வீரத்தின் விளைநிலம்,மண்ணின் மாவீரன் தீரன்சின்னமலை நினைவுக் கோப்பைக்கான செவ்வானம் கபாடிக்குழுவினர் நடத்தும் அகிலம் போற்றும் அற்புதமான 37-ஆம் ஆண்டு அகில இந்திய "A"கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடித்திருவிழா நடைபெற உள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட்டம், விடுதலைப் போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த மேலப்பாளையம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிப்போட்டி நடைபெற உள்ளது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ1NNoY4_-Q49jcFcml3VGBCSLHrfxX1AnH2-bezK3KsGdCvlRbtNxJuSZxoKPtlMr11quKT2DX1lZ5o73vjWzCExsHfkade-DGbo_r2WNgM0V-8x6z5m9mr5lHDqWx6FA_YhVo6PENRz3/s400/1+006.jpg)
புரட்சிகர விடுதலை முன்னனி,இயற்கை வாழ்வுரிமை இயக்கம் போன்ற சமூக களங்களின் பாசறையாக திகழும் மே.கு.பொடாரன் தலைமை ஏற்று நடத்த உள்ளார்கள்.உள்ளூர் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.ராமசாமி வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்கள்.
கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்திரன்,அ.இ.அ.தி.மு.க காங்கயம் நகரச்செயலாளர் ஏ.சி.சி.வெங்கு (எ)மணிமாறன்,தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.தினேஸ்குமார்,பா.ஜ.க மாவட்ட தலைவர் பாயிண்ட் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
முதல்பரிசு ரூபாய் 10010 மற்றும் கோப்பையினை முறையே சித்தம்பலம் என்.பார்த்தீபன் அவர்களும்,ஆனூர்வித்தியாலாய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினரும் வழங்குகின்றனர்.
இராண்டாம் பரிசு அ.இ.அ.தி.மு.க வினரும்,தீரன்சின்னமலை நினைவு கோப்பையினை கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி வழங்க உள்ளனர்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம்,ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேல்,ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.(எ)என்.எஸ்.நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
மேலும் வருமானவரித்துறை அதிகாரி (ITO),அகில இந்திய அமெச்சூர் கபாடிக் கழக இணைச்செயலாளர் என்.சுப்பிரமணியன்,தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் சோலை எம்.ராஜா,செயலாளர் எ.சபியுல்லா,பொருளாளர் என்.கே.கே.பி.சத்தியன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் பிராமிஸ்.பி.முத்துச்சாமி,துணைத்தலைவர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆண்கள பிரிவில் 60,பெண்கள் பிரிவில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.மேலப்பாளையம் கிராமத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட எழுச்சிமிக்க படை ஒன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiWTYDNCNM3oCNq8JNTaYrNEHTuxfy0Llomqq1qjAJDqwirJr16H4bVQ7FTHp1Xx8Ev0P214tza0OR_NYLGaE_tu18J0w0KGHIqZBUrUSwmTenI4HNaR-mfi3JcyYb61RwuAXIKqz4rw16/s400/1+008.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjROBqo9ErGd7XM8Bnld8vhXnF1XKNbgx-IFI8pM7tAhPaSr2KYwVtRGxC8QM_g-ijLPHQQYNAwOB6I4c3BHRqSo_CrSvcwmn8Eps4tkoJFJ5vfb1rusqWNVPf8lugLSz7FrcN0K8vnXV6R/s400/1+007.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக