வியாழன், 23 ஜூன், 2011

அம்மாஅவர்களுடன்-வலைப்பதிவர் டி.கே.தீரன்சாமி சந்திப்பு


அம்மா அவர்களுடன் கொங்குதமிழர்கட்சியின்
மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி

 லஞ்சம்-ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலை இவற்றின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தையும்,தமிழக மக்களையும்,ஈழத்தமிழர்களையும் மீட்டெடுக்கும் மாற்றுசக்தியாக திகழும் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணியை நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் 
ஆதரித்து கொங்குதமிழகம் முழுவதும் 
தீவிரதேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

 7-4-2011 அன்று கோவைமாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில்சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம்.அப்பொழுது 10அம்ச கோரிக்கைகளை அம்மா அவர்களிடம் நேரில் வழியுறுத்தினோம்.


 அவற்றில் ஈழத்தமிழர்களை காக்க இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்ற சரித்திர சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.சாயத்தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கவும்,சட்டம் ஒழுங்கை காக்கவும் விரைந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.இதுபோன்றமக்கள் நலம்காக்கும் செயல்பாடுகளை எமது பேரவையின் சார்பில் வரவேற்கிறோம்.
கோபிதொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து 
கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி தலைமையில் 
பிரச்சாரம் மேற்கொண்டபோது எடுத்த காட்சி.உடன் கட்சியின் பொதுச்செயலாளர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன்,கோபி அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் மனோகரன்,நடிகர் எம்,ஜி.ஆர்.சிவா ஆகியோர் உள்ளனர்.

 தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பணி சிறக்கவும் லஞ்சம்-ஊழல் ஒழித்திடவும் வாழ்த்துகிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கொங்கு தமிழர் கட்சி ஏன்?எதற்காக?



           மாநில கொங்கு தமிழர் பேரவை
        பழையகோட்டை பாதை,அய்யாசாமிநகர்,காங்கயம்,திருப்பூர். 638701
                            பேச:-98651-26679,8825264949
டி.கே.தீரன்சாமி(மாநிலஅமைப்பாளர்)
  9-2-2011 ஜீ.வி பத்திரிக்கையில் அம்மாவுக்காக புதியகொங்குகட்சி என்ற தலைப்பில் எமது கொங்குதமிழர்கட்சி உதயமாகும் செய்தி 2பக்கத்தில் என்னுடைய பேட்டி மற்றும் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. ஜீ.வி.வெளியான நாள் முதல் எனக்கு ஆலோசனைகளும், பாராட்டுகளும் வந்தது.ஆனால் மறுபுறம் அலைபேசியில் முகமும்,முகவரியும் தெரியாத நபர்களிடம் இருந்து ஏராளமான மிரட்டல்கள்,பதிவு செய்ய முடியாத ஆபாச வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.


 காங்கயம் மண்ணில் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக வீரமுழக்கம் இட்ட இந்திய விடுதலைப்புலி மாவீரன் இரத்தினம் தீரன்சின்னமலையின் ஆசிபெற்ற கொங்கு நாட்டுப் போராளி,சமுதாயத்தின் விடிவெள்ளி கோவைசெழியனாரின் 11ஆம் ஆண்டு நினைவுதினம்-மற்றும் வீரவணக்கம் நிகழ்ச்சியில் எமது மாநில கொங்கு தமிழர் பேரவையின் 9ஆம் ஆண்டு நிறைவு மற்றும் கொங்கு தமிழர் கட்சியின் கொள்கை வெளியீட்டு விளக்கக் கடிதம். 


 எமது பேரவை கடந்த 9ஆண்டுகளில் பல்வேரு சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துச்செல்கிறது.சமுதாயக் கட்டமைப்பைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமைக்காக போராடி சமுக விரோதிகளின் பிடியிலிருந்து மீட்டுள்ளோம்.எமதுமீட்பு யுத்தத்தின் நிகழ்வுகளை வரும் காலங்களில் தொடர்ந்து எழுதஉள்ளேன்.

 நமதுதேசம் பல ஆயிரக்கணகான உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் என்ற பெயரில் மீட்கப்பட்டது.ஆனால் இன்று லஞ்சம்,ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளது.நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி எனும் அரசியல் கட்டமைப்பு ஒன்று தேவை.வீரியத்துடன் செயல்படும் சமுதய,சாதீய அமைப்புகள் இது போன்ற அரசியல் கட்டமைப்புகளில் தங்களை உடனடியாக இணைத்துக்கொண்டு வரும் சட்டமன்றத்தேர்தலில் உழல்-ரவுடியிசத்திற்கு எதிராக பொங்கி எழவேண்டும்.

 கொங்குதமிழர்பேரவையின்-அரசியல் பயன்பாட்டிற்காகவும்,கொங்கு கவுண்டர் மற்றும் தமிழகம் முழுவதும் பரவியுள்ள வேளாளர் சமூக மக்கள் இடையே பகுதிவாரியாக செயல்படும் அனைத்து வேளாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து கொங்கு,கவுண்டர்,வேளாளர் சமுதாயத்தின் அரசியல் முகவரியாக கொங்கு தமிழர் கட்சியின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

 டி.கே.தீரன்சாமியாகிய எம்மை மாநில அமைப்பாளராகக் கொண்டு மாநில   கொங்கு தமிழர் பேரவை 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.எமது பேரவையின் செயல்பாடுகள் தொடர்ந்து தொய்வுஇல்லாமல் எம்மால் முடிந்த மட்டும் செய்து வருகிறோம்.பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக இதுவரை தளராமல் வீரியத்துடன் போராடி வருகிறோம். கோவைசெழியனாரின் மரணத்துக்கு பிறகு கொங்கு இயக்கம் தொய்வு நிலையில் தேய்ந்து கொண்டிருந்தது.நம் மக்களின் பாதுகாப்புக்கு நமக்கு என ஒரு வலிமையான கட்டமைப்பு தேவை என்ற சூழலில் உருவானதுதான் கொங்கு தமிழர் பேரவை.மேலும் எமது பேரவையின் 10 ஆண்டுகால செயல்பாடுகள் முழுவதையும் எமது வலைதளமான http://kongutami`lar.blogspot.com காணவும்.

  2008-ல் நடைபெற்ற கருமத்தம்பட்டி மாநாட்டில் கொ.மு.க உதயமானது.அந்த மாநாட்டில் கட்சி பாகுபாடு இல்லாமல் சுமார் 5 லட்சம் மக்கள் ஒன்று திரண்டனர்.இந்த மாநாடு வெற்றிபெற கொங்குசமூகத்தைச் சார்ந்த அனைத்து அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஒத்துழைப்புக் கொடுத்தனர்.மாநாடு பிரமாண்டமாக நடந்து வெற்றிபெற்றது.

 உடனடியாக அனைத்து அரசியல்கட்சியின் தலைவர்களை குறிப்பாக ப.ஜ.கவின் அத்வானி,காங்கிரஸ்சின் குலாம்நபிஆசாத்,அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் அம்மா,தி.மு.கவின் தளபதி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கொ.மு.கவின் தலைவர் பெஸ்ட் ராமசாமி,பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு கிடைத்தது.ஆனால் அத்தகைய சூழ்நிலையில் அரசியல் நெளிவு,சுளிவுகள் தெரியாத இருவரும் தான்த்தோன்றித்தனமாக அந்த நேரத்தில் கிடைத்த அரிதினும் அரிய வாய்ப்பை கை நழுவவிட்டனர்.

 கருமத்தம்பட்டி மாநாட்டுக்காக 15 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வசூலிக்கப்பட்டு உள்ளது.அதன் பிறகு 2009 மக்களவை தேர்தல் நிதி,ஜவுளிப்பாதுகாப்பு,மாணவர்அணி,விவசாயிகள் வாழ்வுரிமை என்ற பெயரில் தொடர்ந்து மாநாடுகள் நடத்தப்பட்டன.அந்த மாநாடுகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வசூலிக்கபட்டு உள்ளன.அந்த நிதி ஆதாரங்கள் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை.

 2009 மக்களவைத் தேர்தலில் கொ.மு.க தனித்துப் போட்டியிட்டது.அப்போது சென்னையில் எம்மிடம் பேசிய பல அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உங்கள் சாதிக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிபெற்று விடும் என்று கூறினார்கள்.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக கொ.மு.க பார்க்கப்பட்டது.

 அன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழர்களின் மீதும் குறிப்பாக விடுதலப்புலிகளின் ராணுவத்தை அழித்து ஒழிக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை இலங்கை அரசு இந்தியாவின் முழு ஒத்துழைப்புடன் நடத்தி வந்தது.உலகம் தோன்றிய நாள் முதல் உயிரினங்கள்-குறிப்பாக மனிதகுலத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் வன்கொடுமைகளின் உச்சம் ஈழத்தில் நடைபெற்று வந்தது.அதைத்தடுக்க வேண்டிய தி.மு.க அரசு மொளனியாக நடித்தது.மத்தியில் தி.மு.கவின் தயவில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ராஜபக்சேவின் வன்கொடுமைகளுக்கு துணை போனது. தமிழக வாக்காளர்களின் மனநிலை தி.மு.க கூட்டணிக்கு எதிராக திரும்பியது.

 கொங்கு சமூகம் எப்பொழும் கலப்பு இல்லாத தமிழ் வெறியர்கள்.ஈழத்தின்மீதும் விடுதலைப்புலிகளின் மீதும் கருணை கொண்டவர்கள்.ஈழப்பிரச்சனையில் கொங்கு தமிழர்கள் மனம் புழுங்கி-எரிமலையாக கொதித்தார்கள்.இதன் விளைவு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கியான கொங்கு சமுகத்தின் ஒருபகுதியினர் இந்த முறை நமது சாதிக்கு வாக்களிப்போம் என தி.மு.க கூட்டணிக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.பெரும்பாலான கொங்கு மக்களுக்கு கொ.மு.க என்ற கட்சியின் பெயர் தெரியாது,தலைவர்,நிர்வாகிகள் யார் என்று தெரியாது.ஆனாலும் எமது வோட்டு எங்கள் சாதிக்கு என்ற கோசத்துடன் வாக்குச் சாவடியை நோக்கிச் சென்றனர்.இதனால்தான் கொ.மு.க கடந்த மக்களவைத் தேர்தலில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறமுடிந்தது.

 கொங்கு மண்டலத்தில் 12 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.இதில் நீலகிரி தனித்தொகுதியாகும்.11 தொகுதிகளில் மட்டுமே கொங்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கவேண்டும்.ஆனால் தலித் வேட்பாளர் பவித்திரன் கொ.மு.கவின் சார்பில் நீலகிரி தனித் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.இதுவரை கொ.மு.கவின் பின்பு திரண்ட மக்கள் கூட்டம்,கொட்டிக் கொடுக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய்கள் எதற்காக? 

 கொங்கு மண்டலம் முழுவதும் பல்வேறு தலித் கட்சியின் அராஜகங்கள்,வன்கொடுமை தடுப்புச்சட்டம் என்ற பெயரில் கொங்கு மக்களுக்கு எதிரான பொய் வழக்குகள்,வடக்குப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அட்டூழியங்கள்,சேலம் வீரபாண்டியார்,கரூர் கே.சி.பி,கோவை அதிரடி ஆனந்தன்,ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற ஆளும்கட்சியினர் கொங்கு மக்களை,தொழிலதிபர்களை ஒழிக்கவேண்டும்,அடிமைகளாக்கப் படவேண்டும் என்று முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.

 கொங்கு சமூகத்தை அச்ச நிலையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நமக்கு என ஒரு சாதிகட்சி தேவை. இத்தகைய மனவோட்டத்தில் பிறந்ததுதான் கொ.மு.க.நீலகிரி தொகுதியில் தலித் வேட்பாளரை அறிவித்ததும்,பிரச்சாரத்தின் போது அவருக்கு கவுண்டர் பெண்களைக் கொண்டு ஆராத்தி எடுக்க வைத்து நாளிதழ்களில் ஆராத்தி படத்தை செய்தியாக வெளியிட்டதும் கொ.மு.கவின் முதல்சறுக்கல்.கோவை தொகுதியின் வேட்பாளர் ஈஸ்வரன் தனது கொள்கையால் கவரப்பட்டு 20 இஸ்லாமிய இளைஞர்கள் கொ.மு.கவில் இணைந்தனர்.இது சாதி,மதங்களை கடந்த கொங்கு நாட்டுக்கான அரசியல் கட்சி என்று கூறி கொங்கு மக்களுக்கான சமுதாயக்கட்சியை தடம் மாற்றினார்.

 கொங்கு சமூகத்தின் அரசியல் தளமான கொ.மு.கவை திசைமாற்றி இழுத்துச் செல்லும் ஈஸ்வரனின் தவறான போக்கை உணர்ந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த கொ.மு.க ஆதரவாளர்கள் அது முதல் தங்களது ஒத்துழைப்பை நிறுத்திக் கொண்டனர்.மேலும் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விசைத்தறியாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்தில் அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்தது,கள் இறக்கும் போராட்டம் வாபஸ் பெற்றது போன்ற மக்கள் பிரச்சனைகளை முன் எடுத்துச்செல்லாமல் விலகி ஒடியதன் காரணமாக ஈஸ்வரன்,பெஸ்ட்டின் சமூதாய மதிப்பு சரியத்தொடங்கியது.

 அதன் விளைவு கொ.மு.கவின் தூண்களாக இருந்த பொருளாளர் ஆடிட்டர்,குமார.ரவிக்குமார்,முன்னால் காவல்துறை கண்காணிப்பாளரும்,கொ.மு.கவின் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான பொள்ளாட்சிசுப்பிரமணி,தொண்டாமுத்தூர்இலட்சுமண கவுண்டர்,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோவை வழக்கறிஞர் ராஜேந்திரன்,கொங்கு கூட்டமைப்பின் நிருவனர் அதன் பொதுச்செயலாளர் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் துணைத் தலைவரும் கொ.மு.க உருவாகக் காரணமாக இருந்தவருமான அரங்க.துரைராஜ் தேர்வேந்தன்,  என வரிசையாக வெளியேறத் தொடங்கினார்கள்.

 இதற்கு எல்லாம் ஒருபடி மேலாக கொ.மு.கவின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இஸ்லாமிய சமுகத்தைச் சார்ந்தவர் என்ற குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் வார இதழின் பேட்டி ஒன்றில் முன் வைத்தார் அக்கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் தேவராசன்.இந்தச்செய்தி வெளியான போது கொங்கு மக்கள் மத்தியில் சல சலப்பு ஏற்பட்டது.கொ.மு.கவின் பொதுச்செயலாளருக்கு அது பெறும் பின்னடைவு.கோவை மாவட்ட தலைவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார்கள்.ஈஸ்வரன் இஸ்லாமியர் என்ற தேவராசனின் குற்றச்சாட்டுக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.அத்தகைய குற்றமும்,தேவராசன் காட்டிய ஆதாரங்களும் பொய்யானது என்று இதுவரை நிருபிக்கவும் இல்லை.

 அண்மையில் ஈஸ்வரன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலியுடன் சேர்ந்து ஈழத்தமிழர்களின் குருதியில் குளித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராசபக்சேவை சந்தித்து அங்கு தொழில் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டாதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

 அடுத்து கள் இறக்க அனுமதி வேண்டி பல இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.அப்போராட்டத்தில் ஈடுபட்ட கொ.மு.க தலைவர்களையும்,தொண்டர்களையும் காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.இத்தகைய கைதுகள் காலையில் நடைபெற்று மாலையில் விடுதலை செய்வது வழக்கம்.இதுகூட அறியாத பெஸ்ட்,ஈஸ்வரன் கோஸ்டியின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தாங்கள் 15 நாள் சிறையில் அடைபடப் போகிறோம் என்ற அச்சத்தில் கொ.மு.கவை சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தின் சுவர்களை தாண்டிக்குதித்து தப்பி ஒடிய சம்பவங்களும்,அதன் தொடர்ச்சியாக பெஸ்ட்,ஈஸ்வரன் ஆளும் கட்சியினரிடம் சிபாரிசுக்கு சென்ற கதையும் நாடறிந்த உண்மை.இது தீரன்சின்னமலை தோன்றிய வீரத்தின் விளை நிலமான வேளாளர் இனத்துக்கு கிடைத்த அவமானப் பரிசு.

 பெஸ்ட்,ஈஸ்வரன் கூட்டணியின் குழப்பங்கள்,உள்ளடி வேலைகள்,சுயநலம்,தெளிவு இன்மை,பயம் போன்ற பிற்போக்குத்தனமான செயல்களின் காரணமக கொ.மு.கவின் அரசியல் சாம்ராஜ்யம் பாதாளச் சாக்கடையை நோக்கி சரிந்து விட்டது.

 தற்போதைய சூழலில் சமுதாயத் தேடலுக்கான அரசியல் தளம் ஒன்று தேவை.அதுதான் கொங்கு தமிழர் கட்சியாக உருவெடுக்கிறது.கொ.மு.கவில் இருந்து விலகி பலரும் இதில் இணையப் போகிறார்கள்.கொ.மு.க உருவாகத் துணை நின்ற சமுதாயப் பெரியோர்கள் பலரும் எங்களை முழுமையாக ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

 கொங்கு தமிழர் கட்சி அனைத்து சாதி மக்களுக்குமான அரசியல் கட்சி என்று பொய்சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை.ஏனெனில் வன்னியர்களுக்கு ராமதாஸ்,தலித்களுக்கு திருமாவளவன்,  பசுபதிபாண்டியன்,கிருஸ்னசாமி,நாடார்களுக்கு கரிக்கோல்ராஜ்,தேவர்மக்களுக்கு சேதுராமன்,இஸ்லாமியர்களுக்கு மு.மு.க,யாதவர்களுக்கு தேவநாதன் என்று அனைத்து சாதி,மதங்களுக்கும் தனித்,தனியே கட்சிகள் உள்ளன.அது போல அனைத்து சாதி,சமுதாயங்கள் அடங்கிய அ.தி.மு.க, காங்கிரஸ், தி.மு.க, ப.ஜ.க, தே.மு.தி.க, ம.தி.மு.க,
கம்யுனிஸட்கள்,என டசன் கணக்கில் சமத்துவ கட்சிகள் உள்ளன.

 அதனால் கொங்கு,கவுண்டர்,வேளாளர் சமூகத்தின் அரசியல் முகவரியாக வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு தமிழர் கட்சி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

எமது கட்சியின் முக்கியக் கொள்கைகள்:- 

 அனைத்து அரசியல் கட்சிகளின் மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் நிலையில் எமது சமுதாயத்துக்கு பெருபான்மையான இடங்கள் ஒதுக்கித்தர வேண்டும்.மத்திய,மாநில அரசுகளின் அமைச்சர்கள்,உயரதிகாரிகள்,நீதிபதிகள்,வாரியம் மற்றும் தேர்வாணைக் குழுக்களின் தலைவர்,உறுப்பினர்கள் போன்ற அனைத்திலும் எமது சமூகத்துக்கு முன்னுரிமை அளிக்கப் படவேண்டும்.

 இத்தகைய கோரிக்கைகளை அ.இ.அ.தி.மு.க தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்றைய அம்மா காலம் வரை அந்தநிலை தொடர்கிறது.அதற்கு உதாரணம் 1991ல் .அ.திமு.க.ஆட்சியில் கே.ஏ.செங்கோட்டையன்,முத்துச்சாமி,துரை.ராமசாமி,சின்னச்சாமி போன்ற நால்வர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

 2001 ல் அம்மா அவர்கள் ஆட்சிப் பொருப்பேற்ற போதுசின்னச்சாமி,பி.சி.ராமசாமி,பொன்னையன்,செ.ம.வேலுச்சாமி ஆகிய நால்வருக்கும் அமைச்சர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்பொழுதும் அ.தி.மு.க தலைமையின் அருகில் கே.ஏ.செங்கோட்டையன்,பொன்னையன்,தம்பித்துரை ஆகியோர் செல்வாக்குடன் உள்ளனர்.

 ஆனால் தி.மு.கவின் நிலமை தலைகீழாக உள்ளது.அக்கட்சியின் வழக்கப்படி மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது வழக்கம்.தர்மபுரி மாவட்ட செயலாளாரும்,சட்டமன்ற உறுப்பினருமான எமது சமுகத்தைச் சார்ந்த முல்லைவேந்தன் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டு முன்னால் அமைச்சராகவே தொடர்கிறார்.2006ல் திருச்சங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காந்திச்செல்வன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.அவரது தோல்விக்கு குழி தோண்டியவர் தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம்.அதே முறையில் கரூர் தொகுதியின் வாசுகிமுருகேஸ் உட்கட்சி எதிரியும்,மைனாரிட்டி சமுகத்தைச் சார்ந்த கே.சி.பியால் தோற்கடிக்கப்பட்டார்.

 2009ல் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகிமுருகேஸ் விபத்தில் மரணம் அடைந்தார்.தி.மு.கவின் வழக்கப்படி வரிசுகளுக்கு(மகன்,மகள்,மனைவி,கணவர்,சகோதரர்) பதவி என்ற அடிப்படையில் அப்போது கட்சிப் பணியில் இருந்த வாசுகியின் கணவர் முருகேஸ்,சகோதரர் ரவிக்குமார்ஆகிய இருவரில் ஒருவருக்கு மாவட்டச்செயலாளர் பதவி கொடுத்திருக்கவேண்டும்.ஆனால் மைனாரிட்டி சமூகத்தை சார்ந்த கே.சி.பி யின் ஆதரவினால் மற்ரொரு மைனாரிட்டியான நன்னியூர்.ராஜேந்திரனுக்கு அந்த வாய்ப்பு தாரை வார்க்கப்பட்டது.

 குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜாவின் மாவட்டச் செயலாளர்,அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டது.அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின்பும் இதுவரை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.அதே நேரத்தில் சேலத்தில் குடிசைகள் பிரித்த வழக்கில் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு ஆளான வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது கட்சித்தலைமை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.லஞ்ச வழக்கில் தனது அதிகாரத்தை மிகையாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பூங்கோதை ஆலடி அருணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.ஆனால் கனிமொழியின் நாடார் சமூதாய பாசத்தின் காரணமாக குறுகிய காலத்தில் அருணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. 

 சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.புலனாய்வில் குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது கட்சி தலைமை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவருடைய ஒன்றியச்செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளில் பாதுகாப்புடன் தொடர்கிறார். 

 இந்தியாவை ஏன் உலகத்தை உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதாநாயகன் ஆண்டிமுத்துராசாவின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி எந்த ஆபத்தும் இல்லாமல் தொடர்கிறது.கோவை மாவட்டத்தை பொருத்தவரை பொங்களூர் பழனிசாமிக்கு சாதாரண இலாக்கா அடங்கிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.கட்சியில் வீரபாண்டியாருக்கும்,கே.சி.பிக்கும் உள்ள முக்கியத்துவத்தில் பாதிகூட பொங்களூரருக்கு இல்லை.எமது சமூதாயத்துக்கு தி.மு.க கட்சியிலும்,ஆட்சியிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதுதான் எங்கள் கணக்கு.

 கூட்டணியில் சீட்டு வேண்டுமென பேரம் பேசுவதற்கு வசதியாக கொங்கு தமிழர் பேரவையை கட்சியாக மாற்றவில்லை.சமுதாய முக்கியத்துவம் என்பதுதான் எங்களின் ஒரே நிலைப்பாடு.வரும் காலங்களில் எமது சமுகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டு.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்து !இல்லை எனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.உயர்நீதி மன்றத்தின் கிளை கோவையில் அமைக்கப் படவேண்டும்.கோவையை துணைத் தலைநகரமாக மாற்றவேண்டும்.மாசு படிந்த நீர் ஆற்றுப் படுகைகளில் கலப்பதை தடுக்கவேண்டும்.போன்ற கோரிக்கைகளை சட்டமன்றத் தேர்தலில் முன்வைக்கப் போகிறோம்.மார்ச் 13 கோவை செழியனாரின் 11 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் கொங்கு தமிழர் கட்சியின் அரசியல் முகவரி தொடங்கும்.          
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 21 மார்ச், 2011

கொங்குதமிழர்கட்சி ஊழல் ஒழிப்பில் புதியகட்சி-புதிய தலைமுறைக்காண- புதிய முயற்சி






 காங்கேயம் மண்ணில் பிறந்து வெள்ளையர்களுக்கு எதிராக வீரமுழக்கம்இட்ட இந்தியவிடுதலைப்புலி மாவீரன் தீரன் சின்னமலையின் ஆசிபெற்ற கொங்குதமிழகத்தின் போராளி கோவைசெழியனாரின் 11ஆம் ஆண்டு நினைவு மற்றும் எமது மாநிலகொங்குதமிழர் பேரவையின் 10ஆம் ஆண்டு துவக்க தினம் மார்ச்14ல் சென்னையில் கொங்குதமிழர்கட்சி துவக்கப்பட்டு கொடிமற்றும்கொள்கைகள் வெளியீட்டு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனர் மற்றும் மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன்,பொருளாளர் எஸ்.கே.நந்தகுமார் செயற்குழு உறுபினர் கே.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் பேரவையின் மாநில-மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கீழ்கண்ட தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன:-


# பேரவையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கட்சியின் மாநிலத்தலைவராகவும்,பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சேலம் ஆர்.ராஜேந்திரன் கட்சியின் மாநிலப்பொதுச்செயலாளராகவும் நியமிப்பது.மேலும் பேரவையின் அனைத்து நிலைகளிலும் செயல்படும் பொருப்பாளர்கள் கட்சியிலும் அதே பொருப்பில் தொடர்வார்கள்.


#ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க இலங்கையில் தனி ஈழம் ஒன்று அமைக்க நமது மைய,மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.


#தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


#பூரண மது விலக்கு,இல்லை எனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.


#சாயப்பட்டறை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி மற்றும் பனியன் தொழிலைகாக்கவும்,விவசாய விலை நிலங்கள் மற்றும் குடிதண்ணீர் ஆதாரங்களை பேனவும் சாயக்கழிவுநீரினை கடலுக்கு எடுத்த்ச்செல்ல வேண்டும்.அல்லது முழுமையாக சுத்திகரிக்க வேண்டும்.


#55வயதுக்கு மேல்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


#விவசயா விளை பொருள்களின் உற்பத்தியை அதிகரித்து நுகர்வோரின் சுமையை குறைக்க விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.அதற்கு நீர் ஆதாரத்தை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக கிணறு வெட்டி உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படவேண்டும்.


#நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.


#பெற்றோர்களின் அனுமதியில்லாமல் வாழ்க்கை என்பதே புரியாத நிலையில் நடைபெரும் இளம் பெண்களின் திருமணத்தை தடுக்கும் வகையில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக மாற்றி அமைக்க வேண்டும்.


#மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும்.

#சாலை விபத்துக்ககளை தடுக்க 8ம் வகுப்பு முதல் சாலை விதிகள் அடங்கிய செயல்முறை பாடத்திட்டத்தை கொண்டுவர வேண்டும்.


#1947ல் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.லஞ்சம்-ஊழல் எனும் அரக்கர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்கவேண்டும்.


உள்ளிட்ட தீர்மானங்களும்,கொள்கைகளும் வகுக்கப்பட்டன்.கூட்டம் முடிவில் சென்னை மாநகரஅமைப்பாளர் எஸ்.முரளி நன்றி கூறினார்.

















best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நடிகர்விஜய்க்கு நாகையில் நெருக்கடி-தி.மு.கவின் பிற்போக்குத்தனம்

  இலங்கை கடற்படையால் தமிழகமீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும்,வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக தமிழகக் கடற்பகுதிகளில் நடந்துவருகிறது.

 இத்தகைய தாக்குதல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும்,சமுதாய அமைப்புகளும் தொடர்ந்து போராடிவருகின்றன.இதை தடுக்க வேண்டிய மைய-மாநிலஅரசுகள் இலங்கையின் சீனா ஆளுமையைக்கண்டு அஞ்சிவருகின்றன.

 மீனவர்களுக்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து நடிகர்விஜயின் மக்கள்இயக்கத்தின் சார்பில் நாகையில் கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி-22) கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டடது.தொடர்ந்து விளம்பரங்களும் செய்யப்பட்டது.

 அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ள விஜய் நாகை வந்துசேர்ந்தார்.நாகைபகுதி முழுவதும் விஜய் ரசிகர்கர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.விஜய் மேடைக்கு செல்லமுடியாத அளவுக்கு இளைஞர் பட்டாளம் திரண்டது.

 கூட்டத்தை ஒழுங்கு படுத்தவேண்டிய காவல்துறை கண்டும்காணமல் ஒதுங்கி நின்றது.ஒருகட்டத்தில் ரசிகர்களின்மீது காவல்துறை தடியடி நடத்தியது.இதுபோன்ற கூட்டங்களின் பாதுகாப்பு பணிகள் காவல்துறையால் திட்டமிடப்பட்டிருக்கவேண்டும். 

 போதிய காவலர்களும் நிறுத்தப்படவில்லை.கடும் தள்ளு-முள்ளுக்கு இடையே மேடைஏறிய விஜய் கோபத்துடன் ரசிகர்களை பார்த்து ஒருசில வினாடிகள் கைஅசைத்துவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கிச்செல்ல முயன்றார்.ஆனால் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி பத்து நிமிடங்கள் பேசவைத்தனர்.

 மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிகரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர்விஜய் என லயோலா கல்லூரியின் சர்வே தெரிவிக்கிறது.ஆளும் அரசின் மையங்கள் இதுபோன்ற மக்கள் சக்திமிக்க தலைவர்களை ஒடுக்க நினைப்பது கண்டனத்துக்குரியது. 
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

மாவீரனை பெற்றெடுத்த பெண்புலியே!அம்மா!பார்வதித்தாயே!





 தமிழினத்தின் மாவீரனை பத்து மாதம் சுமந்து பக்குவமாய் பெற்றெடுத்து பாலூட்டி தாலாட்டி வளர்த்த அன்னையே!

அம்மா பார்வதித்தாயே!எங்கள் பராசக்தியே!பகவதித்தாயே!கண்ணகியே!
உன் கண் முன்னே ஈழத்தின் விடியலை காணமுடியவில்லையே!
கண் இருந்தும் உம்மை எங்களால் காக்க முடியவில்லையே!

உலக அரங்கில் ஊழலின் தேசமாக நாங்கள் உயர்ந்து நிற்கிறோமே அம்மா!பாசத்தின் பிடரியில் அடித்து மோசம் செய்து கொண்டிருக்கிறோமே அம்மா!

நமது துரோகிகளை அழிக்க!துர்க்கர்களை துவசம் செய்ய அறிவாயுதம் ஏந்தி நாங்கள் போராடத் தயராகிவிட்டோமே அம்மா!

தேர்தல் எனும் யுத்தகளத்தை நாங்கள் சந்திக்க தயராகிவிட்டோமே அம்மா!ஆசிர்வதிக்க வேண்டிய நீங்கள் ஆண்டாளாக அவதாரம் அடைந்துவிட்டீர்களே அம்மா! உம்மின் பாதம் தொட்டு வணங்குகிறோமே அம்மா!


தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக- டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஆ.இராசாவின்மனைவி அவினாசி தொகுதியில் போட்டியா?




 2011-தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் சர்வதேச AtoZபுரோக்கர் நீராராடிய,       
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இந்தியாவின் புகழை உலக அரங்கில் தலைநிமிரச்செய்த முன்னால் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்துராசா,தமிழுக்கு சங்கமம் கண்ட செம்மொழி நாயகி ஆகிய சரித்திர புருசர்கள் இணைந்து புதிய அரசியல் வியூகம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன.

 அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளராக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிதாமகன் ஆண்டிமுத்து ராசாவின் மனைவி பரமேஸ்வரியை களம் இறக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவினாசி வட்டார கரை வேட்டிகள் மத்தியில் பர,பரப்பாக பேசப்படுகிறது.

 இதற்கு முக்கியக் காரணம் ஆண்டிமுத்து ராசாவை கட்சி நிகழ்ச்சிகளிலும்,தொகுதிப் பணிகளிலும் செயல்பட வேண்டாம் என கட்சித்தலைமை அறிவுருத்தி உள்ளது.இதனால் ஒரு வகையில் தான் முடக்கப்பட்டுள்ளதாவே ராசா புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

 மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் முன்னனித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாரிசுகளுக்கு தொகுதி ஒதுக்கித் தரும்படி கட்சித் தலைமையை நெருக்கி வருவதாக செய்திகள் கசிகின்றன.இது ஆண்டிமுத்துராசாவை மேலும் யோசிக்க வைத்தது.இந்தயோசனை சங்கம நாயகியுடன் பகிரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.ஏன் நீராராடியாவுடன் கூட கலந்து ஆலோசித்து இருக்கலாம்.

 மேலும் நீலகிரி மக்களவைத் தொகுதி ரிசர்வு தொகுதியாகும்.இதன் தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆண்டிமுத்துராசா.இதில் உள்ளடங்கும் அவினாசி சட்டமன்றத் தொகுதி பெண்கள் ரிசர்வு தொகுதியாகும்.இந்த கூட்டல்,கழித்தல் சரியாக வருவதால் தொகுதியின் கரைவேட்டிகளும் ராசாவின் மனைவி பரமேஸ்வரியை வேட்பாளராக தலைமை அறிவிக்கும்-அப்போதுதான் தங்களுக்கு அளவற்ற லட்சுமி கடாச்சம் கிடைக்கும் என ஆவலுடன் காத்துள்ளனர்.

             படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 29 ஜனவரி, 2011

காந்தியே திரும்பிப்போ! 1947-ஆகஸ்டு-13



 ஜனவரி-30 தேசத்தந்தை காந்தியாடிகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கித்தோட்டாக்களுக்கு இறையான நாள்.ஊழலின் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் நமது தேசம் இன்று உத்தமர் காந்தியடிகளின் நினைவு தினத்தை சர்வோதைய தினமாக அனுசரிக்கிறது.

 பாகிஸ்தான் பிரிவினைகோரி இந்து-முஸ்லீம் கலவரம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.1947-ல் சுதந்திரத்திற்கான முஸ்தீபுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.1947-ஆகஸ்டு-13.இருபதுக்கும் மேற்பட்ட சமஸ்தான மன்னர்கள் இந்திய டொமினியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

 இதே தினத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா அவமானத்தின் உச்சத்துக்கு தள்ளப்படுகிறார்.1946-ஆகஸ்டு-16 ஆம் தேதி முஸ்லீம் லீக் தொண்டர்களின் வன்முறை தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பழிக்கு,பழி வாங்கும் நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்கள் என்று அச்சப்பட்ட கல்கத்தாவின் சூட்பூர் சக்கரவர்த்தி காந்திஜியுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டார்.

 அதன்படி ஆகஸ்டு-13ல் கல்கத்தா பாலிகட்டா சாலையில் அமைந்துள்ள ஹைதரி மாளிகைக்கு சுஹ்ரவர்த்தி காந்தியடிகளை வரவழைக்கிறார்.காந்தியடிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை சமதானப்படுத்தவே அங்கு வருகிறார்.காந்தியடிகள்,அவரது உதவியாளர்களுடன் ஹைதரி மாளிகைக்கு காரில் வருகிறார்.

 எந்த மக்களின் மனதை மாற்ற வேண்டும் என காந்தியடிகள் வந்திருந்தாரோ!அந்த மக்கள் அனைவரும் ஹைதரி மாளிகையின் முன்பு கூடியிருந்தார்கள்.அவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் வன்முறையாளர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.

 காந்திஜி காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு எதிராக எரிமலையாக பொங்கி எழுந்தார்கள்."காந்தியே திரும்பிப்போ!நவகாளிக்குப் போய் இந்துக்களை காப்பாற்று!முஸ்லீம்களை காப்பாற்ற இங்கு வராதே!இந்துதுரோகியே!"என்றெல்லாம் முழங்கினார்கள்.

 "மாகாத்மா" "தேசத்தந்தை" "உத்தமர்"என்று உலக மக்களால் போற்றப்பட்ட காந்தியடிகளை எதிர்த்து அந்த மக்கள் ஆக்ரோசக் குரல் எழுப்பினார்கள்.அவர்மீது மண்ணைவாரி தூற்றி சாபம் இட்டார்கள்.கற்களையும்,பாட்டில்களையும் கொண்டு அண்ணலின் காரை அடித்து நொருக்கினார்கள்.

 அந்த மக்களின் போராட்டம் காரணமாக காந்திஜி தனது மாலை பிராத்தனையைக்கூட கைவிட நேர்ந்தது.கடும் சீற்றத்துடன் பொங்கிய மக்களின் எதிர்ப்பைக் கண்டு துளியும் அஞ்சாமல் அவர்களை நோக்கிச் சென்று 
"என்னைத்தாக்க விரும்பினால் நானே உங்களிடம் வருகிறேன்.எனக்கு இந்துக்களும்,முஸ்லீம்களும் ஒன்றுதான்.என்னையே நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.வாழ்க்கையின் இருதி கட்டத்தில் நிற்கும் நான் இருக்கப்போவது இன்னமும் கொஞ்ச நாள்தான்.என்னைக் கொல்வதானால் யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை"
என்று தேசத்தந்தைக் கூறினார்.

  அவரது பேச்சையும்,செயலையும் கண்டு அங்கு கோபத்துடன் குழுமி இருந்த கூட்டத்தினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.அத்தகைய உத்தமரை 1948-ஜனவரி-30ம்தேதி இதே தினத்தில் நாதுராம் கோட்சே காந்தியை பணிந்து வணங்கி மரியாதை செலுத்திய பிறகுதான் தனது கைத்துப்பாக்கியால் தேசப்பிதாவை சுட்டுக்கொலை செய்தார்.

 தனது வாழ்வையும்,மரணத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்பணித்தார்.

 ஆனால் காந்தியடிகள் கண்ட சுதந்திர இந்தியா இன்று ஆண்டிமுத்துராசாவின் தலைமையில் 1.76 லட்சம் கோடிரூபாய் ஊழலின் ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது. உழல்களின் சர்வதேசத் தலைநகரமாக உயர்ந்துள்ளது. 

                                படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்



 மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.

 மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சியின் போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்து,உதைத்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினார்கள்.


 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.

 மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

   சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை பழிதீர்க்கும் வகையில் போராளிக் குழுக்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டினார்கள்.அவர்கள் திட்டப்படி மீனாட்சிஅம்மனை தரிசிக்க வந்த அய்யர் தீச்சட்டியை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி

  
best links in tamil
More than a Blog Aggregator

சுஜிதாவின் கற்பு-சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்

 பலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் பதிவு செய்கிறேன்.
 1990-வது வருடம்.அப்போது எனக்கு வயது 16.சீ.றி.சபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சார்ந்த சிலர்- நான் படித்த பள்ளிக்கு வருகை தந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய சம்பவங்களை-வீடியோ பெட்டியில் படத்தொகுப்பாக போட்டுக் காட்டினார்கள் (அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ஒன்று கூட இல்லை)


  என்னுடைய கிராமத்தில் எனக்குக் கிடைத்த குறுகிய செய்திகளின் வழியாக இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைகள்,இளம் பெண்களிடம் வன் புணர்ச்சிகள்- என! என் போன்ற மாணவர்களின் மனதில் ஈழத்தின் சோகம் விடியாத இரவாக இருந்தது.டெலோவின் வருகையும்,அவர்கள் காட்டிய வீடியோ காட்சிகளின் விபரீதங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் விலக வில்லை.

 அந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களையும்,சிறுகதைகளையும் எனக்குத் தெரிந்த தமிழ் மொழியில் எழுதி வந்தேன்.இலங்கைத் தமிழர்களின் இன்னல்களும்,அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் நிலையும்-குறிப்பாக பெற்றோர்களை இழந்து தனி மரமாக வந்த இளம் பெண்களின் நிலையும் எண்ணி என் கண்கள் கண்ணீர் வடித்தது.அத்தகைய சூழ்நிலையில் "எரிமலைக்குள் ஒரு பனித் துளி" எனும் தலைப்பில் சிறு கதையின் வடிவத்தில் இலங்கை இனப் படுகொலைகளையும்,ஈழப் பெண்களின் அவலத்தையும் எழுதினேன்.

 அந்தச் சிறு கதையை ஆனந்த விகடன்,ராணி,தேவி போன்ற வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் சிறு கதையை யாரும் வெளியிட முன் வரவில்லை.ஆனால் ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து அவர்கள் முகவரி தாங்கிய கடிதம் ஒன்றும்,எனது சிறுகதையும் திரும்பி வந்தது.அந்தக் கடிதத்தில் "தங்கள் சிறு கதை எங்கள் ஆசிரியர் குழுவின் நெஞ்சத்தை பெரிதும் பாதித்தது.இருப்பினும் வெளியிட இயலாத நிலையில் உள்ளோம்"என்று இருந்தது.அந்தச் சிறுகதையை தேடிப் பிடித்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.தயவு செய்து கருத்துக்களை பதியவும்.

                        "எரிமலைக்குள் ஒரு பனித்துளி"


   "என் இனிய தமிழ் மக்களே!..இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் எனதருமை உடன்பிறப்புகளே!..நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!..தமிழன்!..தமிழன்!..தமிழனுக்கு எங்கு இடையூரு ஏற்பட்டாலும்!..தமிழ் இனத்தை அழிக்க யார் முனைந்தாலும்!..அவர்களை ஓட!..ஓட!..விரட்டுவோம்!..நாங்கள் பேசுவது மட்டுமல்ல!..செய்வதும் அப்படித்தான்!..நாங்கள் சொல்வதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்!..ஆளும் கட்சியாக இருந்தாலும்!..எதிர்கட்சியாக இருந்தாலும்!..தமிழ் மூச்சு!..தமிழ் பேச்சு!..இவைகள் தான் எங்கள் பணியின் உயிர் நாடிகள்"..

 நீளமான கர,கரவென அரசியல் பேச்சுக்கென பழக்கப்பட்ட குரல் ஒலிப்பெருக்கியில் கம்பீரமாக ஒலித்தது.பேச்சாளரின் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு ஏற்ப கூட்டத்தில் கரவொலி,கைதட்டல்கள் தொடர்ந்தன.

 திரண்டிருந்த கூட்டத்தின் கடைக்கோடியில் நின்றவாறு தமிழ் மூச்சாளரின் அரசியல் பேச்சை தன் காதுகளின் வழியே உள் வாங்கிய சுஜிதாவின் கண்களில் கண்ணீர் சொரிந்தது.தன் கண்களில் வழிந்த நீரை தனது கையால் துடைத்தவாறு மெல்ல கூட்டத்தை விட்டு நகர்ந்து நடக்கத் தொடங்கினாள் மேடைப் பேச்சாளரின் பொய்யான பேச்சைக் கேட்டு அவள் மனம் வெகுண்டது...

 மெல்ல அவளது எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது.இடம் -யாழ்ப்பாணம்,நள்ளிரவு-12 மணி,சுஜிதாவின் வீடு.டக்..டக்.டக் என கும்பலாக கேட்கும் பூட்ஸ் சத்தத்தை தொடர்ந்து "ரவுண்ட்ஸ் அப்"என்ற கர,கரப்பான ஆங்கில வார்தை.

 கண்ணையர்ந்து தூங்கிய சுஜிதாவின் தந்தை டக் என கண் விழித்து திரும்பியவர் மனதில்-பயம் அலை,அலையாக எழுந்தது.அரை நொடி யோசனையில் தடால் என எழுந்து குடும்பத்தினர் அனைவரையும் எழுப்பினார்.

 சுஜிதா "என்னப்பா"என்று கேட்கவும்!..வீட்டின் வெளியே கதவின் அருகில் "சூட்"என்ற குரல் ஒலிக்கவும்- வினாடியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கதவினை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.சுஜிதாவின் குடும்பம் மொத்தமும் மொளனமாக அலறியது.

 துப்பாக்கியின் வெடி ஓசை ஓய்ந்த வினாடியில் கதவை த் தள்ளிக் கொண்டு வெறிநாய்கள் போல சிங்கள ராணுவச் சிப்பாய்கள் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.பதறி எழுந்த சுஜிதாவின் அம்மாவை சுட்டார்கள்.இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தாள்.

 மொளனமாக அலறிய குடும்பத்தினர்கள்!..பெறும் கதறலோடு கூவினார்கள்.பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து,பாலூட்டி வளர்த்த அன்னை கண் முன்னாலே துடி,துடித்து கீழே விழுவதைக் கண்ட சுஜிதாவின் அண்ணன் தன்அருகில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு  சிங்களச் சிப்பாய்களை நோக்கி புலியெனப் பாய்ந்தான்...

 மீண்டும் டக,டகவென துப்பாக்கிகளின் கணைப்பு.தோட்டாக்கள் அவன் நெஞ்சில் சர மாறியாகப் பாய்ந்தன! பாய்ந்தவன் பயனற்று தரையில் சாய்யும் வினாடி நேரத்தில் வேட்டை புலியாக உருமாறி இரண்டு சிங்கள வெறிநாய்களின் மார்பிலும்,வயிற்றிலும் கத்தியை வெறிகொண்ட மட்டும் சொருகிய நிலையில் தரையில் சரிந்தான்.

 வினாடி நேரத்தில் உயிர் கொடுத்த அன்னையும்,உடன் பிறந்த அண்ணனும் சரிந்து கிடப்பதைக் கண்டு! இனி நடக்கும் கொடுமைகளை காண முடியாது! என்ற நிலையில்..நேற்று மலர்ந்த புது ரோஜா,சுஜிதாவின் தங்கையும்,தந்தையும் மயக்கமுற்று தரையில் சரிந்தார்கள்.

 சுஜிதா "அப்பா" என்று அலறியவாறு அருகே நெருங்கிச் செல்லவும்! சிங்களச் சிப்பாய்கள் இனி வீழ்த்த யாரும் இல்லை என்று எண்ணி-துப்பாக்கிகளைத் தாழ்த்திக்கொண்டு!அடுத்த ஆட்டத்திற்கு தயார் ஆனார்கள்.மூன்று வெறி நாய்கள் சுஜிதாவை நெருங்கி வந்தார்கள்.


 ஒநாய்களின் அடுத்த இலக்கு தானும், தனது தங்கையும்! என்பதை உணர்ந்து கொண்ட சுஜிதா-தங்கள் உடலுடன் விளையாடத் துடிக்கும் கொடூரத்தை நினைத்து பெண் புலியாக சிலிர்த்து எழுந்தாள். கண நேரத்தில் தன் கண்களில் பட்ட அருவாமனையை கையில் எடுத்துக் கொண்டவள்- தன்னை நெருங்கிய அரக்கர்கள்-எதிர்பாரத நேரத்தில் மூன்று நாய்களை சர,சரவென குதறி எறிந்தாள்.


 ஆனால் சுஜிதாவின் பின்பக்கம் நின்ற சிங்களவனின் துப்பாக்கிக்கட்டை பெண்புலியின் பின்மண்டையில் "நங்"என்று இறங்கியது.சுஜிதா தலையில் வழிந்த குருதியை துடைத்தவாறு தரையில் விழுந்தாள்.

 மற்றவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பால்மனம் மாறாத குழந்தையைப் போன்று தரையில் மயங்கிக் கிடக்கும் சுஜிதாவின் தங்கையை வெறிகொண்ட மட்டும் மாறி,மாறி புரட்டி எடுத்தார்கள்.

 சுஜிதாவை நெருங்கியவர்கள் அவள் உடலோடு ஒட்டியிருந்த ஆடைகளை உறுவி எறிந்து..அவள் உயிரோடு ஒட்டியிருந்த கற்பை மாறி,மாறி சூரையாடினார்கள்.கொடியவர்களின் வெறித் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுஜிதாவும் மயக்கம் அடைந்தாள்.

 அவள் கண் விழித்த போது அனாதையாக தமிழ் அகதிகள் கப்பலில் இந்தியா வந்து கொண்டிருப்பதாக மற்றவர்களால் உணத்தப்பட்டாள்.சுஜிதாவின் ஈழத்து நினைவுகளை கலைக்கும் வகையில்-அவளது இடுப்பை முரட்டுக் கரம் ஒன்று இருகப் பற்றியது.

 திடுக்கிட்ட சுஜிதா தன் பழைய நினைவுகளிருந்து மீண்டாள்.தான் மெரினாக் கடற்கரையின்- அரசியல் கூட்டம் நடக்கும் மேடையை விட்டு வெகு தூரம் வந்திருப்பதை உணர்ந்தாள்.

 பின்புறம் "இலிப்பொலி"கேட்டது.திரும்பியவளின் பார்வையில்-குடி போதையில் இரண்டு ஆண்கள் இலித்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவன் "வா குட்டி! ஏ! குட்டி தனிய தவிக்கிறே" என்றான்.

 சுஜிதாவிற்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் வினாடியில்- மற்றொருவன் சுஜிதாவை முரட்டுக்கரத்தால் இறுக அணைத்தான்!..சுஜிதாவிற்கு.. தலை சுற்றியது..மயங்கினாள்..மீண்டும் கண்விழித்த போது தன் தமிழ் வேந்தர்களால் தான் குதறப் பட்டுள்ளதை உணர்ந்தாள்..

 உணர்வற்ற சுஜிதா கடல் அம்மாவை நோக்கி நடந்தாள்.கற்பு இழந்த தமிழச்சியை காக்க! கடல் அலைகள் அணைத்துக் கொண்டன... சுஜிதாவை இனி யாரும் நெருங்க முடியாது.இயற்கை அன்னையின் தாலாட்டில் இனி 
நிரந்தரமாக தூங்கப் போகிறாள்...

தங்கள் மேலான கருத்துரைகளை பதியவும்


 தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator