புதன், 29 ஏப்ரல், 2020

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும் கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=3344014158945562&id=100000110338616&sfnsn=wiwspmo

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும்  கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் நம் மரியாதைக்குரிய மாப்பிள்ளை எழுத்தாளர் தியாகு அவர்களின் கடந்தகால அசைவுகளை உற்று கவனியுங்கள்.

மாணவர்களையும், இளைஞர்களையும், நடு வயதினர்களையும், தள்ளாத வயதினர்களையும், சாராய போதையிலிருந்து மீட்கப்பட வேண்டும்.

தினந்தோறும் செத்து, செத்து பிழைக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற படவேண்டும். நிரந்தர குடிகாரர்கள் கூட கடந்த முப்பது தினங்களாக குடி இல்லாமல் வாழ்ந்து காட்டி விட்டார்கள். குடிக்கடைகளை நிறுத்துவதற்கு இதை விட  சான்று வேறு என்ன வேண்டும்?

 டாஸ்மாக் பூட்டப்பட்டது,,பூட்டப் பட்டதாகவே இருக்கட்டும். இதற்கு பூரண மதுவிலக்கு அரசாணையை எடப்பாடியார் அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் மது ஒழிப்பில் தமிழகஅரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். உலகெங்கும் பரவட்டும் உணர்வோடு பகிருங்கள்! 
இவன்:- டி.கே தீரன்சாமி, தேசிய அமைப்பாளர், கொங்கு தமிழர் கட்சி
#Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: