செவ்வாய், 28 ஏப்ரல், 2020

#Weaverpower #நெசவாளர் ஷக்தி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

https://chat.whatsapp.com/Hdm9NGtuHBzH9DQfH1FMp5.   
  இந்த லிங்கை பயன்படுத்தி நெசவாளர் சக்தி வாட்ஸ்அப் குரூப்பில் இணையவும்
கைத்தறி, சிறுவிசைத்தறி சொந்தமாக அமைத்து கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்கள்தான் இன்றைக்கு இந்தியாவின் விவசாயத்திற்கு அடுத்த பெரும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்பாக உள்ளது.

 40 நாட்கள் நெசவுத்தொழில் இல்லாமல் ஊசலாட்டத்தின்  விழிம்பில் சீரழிந்து கொண்டிருக்கும் எம் நெசவாளர் சொந்தங்களை காக்க மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

இதை நாங்கள் அரசிடம் இனாமாக கேட்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் வரி வருவாயில் 20 விழுக்காடு நெசவுத் தொழில் சார்ந்த வருவாய் என்பது  குறிப்பிடத்தக்கது. அதில் சிறு பகுதியைத் தான் நாங்கள் சலுகையாகக் கேட்கிறோம்.

நெசவாளர் குடும்பங்களின் உணவுத்தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.

மின்கட்டணம் முழுமையாக செய்யப்பட வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகள் , மைக்ரோ பைனான்ஸ் என்று சொல்லக்கூடிய தனியார் நிதிநிறுவனங்கள், 
உள்ளிட்டவைகளில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேற்படி வங்கிகளில் கடனுக்காக திருப்பிச் செலுத்தும் தவணை தொகையானது ஒரு ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகள் தாக்கல் செய்யும் காலஅவகாசம் ஓராண்டாக நீட்டிக்கப்பட வேண்டும்.

நெசவாளர் குடும்பத்தின்  மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீண்டும் நெசவு தொழில் தொடங்கி நடத்துவதற்கு தறி ஒன்றுக்கு 25,000 வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்.

பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யப் படுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இப்படிக்கு :-
நெசவாளர் சக்தி (Weaverpower)
(கைத்தறி, விசைத்தறி, சிறுதானியங்கிதறி  சொந்தமாக அமைத்து  கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்களின் பேரமைப்பு)
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: