ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஏ.ஆர்.ரகுமான் கோல்டன் குலோப் விருதை இழந்தார்..

  உலகத்திரைப்பட விருதுகளில் ஆஸ்கார் விருதுக்கு இணையாக கோல்டன் குலோப் விருது பேசப்படுகிறது.அன்று ஸ்லம் டோக் இயக்கிய மில்லியனர் படத்திற்கு திரை இசை மற்றும் பாடல் இசைப்பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.

 ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொண்டு ஆங்கிலேயர்கள் குழுமியிருந்த மேடையில் தன்னடக்கத்துடன்" நான் ஒரு சில வரிகளைதமிழில்பேசுகிறேன்எனக்கூறிவிட்டு!எல்லாப்புகழும்இறைவனுக்கே என தமிழில் முழங்கினார் ஏ.எஸ்.திலீப்குமார் எனும் ஏ.ஆர்.ரகுமான்.

 மேலும் அதே மேடையில் பேசிய ரகுமான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவகாக"ஆஸ்கார் விருது வழங்கும் விழாவோ!அல்லது இந்த மேடையோ!அரசியல் விசயங்களுக்கான இடமல்ல!இருந்த போதும்,எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது!என்றே நான் விரும்புவது உண்டு!இருப்பினும் இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப் படவேண்டும்!என விரும்புகிறேன்"என்று ஈழத்தின் கண்ணீரை விசனத்துடன் ஆஸ்கார் மேடையில் பதிவு செய்தார்.

  இந்த ஆண்டுக்கான கோல்டன் குலோப் விருது பட்டியலில் டேவிட் பாயல் இயக்கிய"127 ஹவர்ஸ்"படத்திற்கு இசைஅமைத்த ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரகுமானின்பெயர் பரிந்துறை செய்யப்பட்டது.ஆனால் கடைசிக் கட்டத்தில் கோல்டன் குலோப் விருது இசைத்தமிழனிடம் இருந்து கை நழுவிப்போனது.தமிழை ஆஸ்காரின் உச்சிக்கு எடுத்துச் சென்ற நம் ரகுமானுக்கு இன்னும் ஏராளமான விருதுகள் காத்திருக்கின்றன.

தீரன்சின்னமலை-அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு செய்தி ஊடகத்திற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: