு நெசவுத் தொழில் சார்ந்த வருவாய் என்பது  குறிப்பிடத்தக்கது. அதில் சிறு பகுதியைத் தான் நாங்கள் சலுகையாகக் கேட்கிறோம்.

நெசவாளர் குடும்பங்களின் உணவுத்தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.

மின்கட்டணம் முழுமையாக செய்யப்பட வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகள் , மைக்ரோ பைனான்ஸ் என்று சொல்லக்கூடிய தனியார் நிதிநிறுவனங்கள், 
உள்ளிட்டவைகளில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேற்படி வங்கிகளில் கடனுக்காக திருப்பிச் செலுத்தும் தவணை தொகையானது ஒரு ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகள் தாக்கல் செய்யும் காலஅவகாசம் ஓராண்டாக நீட்டிக்கப்பட வேண்டும்.

நெசவாளர் குடும்பத்தின்  மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீண்டும் நெசவு தொழில் தொடங்கி நடத்துவதற்கு தறி ஒன்றுக்கு 25,000 வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்.

பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யப் படுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இப்படிக்கு :-
நெசவாளர் சக்தி (Weaverpower)
(கைத்தறி, விசைத்தறி, சிறுதானியங்கிதறி  சொந்தமாக அமைத்து  கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்களின் பேரமைப்பு)
best links in tamil
More than a Blog Aggregator

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும் கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும்  கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் நம் மரியாதைக்குரிய மாப்பிள்ளை எழுத்தாளர் தியாகு அவர்களின் கடந்தகால அசைவுகளை உற்று கவனியுங்கள்.

மாணவர்களையும், இளைஞர்களையும், நடு வயதினர்களையும், தள்ளாத வயதினர்களையும், சாராய போதையிலிருந்து மீட்கப்பட வேண்டும்.

தினந்தோறும் செத்து, செத்து பிழைக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற படவேண்டும். நிரந்தர குடிகாரர்கள் கூட கடந்த முப்பது தினங்களாக குடி இல்லாமல் வாழ்ந்து காட்டி விட்டார்கள். குடிக்கடைகளை நிறுத்துவதற்கு இதை விட  சான்று வேறு என்ன வேண்டும்?

 டாஸ்மாக் பூட்டப்பட்டது,,பூட்டப் பட்டதாகவே இருக்கட்டும். இதற்கு பூரண மதுவிலக்கு அரசாணையை எடப்பாடியார் அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் மது ஒழிப்பில் தமிழகஅரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். உலகெங்கும் பரவட்டும் உணர்வோடு பகிருங்கள்! 
இவன்:- டி.கே தீரன்சாமி, தேசிய அமைப்பாளர், கொங்கு தமிழர் கட்சி
#Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?

பாரதிய ஜனதா கட்சி என்பது  இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது  என்ற பிம்பம் இதுவரை எனக்குள்ளும்  இருந்தது!

ஆனால் இந்த தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்து முடிந்துபிறகு! அது பற்றிய செய்திகள் வெளிவந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதைப்பற்றி அசை போட்ட போது! எனது புலனாய்வு மூளைக்குள் அதீதமான செய்தி  ஒன்று தோன்றியது.

அதுவரையிலும் இந்த தப்லீக் ஜமாத்தனா என்ன? அது எப்படி? செயல்படுகிறது என்பது குறித்து முஸ்லீம் நண்பர்களிடம் நான் விசாரித்து வைத்திருந்தேன்!

உலகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் பிறப்பிடமாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், இப்போதைய அனைத்து இஸ்லாமி அமைப்பினுடைய செயல்பாடுகளுக்கு மூலமாகவும் இருக்கக்கூடியது
இந்த அமைப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.

இந்த அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் இந்தியா உட்பட இஸ்லாமியர்கள் வாழும் அத்தனை தேசங்களிலும் எதிரொலிக்கும்.

இப்படிப்பட்ட அமைப்பின் மாநாடு ஐந்து தினங்கள் நடைபெறுவதற்கும்! 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கும்! அதுவும் தேசத்தின் தலைநகரான டில்லியில் நடைபெறுவதற்கும் அனுமதி கொடுத்தது யார்?

அமித்ஷாவின் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மாநகர காவல் துறைதான் இந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது. மிகப் பழமையான இஸ்லாமிய இயக்கத்தின் மாநாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் அனுமதி மறுத்து இருக்க முடியும்.

மேலும்  மாநாடு எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஜனநாயகம் இந்தியாவில் பிஜேபி அரசாங்கத்தால் நசுக்கப்படுகிறது என்ற கருத்து இந்த இடத்தில் முற்றிலும் அடிபடுகிறது.

 மேற்படி சம்பவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கருத்து என்ன? இஸ்லாமியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்பதுதானே!

பிராந்திய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நேரடியாக மத்திய பிஜேபி அரசாங்கத்தால் பாதிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாறாக பாதுகாப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிஜேபி செயல்படுகிறது என்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். இஸ்லாமிய நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள், !

இவன்:- டி.கே.தீரன்சாமி,
தேசியஅமைப்பாளர்,
 கொங்கு தமிழர் கட்சி,
#Kingunews007  #TablighiJamaat #bjp #delhipolice #amitsha
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இன்னும் 10 ஆண்டுகளில் நேர்மையாளர்கள் மட்டுமே ஆட்சி செய்வார்கள்


best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன் தீரன் சின்னமலையின் இறுதி நொடிகள்


best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பிதற்றித் திரியும் பெற்றோர்களே..! ‘எம்புள்ள, பிரீ. கே. ஜி. படிக்கும் போதே நல்லா எழுதவும், பாடவும் செய்கிறது

பிதற்றித் திரியும் பெற்றோர்களே..!
‘எம்புள்ள, பிரீ. கே. ஜி. படிக்கும் போதே நல்லா எழுதவும், பாடவும் செய்கிறது’ எனப் பிதற்றித் திரியும் பெற்றோர்களே! உங்களுக்காக அந்த வள்ளுவன் தாத்தா ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

ஒரு நாள் மாலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, என் பாலியக்கால நண்பரின் வீட்டிற்கு இயல்பாகச் சென்றேன். அங்கே நான் கண்ட ஒரு காட்சி, சில நிமிடங்கள் என்னை உணர்ச்சியற்றச் சிலையாக்கியது.

வெறும் இரண்டு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தையொன்று, அந்த வீட்டின் வரவேற்பறையில் தன்னம்தனியாக இருந்து கதறி அழுது, கண்கள் இரண்டும் ரத்தம் போல் சிவந்து, பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்யும் விதத்தில் வீக்கம் போட்டு, எடுப்பாருமின்றி அணைப்பாருமின்றி அலங்கோலமாகக் காட்சியளித்தது. குழந்தையின் அருகில் ஒருசில புத்தகங்களும் ஒரு சிலேட்டும் ஒண்றிரண்டுப் பென்சிலும் சிதறுண்டுக் கிடந்தன.

குழந்தையின் கதறல் சத்தத்தையும் மீறி வீட்டின் உள்ளிருந்து ‘சனியனை வீட்டில வைச்சிருக்கிறதே தப்பு; பள்ளிக்கு விட்டு மூணு மாதமான பிறகு, இதுவரை ஒரு லெட்டர் கூட எழுதத் தெரியல, ஒரு றயிம்ஸ் கூட ஒழுங்காச் சொல்லமாட்டேங்கிறான். சனியன் தொலஞ்சுப் போனாக்கூட பரவாயில்ல’ என்னும் சாபக்குரல் என் காதுகளைத் துளைத்தது.

ஒரு நிமிடம், உள்ளே செல்லவா? இல்லை திரும்பிப் போகவா? என்ற குழப்பத்தில் நிற்கும் போது, உள்ளேயிருந்து சாபம் போட்ட அதே குரல் வெளியே வந்து ‘ஆ… வாங்க… வாங்க… எப்ப வந்தீங்க…’ எனக் கேட்க, நானும் சுதாரித்துக் கொண்டு, ‘இப்பத்தான் வந்தேன்’ எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றேன்.

உள்ளே சென்ற நான் எதுவும் தெரியாதது மாதிரி, ‘குழந்தை எங்கே?’ எனக்கேட்டேன். ‘அறுபதாயிரம் பணம் கொடுத்து ஒரு பெரிய இங்கிலீஷ் மீடியம் பள்ளியிலே பிரீ. கே. ஜி. அட்மிஷன் வாங்கி மூணு மாசமா போயிட்டிருக்கான், இதுவர ஒரு எழுத்துகூட அவனால எழுத முடியல… ஒரு றயிம்ஸ் கூட சொல்லமாட்டேங்கிறான்… என்னச் செய்றதென்று தெரியல…’ எனக் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் அந்தச் சாபக்காரி அம்மா…?

எனது கனத்த இதயத்தைக் கொஞ்சம் இதமாக்கிக் கொண்டு, ‘சரி, இப்பத்தானே பள்ளிக்கு விட்டிருக்கீங்கப் போகப்போக எல்லாம் சரியாகும்.’ என சமாளித்துக் கொண்டு, ‘உங்க மாமா, வீட்டில இல்லையா?’ எனக் கேட்டேன். ‘இல்ல, இப்பத்தான் வெளியே போனாரு’ எனக்கூற, ‘சரி அவரு வந்தா நான் வந்திருந்ததாச் சொல்லுங்க’ எனக் கூறிக்கொண்டு, அந்தச் சாபக்காரியிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தேன்.

அந்த வீட்டில், நான் கண்ட அக்குழந்தையின் கோரக்காட்சி, அன்று என்னை உண்ணவும், உறங்கவும் அனுமதிக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் இது.

இந்தியாவின் கல்விமுறை, ஆரம்பக்காலக் குருகுலக் கல்வியிலிருந்து தொடங்கி, பள்ளிக் கல்வி, தொலைநெறிக் கல்வி எனப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, இன்று ஆங்கிலவழிக் கல்வியின் ஆதிக்கதில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆங்கிலவழிக் கல்வியின் ஆதிக்கம் இந்தியாவி்ல் குறிப்பாகத் தமிழகத்தில் தலைத்தூக்காதது வரைக்கும் கற்றல், கற்பித்தலில் எவ்விதச் சிக்கலுமின்றி ஒரளவுக்குச் சீராகவே சென்றுகொண்டிருந்தன.

அதுவரை ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் வயது குறைந்தது ஐந்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்தாலும், முதல் இரண்டாண்டுகள் தாய்மொழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. மூன்றாம் வகுப்பு முதல்தான் இரண்டாம் மொழியான ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. இம்முறை, மாணவர்களின் சிறு வயதில் நல்ல புரிதலுக்கு வித்திட்டது. அதனால் ஆசிரியர்களின் கற்பித்தலும், மாணவர்களின் கற்றலும் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும், சுவையாகவும் இருந்தன.

அப்பொழுதெல்லாம், முதல்முதலாகக் குழந்தைகளுக்கு எழுதுவதற்குக் கற்பித்துக் கொடுப்பதற்குத் தரையில் மணலைப் பரப்பி அதில் கைவிரல் கொண்டு எழுத வைக்கும் முறையைக் கடைபிடித்தனர். அதோடுமட்டுமின்றி நெல், அரிசி, மற்றும் நெல்லிலிருந்து வரும் உமி, தவிடு ஆகியவற்றைப் பரப்பி அதில் விரல் கொண்டு எழுதுவதற்குப் பயிற்சியளித்தனர். அம்முறையை சிறு குழந்தைகள் மிகவும் ஆசையோடும், தங்களின் சுயவிருப்பத்தோடும், ஒரு விளையாட்டாகவே கருதி எழுதிப் பழகினார்கள்.
இம்முறையினால் குழந்தைகளுக்கு எழுத்தின் மீதோ, படிப்பின் மீதோ, கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதோ எவ்வித வெறுப்பும் எழவில்லை. மாறாக அபரிதமான ஆசையும், அன்பும் பெருகின. ஆனால் என்றைக்கு ஆங்கிலவழிக் கல்வி, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதோ அன்றிலிருந்து நிலைமைத் தலைகீழாக மாறத்தொடங்கியது.

ஆங்கிலவழிக் கல்வியில் முதலில் மூன்று வயதிலிருந்து குழந்தைகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கத் தொடங்கினார்கள். பின்னர் இரண்டு அல்லது இரண்டரை வயதில் பிரீ.கே.ஜி. வகுப்பில் சேர்க்கத் தொடங்கினார்கள். இரண்டு அல்லது இரண்டரை வயது என்பது, பால் மணம்மாறாப் பச்சிளம் குழந்தைப் பருவம். வீட்டில் அதன் விருப்பத்திற்கு வேண்டியதையெல்லாம் தின்று… விரும்பிய போதெல்லாம் விளையாடி… தூக்கம் வரும்போதெல்லாம் தாயின் மடியில் படுத்துத் தாலாட்டுக் கேட்டுக்கொண்டே தூங்க வேண்டியப் பருவம்.

இந்தப் பருவத்தில் அவர்களைப் பள்ளிக்கு, அனுப்புவது எந்த வகையில் நியாயமாகும்? அப்படி அனுப்பினால்கூட, பள்ளிக்கு அனுப்பி ஒன்றிரண்டு மாதத்திற்குள், அப்பச்சிளம் குழந்தை எழுத்தவில்லை, பாடவில்லை, ஆடவில்லை, படிக்கவில்லை என்று எப்படிக் கண்டிக்க முடியும்?

ஐந்து வயதிற்கு முன் குழந்தைகளுக்கு பேனா அல்லது பென்சில் வைத்து எழுதுவதற்குக் கற்றுக்கொடுத்தால், அந்தப் பேனாவை அல்லது பென்சிலைப் பிடிப்பதற்கான வலிமை, அக்குழந்தைகளின் விரல் தசைக்கோ, நரம்பிற்கோ இருக்காது. அதனால் குழந்தைகள் எழுதும்போது கைவிரல் கடினமாக வலிக்கும். அதனால் குழந்தைகளுக்கு அதிக நேரம் எழுதுவதற்கு இயலாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எழுத்தின் மீதும், கற்பிக்கும் ஆசிரியர் மீதும் பெரும் வெறுப்பை உருவாக்கும். கூடவே படிப்பின் மீது அறவே அக்கறையில்லாமல் ஆக்கிவிடும்.

மேலும் குழந்தைகளின் மூளை சரியான வளர்ச்சியடைவதற்கு முன்பு அவர்களைப் பாடங்களைப் படித்து மனப்பாடம் செய்யக் கட்டாயப்படுத்துவது பெரும் தவறு என மருத்துவர்களும், உளவியல் வல்லுனர்களும் உரைக்கின்றனர். இதனால் குழந்தைகளின் மனவளர்ச்சி குன்றுவதோடு, அவர்களுக்குப் படிப்பின் மீது பெரும் வெறுப்பை உருவாக்கி மனநோய்க்கு வழிவகுக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தைகளின் இம்மாதிரியான உளவியல் தத்துவங்களை, தற்போதுள்ள கல்வியாளர்களும், கல்வித்துறையும் உணர்ந்ததினால் தான் மத்திய அரசின் கல்விக் குழுவான என். சி. இ. ஆர். டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்) சி. பி. எஸ். இ. பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கவோ, பாடங்களை மனப்பாடம் செய்வதற்கு வற்புறுத்தவோ கூடாது என அறிவித்துள்ளது.

இதே நடைமுறையை சி. பி. எஸ். இ. பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழகக் கல்வித்துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது என்பதை அனைத்துப் பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய நவீனகாலப் பெற்றோர்கள், தாயின் வயிற்றில் கரு உற்பத்தியான உடனேயே, அக்குழந்தையைப் படிக்க வைப்பதற்கு, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திலுள்ள மிகவும் பிரபலமான ஆங்கிலவழிக் பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்காக லட்சக்கணக்கானப் பணத்தை அட்வான்சாகக் கொடுத்து இடத்தை ரிசர்வ் செய்கின்றனர். அதன் பின்னர் தங்களின் குழந்தைப் பிறந்து வெளியே வரும்போது ஒரு சிலேட்டும் பென்சிலும் கூடவேக் கொண்டுப் பிறக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.

பால்மணம் மாறாதப் பச்சிளம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி, அங்கிருந்து ஆசிரியர்களின் துன்புறுத்தலின் பேரில் ஒன்றிரண்டு ஆங்கில எழுத்துகளை எழுதவும், எ முதல் இசட் (A to Z ) வரை எழுத்துக்களைக் சொல்லவும் தெரிந்திருக்கும் பிள்ளைகளைப் பற்றி, வருவோர் போவோரிடத்திலெல்லாம் ‘எம்புள்ள, பிரீ. கே. ஜி. படிக்கும் போதே நல்லா எழுதவும், பாடவும் செய்கிறது’ எனப் பிதற்றித் திரியும் பெற்றோர்களே! உங்களுக்காக அந்த வள்ளுவன் தாத்தா ஒன்றை எழுதி வைத்துள்ளார். கொஞ்சம் கவனியுங்கள்.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

உங்களின் செல்லக் குழந்தைகளை மடியில் அமர்த்தி அவர்களுக்கு பூவும் பொட்டும் வைத்து… கொஞ்சிப் பேசி… வாய்விட்டுச் சிரித்து… தாலாட்டுப்பாடி… கொண்டாடத் தெரியாத உங்களுக்கு, எதற்கு குழந்தைச் செவ்வம் என்பதை வள்ளுவன் கூற்றிலிருந்து புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, குறைந்தது மூன்று வயதிற்குப் பிறகுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள். முறையான, முழுமையான உடல் வளர்ச்சியும், மன எழுச்சியும் அடைந்த பின்பு மட்டுமே அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுங்கள். அதுவரை குழந்தைகளை ஒரு தொல்லையாகக் கருதாமல், அவர்கள் ஒரு வரம் எனக்கருதி, அவர்களோடு கொஞ்சி விளையாடுங்கள். அதிலிருந்து குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்.
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 14 செப்டம்பர், 2019

மருத்துவரை கொல்வது போன்றவற்றால் நம் நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகும்.

ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யும் நிபுணர்களுக்கான MCh cardiothoracic surgery படிப்பும்

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரத்யேகமாக படிக்கும் MCh paediatric surgery படிப்பும்

இதய நோய்க்கான பட்ட மேற்படிப்பான DM cardiology

ப்ளாஸ்டிக் சர்ஜரி படிப்புக்கான சீட்களும்

அவசர சிகிச்சைக்கு படிக்கும் மேற்படிப்பு சீட்களும்

எடுத்துப்படிக்க ஆளில்லாமல் இருக்கும் நிலை வந்திருக்கிறது .

எங்கு 120 கோடி பேர் வாழும் இந்தியாவில்.

இந்த படிப்புகளை படிக்கும் அளவு மருத்துவர்களுக்கு திறமை இல்லையா?
வசதி இல்லையா ?

இவை அனைத்தும் இருக்கிறது ஆனால் ஏன் இந்த படிப்புகள் காலியாக இருக்கின்றன ?

மேற்சொன்ன படிப்புகளை படித்து விட்டு அவசர சிகிச்சை பிரிவு
ஆபரேசன் தியேட்டர் போன்றவற்றில் கஷ்டப்பட்டு அறுவை சிகிச்சை செய்தாலும் விதி வசத்தால் மரணமடையும் நோயாளியின்  உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

கஷ்டப்பட்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் அவை பிழைக்காத போது அறுவை சிகிச்சை நிபுணர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

கடந்த சில வருடங்களாக மகப்பேறு மருத்துவத்துக்கான இடங்கள் சில சுற்று கவுன்சிலிங் முடியும் வரை கூட காலியாக இருந்தன.

காரணம் தாய் சேய் இறப்பு நேர்ந்தால் மருத்துவர் அடித்து கொல்லப்படும் நிலை இருக்கிறது.
சில வருடங்கள் முன்பு கூட தூத்துக்குடியில் ஒரு மருத்துவர் தலை துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.

இப்படி மடமை காரணமாக மருத்துவர்களை அறிவில்லாத மக்கள் அடிப்பதும் கொல்வதும் என்று இருப்பதால் இது போன்ற படிப்புகளை படிக்க ஆளில்லாமல் போகும் நிலை வந்திருக்கிறது.

இன்னும் பல சிறு மருத்துவமனைகளில் ஆபரேசன் தியேட்டர்கள் மூடப்படுகின்றன

ஐ.சியூ செட்அப்கள் மூடப்படுகின்றன

வெறும் புறநோயாளிகள் பிரிவு மட்டும் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு பல திறமை வாய்ந்த மருத்துவர்கள் வந்து விட்டனர்.

யாரும் ரிஸ்க் எடுக்க அஞ்சுகின்றனர்.

இத்தனை ரிஸ்க் எடுப்பதற்கு ஏற்ற ஊதியமும் இல்லை. இதுவே உண்மை நிலை.

இதனால் அவசர சிகிச்சைக்கு பெரிய மருத்துவமனைகளை நாட வேண்டி வரும்.
இதனால் பொருளாதாரம் அதிகம் செலவாகும்.

நம் ஊரிலேயே நல்ல மருத்துவமனைகள் உருவாகாமல் போகும்.

மருத்துவர்கள் நமது சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள்.
அவர்களை சமூகம் ஆதரிக்க வேண்டும்.
மருத்துவர்கள் கடவுள்கள் கிடையாது
பிறப்பு இறப்பு இரண்டும் பொதுவானாது.
எந்த மருத்துவனும் வேண்டுமென்றே தவறிழைப்பதில்லை.
அப்படி தவறிழைப்பதாக தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே உகந்தது.

வீணாக மருத்துவமனைகளை உடைப்பது.
மருத்துவரை கொல்வது போன்றவற்றால்
நம் நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போகும்.

இதை சமூகம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 11 செப்டம்பர், 2019

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு Sep 12, 2019

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு



Sep 12, 2019
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 31 ஆகஸ்ட், 2019

_*இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்! தண்டனை, அபராதம் பலமடங்கு அதிகம்

_*இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்! தண்டனை, அபராதம் பலமடங்கு அதிகம்.!!*_

_*சென்னை* : மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதில் பெரும்பாலானவை (செப்டம்பர் 1) இன்று முதல் அமலுக்கு வருகிறது._

_போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம் மற்றும் தண்டனையை விட பலமடங்கு அதிகமாக அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது._

_எனவே, இனிமேல், ரொம்பவே உஷாராக வாகனங்களை இயக்க வேண்டியது கட்டாயம். விபத்துகளை குறைக்க, இதுபோன்ற நடவடிக்கை உதவுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதோ, எந்தெந்த விதிமுறை மீறல்களுக்கு எந்தெந்த மாதிரி தண்டனை என்பது குறித்த முழுவிவரம் உள்ளது. பார்த்துக்கொள்ளவும்:_

_1).டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராதம் ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது._

_2).உரிமம் இல்லாமல் வாகனம் பயன்படுத்தினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்._

_3).உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ரூ.500 ஆக இருந்த அபராதம் இனி ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்._

_4).நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், லகுரக மோட்டார் வாகன ஓட்டுநர்களாக இருந்தால் ரூ.1,000 வரையும், நடுத்தர பயணிகள் அல்லது பொருட்கள் வாகனங்களுக்கு ரூ.4,000 வரை வசூலிக்கப்படும்._

_5).அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான தண்டனையாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க முடியுமாம்._

_6).வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்களுக்கு முதல் முறை ரூ.1000 வரையிலும், இரண்டாவது முறை என்றால் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும்._

_7).விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் / 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்._

_9).காப்பீடு இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ.1,000 மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இண்டாவது முறை இதே குற்றம் செய்தால் அபராதம் ரூ.4,000 மற்றும் / அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்._

_10).சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறார் 25 வயது ஆகும்வரை எல்.எல் கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்._

_11).லேனர் லைசென்ஸ் விண்ணப்பதாரர்கள் மாநிலத்தில் உள்ள எந்தவொரு உரிம அதிகாரத்திற்கும் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்பட்டது._

_12).ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், உரிமம் காலாவதியாகும் ஒரு வருடம் முன்போ, காலாவதியாகி ஒரு வருடத்திற்கு உள்ளோ எந்த நேரத்திலும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து புதுப்பிக்க விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர் மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்._
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#8_லட்சம்_கடனுக்கு_6_கோடி_ரூபாய்_சொத்தை_வளைத்துப்போட்ட #சங்ககிரி_தொழில்_அதிபர்கள்_கைது_சிபிசிஐடி_போலீசார்_அதிரடி



#8_லட்சம்_கடனுக்கு_6_கோடி_ரூபாய்_சொத்தை_வளைத்துப்போட்ட #சங்ககிரி_தொழில்_அதிபர்கள்_கைது_சிபிசிஐடி_போலீசார்_அதிரடி!

 #சங்ககிரியில்,
எட்டு லட்சம் ரூபாய்
கடனுக்கு 6 கோடி ரூபாய்
மதிப்புள்ள நிலத்தை சட்ட
விரோதமாக கிரயம்
செய்துகொண்ட பிரபல
தொழில் அதிபர்களை
சிபிசிஐடி போலீசார்
கைது செய்துள்ளனர்.



#சேலம்_மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணிஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.



இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை ‘பவர்’ பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். வாங்கிய கடனில் இரண்டரை லட்சம் மட்டுமே திருப்பிய செலுத்திய நிலையில், மொத்தமாக செட்டில்மெண்ட் செய்து விடும் முடிவில் மேற்கொண்டு வட்டி, அசல் தொகை செலுத்தாமல் இருந்திருக்கிறார் வெங்கடேசன்.

சண்முகம்

இந்நிலையில் அவர், தான் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று சொன்னால் செட்டில்மெண்ட் செய்து விடுவதாகவும், நிலத்தை கொடுத்து விடுமாறும் கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் சகோதரர்கள், ‘உங்கள் நிலத்தை 2001ம் ஆண்டிலேயே வேறு ஒருவருக்கு கிரயம் செய்துவிட்டோம். உங்கள் நிலம் நீங்கள் வாங்கிய கடனுக்கும் வட்டிக்கும் சரியாகப் போச்சு,’ என்று கூறியுள்ளனர்.



இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘நான் கொடுக்க வேண்டிய தொகையைவிட 20 லட்சம் ரூபாய்கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், எனக்கு என்னுடைய நிலம் வேண்டும்’ என்று அழுது புலம்பியும், கந்துவட்டி ஆசாமிகள் அசரவில்லை. அதன்பிறகே அவர், இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பிறகு இந்த புகார், சேலம் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.



யார் இந்த சண்முகம் பிரதர்ஸ்?:



சண்முகமும், மணியும்
சங்ககிரியில் ஸ்ரீபிஎஸ்ஜி
கலை அறிவியல் கல்லூரி,
பள்ளிக்கூடம், டிரான்ஸ்போர்ட்
சர்வீஸ், ஸ்பின்னிங் மில்,
நிதி நிறுவனம் என பல்வேறு
தொழில்களை நடத்தி
வருகின்றனர். அரசியல்,
காவல்துறை என பலமட்டங்களில்
செல்வாக்கை வளர்த்துக்கொண்டு
இருந்தாலும் எந்த ஒரு
அரசியல் கட்சியிலும் நேரடி
பொறுப்பு வகிக்கவில்லை.
உள்ளூரில் இவர்களை
‘மூவாயிரத்து ஏழு’ குடும்பம்
என்கிறார்கள். அதென்ன
மூவாயிரத்து ஏழு?.
அதையும் விசாரித்தோம்.



ஒரு காலத்தில்
சண்முகம் சகோதரர்களின்
தந்தை பழனிசாமி கவுண்டர்,
ஒரு வேன் வைத்திருந்தாராம்.
அந்த வாகனத்தின்
பதிவு எண் 3007.
அந்த எண் ராசியாக இருந்ததால்,
பின்னாள்களில் அவர்கள் வாங்கும்
கார்கள், வேன்கள், லாரிகள்,
கல்லூரி பேருந்துகள்
அனைத்திற்கும் 3007 என்பதையே
பதிவு எண்களாக பெற்றுள்ளனர்.
அதனால்தான் அவர்களை
3007 சண்முகம் குடும்பத்தினர்
என்கிறார்கள்.



இன்றைக்கு அவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனாலும், சொந்த ஊரில் ஒருவர்கூட சண்முகம் மீதோ, அவருடைய தம்பி மணி மீதோ நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என்பதும் நமது கள விசாரணையில் தெரிய வந்தது.



கந்துவட்டி மாஃபியா:



கடன் கேட்டு வருபவர்கள்,
எத்தனை கோடி கேட்டாலும்
அடுத்த சில நிமிடங்களில்
கொடுத்துவிடும் அளவுக்கு
பணத்தில் புரளக்
கூடியவர்கள்தான் சண்முகம்
சகோதரர்கள். ஆனால்,
என்னதான் தெரிந்தவராகவே
இருந்தாலும், அடமானமாக
அசையாச் சொத்துகளை பவர்
எழுதிக்கொடுத்தால்தான்
சல்லிக்காசு என்றாலும்
கொடுப்பார்கள். இன்று
அவர்கள் பினாமிகள்
பெயர்களில் குவித்து
வைத்திருக்கும் நிலபுலன்களில்
பாதிக்கும் மேற்பட்டவை,
கடன் வாங்கியவர்களிடம்
இருந்து வாரிச்சுருட்டியவைதான்
என்கிறார்கள்.

மணி

கந்துவட்டி மாஃபியாக்களான இவர்களிடம் சுமார் 100 கோடி ரூபாய் சொத்துகளை இழந்து, திக்கற்று நடுத்தெருவில் நிற்பதாகச் சொல்லி பதினான்கு பேர் எஸ்பி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்து இருந்தனர். 3007 சகோதரர்களின் முழு பின்னணி என்ன? கடன் வாங்கும் அப்பாவி மக்களின் சொத்துகள் முதலை வாயில் அகப்பட்ட விதம் குறித்தெல்லாம் கடந்த 4.3.2019ம் தேதியன்று ‘புதிய அகராதி’ இணைய இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இதற்கிடையே இந்த வழக்கு, சேலம் மண்டல சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.



நிலத்தை அடமானமாகப் பெறும்
சண்முகம் சகோதரர்கள்,
கடன் தொகை முழுதாக
செலுத்தப்பட்டாலும்கூட
நினைத்துப் பார்த்திராத
வகையில் ஒரு பெரும்
தொகையைக் குறிப்பிட்டு,
அவ்வளவு தொகை இன்னும்
பாக்கி இருக்கிறது. நீங்கள்
அடமானமாக எழுதிக்கொடுத்த
சொத்துகளை விற்றாலும்கூட
அந்த பாக்கித்தொகைக்கு
போதாது என்றெல்லாம்
கதை கதையாக அளப்பார்கள்
என்கிறார்கள்
பாதிக்கப்பட்டவர்கள்.
அதாவது,
எந்தக் காரணத்திற்காகவும்
‘பவர்’ எழுதி வாங்கிய
நிலமோ, வீடோ திரும்பவும்
கடன் பெற்றவர்களிடம்
போய்விடக்கூடாது என்பதில்
கவனமாக இருந்திருக்கிறார்கள்.
அதனால்தான் அவர்களால்
பல ஆயிரம் கோடி
சொத்துகளை குவிக்க
முடிந்திருக்கிறது.



இந்த நிலையில்தான் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், கடந்த செவ்வாய்  (ஆகஸ்ட் 27, 2019) அன்று மதிய வேளையில் சண்முகத்தையும், மணியையும் சிபிசிஐடி போலீசார் வீட்டில் வைத்தே கைது செய்திருக்கிறார்கள். போலீசார் சென்றபோது இருவரும் முண்டா பனியன், லுங்கி சகிதமாக கேஷூவல் உடையில் இருந்திருக்கிறார்கள்.



போலீசார் மப்டி உடையில் சென்றதால், அவர்களைப் பார்த்து யார் நீங்கள்? எதற்காக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்?’ என்றெல்லாம் கூச்சல் போட்டுள்ளார் மணி. ‘நாங்கள் இந்த சமுதாயத்தில் கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களைப் பார்த்து ஏறுங்கடா வண்டியில் என்று மரியாதைக் குறைவாக பேசுகிறீர்களே?’ என்று சண்முகமும் உதார் விட்டுள்ளார். அதற்கு போலீசார், அப்பாவி ஜனங்களோட சொத்தை எல்லாம் ஆட்டைய போடுற உனக்கு எல்லாம் எதுக்கு மரியாதை? என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

கந்துவட்டி மாபியாக்கள் சேலம் நீதிமன்ற வளாகத்தில்…

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அவர் மீது சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சிலர் புகார் கொடுக்க, திடீரென்று கந்துவட்டி மாஃபியா சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர். முன்ஜாமினும் பெற்றார்கள். இந்தமுறை அவர்களை லேசில் விட்டுவிடக்கூடாது என்பதில் சிபிசிஐடி போலீசார் அவர்களை மிகத்தீவிரமாக கண்காணித்து வந்தனர். சரியான நேரத்தில் சிபிசிஐடி போலீஸ் ஐஜி சங்கரிடம் இருந்து கைது செய்ய ஒப்புதல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில், கச்சிதமாக அவர்களை தூக்கி இருக்கிறது சிபிசிஐடி.



அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கில் இருக்கும் அவர்களை எந்த வகையிலும் முன்ஜாமின் பெற்று விடாமல் தீவிர கண்காணிப்பில் வைத்து இருந்ததால்தான் அவர்களை கைது செய்ய முடிந்திருக்கிறது என்கிறார்கள் சிபிசிஐடி தரப்பில் சிலர். பிறகு இருவரையும், சேலம் 4வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடுவர் உத்தரவின்பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்டனர். ஏனோ இதுபற்றிய விவரங்கள் ஊடகங்களில் வெளிவராத வண்ணம் அடக்கி வாசித்துள்ளது காவல்துறை.



குற்ற வழக்குகளில் விசாரிப்பதில் கைதேர்ந்தவரான டிஎஸ்பி கிருஷ்ணனிடமே, இந்த கந்துவட்டி மாஃபியாக்கள் சரிவர பதில் சொல்லாமல் முரண்டு பிடித்துள்ளனர். பல கேள்விகளுக்கு சண்முகம் தெரியாது என்றே பதில் சொல்லி இருக்கிறார். மணி மட்டும், சிலருடைய நிலங்களையும், அசையா சொத்துகளையும் சட்டப்படிதான் கிரயம் செய்தோம். யாரையும் மோசடி செய்யவில்லை என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். தனக்கு முதுகுவலி இருப்பதால் தன்னால் நீண்ட நேரம் உட்கார முடியாது என்று கூறி, விசாரணையின்போது பலமுறை சண்முகம் தரையிலேயே படுத்துக் கொண்டாராம்.



உசுரோட கொல்றதுக்கு சமம்…:



இதுபற்றி சிபிசிஐடி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.



”சங்ககிரியைச் சேர்ந்த சண்முகம் பிரதர்ஸ் வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சொந்த சாதியில் உள்ள விவசாயிகள், சிறு வணிகர்களாக தேடிப்பிடித்து கடன் கொடுத்துள்ளனர். கடன் வாங்கிய பலருக்கும் எந்தவித பின்புலமும் கிடையாது. கடன் கேட்ட அனைவருக்கும் சொத்துகலின் பேரில்தான் கடன் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மோசடியாக அவர்களின் சொத்துகளை பினாமிகள் பெயர்களில் கிரயம் செய்துள்ளனர்.



சண்முகம் சகோதரர்கள் செய்த குற்றம், அப்பாவி ஜனங்களை உயிரோடு கொன்று போடுவதற்கு நிகரானது. புகார் கொடுத்த வெங்கடேசன், சட்டைக்கு பட்டன்கூட இல்லாமல் ஊக்கை மாட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. சண்முகமும், மணியும் எல்லாம் சட்டப்படிதான் நடந்திருக்கிறது என்று சட்டம் பேசுகிறார்கள். எப்படியும் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடடியாக உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்,” என்றார்.



கந்துவட்டி மாஃபியாக்கள் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது. மேலும் சிலரின் புகார்களின்பேரில் கந்துவட்டி மாஃபியாக்கள், அவர்களின் மகன், உடன்பிறந்த தங்கை ஆகியோர் மீதும் கைது நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிகிறது.

#நம்ம_சங்ககிரி
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஆடி-18 மாவீரனுக்கு வீரவணக்கம்!தமிழ்தேசியப் போராளியின் விடுதலைக்கனவு


 தீரன்சின்னமலையின் வரலாற்று சுருக்கம்!
லகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமைச்சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை ஆகும்.அத்தகைய அடிமைத்தனத்திற்கு எதிராக தனி மனிதர்களின் தலைமையில் போராளிக்குழுக்கள் தோன்றுவதும், வீழ்வதும் ஒரு கட்டத்தில் வெற்றிபெறுவதும் வரலாற்று நிகழ்வுகள்.

 நமது பாரததேசம் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டில் இருந்து நமதுதாய்த் திருநாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்டவன் இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை

 கொங்கு 24நாடுகளில் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் நாட்டில் மேளப்பாளையம்-கிராமத்தில் வாழ்ந்த கொங்குவேளாளர்சாதீ- பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதிகளுக்கு 17-4-1756 அன்று இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

தனது இளைமைப்பருவத்தில் சிலம்பாட்டம்,வில்வித்தை,கிணறு தாண்டுதல்,குதிரை ஏற்றம்,வேட்டையாடுதல் போன்ற வீரவிளையாட்டுகளில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்.கொங்குநாடு அப்பொழுது மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி திவான் மூலமாக மைசூராருக்கு சென்றது.


வடக்கே சென்னிமலை,தெற்கே சிவன்மலை,கிழக்கே அரச்சலூர் தலவுமலை இதன் மத்தியில் அடர்ந்த வனப்பகுதி.இங்கு தீரன்சின்னமலை தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.அப்படி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்பொழுது தாராபுரம் வேலாயுதக்கவுண்டரிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு சங்ககிரியை நோக்கி சென்ற இரண்டு குதிரை வீரர்களிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்தார் சின்னமலை.

.
அப்பொழுது சிவன்மலைக்கும்-சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாக உமது திவானிடம் போய்ச்சொல் என்று தீரன்சின்னமலை முழங்கினார்.அதன் பிறகுதான் தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் தீரன்சின்னமலையாக மாறியது. இந்த நிகழ்வை சங்ககிரி திவான்-மைசூர் மன்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.கோபம் கொண்ட மைசூர்மன்னர் ஹைதர்அலி குதிரைப்படை ஒன்றை அனுப்பி சின்னமலையை கைது செய்து இழுத்துவர பணித்தார்.ஆனால் திவானின் குதிரைப்படையை சின்னமலையின் தடிக்காரப்படை அடித்துநொறுக்கி விரட்டி அடித்தது.

7-12-1782-இல் ஹைதர்அலியின் மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் அரசர் ஆனார்.மைசூராரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை கிழக்கிந்தியக்கம்பெனி கபலீகரம் செய்ய திப்புவிற்கு எதிராக கடும்போர் நடத்தி வந்தனர்.இத்தகைய அவசர காலத்தில் கொங்குநாட்டு வரிவசூலுக்கு எதிராக சின்னமலை வீரத்துடன் தடுத்து நிறுத்தி போரிடுவது திப்புவை வெகுவாக கவர்ந்தது.சின்னமலையிடம் சண்டையிட்டு உள்நாட்டு போரில் கவனம் செலுத்துவதைவிட-நம்மோடு இணைத்துக்கொண்டு நமது மண்ணின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டியடிக்க திப்பு விவேகமாக உறுதிபூண்டு சின்னமலைக்கு தூது அனுப்பினார்.

மண்ணின் பொது எதிரியை வீழ்த்தும் திப்புவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சின்னமலை ஆயிரம் இளைஞர்கள் கொண்ட கொங்குபடையை மைசூருக்கு அழத்துச்சென்றார்.அங்கு திப்புவின் தளபதிகள் மற்றும் பிரஞ்ச் படைவீரர்கள் கொண்டகுழு கொங்குபடைக்கு முறைப்படி போர்ப்பயிற்சி அளித்தனர். கொங்குபடை மழவல்லி,சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.குறிப்பாக மழவல்லிப் போரில் 40,000 வீரர்கள் கொண்ட வெள்ளைப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சிவகுமாரால்
வரையப்பட்ட ஓவியம்

மாவீரன் நெப்போலியனிடம் உதவி வேண்டி திப்பு அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வை தேவர் இடம் பெற்றிருந்தார்.



4-5-1799-இல் நான்காம் மைசூர்போரில் கன்னட நாட்டின்போர்வாள் திப்பு கொல்லப்பட்டார்.திப்புவின் வாரிசுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சின்னமலையின் உற்ற நண்பன் வேலப்பன் வெள்ளையப்படையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் பிறகு சின்னமலை கொங்குநாடு திரும்பினார்.அரச்சலூர் ஓடாநிலையில் கோட்டை-கொத்தளங்கள் அமைத்து தம்மை கொங்குநாட்டின் பாளைக்காரனாக அறிவித்துக்கொண்டார்

.பிற பாளையக்காரர்களுக்கும் தூது அனுப்பி வெள்ளையர்களை விரட்டி அடிக்கவேண்டும்,அதற்கு நமது ஒற்றுமை அவசியம் என்பதை வழியுறுத்தினார்.சின்னமலையின் வெள்ளை எதிர்ப்புக் கூட்டமைப்பில் வேளாளர்,நாயக்கர்,வேட்டுவர்,ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பட்டோர்,தேவர்,நாடார்,
வன்னியர்,இஸ்லாமியர் என்று பலர் இருந்தனர்.


அவர்களில் கருப்பசேர்வை,ஓமலூர்சேமைலைப்படையாட்சி,
சென்னிமலைநாடார்,முட்டுக்கட்டைபெருமாத்தேவன்,பத்தேமுகமதுஉசேன்,
விருப்பாட்சிகோபாலநாயக்கர்,சுபேதர்வேலப்பன்,செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முந்தைய காலகட்டத்தில் (18-4-1792-இல்) அனுமந்தராயர் என்ற வேட்டுவக்கவுண்டரிடம் காங்கயம்-சிவன்மலை பட்டாலிகிராமத்தில் தமது பெயரில் விலைக்கு வாங்கிய இடத்தில் போர்ப்பாசறை அமைத்து ஆயுதங்கள் தாயாரித்து-வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார்.பிரஞ்சு வீரர்களின் துணையுடன் சிறுரக பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டது.

 திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாகின் திட்டப்படி சில பாளையக்காரர்களின் துணையுடன் கோவைக்கோட்டையை தகர்த்து லெப்டினன்ட் கர்னல் க்ஸிஸ்டரின் தலைமையிலான 5-ஆம் கம்பெனியின் பட்டாளத்தை அழிக்க சின்னமலை திட்டமிட்டார்.ஒருநாள் முன்னதாகவே போராளிகள் அறிவிப்பின்றி செயல்பட்ட காரணத்தால் கோவைப்புரட்சி தோழ்வியில் முடிந்தது.

வெள்ளையர்களுக்கு எதிரான போரில் 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,1802-இல் ஓடாநிலையிலும்,1804-இல் அறச்சலூர் போரிலும் தீரன்சின்னமலையின் படை பெறும் வெற்றி பெற்றது.ஓடாநிலைப்போரில் வெள்ளைத்தளபதி கர்னல் மேக்ஸ்வெல்லின் தலையைக் கொய்து கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடப்பட்டது.சின்னமலையின் ஓடாநிலைக்கோட்டையை கடந்துதான் கேரளத்தின் மலபார் பகுதிகளுக்கு வெள்ளையர்கள் செல்லவேண்டும்.அதற்கு சின்னமலையின் காவிரிக்கரைப்படை பெறும் தடையாக இருந்தது.

போரில் வெற்றி பெறமுடியாத வெள்ளையர்கள் கொங்குநாட்டின் ஆட்சிப்பொறுப்பை விட்டுத்தருவதாகவும்-வரிவசூலின் மூன்று பகுதியை எடுத்துக்கொள்ளவும் வேண்டி சின்னமலைக்கு சமரசம் செய்து கொள்ள தூது அனுப்பினார்கள்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சின்னமலை-தொடர்ந்து போராட தனது படையை பலப்படுத்தினார்.

சென்னை கிண்டியில்
உள்ள சிலை
இந்த நிலையில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமக்கு எதிராக-தடுக்க முடியாத கடல் அலையாக வளர்ந்து வரும் தீரன்சின்னமலையை ஒழித்தே தீரவேண்டும் என முடிவுசெய்தது.கொல்கத்தா தலைமையகத்தில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கைகள் கொண்ட பெறும் பீடங்கிப்படை ஒன்று ஓடாநிலைக்கோட்டையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

சின்னமலையின் போர்ப்படைத் தளபதியும்-உற்ற நண்பனுமான சுபேதார்வேலப்பன் வெள்ளைப்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டு வெள்ளைப்படையில் சுபேதராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.ஆங்கிலேய அதிகாரிகளிடம் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை வளர்த்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஓலையின் வாயிலாக வெள்ளைப்படையின் நடவடிக்கைகளை ரகசியமாக சின்னமலைக்கு அனுப்பி வந்தார்.

அதன்படி செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் மூலமாக செருப்பின் உள்ளே வைத்து தைக்கப்பட்ட ஓலை சின்னமலைக்கு வந்து சேர்ந்தது.அந்த ஓலையில் அதிநவீன பெறும் பீரங்கிப்படை ஓன்று ஓடாநிலையை நோக்கி வருவதாகவும்-அத்தகைய படையின் முன்பு நமது மண்கோட்டையும்,போர்ப்படையும் தக்குப்பிடிக்க இயலாது என்றும்-உடனடியாக தாங்கள் தப்பிச்செல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டிருந்தது.தனது கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டையை காலி செய்து கொண்டு பழநிக்கு அருகில் உள்ள கருமலைக்குத் தப்பிச்சென்றார்.

ஓடாநிலைக்கோட்டையை அடைந்த ஆங்கிலேயப் பீராங்கிப்படையின் தளபதி சின்னமலையால் தம் படைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.கோட்டையை சோதனையிட உத்தரவு இட்டார்.சோதனையில் பீரங்கிப்படையின் வருகை குறித்து சுபேதார்வேலப்பன்-தீரன்சின்னமலைக்கு எழுதிய ஓலை கிடைக்கப்பெற்றது.அந்த இடத்திலேயே சுபேதார் வேலப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஓடாநிலைக்கோட்டை பீரங்கிப்படையால் மண்ணோடு மண்ணாக தகர்க்கப்பட்டது.

போரில் வெல்லமுடியாத சின்னமலை சகோதரர்களை சூழ்ச்சியின் மூலமாக சொந்த இனத்தவர்களே காட்டிக்கொடுதார்கள்.கைது செய்யப்பட்ட சின்னமலை சகோதரர்கள்,கருப்புசேர்வையுடன் ஆடி-18 (31-7-1805)இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.இறந்துபோன மாவீரர்களின் உடல்களை கழுகளுக்கு இறையாக்கினார்கள்.

கொங்குதமிழகத்தின் சுதந்திரதீபம் அணைந்தது..சிவன்மலையை சுற்றி இன்றும் தீரன்சின்னமலையின் நினைவுகள் சுழன்றுவருவதாக நான் நம்புகிறேன்.அடிமைத்தலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைப்படுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

இத்தகைய மாவீரர்கள் எந்த விசாரணைகளும் இல்லாமல் வெள்ளை அரசாங்காத்தால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.அவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்கள். ஆம் மாவீரர்கள் மீண்டும்,மீண்டும் பிறந்தார்கள்.140-ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்தாயின் விடுதலை மலர்ந்தது.தீரன்சின்னமலையைப் போன்ற மாவீரர்களின் கனவு பலித்தது.உலகில் மனிதஉரிமைகள் நசுக்கப்படும்பொழுது மாவீரர்கள் மீண்டும் பிறப்பார்கள்.

இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18 (3-8-11) அன்று மாவீரனின் 206- வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

மையஅரசால் 
வெளியிடப்பட்ட 
தபால்தலை
ஈழத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிங்களவர்களின்அடிமைச்சாசனத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சோகம் இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்று சொன்னால்அது மிகையாகது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஈழவிடுதலை போராளிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டின் துவக்கம்வரை போராடி வீழ்ந்துள்ளார்கள்.

தீரன்சின்னமலையின் நினைவு தினமான இன்று ஈழத்தில் மீண்டும்போராளிகள் எழுவார்கள்!ஈழத்தமிழர்களின் விடுதலைக்கனவு பலிக்கும்.நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் தனிஈழம் ஒன்று அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்கள்.நிச்சயம் ஈழத்தில் தனி ஈழம் ஒன்று மலர்ந்தே தீரும் என்று நம்புவோம்.

                   தீரன்சின்னமலைக்கு அரசு அளித்த மரியாதை

முன்பு தீரன்சின்னமலை நினைவாக திருச்சியை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்துக்கழகமும், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.சென்னை கிண்டியில் சிலை எடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தீரன்சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது.இந்திய அரசின் தபால் தந்தித்துறை 31-7-2005 இல் தபால் தலை வெளியிட்டது.

அம்மா அவர்களுடன் வலைதள ஆசிரியர்-
 கொங்குதமிழர்கட்சியின்
மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
மாவீரனின் தேசப்பற்றை போற்றும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாவீரனின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுவிழாவாக தொடர்ந்து நடத்தப்படும் என்று அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தார்.அத்துடன் ஓடாநிலையில் மவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்தார்.


இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18(3-8-11) அன்று மாவீரனின் 206-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.இந்த நினைவு தினத்தை நமது தமிழக முதல்வர் மீண்டும் அரசு நிகழ்ச்சியாக ஆவண செய்துள்ளார்!மேலும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்!கட்சத்தீவை மீட்கவேண்டும்!ராஜபக்சேவை போர்குற்றவாளியாக நிறுத்த வேண்டும்! உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றி சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


200-ஆண்டுகளுக்கும் மேலாக போராடி லட்சக்கணக்கில் உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலின் கோரவிருச்சம் தலை விரித்து ஆடுகிறது.லஞ்சம்-உழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.


தீரன்சின்னமலையின் வரலாற்று பதிவு அல்லது சுருக்கம் நமது தமிழ் வலைதளப்பதிவுகளில் கிடைக்கப்பெறவில்லை.எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடக வலைதளப்பதிவு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.முதல் பதிவாக இந்திய விடுதலைப்புலி தீரன்சின்னமலை என்ற தலைப்பில் மூன்று பாராவில் சிறிதாக வெளியிட்டு இருந்தேன்.அது தெளிவானதாக தெரியவில்லை.இந்தப்பதிவு அந்தக்குறையை போக்கும் என்று நம்புகிறேன்.


இதில் காணப்படும் பிழைகளை எமது கருத்துரை பகுதியில் சேர்க்கவும்.இந்தப்பதிவை குறைந்தது பத்தாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.இந்தப்பதிவினைப் படிப்பவர்கள் தங்கள் நண்பர்களுக்கு தமது பதிவாகஅனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவிற்கு நான் காப்புரிமை வைத்துக்கொள்ளப் போவதில்லை.யார் வேண்டுமானாலும் எடுத்து வெளியிடலாம்.


இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநிலஅமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை
best links in tamil
More than a Blog Aggregator