புதன், 26 ஜனவரி, 2011

"முந்த்ரா"இந்தியாவை உலுக்கிய முதல்ஊழல்!

  உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 62வது குடியரசு தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.1958"முந்த்ரா"உழல்.நமதுதேசத்தின்பிரதமர்நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும்உலுக்கியமிகப்பெரியஊழல்.


 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா"ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.
 
 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
 அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.
 ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.
 பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரி இராமன் முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.
 முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.


  இதன் விளைவு ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!
1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி" 
என்ற மக்கள் கட்டமைப்புத்தேவை!

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.   
பதிவைப்பார்த்தவர்கள்கருத்துரைகளைபதியவும் 

best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: