சனி, 29 ஜனவரி, 2011

காந்தியே திரும்பிப்போ! 1947-ஆகஸ்டு-13



 ஜனவரி-30 தேசத்தந்தை காந்தியாடிகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கித்தோட்டாக்களுக்கு இறையான நாள்.ஊழலின் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் நமது தேசம் இன்று உத்தமர் காந்தியடிகளின் நினைவு தினத்தை சர்வோதைய தினமாக அனுசரிக்கிறது.

 பாகிஸ்தான் பிரிவினைகோரி இந்து-முஸ்லீம் கலவரம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.1947-ல் சுதந்திரத்திற்கான முஸ்தீபுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.1947-ஆகஸ்டு-13.இருபதுக்கும் மேற்பட்ட சமஸ்தான மன்னர்கள் இந்திய டொமினியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

 இதே தினத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா அவமானத்தின் உச்சத்துக்கு தள்ளப்படுகிறார்.1946-ஆகஸ்டு-16 ஆம் தேதி முஸ்லீம் லீக் தொண்டர்களின் வன்முறை தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பழிக்கு,பழி வாங்கும் நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்கள் என்று அச்சப்பட்ட கல்கத்தாவின் சூட்பூர் சக்கரவர்த்தி காந்திஜியுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டார்.

 அதன்படி ஆகஸ்டு-13ல் கல்கத்தா பாலிகட்டா சாலையில் அமைந்துள்ள ஹைதரி மாளிகைக்கு சுஹ்ரவர்த்தி காந்தியடிகளை வரவழைக்கிறார்.காந்தியடிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை சமதானப்படுத்தவே அங்கு வருகிறார்.காந்தியடிகள்,அவரது உதவியாளர்களுடன் ஹைதரி மாளிகைக்கு காரில் வருகிறார்.

 எந்த மக்களின் மனதை மாற்ற வேண்டும் என காந்தியடிகள் வந்திருந்தாரோ!அந்த மக்கள் அனைவரும் ஹைதரி மாளிகையின் முன்பு கூடியிருந்தார்கள்.அவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் வன்முறையாளர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.

 காந்திஜி காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு எதிராக எரிமலையாக பொங்கி எழுந்தார்கள்."காந்தியே திரும்பிப்போ!நவகாளிக்குப் போய் இந்துக்களை காப்பாற்று!முஸ்லீம்களை காப்பாற்ற இங்கு வராதே!இந்துதுரோகியே!"என்றெல்லாம் முழங்கினார்கள்.

 "மாகாத்மா" "தேசத்தந்தை" "உத்தமர்"என்று உலக மக்களால் போற்றப்பட்ட காந்தியடிகளை எதிர்த்து அந்த மக்கள் ஆக்ரோசக் குரல் எழுப்பினார்கள்.அவர்மீது மண்ணைவாரி தூற்றி சாபம் இட்டார்கள்.கற்களையும்,பாட்டில்களையும் கொண்டு அண்ணலின் காரை அடித்து நொருக்கினார்கள்.

 அந்த மக்களின் போராட்டம் காரணமாக காந்திஜி தனது மாலை பிராத்தனையைக்கூட கைவிட நேர்ந்தது.கடும் சீற்றத்துடன் பொங்கிய மக்களின் எதிர்ப்பைக் கண்டு துளியும் அஞ்சாமல் அவர்களை நோக்கிச் சென்று 
"என்னைத்தாக்க விரும்பினால் நானே உங்களிடம் வருகிறேன்.எனக்கு இந்துக்களும்,முஸ்லீம்களும் ஒன்றுதான்.என்னையே நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.வாழ்க்கையின் இருதி கட்டத்தில் நிற்கும் நான் இருக்கப்போவது இன்னமும் கொஞ்ச நாள்தான்.என்னைக் கொல்வதானால் யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை"
என்று தேசத்தந்தைக் கூறினார்.

  அவரது பேச்சையும்,செயலையும் கண்டு அங்கு கோபத்துடன் குழுமி இருந்த கூட்டத்தினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.அத்தகைய உத்தமரை 1948-ஜனவரி-30ம்தேதி இதே தினத்தில் நாதுராம் கோட்சே காந்தியை பணிந்து வணங்கி மரியாதை செலுத்திய பிறகுதான் தனது கைத்துப்பாக்கியால் தேசப்பிதாவை சுட்டுக்கொலை செய்தார்.

 தனது வாழ்வையும்,மரணத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்பணித்தார்.

 ஆனால் காந்தியடிகள் கண்ட சுதந்திர இந்தியா இன்று ஆண்டிமுத்துராசாவின் தலைமையில் 1.76 லட்சம் கோடிரூபாய் ஊழலின் ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது. உழல்களின் சர்வதேசத் தலைநகரமாக உயர்ந்துள்ளது. 

                                படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_30.html