திங்கள், 9 ஜூன், 2014

பாலியல் வன்கொடுமை ?பாரத தேசமே!



ரௌத்திரம் பழகு....2

கருத்துரை:-க.சொளந்தரராஜன்

பெண்களை  போற்றுவதாக  சொல்லப்படுகின்ற நாடு இந்தியா....

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியியல் வன்கொடூரங்களுக்கு தீர்வு காண அரசு முழுவீச்சுடன் செயல்படாதது கண்டிக்கத்தக்கது. 


டெல்லி மருத்துவ மாணவியின் துயர சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும், அதாவது இன்று வரையிலும் ஒரு உறுதியான செயல்பாட்டையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவிதம் எதுவும், மீண்டும் இது போன்ற வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் என்றோ, குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தையோ  உருவாக்கும் என்றோ அமையவில்லை......


என்னுடைய தங்கைகளுக்கு,சகோதரிகளுக்கு,வீட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் வரை நமக்கும் அக்கறை இல்லை.

அரசுக்கு ஆபத்து வந்தால் அவசர சட்டம்(அப்போதைக்கு மட்டும்).

ஒரு வெட்கக்கேடான செயல்.....வயது பாராது வன்கொடுமை.....

இந்த புண்ணியத் திருநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போருக்கெல்லாம் ஒரு பின்னடைவு....

குற்றங்களின் தன்மையை பொறுத்து தண்டனைகள்...4 வயது குழந்தை,7 வயது குழந்தை.......இந்திய சட்ட வடிவமைப்பு இது போன்ற குற்றங்களை விரைந்து முடிக்கும் திறன் இல்லாதது...

உத்திரபிரதேச சம்பவம் கண்டிக்கத்தக்கது...ஆனால் அது இந்தியாவில் இது போன்ற கடைசி சம்பவமா...? அதற்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மகத்துவ, மாதவம் படைத்திட்ட பெண்களே....
நெஞ்சு பொறுக்குதில்லையே உம் நிலை கண்டு இன்று....!




 இந்திய மக்களவையின் தலைவர்......

16வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்கள் திறமையும், மக்களவை செயல்பாடுகளில் அனுபவமும் பெற்றவர். இந்தூர் தொகுதியின் உறுப்பினர் (8வது முறையாக..)
 
மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
 
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.
மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.
 
மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...



best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 3 ஜூன், 2014

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது!

கருத்துரை;-சொளந்தரராசன்

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது - இலங்கை 
 
இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு அண்மையில் வலியுறுத்தி உள்ள நிலையில், டிசில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ உரிமையில்லை.  இலங்கைப் பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கைப் பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறக்கூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. - என்று இலங்கை அரசின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல,ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக உள்ளது.காங்கிரசும் முடிந்த வரையில் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தது என்பதே உண்மை.
 
ஆனால் புதிய அரசின் வலியுறுத்தலுக்கு இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு இந்த பதில் எதிர்பார்த்த ஒன்று தான்.
 
இலங்கை அரசின் நிலைப்பாட்டை பற்றி, இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு,தமிழக அரசின் அழுத்தத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும் நீதியில்லை,
 
இருக்கும் தமிழர்களுக்கும் வாழ உரிமையில்லை.
 
இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை. மிகவும் சரி. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு உடன்பட்டது.
 
கடந்த அரசை போலவே எந்த வித உறுதியான நிலைப்பாடும் எடுக்கவில்லையெனில் இலங்கைக்கு நேரடியாக இந்தியா ஆதரவு என்று தெரிவித்துவிடலாம்...!
 
நடந்ததும், நடப்பதும் போர் அல்ல...படுகொலை....!
 
 
ரௌத்திரம் பழகு.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 2 ஜூன், 2014

ஜூ.வி.வார இதழ்.தமிழக முதல்வருக்கு வாழ்த்து.கொங்கு.தமிழர் கட்சி செய்தி விளம்பரம்..

ஜீனியர் விகடன்,வாரம் இருமுறை இதழில்
தமிழக முதல்வருக்கு வாழ்த்து- 01-6-14 -இதழ்
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி தமிழக முதல்வருக்கு வாழ்த்து..


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 30 ஏப்ரல், 2014

மே-தினம் ஒரு பரப்புரை


Article on Mayday - 'Mayday celebrations in Stockholm, Sweeden - India' image courtesy: wikipediaபார்வமணி
மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர்.

ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International Working Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday" என்று மாற்றிற்று.
Article on Mayday - 'Mayday celebrations in Peoples Republic of Poland - image courtesy: wikipedia

ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:
It is the first Monday in October in the Australian Capital Territory, New South Wales and South Australia.
In both Victoria and Tasmania, it is the second Monday in March (though the latter calls it Eight Hours Day).
In Western Australia, Labour Day is the first Monday in March.
In both Queensland and the Northern Territory, it is the first Monday in May.

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.

நன்றி:-பார்வமணி அவர்களால் எழுதப்பட்டு.மழலைகள் வளைதள இதழிலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்டது. மேலும் காண;-

ஐரோப்பிய நாடுகளில் மே தினம் என்பது நெருப்பின் தினமாக கொண்டாடப்பட்தை மேற்படி செய்தியின் மூலம் நாம் அறிய முடிகிறது.அது போல நமது இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டது என்று நாமும் போற்றுகிறோம்.ஆக நாடுகள் மனிதர்கள் வேறாக இருந்தாலும் காலகணிப்பு என்பது ஒன்றுபடுகிறது.மே-1 உழைப்பவர்களின் தினமாக,தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.தை-1ம் தேதியை உழவர்களின் திருநாளக நாம் போற்றுகிறோம்.

இந்தியாவில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வு செழித்தால்தான் நமது தேசம் வல்லரசாக உருவெடுக்கும். இதற்கு முதலில் லஞ்சமும்-ஊழலும் ஒழிக்கப்படவேண்டுமென! இந்த நள்ள நாளில் நாம் ஒவ்வொருவரும் சூளுரை ஏற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

25-04-2014 பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

நீண்ட தூரம் பயணித்து வரும் இந்த வழக்கு தொடர்பான ஒரு பார்வை.

கடந்த 25/05/1991 ல் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வருகை தந்தபோது படுகொலை செய்யப்படுகிறார்.

கொங்கு தமிழகத்தில் பிறந்த கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையிலான மத்திய சிறப்பு புலனாய்வுக்குழுவால் 20/01/1992 ல் பூந்தமல்லி சிறப்புத் தடா நீதிமன்றத்தில் 41 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் இறந்து போனவர்கள்,தலைமறைவாக இருப்பவர்கள் என 15 நபர்கள் தவிர 26 நபர்களுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28/01/1998 ல் மரணதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

குற்றவாளிகள் தரப்பிலான உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில்11/05/1999 ல் முருகன்,நளினி,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தும்,.ராபர்ட்,பயாஸ்,செயக்குமார்,ரவிச்சந்திரன் 
உள்ளிட்ட நால்வரின் மரணதண்டனையை, ஆயில் தண்டனையாக குறைத்தும்,மற்ற 16 பேரை விடுதலை செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

08/10/1999 ல் நளினி உள்ளிட்ட நால்வரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

25/04/2000 ல் தமிழக ஆளுநர் பாத்தீமா பீவி 161-வது சட்டப்பிரிவின்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நால்வரின் கருணை மனுவின் மீது-நளினியின் மரணதண்டனையை மட்டும் ஆயிள் தண்டனையாக குறைத்தும்,மற்ற மூவரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

72-வது சட்டப்பிரிவின்படி குடியரசுத்தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மரணதண்டனையை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில் 26/04/2000 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர்.

04/05/2000 ல் கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும்,அதில் கூட்டணிக் கட்சிகளாக தமிழகத்தைச் சார்ந்த,தி.மு.க,ம.தி.மு.க,பா.ம.க கட்சிகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள் என்பது கவனிக்கதக்கது.

21/06/2005 ல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 05-ஆண்டுகள் தாமததுக்கு பிறகு குடியரசு தலைவரின் பரிசீலைனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12/08/2011 ல் 11 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவரால் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

09/09/2011 ல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு உலகத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தில் போராட்ட அலையை ஏற்படுத்தியது.

30/08/2011 உயர்நீதி மன்றம் மரணதண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

01/05/2012 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

18/02/2014 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனையை ஆயிள் தண்டனையாக குறைத்தும்,இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

தீர்ப்பு வெளியிட்ட அதே நாளில் நமது தமிழக முதல்வர் சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாகவும்,இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் அளிக்கவேண்டும் என்றும் கடிதம் எழுதினார்.

ஆனால்,மத்திய அரசு தமிழக முதல்வரின் கடிதத்துக்கு விடுதலை செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என பதில் கடிதம் அனுப்புவதை விடுத்து,உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யக்கூடாது எனவும்,விடுதலை குறித்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் வழக்கு தொடுத்தது.

விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிக்கையுடனும்,மகிழ்வுடனும் காத்திருந்த ஏழு பேர் உள்ளிட்ட குடும்பத்தினர்களும்,தமிழக மக்களும்,உலகத்தமிழர்களும் மத்திய அரசின் இந்த பழிவாங்கும் அணுகுமுறையை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

25/04/2014 நேற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விடுதலை குறித்து 05 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.26/04/2014 இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் விடுதலை என்பது இன்னும் நீண்ட நெடிய போராட்டத்தை உள்வாங்கும் என்பது திண்ணம்.தமிழர்களாகிய நாம் போராடத்தயாராக இருப்போம்.










best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 17 ஏப்ரல், 2014

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா.


17-04-2014-கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம், மேலப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர்,ஓடாநிலையில் மாலை,மரியாதை செலுத்தப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 2 மார்ச், 2014

2014-மக்களவைத்தேர்தல்-அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்கு தமிழர் கட்சியின்-துண்டறிக்கை


best links in tamil
More than a Blog Aggregator

கொங்குதமிழன் மருத்துவர்.த.இளையராஜ ஐ.ஏ.எஸ் அவர்களின் திருமண விழா வாழ்த்து.



த.இளையராஜ.ஐ.ஏ.எஸ்

திருப்பூர் மாவட்டம்,சென்னிமலை கே.சி.வலசு பகுதியைசார்ந்த
திரு.எஸ்.தங்கமுத்து,திருமதி.டி.கண்ணம்மாள்
ஆகியோரது தவப்புதல்வன் மருத்துவர்.த.இளையராஜ ஐ.ஏ.எஸ், 

மாவீரன்.தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம் பகுதி எஸ்.பாலசுப்பிரமணி,ஆசிரியை.திருமதி.பி.தேவி அவர்களின் தவப்புதல்வி பா.சொளகார்த்திகா பி.இ ஆகியோரது

 இரு மணம் இணையும் திருமண விழா ( 03-03-2014-திங்கள் கிழமை) இன்று காலை காங்கயம் என்.எஸ்.என் திருமண மஹாலில் நடைபெற்றது.

மணமக்கள் 
உடல்நலம்,நீளாயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,
மெய்ஞானம்,
உயர்பதவி,உயர்மக்கள் பெற்று நல்வாழ்வு வாழ இறைநிலையோடு கலந்து வாழ்த்துகிறோம்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,
 தேசிய அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி மற்றும்
 தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை

மணமகன்.மரியாதைக்குறிய கொங்கு தமிழன்,மருத்துவர். த.இளையராஜ ஐ.ஏ.எஸ் அவர்கள் 2008 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் 131 ரேங்கில் தேர்ச்சிபெற்றுள்ளார்.தற்பொழுது மத்தியப்பிரதேசம் மாநிலம்,ராஜ்கார்க் மாவட்டத்தில்,ஜில்லா பஞ்சாயத்து சி.இ. ஒ வாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 13 ஜனவரி, 2014

"வேளாண்" திருநாள்! தமிழர் சிறப்பு

பொங்கல் திருநாள் வாழ்வில் அதன் தொன்மையான சுவடுகளை கொண்ட ஒரு பண்டிகையாகும். உழவர்கள் தங்கள் அறுவடைகளை முடித்து அந்த போகம் சிறப்புற நிகழ்ந்ததற்கு சூரியனுக்கு பொங்கல் படைத்து கொண்டாடும் உழவர்களின் திருநாளே பொங்கல். 

சூரியனையும், நிலத்திற்கு வளப்பம் சேர்க்கும் வான்பொருட்கள் அனைத்திற்குமான படைப்பு வழிபாட்டு நாளாகவே பொங்கல் உழவர்களால் கொண்டாடப்படுகிறது. நிலம் என்பது, வேறு எந்த பண்பாட்டிலும் இல்லாத அளவிற்கு தமிழர் பண்பாட்டில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று. பண்பாட்டையே 5 நிலப்பகுதிகள் கொண்ட திணை ஒழுக்கங்களாக வகுத்திருப்பது தமிழர் பண்பா‌ட்டில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய வாழ்வை அதன் அனைத்து பண்பாட்டுத் தன்மைகளோடும் சிறப்புறக் கொண்டாடும் இந்தப் பொங்கல் பண்டிகை நகரவாசிகளும் கொண்டாடி நமக்கெல்லாம் உணவு அளிக்கும் அந்த உழவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

தமிழ் பண்டைய நூல்களில், செய்தித் தாள்களிலும், பத்திரிக்கைகளிலும், பேச்சு வழக்கிலும் நின்று நிலைத்துப் போன "வேளாண்மை" என்ற சொல்லுக்கு இப்போது கொடுக்கும் பொருள் கொடுக்கப்படவில்லை.

webdunia photoWD
வேளாளர் பிரிவினர் பெரும்பாலும் உழவுத் தொழிலை கொண்டிருந்ததால் அது வேளாண்மை என்று வந்ததாக விளக்கம் கூறினாலும் இதற்கு தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் ஆதாரமில்லை.

தொல்காப்பியத்தில்தான் முதன் முதலில் "வேளாண்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் பொருளதிகாரம் என்ற தலைப்பின் கீழ் உள்ள களவியல் பிரிவில் 105ஆம் இலக்க சூத்திரத்தில் 'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு உரையாசிரியர்கள் விளக்கம் அளித்திருப்பினும், பெரும்பாலும் இளம்பூரணர் உரையே பின்பற்றப்படுகிறது. இந்த சூத்திரத்திற்கு உரை எழுதிய இளம் பூரணர் 'தலைவி உபகாரம் எதிர்பட்ட விருப்பின் கண்ணும்' என்று விளக்கம் கூறியுள்ளார்.

நன்றி;-webdunia தமிழ்
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 2 நவம்பர், 2013

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்-


அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்- என்ற செய்தி தி.தமிழ் ஹிந்து, 4தமிழ்மீடியா போன்ற ஊடகங்களில் வெளியானது. அதற்கு எனது கருத்துரை:-

தெற்குஆசியப் பிராந்தியத்தில்! ஏன்? உலகஅரங்கில் இந்தியத்துணைக்கண்டம் சக்திமிக்க வல்லரசாக வளர்ந்து வருகிறது.இது அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் கண்ணை உருத்துகிறது.

இவர்களின் கைத்தடி பாக்கிஸ்தான்.அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கட்டுப்பாட்டில் செயல்படும் சில தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் இறங்கியிருக்கலாம்.

ஏனெனில் தமிழகமுதலவர் அம்மா அவர்கள் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் அடுத்த பிரதம மந்திரிக்கான பார்வையில் உள்ளவர்.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப்போன்று உறுதியான,அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர் நமது முதல்வர் அம்மா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முதல்வர் இந்தியாவின் தலைமை மந்திரியாக வந்தால்! ஆட்டம்காட்டும் அண்டை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.

அடுத்த பிரதமர் பட்டியலை சீர்குலைக்கும் ஒருபகுதியாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் உள்நாட்டு மற்றும் சர்தேச ஊடகங்கள்,வலைதளப்பதிவர்கள்,அரசியல் கட்சிகள் பாரபட்சமில்லாமல் கண்டிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள் இது போன்ற கேக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

தமிழக காவல் துறையினரும் விரைவில் கேக்கர்களை முடக்குவார்கள் என நம்புவோம்.

தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,
கொங்குதமிழர்கட்சி,
தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை மற்றும் தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.
http://theeranchinnamalai.blogspot.in  http://kongutamilar.blogspot.in
facebook.com/D.k.Theeransamy
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி-1சூரனின்வதம், தீபாவளி-2 இராசபக்சேவின் வதம்?


 தீபாவளியைப்பற்றி இதிகாசங்கள் என்ன சொல்கின்றது.

கிருட்டிண பகவானின் இரண்டாவது மனைவியும்-நிலமகளுமான சத்தியபாமவின் புதல்வன் நரகாசூரன்.தன்னைப்பெற்ற தன் தாயால் மட்டுமே தன் உயிரை எடுக்க முடியும் என்ற வரத்தை பெற்றவன்.தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற இருமாப்பில் மக்களுக்கு எண்ணற்ற அநீதிகளை இழைத்து வந்தான்.அரக்க குணமும்,அகம்பாவம் அவனுடைய இரண்டு கண்களாகும்.

மக்களின் கொடுமைகளை கண்டுணர்ந்த கிருட்டிணபகவான் நீதியை நிலைநாட்ட வேண்டி தனது மனைவி சத்யபாமவுடன் சென்று நரகாசூரனை வதம் செய்கிறார்.மக்களுக்கு நீதியைப்பெற்றுத்தருகிறார்.

நரகாசூரன் உயிர் பிரியும் தருவாயில் அகம்பாவம் ஒழிந்து,அநீதி என்னும் இருள்நீங்கி-நீதி என்னும் பேரொளி பிறந்து மனம் திருந்துகிறான்.அந்தக்கணத்தில் சூரன் "தான் இறக்கப்போகும் இந்த நாளை உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்வுடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடி எல்லா வளங்களையும் பெற்று நழ்வாழ்வு வாழவேண்டும்" என்று கிருட்டிணணிடம் வேண்டிக்கொண்டான்.இது புரணாங்களின் காலத்துக்கு உட்பட்டது.

நரகாசூரனைவிட கொடியவனாக இலங்கையின் இராசபக்சே இரத்த வெறிபிடித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்து,பெண்பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்புகுத்தி சொல்லில் வடிக்கமுடியாத இன்னல்களை ஈழத்தில் இழைத்து வருகிறான்.

கிருட்டிண பகவான்-மீண்டும் மேதகு.பிரபாகரன் அவதாரம் எடுத்து இராசபக்சே என்னும் அரக்கனை வதம் செய்யவேண்டும்.அந்தநாள் நிச்சயம் நடக்கும்.அந்தநாள் ஒட்டுமொத்த உலகத்தமிழர்களால் இரண்டாவது தீபாவளியாகக்கொண்டாடப்படும்.

சரி தீபாவளி- தீபம்+ஒளி= தீபாவளி மொத்தத்தில் தீபம் என்பது மண்ணால் செய்யப்பட்ட விளக்கின் ஊடே-நீர்த்தத்துவமான எண்ணெய்யை ஊற்றி அதில் நெறுப்பு ஏற்றி வெளிவரும் சுடரொளி காற்றில் கலந்து ஆகாய மார்க்கத்தில் பயணிக்கிறது.தீபஒளியின் ஊடுருவல் காந்தசக்தியாக மிளிருகிறது.மக்களுக்கு நலன் பயக்கிறது.

நிலம்,நீர்,நெறுப்பு,காற்று,ஆகாயம்-என்ற பஞ்ச பூதங்களின் கலைவையே நமது உடல் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள உலகம். இது மெய்ஞாணமும்-விஞ்ஞாணமும் ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி.தீபஒளித் திருநாளம்- தீபாவளி பஞ்ச பூதங்களின் வழிபாட்டை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நாளை இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்கள் என்று சாதீ-மதங்களின் பாகுபாடு இன்றி அனைவரும் சிறப்புடன் கொண்டாடிவருகிறார்கள்.

எண்ணெய்தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து,மத்தாப்புக்கொளுத்தி,தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பு நிகழ்வுகளை கண்டுகளித்து, இன்று வெளியாகும் திரைப்படங்களைப்பார்த்து- சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மனமகிழ்வுடன் அனைவரும் சிறப்புடன் தீபாவளியை எடுத்துச்செல்கிறார்கள்.இந்த நாளில்தான் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) கைநிறையக் கிடைக்கிறது.

உலகத்தமிழர்களுக்கு இன்னொரு செய்தி. இதே நாளில் 1903 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி,பரிதிமாற்கலைஞர் என்று போற்றப்பட்ட வி.கோ.சூரியநாரயண சாஸ்த்திரிகள் இறந்த தினமாகும்.அய்யா! பரிதிமாற்கலைஞரை நெஞ்சில் ஏந்தி தீபத்திருநாளுடன் ஒன்று கலப்போமாக! கூடுதலாக 2007-ஆம் ஆண்டு சிறீலங்காவின் வான்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொருப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் இதே நாளில்தான்.

1577-ஆம் ஆண்டு இதே நாளில் பொற்கோயில் கட்டுமானப்பணிகள் துவங்கியது.சீக்கியர்கள் இந்த நாளை சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.மகாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த நாளை சமணர்களும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.

எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி
மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கருப்புச்சட்டை

எமது கொங்குதமிழர்பேரவையின் சார்பில் காங்கயம்வட்டம்,சிவன்மலையில் அமைந்துள்ள தீரன்சின்னமலையின் பட்டாலிப்போர்ப்பாசறை நினைவாக,தைப்பூசத்தேர்திருவிழா அன்று-2002ம் ஆண்டு முதல்-2009ம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பதிவு செய்யப்பட்ட தலையங்கம் பகுதியை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துரைகள் 2008ம் ஆண்டு சூழலுக்கு ஏதுவாக எழுதப்பட்டது.நடப்பு நிலைக்கு அது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஆண்டு தீரன்சின்னமலை பட்டாலிப்போர்ப்பாசறை வீரவழிபாட்டு விழாவின் நினைவு மலரில் உங்களை சந்திப்பதில் எமக்கும் எமது கொங்கு தமிழர் பேரவையின் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கதர்சட்டை,ஒரு கருப்புச்சட்டை இந்த மும்மூர்த்திகளால் சமூகநீதி மறுக்கப்பட்டு அநீதிக்கு ஆளான எமைப்போன்ற இளைஞர்களால் இளைத்தவனுக்கு ஒரு நீதி!வலுத்தவனுக்கு ஒரு நீதியா? நீதி என்பது சமமானது! அனைவருக்கும் பொதுவானது! மரணம் ஒருமுறை நீதிக்காக மல்ரட்டும்! என்ற முழகத்துடன் கொங்கு தமிழர் பேரவை புரட்சிப் பயணம் தொடங்கிய ஆண்டு 2001.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கொங்குதமிழர் பேரவையின் சாதனைகளை எந்த நிலையிலும் விளம்பரம் செய்து வியாக்கியானம் பாடவில்லை.எந்த ஒரு இயக்கமும் தாம் கடந்த வந்த பாதைகளை வரலாற்றில் பதிவு செய்து பட்டியல் இடவேண்டும் என்ற சான்றோர் பெருமக்களின் அறிவுரையின்பேரில் கொங்குதமிழர்பேரவை கடந்த வந்த பாதைகள் எனும் தலைப்பில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி நீதியை வென்றெடுத்த சில நிகழ்வுகளை இந்த மலரில் பதிவு செய்து உள்ளோம்.

தீரன்சின்னமலையின் கொங்குபடைக்கு யுத்ததளவாடங்களை உருவாக்கும் பட்டறையாகவும்,போர்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாகத்திகழ்ந்த பட்டாலிப்போர்ப்பாசறை சிவன்மலை அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலின் வடபுறம் அமைந்துள்ளது. போர்ப்பாசறையின் நினைவாக தைப்பூசத் தேர்த்திருவிழா அன்று விழா எடுத்து சின்னமலையின் வரலாற்றுச் சுருக்கத்தை மலராக பதிவுசெய்து சமுதாயத்தலைவர்களை அழைத்து வெளியீடு செய்து சிறப்பித்து வருகிறோம்.விழாவில் கிராமப்புறப்பள்ளி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறன் ஆய்வுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி பரிசுகளையும்,சான்றுகளையும் வழங்கி மாணவச்செல்வங்களை ஊக்குவித்து வருகிறோம்.

கொங்கு சமூகம் எங்கு செல்கிறது? நமக்கு நாமே சுய ஆய்வு செய்து சில கருத்துக்களை பரிமாறி உள்ளோம். இவற்றின் ஊடாக பொதிந்த கருத்துக்களின் கூர்மை சிலரது மனதை புண்படுத்தும்.ஏனெனில் அவர்கள் கொங்கு சமூகத்தை புண்ணாக்கி,புரையோடச்செய்த இழி செயல்களை,நமக்கு,நாமே இழைத்துக்கொண்ட வன்கொடுமைகளை, புரிதலின் பாதையில்,புதிராகச்செல்லும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளோம். சமூகப் போராளி என்ற பெயரில் கபட வேடமிட்டு களவு செய்யும் ஒரு சில கயவர்கள் திருந்த வேண்டும்.இல்லையெனில் வருந்தி விலக வேண்டும்.

சமூகத்தலைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாக, குமுறும் எரிமலையாக, சுழலும் சுனாமியாக,பாயும் புலியாக,வாழும் தீரன்சின்னமலையாக வளம் வரவேண்டும்.பணத்தாலும்,பகட்டான மகிழ் ஊர்திகள்சூல பவனி வருவதால் மட்டும் தலைவர்கள் ஆகிவிடமுடியாது.

தீரன்சின்னமலை,மகாத்மா,நேதாசீ,வீரசவார்கர்,தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,காமராசர்,ராசாசீ,கோவை செழியனார் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் தீர்க்கதரிசனம்,எளிமை,எளியோரிடம் அரிதாரம் பூசாதஉறவு,வறுமை,தியாகம்,கடின உழைப்பு,என எண்ணிலடங்காப் பண்புகளை தன்னகத்தே உயர்த்தி பிடித்தவர்கள்.மேலும் மனிதர்களை கடந்த மகத்தான காந்த ஆற்றல்களையும்,இயற்கையின் நிர்மான சக்திகளையும் தமது ஆழ்மனதில் பிறப்பின் ஊடாக வார்த்து எடுத்தவர்கள்.

மலைக்கவைக்கும் எண்ண ஆற்றல்களையும்,திகைக்கவைக்கும் தியாகங்களையும்,மரணத்தை முத்தமிடும் துணிவைக்கொண்ட களப்போராளிகள் மட்டுமே மனிதன் தோன்றிய காலம்முதல் இன்றுவரை தலைமைப்பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள்.

இன்று தலைமை என்பது தற்குறிகளின் கூடாரமாகவும்,சமூகத்தை அடகுவைத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் புரட்டுவாதிகளின் புகலிடமாகவும்,வேளீர்சமூகத்தின் வேந்தர்கள் என்றும்,வேங்கைகள் என்றும்,சமூகத்திற்கு வெட்டி முறிப்பவர்கள் என்றும்,மேடைகளில் மார்தட்டி நடிகைகளின் முந்தானையில் முகம் துடைத்து,அயல்நாட்டு மதுபானங்களில் மூழ்கி,சூதாட்டத்தில் சுற்றித்திரிந்து உல்லாசமோகங்களில் சல்லாபக் கூத்தாடும் பொல்லாவிகளே நீங்களா கொங்கு சமூகத்தின் தலைவர்கள்? நமது சமூகத்தின் இளையபாரதம் இளஞ்சிரிப்புடன் ஒருசில தலைமைக் கூத்தாடிகளின் தள்ளாட்டத்தைக்கண்டு வெட்கி தலைகுனிந்து விலகிச்செல்கிறது.

மேற்கண்ட செய்திகள் நமது சமூகத்தின் மேல்தட்டு,நடுதட்டு,கீழ்தட்டு மக்களிடம் ஆய்ந்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள்.

விரல்விட்டும் எண்ணும் வகையில் ஒருசிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளோம்.யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.அந்த ஒரு சிலரும் திருந்தி சிறப்புடன் செயல்பட்டால் நாம் பாராட்டி,வாழ்த்தி எழுதத்தயாராக இருக்கிறோம்.

சிவன்மலையை சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள்,கொங்கு சூரியன்,சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை எனும் தலைப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 21 ஆயிரம் பிரதிகளை சிறப்பு மலராக தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறோம்.






best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 26 செப்டம்பர், 2013

நமோவின் இளம்தாமரை-செயிக்குமா?


மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள்! தமிழகத்திற்கு வருகை தந்து இளம் தாமரை மகாநாட்டை தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்...

 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்பது குஜராத் அல்ல! பெரும்பான்மை குஜராத்தி இன மக்களால் கட்டமைக்கப்பட்ட ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் குஜராத்.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மதங்களும்,500 க்கும் மேற்பட்ட சாதீகளும்,30க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும்
பலவகையான இனக்குழுக்களால்,பன்முகத்தன்மையால்
கட்டமைக்கப்பட்டதுதான் இந்தத் துணைக்கண்டம்.

உதாரணத்திற்கு தமிழகத்தின் கலாச்சாரம் வேறு,குஜராத்தின் கலாச்சாரம் வேறு,தமிழகத்தில் கூட கொங்கு நாட்டின் பண்பாடு வேறு,தென் தமிழகம்,வட தமிழகத்தின் பண்பாடுகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக உள்ள்து.

பரந்து விரிந்த இந்தத் துணைகண்டத்திற்கு அகண்ட சிந்தனை கொண்ட ஒருவரால் மட்டுமே தலைமை மந்திரியாக பொருப்பு ஏற்று வழி நடத்த முடியும்.அத்தகைய தகுதி மோடிக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது.அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கே உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இந்தியத் தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்மிகை மாநிலமாக சொல்லப்படும் அங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மின் வசதி இல்லாமல் இருளில்
மூழ்கியுள்ளது.வேளாண்மை தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அங்கு விவசாயிகளின் தற்கொலை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம்,பீகார்,திரிபுரா போன்ற மாநிலங்கள முன்னோக்கி செல்கின்றன.

தணிக்கைத்துறை கணக்கு இப்படி இருக்கும்பொழுது! மோடியின் 7000 க்கும் மேற்பட்ட சைபர் மீடியா வெப்சைட்கள் குஜராத்தைதூக்கிப்பிடிக்கின்றன.விளம்பரங்களையும்,ஆடம்பரங்களையும் முழுமையாக நம்பி களம் இறங்குவது ஆபத்தானது.

நிர்வாகத்திறமை,வளர்ச்சிப்பாதை என்று பார்த்தால் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமை மந்திரி பதவிக்கு தகுதியானவர் என்று சொன்னால் அது மிகையாகது.

நமது தேசத்தந்தை மகாத்மா எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.அந்த மகாஜீவன் அவதரித்த மண்ணின் மைந்தர் மோடி அவர்கள் அதற்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது.

நமது தேசமும்,தேசீயமும்,இந்த மண்ணில் வாழும் மக்களும் லஞ்சம்,ஊழல் இல்லாத எளிமையான தலைமையை எதிர்நோக்கி காத்திருப்பதை தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொண்டு பூர்த்தி செய்தால் வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 11 செப்டம்பர், 2013

தமிழ் தேசியப்போராளியின் விடுதலைக்கனவு...

அம்மா சிங்கம் சீறீடவே..அடிமைத்தலைகளை அறுத்திடவே..
           
நம் தாகம் முழுவதும் தனிந்திடவே..சிதறிய தலைகள் சேர்ந்திடவே..                

சிங்கள மோகம் ஒழிந்திடவே..சிறு நரிக்கூட்டம் தொலைந்திடவே..

நம் தலைகளின் வேசம் கலைந்திடவே..மண்ணின் மானம் காத்திடவே..                                                                                                  

தமிழன் ரோசம் பிறந்திடவே..புலிகளின் இரத்தம் பாய்ச்சிடவே..

வீரம்..வீரம்..வீரம் பொங்கிடவே..வேண்டா விதியை முறித்திடவெ..

வெற்றிக் கோட்டைத் தொட்டிடவே..புயலின் வேகம் சுழன்றிடவே..

புதியபாதை கண்டிடவே..புழுக்களின் கோட்டையை அழித்திடவே..

படைகளின் வேட்டை தொடர்ந்திடவே..பாரில் தனி ஈழம் கண்டிடவே..                                                                                                    

அகண்ட தமிழிகம் உதித்திடவே..பாரெங்கும் புலிக்கொடிகள் பறந்திடவே..பறந்திடவே..பறந்திடவே....
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மாவீரன் தீரன்சின்னமலையின் 208வது வீர வணக்கம்

தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு,கொங்குதமிழர்கட்சி,
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மாவீரன் பிறந்த காங்கயம் மேலப்பாளையத்தில் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.


காங்கயம்,சிவன்மலையில் உள்ள மாவீரனின் பட்டாலிப் போர்பாசறையில் தெ.கு.தீரன்சாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை  போன்ற அமைப்புகளின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமையில் இந்திய விடுதலைப் போராட்ட மாவீரன்,கொங்குநாட்டுச் சிங்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 208-வது நினைவு தின வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம்,மேலப்பாளையத்திலும்-மாவீரன் தூக்கிலிடப்பட்ட சேலம் மாவட்டம்,சங்ககிரி துர்கத்திலும்,மாவீரன் கோட்டை,கொத்தளங்கள் அமைத்து வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்த ஈரோடு மாவட்டம்,அறச்சலூர்-ஓடாநிலையிலும்,ஆயிதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட திருப்பூர் மாவட்டம்,கங்கயம் வட்டம்,சிவன்மலை பட்டாலி போர்ப்பாசறை நுழைவு வாயில் -உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாவீரன் தீரன்சின்னமலைக்கு மாலை,மரியாதை,வீரவணக்கம் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்சிக்கு நிறுவனத்தலைவர் தெ.கு.தீரன்சாமி தலைமை தாங்கினார்.கொங்குதமிழர்கட்சியின் மாநிலப்பொதுச்செயளாலர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.இராசேந்திரன்,மாநில தலைமை நிலையச்செயளாலர் டி.எஸ்.சண்முகம்,துணைப்பொதுச்செயளாலர் பி.கே.பரமசிவம்.பொருளாளர்கள் பி.ஜோதி,பி.என்.பாலு,மாநில தலைமை நிலையச் செயளாலர் டி.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.நந்தகுமார்,திருப்பூர்மாவட்ட அமைப்பாளர் ஆர்.சண்முகம்,கோவை மாவட்ட அமைப்பாளர் குறுக்கத்தி பாலசுப்பிரமணியம்,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் மாநிலபொதுச்செயளாலர் கே.எஸ்.செல்வராஜ்,மாநில துணைப்பொதுச்செயளாலர் தாராபுரம்,சிபி அரசி தங்கவேல்,அதன் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் கே.கே.திருநாவுக்கரசு,மாவட்ட செயளார் கே.எஸ்.கார்த்திக்,வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர் சு.இரவி,பாரதீய ஜனதாக்கட்சியின் தாராபுரம் ஒன்றியப்பொருப்பாளர் ஜெ.குமாரவேல் மற்றும் பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 8 ஜூலை, 2013

கொங்கு தமிழன் இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு!


 காலிங்கராயர்,தந்தைபெரியார்,மாவீரன் தீரன்சின்னமலை போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த, கொங்கு தமிழகத்தின், ஈரோடு மாவட்டத்தில்,கொங்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். கொங்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழர் : சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த, நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின், இரண்டாவது தலைமை நீதிபதியாக, பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அரசு பள்ளியில் படித்து பெரும் சாதனை நீதிபதி சதாசிவத்தின் தாய் பெருமிதம்:

"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,' என, அவரது தாய், நாச்சாயி அம்மாள் பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய முதன்மை நீதிபதியாக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அவரது தாய், நாச்சாயி அம்மாள் கூறியதாவது:என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார். தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார். 19ம் தேதி, பதவியேற்பு விழாவுக்கு, 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி:-கல்விச்சோலை
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 24 மார்ச், 2013

திருகோணமலையில் அழிக்கப்படும் தமிழர் கலாச்சாரம்

திருகோணமலை மாவட்டத்தின் முகம் மாறி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் தொடங்கிய போர், முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்ததும், தமிழர் அடையாளத்தை அழித்து வருகின்றது.

விடுதலைப்புலிகளின் இராணுவப் பலம் சிதைக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் கலாசாரமும் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டம் இலங்கை அரசினால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் பௌத்த அடையாளங்கள் தமிழர் நிலங்களில் முளைக்கத் தொடங்கியுள்ளன.
 
ஈழ வரலாற்றில் திருகோணமலை மண்ணுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோணேசர் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று, வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம், சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், கங்குவேலி அகத்திய தாபனம் என்பன தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அம்சங்கள். இந்தச் சான்றுகள் திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் வரலாற்றை புராண இதிகாச காலங்களுக்கு இட்டுச் செல்கின்றது.
 
இதன் மூலம் தமிழர்களுக்கும், திருகோணமலைக்கும் உள்ள சிறப்பு வெளிப்பட்டு நிற்கின்றது. நீண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் வாழ்வியலில் போர் முடிவடைந்ததன் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் வரலாற்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
சைவ மக்களின் புனித தலமான கோணேசர் ஆலயம் இன்று சுற்றுலாத்தலம் போன்று மாற்றம் அடைந்து வருகின்றது. ஆலயத்தின் சூழல் கூட இன்று மாற்றம் பெற்றுள்ளது. ஆலயத்தின் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்துக்குத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதனால் கோயில் சூழலின்  இயற்கை அழகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோணேசர் ஆலயச் சூழலில் மான் கூட்டங்களும், குரங்குகளின் கூட்டமும் தனி அழகு. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் ஏற்பட்ட போரின்போது, இலங்கை இராணுவம், கோட்டையிலிருந்து சம்பூர் பிரதேசத்தின் மீது பல் குழல் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதனால் பீரங்கித் சத்த அதிர்வு காரணமாக கோணேசர் ஆலய சூழலில் இருந்த பெருமளவு குரங்குகள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
 
இப்போது கோணேசர் ஆலயச் சூழலில் குரங்குக் கூட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதே போன்று தான் கடைகளின் ஆதிக்கம் ஏற்பட்டதன் காரணமாக மான்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது குறைவாக இருப்பதனால், மான் கூட்டங்கள் ஆலய சூழலில் இருந்து இன்று வெளியேறி வருகின்றன. 
 
அவை திருகோணமலை நகரசபை வளாகத்துக்குள்ளும், கடற்கரைப் பகுதிகளிலும் நடமாடித் திரிகின்றன. இதனால் ஆலயச் சூழலின் இயற்கை அழகு மாற்றமடைந்து வருகின்றது. ஆலய சூழலில் மான்களின் எண்ணிக்கை கூட தற்போது குறைவாகவே காணப்படுகின்றது.
 
கோணேசர் ஆலயம், திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. உலகில் வாழும் இந்து மக்களின் அடையாளமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. எனவே ஆலய பரிபாலன சபையினர் மேற்குறிப்பிட்ட சில விடயங்களில் தமது கவனத்தை திருப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும். 
 
புண்ணிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றி வருவதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த ஆலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசுடன் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
 
கன்னியா வெந்நீர் ஊற்று, கோணேசர் ஆலயத்துடன் தொடர்புபட்டது. கன்னியா நீரூற்றைப் பற்றிப் புராணங்கள் கூறும் வரலாற்றின் படி மகாவிஷ்ணு மூர்த்தியே  அவற்றை உற்பத்தியாக்கினார் எனக் கூறப்படுகிறது. 
 
கோண நாயகரிடம்தான் பெற்ற இலிங்கத்தைக் கையிலேந்திக் கொண்டு, இலங்கை மன்னன் இராவணன் செல்லும் போது விஷ்ணு மூர்த்தி ஓர் அந்தண வடிவம் தாங்கி தசக்கிரீவனைச் சந்தித்து அவன் தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார். 
 
இலங்கைக் காவலன் அதைக் கேட்டதும் துக்கத்தில் ஆழ்ந்தான். முனிவர் அவனைத் தேற்றிய பின்னர், தனயன் தாய்க்குச் செய்ய வேண்டிய கன்மாதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தினார். இந்தப் புண்ணிய தலத்தில் கன்மாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்ச வீட்டை அடைவது திண்ணம் என்று கூறினார். 
 
அந்த அந்தணரே அதைச் செய்து முடிக்க வேண்டுமென்று இராவணன் வேண்டிக் கொண்டதற்குச் சம்மதித்த அந்தணர் அவனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று அந்த இடத்தில் தமது கையிலிருந்த தண்டினால் ஏழு இடத்தில் ஊன்றினார்.
 
அந்தண வடிவங்கொண்ட மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுத் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு அந்த இடத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்தால், அந்த ஆன்மாக்கள் முத்தியடையுமென நம்பப்படுகின்றது. 
 
இராவணன் தனது தாயாருக்குரிய கன்மாதிக் கிரியைகள் எல்லாவற்றையும் அங்கு முறைப்படி செய்தான் என வரலாறு கூறுகின்றது. தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 
 
அத்துடன் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய சூழலில் கூட பாதுகாப்பு பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். இது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
 
குளக்கோட்ட மன்னனுடன் தொடர்புடைய சம்பூர் பிரதேசம், தமிழரின் கலை, கலாசார விடயத்தில் ஆணிவேராகவும் கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் பின்னர் அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்று வரை  தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 
 
இதனால் தனித்துவமான பாரம்பரியமுடைய கிராமிய கலைகள் கூட அந்த மக்களிடம் இருந்து சிதைவடைந்து வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள காளி கோயில்களில் மிகவும் பழைமையான ஆலயமாக விளங்குவது சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமாகும். 
 
இந்த ஆலயம் கூட வெளியாரால் போரின் போது உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத பல விக்கிரகங்கள் கூட எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
கடந்த வருடம் வைகாசி மாதத்தில் மட்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினர் அனுமதி வழங்கி இருந்தனர். 
 
அதன் பின்னர் ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட  கடற்படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சூழல் காணப்படுகின்றது.
 
இந்த நிலையில், உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழரின் வரலாற்றுப் பிரதேசமான சம்பூர் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலையில் தமிழரின் பண்டைய அடையாளங்களை பார்க்கும் போது, முத்தூர் என்பது இன்று மூதூர் என்று அழைக்கப்படும் திருகோணமலையிலுள்ள ஓர் இடமாகும். 
 
தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி முத்தூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. 
 
இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என முத்தூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது.
 
அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 
 
ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். 
 
தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. 
 
திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது. 
 
தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. 

நன்றி:உதயன் ஊடகம்
 
 
 
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கவேண்டும்!


ஈழப்பிரச்சனை... இனப்படுகொலை என்பதை விட….

அதற்கு காரணமான இரத்த வெறிபிடித்த ஓநாய் இராசாபக்சேவை சர்வதேச அரங்கில் நிறுத்தி அணு! அணுவாக சுட்டுக்கொள்ளவேண்டும்!

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி!அங்குள்ள சீனா நிலைகளை விரட்டி அடித்து விட்டு..இலங்கை பகுதிமுழுவதையும் நமது கட்டுக்குள் கொண்டு வந்து....சிங்களர்கள் வாழும் நிலப்பகுதி...தமிழர்கள்வாழும் நிலப்பகுதி என இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக அறிவிக்க வேண்டும்.

இல்லைஎனில் மாணமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு அகண்ட தமிழகம் அமைத்துக்கொள்வதைத்தவிர…தமிழர்களின் பாதுகாப்பிற்கு வேறு வழியே இல்லை……

இவன்-
-
தெ.கு.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை-
www.facebook/theeran.samy...
http://theeranchinnamalai.blogspot.com,
http://kongutamilar.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 21 ஜனவரி, 2013

சட்டம் சோம்பலானது!அருண்செட்லி ஆய்வு வேடிக்கையானது!





   பாரதிய சனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,ராஜ்யசபை எதிர்கட்சித் தலைவரும்,மிகச்சிறந்த வழக்கறிஞருமான அருண்செட்லி அவர்கள் பெங்களூருவில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில்-                               "இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது,மாற்றப்பட வேண்டியது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அருண்செட்லியின் குற்றசாட்டு குறித்த செய்தி தினமலர் ஊடகத்தில் வெளியானது.அதற்கு நான் எழுதிய கருத்துரை.

சோம்பலான சட்டத்தை தட்டி எழுப்பி சுறு சுறுப்பு ஆக்க வேண்டிய பொருப்பில் உள்ளவர் அருண்செட்லி. இந்தியத்திருநாட்டின் ராஜ்யசபை எதிர்கட்சித்தலைவர் செய்யவேண்டியபணி அது. அவரே புழம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

அவர் சட்டத்துறை அமைச்சராக இருந்த பொழுது!சட்டத்தை புணரமைக்கும் பணியை முயற்சித்திருக்கலாம்.அதைவிடுத்து நடை முறை சட்டத்தை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.

தற்பொழுது உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் லஞ்சமும்,உழலும் பெறும் தடையாக இருக்கிறது.எத்தகைய சட்டங்களை திருத்தினாலும்,கடுமையாக்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது அருண்செட்லியை போன்ற மக்கள் பிரதிநிதிகள்தானே!
 பி.ஜே.பி தலைமை ஊழலில் திலைக்கும்போது! இவர் மட்டும் கூட்டம்போட்டு ஆலோசனை பேசி என்ன உபயோகம் உள்ளது.

ஒன்று மட்டும் நிச்சயம் மக்களை முட்டாள்களாக நினைத்து பலலட்சம் கோடிகளை கொள்ளையடித்துவரும் கும்பலுக்கு எதிராக மக்கள் அறிவாளிகளாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மக்கள் மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கணந்து கொண்டிருக்கிறது.அது எரிமலைப் பிழம்பாக வெடித்துச் சிதறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அன்று ஏராளாமான உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்.இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைகளாக உள்ளோம்.ஊழல் எதிர்ப்பு முன்னனி நாடு முழுவதும் பரவட்டும்.வீரத்தின் விளைநிலமான தினமலர் போன்ற தியாக ஊடகங்கள் வழிநடத்தட்டும்.அப்பொழுது இதே சட்டங்கள் சோம்பல் இல்லாமல் வீரத்துடன் செயல்படும் என்பது திண்ணம்.

மேலும் இந்தியாவின் சட்டமுறை சோம்பலானது அல்ல.அதை செயல்படுத்துபவர்கள்தான் சோம்பலானவர்கள்.அவர்களது வேகம் லஞ்சமும்-ஊழலிலும் பரபரக்கிறது.சட்டத்தை மாற்றுவதைவிட-சட்டம் செயல்படுவதற்கு தடையாக இருக்கும் கருங்கொல்லிகளை ஒழிப்பதுதான் சரியாக இருக்கும்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 8 அக்டோபர், 2012

கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள்


"தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடுத்த தலைமுறைகளுக்கு நேர்மையாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்,'' என, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசினார்.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசியதாவது: காலையில் இருந்து மாலை வரை நாம் செய்யும் செயல்களைக் கூறும் போது, ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறுகிறோம். இப்படி பேசுவது படித்தவர்களாகிய நாம் தான். பாமர மக்கள் இப்படி பேசுவது கிடையாது. அதனால் தான் சொல் சிதைவு, மொழி சிதைவு ஏற்பட்டுவிட்டது. இதை மாற்றி அமைக்க இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பேருந்து நிலையம் என்றால் பலருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழில் சொல் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என நினைப்பர் என்று கருதி ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால், முழுமையாக ஆங்கிலம், தமிழ் பேசுபவர்களை பார்த்ததில்லை.

ஆங்கில மோகம்: நாம் ஆங்கில மோகத்தில் விழுந்து விட்டோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே நேரம், தமிழ் மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்; எழுத வேண்டும். தமிழகத்தில் கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு, 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரோம் நகரத்தில் சர்ச்சிற்கு வருபவர்களுக்கு, காலணிகளைத் துடைப்பது ஒருவரின் வேலை. அவர் யாரிடமும் ஊதியம் வாங்குவதில்லை. ஆனால், லத்தின் மொழி பேசுபவர்களிடம் மட்டும் ஊதியம் வாங்குவார். இது, அவருக்கு உள்ள மொழிப் பற்றைக் காட்டுகிறது.

தமிழ் பெயர் தவிர்ப்பு: நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வது கூட கிடையாது. காரணம், தயக்கம். உணவு விடுதிகளில் சோறு கேட்கும் போது, "ரைஸ்' கொடுங்கள் என்கிறோம். ஆங்கிலேயருக்கு சோறு, அரிசிக்கு "ரைஸ்' என்று ஒரே பெயர் தான். தமிழை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கலைச் சொல்லாக்கத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாகர்கோவிலில் "இருக்கின்றது' என்ற சொல், மதுரை வரும் போது "இருக்கு' என, மாறுகிறது. அது, விழுப்புரம் வரும்போது "கீது' என்று மாறுகிறது. அதே சென்னைக்கு வரும்போது "தோ' என்று ஒரு எழுத்தாக மாறுகிறது. இது ஆவணமாக மாறிவிடும். இந்த பதிவிற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது என்பது இந்த கருத்தரங்கின் நோக்கம். கம்பர், இராமாயணத்தில் ராமன் என்று கூறமாட்டார்; இராமன் என்று தான் கூறுகிறார். லட்சுமணனை இலக்குமணன் என்று தான் கூறுகிறார்.

கொரியாவில் 450 சொல்: பாரதிக்கு தமிழ் மேல் உணர்வு இருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம் வேண்டும் என, கனவு கண்டார். தற்போது, மதுரையில் சங்கமும், தஞ்சையில் பல்கலைக் கழகமும் வந்துவிட்டது. இங்குள்ள மொழியை அங்கு கொண்டு சென்று ஆங்கிலத்தை பலப்படுத்திக் கொண்டனர். உலகில் உள்ள மொழிகளில், 20 சதவீதம் தமிழ் மொழி சொற்கள் உள்ளன. கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள் உள்ளன. "தேர் இஸ் சம்திங்' என்று சொன்னால், உடலில் உள்ள எட்டு கலோரிகள் போகின்றன. அதே வார்த்தை, "அங்கு ஏதே உள்ளது' என்று தமிழில் கூறினால், ஒன்றரை "கலோரி' மட்டுமே செலவாகிறது. எனவே, தமிழ் என்பது இதயத்தில் இருந்து வருகிறது.

பிரித்து பேச வேண்டும்: எனவே, படித்தவர்கள் மத்தியில் கலைச் சொல்லாக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இல்லாத தமிழ் வார்த்தையா? பேசும்போது, பிரித்துப் பேசுவதை பிரித்துப் பேச வேண்டும். சேர்த்துப் பேச வேண்டியதை சேர்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் பொருள் மாறிவிடும். எனவே, அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியை முறையாக, சரியாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சேகர் பேசினார்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், "கலைச் சொல்லாக்கம் என்பது, மற்ற மொழிகளில் உள்ள சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது தான். தமிழில் இல்லாத சொற்களே இல்லை. எனவே, பிறமொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருத்தரங்கம் மூலம் சிறந்த கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் செல்லகுமார் வரவேற்று பேசினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கம், மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

நன்றி:மேற்கண்ட செய்தி தினமலரில் வெளியாகி-தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வளைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.tiaskk.blogspot.com



best links in tamil
More than a Blog Aggregator