வியாழன், 27 நவம்பர், 2014

புரூஸ்லீயின் மரணமும்,மறுபக்கமும்.டிசம்பர்-27,75-வது பிறந்ததினம்..இன்று


இன்று (நவம்பர்-27...புரூஸ்லீயின் 75-வது பிறந்த நாள் சமர்பணம்.


புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.


புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.


எல்லாமே பொய்தான் என்றாலும், சுவாரஸ்யமான காஸ்ட்லியாக கேட்கும் போது துள்ளலாக உணரவைக்கிற கதைகள் அவை. புரூஸ்லீ பற்றிய எல்லா தகவல்களுமே இதுபோன்ற ஃபேன்டஸி தன்மை நிறைந்ததாகவே கேள்விப்பட்டிருக்கிறேன்.


முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.


புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, சப்பைமூக்கு நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. (ஜாக்கிசான் நீங்கலாக)


புருஸ்லீயின் பாதிப்பு நம்மூர் ரஜினி தொடங்கி, இதோ இப்போது வந்த தனுஷ் வரைக்கும் கூட தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ’பொல்லாதவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த யாரும், தனுஷின் உடலில் புரூஸ்லீயை கண்டிருக்க முடியும். கோலிவுட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் இது தொடர்கிறது. ’குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!


புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? காக்காய் உட்கார விழுந்த பனம்பழமா புரூஸ்லீயின் வெற்றி? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சமம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது அபிலாஷ் எழுதியுள்ள ‘’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ என்கிற புத்தகம்.


தமிழில் வெளியாகிற பயோகிராஃபி புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை. பக்திப் படங்களில் ஒரு பாணி உண்டு. எந்த கடவுள் ஹீரோவோ அவருக்கு சகல சக்திகளும் கிடைத்துவிடும். அது விநாயகராக இருக்கலாம் அல்லது முருகனாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம்... படத்தில் யார் கடவுளோ அவரைத்தான் மற்ற கடவுளர்கள் விழுந்து வணங்கி வழிபடுவார்கள். அவர் மட்டும்தான் உலகை காப்பாற்றுவார். நம்முடைய தமிழ் பயோகிராஃபி புத்தகங்களை வாசிக்கும்போதும் இதை உணரலாம். யாரைப் பற்றின புத்தகமோ, அவரால்தான் அவரால் மட்டும்தான் உலகைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வு! புத்தகம் முழுக்க தனிமனித வழிபாடு மிதமிஞ்சியிருக்கும்.


யாருடைய வரலாறோ, அவருடைய பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே தொடர்ந்து முன்வைக்கிற புத்தகங்களே நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கை வரலாறு என்பதே நமது சுயமுன்னேற்றத்திற்காக படிக்க கூடியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு ஆளுமையின் எல்லா பக்கங்களையும் கோட்பாட்டு ரீதியிலும், தத்துவரீதியிலும் ஆராய்கிற புத்தகங்கள் நம்மிடம் ரொம்பவே குறைவு.


புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் இவைகளுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.


புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது.


"கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை.



புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக் கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்தா! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது.


குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார். (அது என்னென்ன? எப்படி என்பதையெல்லாம் புத்தக்கத்தில் விரிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறார் அபிலாஷ்). அதோடு சீனர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த குங்பூவை இன்று வடபழனி வரைக்கும் பரப்பியதும் புரூஸ்லீதான்!


ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடைய ’கேம் ஆஃப் டெத்’ படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ.


சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான். தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக ‘’ஆழ்மன அமைதியை’’ அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.


ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது.


ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார்.


அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை தின்கிறார். ’என்டர் தி டிராகன்’ படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார்.


ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது.


தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார்.


ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின.


வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது. இந்தப் புத்தகத்தில் புரூஸ்லீ கற்றுக்கொண்ட ’வின்சூன்’ என்கிற குங்பூ பாணிகுறித்த விளக்கமான அறிமுகத்தைத் தருகிறார் நூலின் ஆசிரியர். அதோடு புரூஸ்லீயின் குருவான யிப்மேன் பற்றியும், அவர் புரூஸ்லீயின் வாழ்க்கையை எப்படி பாதித்தார் என்கிற தகவல்களும் புத்தகம் முழுக்க கிடைக்கிறது. புரூஸ்லீயே உருவாக்கிய ’ஜீத்கூனேடூ’ என்கிற முறை குறித்தும் நிறைய விளக்கங்கள் புத்தகம் முழுக்க வருகிறது.


புத்தகத்தின் பெரிய குறை அபிலாஷின் அடர்த்தியான மொழி. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பு. சில விஷயங்களை இன்னும் சுறுக்கமாக சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. நிறைய எழுத்துப்பிழைகளும், சில இடங்களில் தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தை உருவாக்க கடுமையாக உழைத்தவர், இந்த சின்னச் சின்ன பிரச்சனைகளையும் சரிசெய்து அவற்றை தவிர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு மிகமுக்கியமான முயற்சி.


புத்தகத்தை படித்து முடிக்கும் போது ‘’வெற்றி’’ என்கிற ஒன்றைப்பற்றிய நம்முடைய சகல நம்பிக்கைகளும் தகர்கிறது. நீங்கள் சினிமா ரசிகராகவோ, அல்லது தத்துவங்களில் ஆர்வமுள்ளவராகவோ, ஆக்சன் பட பிரியராகவோ, இன்னொருவர் கதையில் தனக்கான ஒளியை தேடுகிற மனிதராகவோ இருந்தால் இப்புத்தக்கம் உங்களுக்கானது... 


புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்..... 
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
விலை 250  

நன்றி"-சினிமொ பிட்டா &அதிஸா வலைதளம்

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 17 நவம்பர், 2014

சமூக வலைதளங்கள் கொடியவைரஸ்-நடிகை வித்யாபாலன்,தாக்குதல்..

vidya balan photo க்கான பட முடிவு

டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தின் மூலம் 
ஒட்டுமொத்த இந்தியத்திரையுலகையும்,
உலக சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர்.
ஒருநடிகை எப்படி இருக்ககூடாது
என்பதையும்,செல்லுலாய்டு என்ற கனவுத்தொழிற்சாலையில் 
கால்பதிக்க துடிக்கும்
இளம்பெண்களின் உயிர்நாடியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் 
வாழ்ந்துகாட்டியவர்
வித்யாபாலன்.

அன்றைய நடிகை டி.ஆர்.ராஜ்குமாரியிலிருந்து இன்றைய நடிகைஅஞ்சலி
வரை படும்துன்பங்களை,பாலியல் வன்கொடுமைகளை அப்படமாக நவீன சினிமா
தொழிற்சாலையில் பதியப்பட்டபடம்தான் டர்ட்டி பிக்சர்ஸ்.கிட்டத்தட்ட நமது
தமிழ்த்திரையுலகின் கவர்சிக்கன்னியாக பார்க்கப்பட்ட சில்க்சுமிதாவின் சினிமா
வாழ்வியலை-வித்யாபாலன் டர்ட்டி பிக்சர்ஸ்சில் வாழ்ந்துகாட்டியதாக
சொல்லப்பட்டது.

சமூகவலைதளங்கள்,மீடியக்களுக்கு வித்யா மீது கழுகுப்பார்வை உண்டு.
அவரது செய்திக்கு அதிவேகமான பார்வையாளர்கள் உண்டு.அந்த அடிப்படையில்
இன்றைய தினம் தினத்தந்தி நாளிதழில் சமூக வலைதளங்கள் மீது வித்யாபாலனின்
அதிரடி தாக்குதல்.என்ற தலைப்பில் நேர்காணல் வெளியானது...அது பற்றி...

அதில்..சமூகவலைதளங்கள் தொடர்பான இரண்டு கேள்விகள்..

1.இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நீங்கள் ஏன் எழுதுவதில்லை.?

வித்யா-.. எனக்கு அதில் நாட்டமில்லை,வலைதளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்து
கொள்வதற்காக சில விசயங்கள்தான் இருக்கின்றன.ஆனால் பலரும்
பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை
உணர்ந்துகொள்ளமுடிகிறது.பாத்ரூம் போவதைக்கூட டுவிட்டரில் தெரிவித்து
விட்டுத்தான் போகிறார்கள்.மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும்
செய்யக்கூடாது என்பது ஒருமனோவியாதியாக மாறிவிட்டது.

2.வலைதளங்களால் மக்களுக்கு நன்மை இல்லை எங்கிறீர்களா..?

வித்யா-..எதையுமே பயன்படுத்தும் விதத்தில்தான் நன்மையும்,தீமையும் விளையும்.
பலருடைய நட்புக்கு வலைதளங்கள் துணையாக இருப்பது உண்மைதான்.எத்தனை
பேருடைய குடும்பவாழ்க்கை இதனால் பறிபோகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவரது குடும்ப வாழ்க்கையின் மிக ரகசியமான விசயங்கள்கூட வலைதளத்தில்
பகிர்ந்து கொள்ளப்படுவது அநாகரிகத்தின் உச்சகட்டம்.இன்று உலகம் முழுவதும்
பரவியிருக்கும் கொடிய வைரஸ் சமூக வலைதள்ங்கள்தான்.இதில் சிக்கி
சின்னாபின்னமான குடும்பங்கள் பல உள்ளன... நன்றி:-தினத்தந்தி

வித்யாபாலனின் கூற்று நூறு சதம் சரியானது அல்ல...ஆனால் அதே நேரத்தில்
சமூக வலைதளப்பதிவர்கள் சிந்திக்கவேண்டிய செய்தி..உலகம் ஒரே குடையின்
கீழ் கொண்டு சேர்த்த பெருமை சமூகவலைதளங்களுக்கே உரித்தானது...
சமூகவலைதளங்களை இதுபோன்று சுதந்திரமாக தொடர்ந்து பயன்படுத்த
வேண்டுமானல் நாம் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.
சீர்கேடுகளை முன்வைக்கும் தளங்களை புறந்தள்ளவேண்டும்..

கருத்துக்களை பகிரவும்

இவன்:-டி.கே.தீரன்சாமி,கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in,http://kongutamilar.blogspot.in

best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சிங்களபேரினவாதி அநாகரிகதர்மபாலவுக்கு-இந்தியப்பேரரசு தபால் தலை-கொங்கு தமிழர் கட்சி கண்டனம்..!



சிங்களப்பேரினவாதத்தின் பிதாமகன் அநாகரிகதர்மபாலாவின் 150-வது
பிறந்த
வருடத்தை முன்னிட்டு நமது மைய அரசு  அவருக்கு தபால்தலை
வெளியிட்டுள்ளது.அநாகரிகதர்மபாலா ஒரு சிங்கள இனவெறியர் . ஹிட்லரின்
வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்'
என்றார்.

தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட
வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு
முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து
பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர்.

இலங்கையில் சிங்களம்தான்
ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்
என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக
தர்மபாலாவும் ஒரு முன்னோடி.

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான
தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம்
கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இதை மேற்கொண்டுவரும் சிங்கள
இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள்
முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.

"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க
வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக
தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்
வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில்
தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே
போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள்
முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப்
பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன்
தபால் தலை வெளியிட வேண்டும்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுந்துள்ளது,

ஏற்கனவே சுப்பிரமணியன்சுவாமி இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு பாரதரத்னா
விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.

மைய அரசின் இத்தகைய செயல்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி கண்டனத்தை
பதிவு செய்கிறது.

இவன்"-
டி,கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி,


best links in tamil
More than a Blog Aggregator

விஜயகாந்த் மக்களுக்கு என்ன செய்தார்..?கொங்கு தமிழர் கட்சி கேள்வி...?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்களை தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா ஊழல் புரிந்தார்....என்ற கருத்தெல்லாம் 2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைத்த போது தெரியாதா...?
 
இத்தனை நாளாய் தூங்கிவிட்டு இப்போது எல்லாம் குறை என்று விமர்சிக்கும் விஜயகாந்த், தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி மூலம் என்ன நன்மையை இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தார்..?
 
எங்கே காவேரி நடுவர் மன்றத்தை அமைக்காவிடில் கூட்டணியில் இருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு கருத்தை விஜயகாந்த் அவர்கள் கூறமுடியுமா...?
 
மீனவர் பிரச்சினை குறித்து இதுவரை ஒரு அறிக்கையை விடுத்துள்ளாரா..?
 
அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவை வருவது இருக்கட்டும்....இதுவரை என் நீங்கள் வரவில்லை...? எதிர்க்கட்சி பணி ஆற்றவில்லை...?
 
Thanks,
Soundar

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 27 அக்டோபர், 2014

விஜயின் கத்தியில்" தன்னூத்து",,,நிஜத்தில்..திருச்சி "சூரியூர்" கிராமம்.?

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு கடந்த 24-10-2014 அன்று எமது கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது...எமது செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் தினமலர்,தினமணி நாளிதழ்களில் வெளிவந்தது.ஏரளாமான விஜய் ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

இன்னொரு தரப்பில் நடிகருக்கு ஏன் ஆதரவு...லைக்கா..சுபாஸ்கரன் அல்லிராச,கோத்தபயெ ராசபக்சே என்ற அடிப்படையில் எமது கொங்கு தமிழர் கட்சியின் ஆதரவுக்கு மேற்படி கேள்விகள் எழுந்தன...அதற்கு விஜயின் கத்தி படத்தில்-தண்ணீரின் முக்கியத்துவத்தை,விவசாயிகளின் வாழ்வாதரத்தை பற்றி விஜய் பேசும் வசனங்களை எடுத்துக்காட்டி...விளக்கம் அளித்தோம்.

கூடுதலாக கத்தி படத்தில் தண்ணீர் கொள்ளையர்களின் கோரப்பிடியில் தன்னூத்து என்ற கிராமம் காட்டப்படுகிறது.அதுபோல திருச்சியில் சூரியூர் கிராமம் பெப்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது...தண்ணீர் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கீழ்கண்ட உண்மை நிகழ்வைப்படியுங்கள்....கருதுக்கூறுங்கள்,,,பகிர்வு செய்யுங்கள்...

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்
-------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.

இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையி ன் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.

இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.

தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.

சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்
Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.se shan
தண்ணீர் இயக்கம்
www.thanneer.org வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com
இதை அனைவரும் பகிருங்கள்(Share). ஏனெனில் பத்திரிகை., ஊடகங்களை விட சமூக வலைதளங்களுக்கு சக்தியும் அதிகம். பொறுப்புகளும் அதிகம்

நன்றி:-மேற்படி செய்தி,தண்ணீர் இயக்கம் வினோத்ராஜ்சேசன்,மற்றும் வெங்கட்ராமன் முகநூலில் இருந்து எடுத்தாலப்பட்டது.

இவன்:-டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி

.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஜயின் கத்தி..விவசாயிகளின் உரிமைக்குரல்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு,கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது ஏன்,,? என்று என்னிடம் பலர் கேள்வி எழுப்பினார்கள் அதற்கான பதில்...கீழே...

விவசாயின் உரிமைக்குரலாக,உழவர்சங்களின் கோரிக்கையாக,கொங்கு தமிழகத்தின் எழுச்சிமிக்க,உணர்ச்சிக்குரலாய்.....அழிந்துவரும் வேளாண் இனத்தின் இடி முழக்கமாய்...கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய உணர்ச்சிமிக்க வசனங்கள்...கீழே கொடுத்துள்ளேன்...படியுங்கள்...எமது ஆதரவு நிலைப்பாடு சரியானது என்று ஆதரிப்பீர்கள்

 ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல. 

3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு. 

தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா. 

20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது. 

அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க. 

இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது. 

5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. 

இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல. 

இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
 
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்)
யோவ்.... சாதாரண தண்ணியா...
 
2ஜினா என்னய்யா..
அலைக்கட்றை.. காத்து..
வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்...... தண்ணி அத்யாவட்சியம்... 

கத்தி திரைப்படத்தை எமது கொங்கு தமிழர் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.....

இவன்:-தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 22 அக்டோபர், 2014

விஜயின் கத்தி படத்துக்கு கொங்கு தமிழர் கட்சி ஆதரவு...?

நடிகர் விஜயின் கத்தி திரைப்படம்-ஈழத்தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புடையது என்று சில தமிழ அமைப்புகள் கத்தி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன்.இதனால் கத்தி படம் பல சிக்கல்களை தாண்டி சில தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று லைக்கா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் எடுக்கப்பட்டு நேற்று உலகம் முழுவது திரையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள சத்தியம் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகளில் கத்தி படம் வெளியிடப்பட்டது.அப்பொழுது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு திரையரங்கின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வன்முறைச்சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குறியது.

மேலும் எமது கொங்கு தமிழகத்தை சார்ந்த திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய் எனபதை எமது கொங்கு தமிழர் கட்சி கவனத்தில் கொள்கிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி-விவசாயத்தை அழித்து, மண்ணையும், மண்ணின் மைந்தர்களையும் காவு வாங்கும் பகாசூர பகல் கொள்ளயர்களான, தண்ணீர் வியாபாரிகளைப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்தான் கத்தி.

இந்தப்படத்துக்கு தமிழ் உணர்வு என்ற போர்வையில் தரப்படும் நெருக்கடிகள்,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தண்ணீர் கொள்ளையர்களின் பின்புலம் உள்ளதோ என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது.ஏனெனில் இயற்கையின் பொக்கிசமான நீர் ஆதாரத்தை சுரண்டி நடைபெறும் தண்ணீர் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடிரூபாயிகள் இலாபமாக ஈட்டப்படுகிறது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள், நீர்வள ஆதாரத்தை சுரண்டுகிறது. இதற்கு தடையாக இருப்பவர்களை வெளிச்சம் போட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும்   படம் கத்தி.இப்படத்தை வேளாண் பெருமககள் நிறைந்த கொங்கு தமிழகம் வரவேற்கிறது.

எனவே,எமது கொங்கு தமிழர் கட்சி கத்தி படம் வெற்றிபெற அனைத்து உதவிகளையும் வழங்கும்.

மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை கத்தி திரைப்படத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வன்முறையாளர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து தேசத்தின் நீர் ஆதாரத்தை காக்கும் உணர்வுகளை பேணவேண்டும்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

டி.எஸ்.சண்முகம்,
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்
கொங்கு தமிழர் கட்சி 07373108091, 09444829941

best links in tamil
More than a Blog Aggregator

விஜயின் கத்தி-தமிழ்த்திரையின் உச்சம்

கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம் 


டத்தின் கதையாக..............

விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய  அமைதியான சமுக ஆர்வலர் ஜீவானந்தன் (விஜய்) சுடப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில்...........

சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு சிறைக்கு போய் தப்பி வரும்  துடிப்பான வலிமையான இளைஞன் கதிரேசன் (இன்னொரு விஜய்) சந்திக்க......

ஒரே உருவத்தில் இருக்கும் திருடன் கதிரேசன் சமுக ஆர்வலர் ஜீவானந்தமாக மாறி கிராமத்து விவசாய மக்களுக்காக அவ்வப்போது தன் காதலி (சமந்தா)வுடன்  கொஞ்சிக்  குலாவினாலும் பன்னாட்டு நிறுவன முதலாளியை (நீல் நிதின் முகேஷ்)  எதிர்த்து போராடுகிறார்  

திருடன்  கதிரேசன் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா...? சமுக ஆர்வலர் ஜீவானந்தம் என்ன ஆனார்....? என்பதை திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

இயக்குனர் முருகதாஸ்.......அதிகமான .வணிக சினிமா சமாச்சாரங்களை கொஞ்சம் சமுக சிந்தனையுடன் படைத்துள்ள கத்தி படத்தின் திரைக்கதை நிறைய லாஜிக் ஓட்டைகளால்  தள்ளாடுகிறது    இந்தப் படத்துக்கு ஏன் கத்தி என்ற பெயர்...? அவருக்கே வெளிச்சம் 

நடிகர் விஜய்.....இருவேடங்களில் இரு வேறுபட்ட நடிப்பை காட்டுகிறார் அவரது அதீத ரசிகர்களுக்காக............கதிரேசனாக கலக்குகிறார்  
பொதுவான ரசிகர்களுக்காக......அமைதியான ஜீவானந்தனாக வருகிறார் 

சமந்தா........தனது அழகான கவர்ச்சிப் புன்னைகையால் படம்பார்ப்பவர்களின் இதயங்களை புரட்டி புரட்டி போட்டு தாக்குகிறார் முத்தான மூன்று பாடல்களில் அழகு ஓவியமாக தோன்றுகிறார் 

மற்றபடி சதீஷ் பேசும் ஒன்லைன் காமெடி வசனங்கள் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை MNC கம்பெனி தலைவராக வரும் நீல் நிதின் முகேஷ் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் கவர்கிறார் 

அனிருத் இசையில் பாடல்கள் அருமை...பின்னணி இசையில் அரங்கம் அதிர்கிறது The Sword of Destiny’..இசைக்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் தியேட்டருக்குள் தீபாவளிச் சரவெடி........செல்பி புள்ள....பாடல் கொளுத்தி போட்ட மத்தாப்பு

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு கதிரேசன்-ஜீவானந்தம் இருவர் மனநிலைக்கு ஏற்ப இரு மாறுபட்ட வண்ணத்தை திரையில் படம் காட்டுகிறது ஜெயில் உடைபடும் காட்சி,360டிகிரியில் காட்டப்படும் சுரங்கப்பாதை காட்சி.......பிரமிக்க வைக்கிறது 

ஆக மொத்தத்தில்.................நீர்வள ஆதரத்தை பறித்து விவசாயத்தை அழிக்கும் தண்ணீர் கொள்ளையர்களை காவு வாங்கும் திரைப்படம்
கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம்..
நன்றி:-  PARITHI 16 மணி முன்பு (http://parithimuthurasan.blogspot.in)
என்ற வலைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது..நன்றி..

இவன்:-தெ.கு.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 20 அக்டோபர், 2014

அம்மா வருக!..அம்மா வருக!..இதயதெய்வம் அம்மா வருக!.வாழ்த்துப்பா..

அம்மா வருக!..அம்மா வருக!..இதயதெய்வம் அம்மா வருக!..
அம்மா வருக!..அம்மா வருக!..மனிததெய்வம் அம்மா வருக!..

சின்னம்மா வருக!..சின்னம்மா வருக!..சிங்கம்போல வருக!..
எங்கள் முதல்வர் அம்மா!..வருக!..மக்கள் முதல்வர் அம்மா வருக!...
 

புரட்சித்தலைவி அம்மா வருக!..பொங்கும் கடலாய் அம்மா..வருக!..
சுழலும் புயலாய் அம்மா வருக!..பாயும்புலியாய் அம்மா வருக!..


அனலும் நெறுப்பாய் அம்மா வருக!..ஆதவன் ஒளியாய் அம்மா வருக!..
அரியணையேர அம்மா வருக!..ஆட்சிசெலுத்த அம்மா வருக!..
வாழும் தெய்வம் அம்மா வருக!..

இவன்:-டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மராட்டிய மண்ணில் வீறுகொண்டு எழுந்த-வீரத் தமிழன் கேப்டன்.ஆர்.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ

Tamil Selvan
கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ
மராட்டிய கவர்னரால்.வீரத்தமிழன் என்ற விருதுபெற்று-மும்பை தமிழர்களால் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும்-கேப்டன் ரா,தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம்,கரம்பக்குடி தாலுகா,பிலவிடுதி கிராமத்தில் ராமையா ,தங்கம் தம்பதிகளுக்கு 1958-ம் ஆண்டு மகனாகப்பிறந்தார்.

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பை சென்று கூலித்தொழிலாளியாக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி-ஏஜன்சி ஆரம்பிது கடின உழைப்பால் உயர்ந்தவர்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் மும்பைத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.இதன் காரணமாக மும்பைத்தமிழர்கள் இவரை கேப்டன் என அன்புடன் அழைக்கத் தொடங்கினார்கள்.

சாயன்கோலிவாடா தொகுதியின் சட்டமன்றத்தொகுதி தலைவராகவும்-168-வது வார்டு கவுன்சிலராகவும்,மும்பை மாநகராட்சி பணிக்குழு தலைவராகவும், ப.ஜ.க மும்பை பிரதேச செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாயன் கோலிவாடா சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.தன்னை பின்தொடர்ந்த சிவசேன வேட்பாளரைவிட 3,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்தத்தொகுதியில் 66 ஆயிரம் மாராட்டிய இன வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிய தேசத்தில் அதுவும் சிவசேனா ஆதிக்கம் கொண்ட மராட்டிய மண்ணில் அதன் வேட்பாளரை தோற்கடித்து வீறுகொண்டு எழுந்த கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அவர்களின் பணி சிறக்க எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்-டி.கே.தீரன்சாமி மும்பை.எம்.எல்.ஏ.கேப்டன்,ரா.தமிழ்ச்செல்வன் அவர்களை அலைபேசியில் தொடர்பு வாழ்த்து தெரிவித்தார்.
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 18 அக்டோபர், 2014

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in
9865126679

பெறுநர்:-உயர்திரு-செய்தி ஆசிரியர்&நிருபர் அவர்கள்
தமிழ்நாடு,அனைத்து செய்தி ஊடகங்கள்.

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் பிராத்தனை-மக்கள் முதல்வர் அம்மா,சின்னம்மா
உள்ளிட்ட நால்வரின் விடுதலை-

அம்மா அவர்களின் தமிழகவருகை-தீபாவளி திருநாள் மூன்று நாட்கள் உள்ள
நிலையில்-தீபாவளிக்கொண்டாட்டம்-உற்சாகம் அம்மா அவர்களின் வருகையின்போது
நேற்றே தொடங்கிவிட்டது.

கொங்கு தமிழகமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தீபாவளி திருநாளை தொடங்கிவிட்டார்கள்.;-

இவன்:-டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 8 அக்டோபர், 2014

கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி மொட்டை அடித்து மக்கள் முதல்வர் அம்மா மற்றும் சின்னம்மா சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற பழநி முருகனிடம் வேண்டுதல்

கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்தபோது எடுத்த படம்






முதல்வர் அம்மா கைதிசெய்யப்பட்ட 27-ம் தேதி மாலை நான்கு மணி முதல் கரூரிலிருந்து புறப்பட்டு கொடுமுடி வழியாக ஈரோடு சென்று அங்கு அ.தி.மு.கவினர் நடத்திய கண்டன் ஊர்வலத்தில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் கலந்து கொண்டோம்.ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட சில செய்தி ஊடங்களுக்கு எமது கண்டனத்தை பதிவு செய்தோம்.

மாலை 7-மணிக்கு கொடுமுடி மகுடேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து அம்மா மற்றும் சின்னம்மா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற சிறப்பு அர்சனைகள் செய்து வழிபட்டோம்.

29-ம் தேதி எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய நிர்வாகிகளின் அவசரக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் வாயிலாக கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

4-10-2014 அன்று கரூரில் நடைபெற்ற மனிதச்சங்குலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

05-10-2014 ஞாயிற்றுக்கிழைமை அன்று பழநி சென்று கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி மொட்டை அடித்து மக்கள் முதல்வர் அம்மா மற்றும் சின்னம்மா சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற பழநி முருகனிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.

அம்மா ஜெயலலிதா மற்றும் சின்னம்மா சசிகலா அவர்களுக்காக தோழமைக் கட்சியின் தலைவரான - எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி ஒருவர் மட்டுமே மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

06-10-2014அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் எமது காங்கயம் பகுதியில் கலந்து கொண்டோம்.

செய்தி;-பி.செளந்திரராஜன்,மாநில செய்தித்தொடர்பாளர்-
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானது. கொங்கு தமிழர் கட்சி தீர்மானம்



செப் 30:
             காங்கயத்தில் கொங்கு தமிழர் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேசிய அமைப்பாளர் டி .கே.தீரன்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதானமாக புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                 கடந்த 50 ஆண்டுகளாகவே கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் ஒரே தேசிய  குடையின் கீழ் இருந்தாலும் கன்னடர்,     தமிழர் என்ற பிரிவினையை கர்நாடகா தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றது.
அதற்கு  காவிரிப் பிரச்னை ,கர்நாடகா வாழ்தமிழர்கள் மீது தாக்குதல் ,அரசியல் பழிவாங்குதல் என பல உதாரணங்களை முன் வைக்கலாம்.அப்படி  இருக்கும் போது தமிழர்களுக்கு எந்த வகையிலும் கர்நாடகத்தில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை-என்ற நிலையிலும் நீதியை மதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் டாக்டர் .புரட்சி தலைவி அம்மா மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பினோம்.ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
இதுவே  ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து. இதே கருத்தை வலியுறுத்தி கொங்கு தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

/அமைப்பின் சார்பில் / செய்தி வழங்குதல்
டி.எஸ்.சண்முகம்
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்                                                          
/அமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் /                                           உயர்திரு.டி .கே.தீரன்சாமி அவர்கள்                                                               தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் .                                                                    நாள் : 30.09.2014
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 27 செப்டம்பர், 2014

திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும்....திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி கண்டனம்.



1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66.64 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாண்புமிகு தமிழக முதல்வர் மீதான பொய் வழக்கில், பலதரப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு பிறகு முதல்வருக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதாக வழங்கப்பட்டதா..?இல்லை, அநீதிக்கு ஆதரவாக அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. முதல்வரின் வளர்ச்சி, தமிழகத்தின் உரிமைகளுக்கு போராடுவதை தன் கடமையாக கொண்ட அவரை இனியும் விடுவது தமிழகத்தில் தன்னலம் கொண்டவர்களுக்கும், அவரின் போராட்ட குணத்திலே  பெற்ற நியாயத்தால் தொலைந்து போன தேச துரோகிகளின் அனைத்து திட்டங்களுக்கும் தோல்வியைத் தந்ததால் பொது எதிரியாக முதல்வரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

நீதியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவரும், சத்திய வழியில் அதிமுகவை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழித் தோன்றல் தான் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவி அவர்கள். அரசியல் வாழ்வில் இவர் சந்த்தித்த இன்னல்கள் ஒன்று இரண்டல்ல. புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை முடக்க நினைத்தவர்களை தனது திறமையினாலும், மக்களின் அன்பு மற்றும் ஆதரவினாலும் தகர்த்தெறிந்தவர் புரட்சித்தலைவி.

மக்கள் பணிக்காகவே தன்னை அரசியலில் தியாகம் செய்த புரட்சித்தலைவி அவர்களுக்கு நேற்றைய தீர்ப்பின் மூலமாக ஒரு தடையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். 
சில மாதங்களுக்கு முன்பாக கருத்து கூறிய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, "தன்னுடைய பதவிக் காலத்தில் பல நீதிமன்ற நியமனங்களுக்கு சில அரசியல் கட்சிகளால், குறிப்பாக தமிழகத்தில் கடந்த காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த  கட்சியின் தலையீடு இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்." இதிலிருந்தே எதிர்க்கட்சியான திமுகவின்  நீதித்துறை தலையீடுகள் புரிகிறது.

அவரது  அரசியல் பயணத்திலிருந்தே அவர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் தன்னை குற்றமற்றவர் என்று  நிரூபித்தவர் புரட்சித்தலைவி.
நீதித்துறையின் செயல்பாடுகளுக்கும் முழுஒத்துழைப்பை நல்கியே அவர் வென்றிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு, முல்லை பெரியாறு, இலங்கைத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கெயில் எரிவாயு குழாய் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம் போன்ற வாழ்வாதர பிரச்சினைகளில் கடந்த மற்றும் தற்போதைய மத்திய அரசுகளுக்கு எந்த பாரபட்சமும் பாராமல்  நீதிக்கு போராடி நெருக்கடியைத் தந்த, தரப்போகும் தலைவர் இவர் மட்டும் தான்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரையில், கேரளாவில் அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் மத்தியில் ஆளும் கட்சி முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல் ஆதாயத்தை அடையவும், தமிழகத்தில் காலூன்றவும் ஒரே தடையாக இருக்கும் சக்தியான புரட்சித்தலைவியை பழிக்கு ஆளாக்கியுள்ளனர்.

கட்ச்த்தீவு பிரச்சினையை மறைக்க, தமிழகத்தில் இனி அரசியல் செய்ய புரட்சித்தலைவி தான் அவர்களுக்கெல்லாம் பொது எதிரி. மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் அவருக்கு தேர்தல் மூலமாக வெற்றியை மட்டுமே வழங்கியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குன் சக்தியான புரட்சித்தலைவிக்கு அரசியலில் நிரந்தர ஓய்வு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அனைவருக்கும் நினைவில் நிற்க வேண்டியது, இது போன்ற பல சதிகளில் இருந்து நெருப்பாற்றில் நீந்தியவர் புரட்சித்தலைவி.

செய்தியாளர்கள் பேட்டியில் சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தில் அதிமுக இயக்கத்தின் மூலமாக நக்சலைட்டுகள்,ஐ.எஸ்.ஐ இயக்கம், விடுதலைப்புலிகள் உள்ளிட்டவற்றை இணைத்தும் ஒரு சர்ச்சையை பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.

மீண்டும் வருவார் தங்கத்தாரகை...தமிழகத்தின் நிகரில்லா தலைவி புரட்சித்தலைவி....!

க.சௌந்தரராஜன்.
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தீரன்சின்னமலையின்-209-வது நினைவுதினம்.கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி தலைமையில் வீர வணக்கம்!





























03-08-2014 இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் வீரவணக்கம் இரத்தினம் தீரன்சின்னமலையின் 209-நினவு தின- நிகழ்ச்சி கொங்கு தமிழர் கட்சி ,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 26 ஜூன், 2014

1)எந்த ஒரு தனி மொழியும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல... 2)கரையேறுமா..கல்வி முறை!


சொளந்தரராஜனின்,    ரொளத்திரம் பழகு...!-4

மத்திய அரசின் அனைத்து துறையிலும் இந்தியை ஊக்குவிப்பது, மத்திய அரசு ஊழியர்களை சமூக வலைத்தளங்களில் இந்தியை முதன்மையாக, ஆங்கிலத்தை இரண்டாவது என பயன்படுத்த வலியுறுத்துவது எல்லாம் மொழி திணிப்பு இல்லையா...?

திரு.மோடி அவர்களுக்கு உள்ள மொழி மீதான ஆர்வத்தை, மக்களுக்கு  திணிக்க வேண்டாம்.பிற மாநில மொழிகளை தாழ்த்துவதை விரும்பாத மத்திய அரசு தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை ஆட்சி மொழியாக்கலாமே....?

பதவியேற்ற பிறகு பிறநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது திரு.மோடி அவர்கள் இந்தியை பயன்படுத்தியது, பிரதமரின் தனி உரிமை....ஆனால் ஒட்டு மொத்த மக்களின் மொழி உரிமையை பறிக்கவேண்டாம்.

இந்தியை கற்க எதிர்ப்பில்லை...ஏன் பிற மொழிகளை கற்கவும் எதிர்ப்பில்லை...ஆனால் திணிக்காதீர்கள்....

எந்த ஒரு தனி மொழியும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல. 

ரௌத்திரம் பழகு...!

சொளந்தரராஜனின்,    ரொளத்திரம் பழகு...!-5

கரையேறுமா கல்விமுறை....!

ஒரு நாட்டின் உண்மையான சொத்து கல்வியறிவு....ஊழல் மற்றும் வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம்,

பாதுகாப்பு என்று அனைத்தும் வசப்பட கல்வியறிவு அடிப்படை.
நியாயமான கல்விமுறை நாட்டை வளப்படுத்தும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இன்று நமது குழந்தைகளின் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரையிலான கல்விமுறையில் முறைகேடுகளும், தரமின்மையும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மதிப்பெண்ணுக்குரிய ஓட்டத்தில் மதியை பெற்றோர் உட்பட அனைவரும் இழந்து வருகிறோம்.

கல்விமுறை எதிர்காலம் குறித்த நம்பிக்கையும்,திறனை மேம்படுத்துவதாக  அமையவேண்டும்...ஆனால், இன்றைய கல்விமுறை எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தையும், ஒரு பெரும் தொழில் போட்டியையும் சமூகத்தில் உருவாக்கியுள்ளது அல்லது உருமாற்றியிருக்கிறார்கள்.

கல்வி நிறுவனங்களின் அதீத வளர்ச்சி, அதன் தரத்தை அதிக அளவில் பின்னோக்க செல்ல வைக்கிறது.தன்னுடைய குழந்தைகளின் கனவுகளில் பெற்றோரின் தலையீடு என்பது சற்றே குறைந்தாலும்,நமது கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் திறனை சாகடித்துக்கொண்டிருப்பது உண்மை.

அனைத்து துறைகளும்,வாய்ப்புகளும்,சாதனைக்கு உகந்தவையே....
ஆனால் இங்கு சில துறைகள் சில காலத்திற்கு  முதன்மைபடுத்தப்படுவதும், பின்னர் அதன் தரத்தை அழித்து அடுத்த தலையீட்டை ஏற்படுத்துகிறது....நிஜ எடுத்துக்காட்டு..? பொறியியலின் இன்றைய நிலை....எத்தனை பொறியியல் பட்டதாரிகள்..? வாய்ப்புகள் உண்டு...ஆனால் அவர்களின் கல்வித்திறமை...?

இது நிச்சயமாக கல்வித்துறையில் சுய பரிசோதனைக்கான  காலம்.....இல்லையெனில் இங்கு படித்த முட்டாள்கள் உருவாவது தொடரும்.

ரௌத்திரம் பழகு...!
best links in tamil
More than a Blog Aggregator