ஞாயிறு, 22 ஜூன், 2014

சிவன்மலைமுருகனின் தலவரலாற்று புத்தகத்தில்-தீரன்சின்னமலையின் பதிவுகள் இல்லை!


கொங்குநாடு என்பது 24-நாடுகளை உள்ளடக்கியது.அதில் காங்கயம் நாடும் ஒன்று.அங்கு சிவன்மலையில் குடிகொண்டிருக்கும்,சிவன்மலை முருகனின் தலவரலாறும்,சித்தர் சிவவாக்கியரின் சிறப்புகளும்,கொங்கு நாட்டின் சுருக்கமான வரலாறும்,சிவன்மலையின் அரிய புகைப்படங்களும்-சுமார் 55-பக்கங்கள் கொண்ட புத்தகமாக தமிழநாடு இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தப்புத்தகத்தில் சிவன்மலை முருகனின் தெயவத்தளபதி,இந்திய விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலைக்கும்,சிவன்மலைமுருகனுக்கும்,பட்டாலி கிராமத்துக்கும், சிவன்மலைக்கும் உள்ள தொடர்புகளும், அதைச் சுற்றிலும் தீரன்சின்னமலை செய்த அற்புதமான செயல்பாடுகளும்,அது சார்ந்த வரலாற்று பதிவுகளும் விடுபட்டுள்ளது.

இது தொடர்பாக நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும்,தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல உள்ளோம்.

எமது கொங்கு தமிழர் பேரவை சார்பில் கடந்த காலங்களில் சுமார் எட்டு ஆண்டுகள்-2008 வ்ரை,சிவன்மலையில் தைப்பூசத்தேர்திருவிழா அன்று,எல்லப்பாளையம் காவடி அன்னதான அரங்கில் தீரன்சின்னமலை போர்ப்பாசறை விழா,மற்றும் தமிழர் கலை பண்பாட்டு விழாவினை சிறப்பாக  நடத்தினோம்.அதில் சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை, சிவன்மலையைச் சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள் என்று ஆண்டுதோரும் சுமார் அய்யாயிரம் பிரதிகள் இலவசமாக வெளியீடு செய்து சிறப்பித்தோம்.

மேலும்,சிவன்மலை முருகனுக்கும்,தீரன்சின்னமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகத்தில் விரைவில் பதிவுசெய்யப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

சரி இனி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு செய்த "சிவன்மலை முருகனின் தல வரலாற்றை" படியுங்கள்.தங்கள மேலான கருத்துரைகளை பதிவு செய்யுங்கள். 


மேலும் இந்த புத்தகவடிவத்தின் நகல் சிவன்மலை முருகன் கோவில் அதிகாரபூர்வ இணையதளமான www.sivanmalaimurugan.tnhrce.in என்ற என்ற முகவரியிலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது. 








           

நன்றி:-சிவன்மலை தேவஸ்தானம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 15 ஜூன், 2014

மனைவியை பத்துப்பேருடன் கற்பழித்த கொடூர கணவன்கொடூ

மத்தியபிரதேசத்தில் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலாய் போர்கேடி என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பழங்குடியின பெண் ஒருவர் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

நிலவிவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை கணவன் கோடாரியால் தாக்கியுள்ளான். இதில் காயம் அடைந்த பெண் பொலிசில் புகார் கொடுத்துவிட்டு, தனது மகனுடன் அருகே உள்ள கிராமத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர், அந்த கணவர் இருவரும் சமாதானமாகிவிடுவோம் என்று கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது, அதனை உண்மை என்று நம்பி தனது மகனுடன் அந்த பெண், கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததையடுத்து, கணவன் உள்பட 10 பேர் அந்த பெண்ணை கயிறால் கட்டி ஒரு அறையில் அடைத்து கொடூரமாக கற்பழித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், ஆனால் அந்த கொடூர கும்பல் மனித சிறுநீரை குடிக்க வற்புறுத்தியதோடு, அந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து அந்த 10 பேரையும் பொலிசார் கற்பழிப்பு குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிசார் இதுபற்றி கூறுகையில், கணவரின் வீட்டில் 3 நாட்கள் அடைத்துவைத்து கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். செய்திக்கு நன்றி:-லங்கசிறி-இன்டியன் நியூஸ்

எனது கருத்துரை:-
..
தெ.கு.தீரன்சாமி 
தில்லி மருத்துவ மாணவியின் வன்கொடுமை நமது தேசத்தை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கி எடுத்தது.அதன் பிறகு ஆயிரக்கணக்கான பாலியல் கற்பழிப்புகள் தொடர்ந்து நமது தேசத்தில் நடந்த வண்ணம் உள்ளது.சமீபத்தில் உ.பியில் இரண்டு சிறுமிகளின் கற்பழிப்பு மரணம்-இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது தலைமாட்டில்-நம் கண்ணருகிலேயே-பொள்ளாட்சியில் 10.12 வயதுடைய இரண்டு சிறுமிகள் கற்பழித்து கடித்து குதறப்பட்டுள்ளார்கள்.நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. 

ஆபாச பதிவுகளை வெட்கமில்லாமல் வெளியிட்டு தமது தளத்தை பிரபலபடுத்தி,பணம் சம்பாதிக்கும்,குரூர மனம் படைத்தவர்கள் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை கண்முன்னே கண்ட பிறகாவது திருந்துவார்கள் என நம்புவோம்.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 9 ஜூன், 2014

பாலியல் வன்கொடுமை ?பாரத தேசமே!



ரௌத்திரம் பழகு....2

கருத்துரை:-க.சொளந்தரராஜன்

பெண்களை  போற்றுவதாக  சொல்லப்படுகின்ற நாடு இந்தியா....

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியியல் வன்கொடூரங்களுக்கு தீர்வு காண அரசு முழுவீச்சுடன் செயல்படாதது கண்டிக்கத்தக்கது. 


டெல்லி மருத்துவ மாணவியின் துயர சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும், அதாவது இன்று வரையிலும் ஒரு உறுதியான செயல்பாட்டையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவிதம் எதுவும், மீண்டும் இது போன்ற வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் என்றோ, குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தையோ  உருவாக்கும் என்றோ அமையவில்லை......


என்னுடைய தங்கைகளுக்கு,சகோதரிகளுக்கு,வீட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் வரை நமக்கும் அக்கறை இல்லை.

அரசுக்கு ஆபத்து வந்தால் அவசர சட்டம்(அப்போதைக்கு மட்டும்).

ஒரு வெட்கக்கேடான செயல்.....வயது பாராது வன்கொடுமை.....

இந்த புண்ணியத் திருநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போருக்கெல்லாம் ஒரு பின்னடைவு....

குற்றங்களின் தன்மையை பொறுத்து தண்டனைகள்...4 வயது குழந்தை,7 வயது குழந்தை.......இந்திய சட்ட வடிவமைப்பு இது போன்ற குற்றங்களை விரைந்து முடிக்கும் திறன் இல்லாதது...

உத்திரபிரதேச சம்பவம் கண்டிக்கத்தக்கது...ஆனால் அது இந்தியாவில் இது போன்ற கடைசி சம்பவமா...? அதற்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மகத்துவ, மாதவம் படைத்திட்ட பெண்களே....
நெஞ்சு பொறுக்குதில்லையே உம் நிலை கண்டு இன்று....!




 இந்திய மக்களவையின் தலைவர்......

16வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்கள் திறமையும், மக்களவை செயல்பாடுகளில் அனுபவமும் பெற்றவர். இந்தூர் தொகுதியின் உறுப்பினர் (8வது முறையாக..)
 
மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
 
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.
மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.
 
மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...



best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 3 ஜூன், 2014

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது!

கருத்துரை;-சொளந்தரராசன்

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது - இலங்கை 
 
இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு அண்மையில் வலியுறுத்தி உள்ள நிலையில், டிசில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ உரிமையில்லை.  இலங்கைப் பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கைப் பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறக்கூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. - என்று இலங்கை அரசின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல,ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக உள்ளது.காங்கிரசும் முடிந்த வரையில் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தது என்பதே உண்மை.
 
ஆனால் புதிய அரசின் வலியுறுத்தலுக்கு இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு இந்த பதில் எதிர்பார்த்த ஒன்று தான்.
 
இலங்கை அரசின் நிலைப்பாட்டை பற்றி, இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு,தமிழக அரசின் அழுத்தத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும் நீதியில்லை,
 
இருக்கும் தமிழர்களுக்கும் வாழ உரிமையில்லை.
 
இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை. மிகவும் சரி. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு உடன்பட்டது.
 
கடந்த அரசை போலவே எந்த வித உறுதியான நிலைப்பாடும் எடுக்கவில்லையெனில் இலங்கைக்கு நேரடியாக இந்தியா ஆதரவு என்று தெரிவித்துவிடலாம்...!
 
நடந்ததும், நடப்பதும் போர் அல்ல...படுகொலை....!
 
 
ரௌத்திரம் பழகு.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 2 ஜூன், 2014

ஜூ.வி.வார இதழ்.தமிழக முதல்வருக்கு வாழ்த்து.கொங்கு.தமிழர் கட்சி செய்தி விளம்பரம்..

ஜீனியர் விகடன்,வாரம் இருமுறை இதழில்
தமிழக முதல்வருக்கு வாழ்த்து- 01-6-14 -இதழ்
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 16 மே, 2014

37-தொகுதிகளில் வெற்றி தமிழக முதல்வருக்கு வாழ்த்து..


  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஆழிப்பேரலையாக தனித்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். 40-மக்களவைத்தொகுதிகளிலும் தமது அரசு செய்த மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தும்,காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தமிழகத்துக்கும்,தமிழர்களுக்கும் இழைத்த துரோகத்தை பட்டியளிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகாலத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் பயனடையக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றப்பட்டன.அதன் விளைவுதான் தற்பொழுது வாக்குகளாகமாறி-37-மக்களவைத் தொகுதிகள் என்ற பெரும் வெற்றிப்பரிசை தமிழக மக்கள் நம்முடைய முதல்வருக்கு அளித்துள்ளார்கள்.

அதேபோல கொங்கு தமிழகம் அ.இ.அ.தி.மு.கவின் இரும்புக்கோட்டை என்பதை இத்தேர்தல் முடிவுகள் மீண்டும் நிருபித்துள்ளன.

தமிழக முதல்வர் அம்மா என்ற பெரும் கடலில்,சிறு துளியாக அம்மா அவர்களின் வெற்றிக்கு-"நாற்பது தொகுதிகளிலும் வெற்றி நாளை பாரதம் அம்மா அவர்களை சுற்றி" எனபக்தி முழக்கமிட்டு சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள்,அமைப்புகள் அம்மா அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

மேலும் கூடுதலாக அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 37-தொகுதிகள் வென்றதின் மூலம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சக்தியாக உறுவெடுத்துள்ள அம்மா அவர்கள் எதிர்காலத்தில் பாரதப்பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இத்தகைய வெற்றிக்கு வித்திட்ட நம்முடைய தமிழக மக்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,இந்தியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று பாரதப்பிரதமராக பதவியில் அமரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த நரேந்திரமோடிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 30 ஏப்ரல், 2014

மே-தினம் ஒரு பரப்புரை


Article on Mayday - 'Mayday celebrations in Stockholm, Sweeden - India' image courtesy: wikipediaபார்வமணி
மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர்.

ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International Working Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday" என்று மாற்றிற்று.
Article on Mayday - 'Mayday celebrations in Peoples Republic of Poland - image courtesy: wikipedia

ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:
It is the first Monday in October in the Australian Capital Territory, New South Wales and South Australia.
In both Victoria and Tasmania, it is the second Monday in March (though the latter calls it Eight Hours Day).
In Western Australia, Labour Day is the first Monday in March.
In both Queensland and the Northern Territory, it is the first Monday in May.

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.

நன்றி:-பார்வமணி அவர்களால் எழுதப்பட்டு.மழலைகள் வளைதள இதழிலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்டது. மேலும் காண;-

ஐரோப்பிய நாடுகளில் மே தினம் என்பது நெருப்பின் தினமாக கொண்டாடப்பட்தை மேற்படி செய்தியின் மூலம் நாம் அறிய முடிகிறது.அது போல நமது இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டது என்று நாமும் போற்றுகிறோம்.ஆக நாடுகள் மனிதர்கள் வேறாக இருந்தாலும் காலகணிப்பு என்பது ஒன்றுபடுகிறது.மே-1 உழைப்பவர்களின் தினமாக,தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.தை-1ம் தேதியை உழவர்களின் திருநாளக நாம் போற்றுகிறோம்.

இந்தியாவில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வு செழித்தால்தான் நமது தேசம் வல்லரசாக உருவெடுக்கும். இதற்கு முதலில் லஞ்சமும்-ஊழலும் ஒழிக்கப்படவேண்டுமென! இந்த நள்ள நாளில் நாம் ஒவ்வொருவரும் சூளுரை ஏற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

25-04-2014 பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

நீண்ட தூரம் பயணித்து வரும் இந்த வழக்கு தொடர்பான ஒரு பார்வை.

கடந்த 25/05/1991 ல் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வருகை தந்தபோது படுகொலை செய்யப்படுகிறார்.

கொங்கு தமிழகத்தில் பிறந்த கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையிலான மத்திய சிறப்பு புலனாய்வுக்குழுவால் 20/01/1992 ல் பூந்தமல்லி சிறப்புத் தடா நீதிமன்றத்தில் 41 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் இறந்து போனவர்கள்,தலைமறைவாக இருப்பவர்கள் என 15 நபர்கள் தவிர 26 நபர்களுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28/01/1998 ல் மரணதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

குற்றவாளிகள் தரப்பிலான உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில்11/05/1999 ல் முருகன்,நளினி,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தும்,.ராபர்ட்,பயாஸ்,செயக்குமார்,ரவிச்சந்திரன் 
உள்ளிட்ட நால்வரின் மரணதண்டனையை, ஆயில் தண்டனையாக குறைத்தும்,மற்ற 16 பேரை விடுதலை செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

08/10/1999 ல் நளினி உள்ளிட்ட நால்வரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

25/04/2000 ல் தமிழக ஆளுநர் பாத்தீமா பீவி 161-வது சட்டப்பிரிவின்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நால்வரின் கருணை மனுவின் மீது-நளினியின் மரணதண்டனையை மட்டும் ஆயிள் தண்டனையாக குறைத்தும்,மற்ற மூவரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

72-வது சட்டப்பிரிவின்படி குடியரசுத்தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மரணதண்டனையை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில் 26/04/2000 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர்.

04/05/2000 ல் கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும்,அதில் கூட்டணிக் கட்சிகளாக தமிழகத்தைச் சார்ந்த,தி.மு.க,ம.தி.மு.க,பா.ம.க கட்சிகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள் என்பது கவனிக்கதக்கது.

21/06/2005 ல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 05-ஆண்டுகள் தாமததுக்கு பிறகு குடியரசு தலைவரின் பரிசீலைனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12/08/2011 ல் 11 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவரால் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

09/09/2011 ல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு உலகத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தில் போராட்ட அலையை ஏற்படுத்தியது.

30/08/2011 உயர்நீதி மன்றம் மரணதண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

01/05/2012 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

18/02/2014 ல் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனையை ஆயிள் தண்டனையாக குறைத்தும்,இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

தீர்ப்பு வெளியிட்ட அதே நாளில் நமது தமிழக முதல்வர் சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாகவும்,இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களில் பதில் அளிக்கவேண்டும் என்றும் கடிதம் எழுதினார்.

ஆனால்,மத்திய அரசு தமிழக முதல்வரின் கடிதத்துக்கு விடுதலை செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என பதில் கடிதம் அனுப்புவதை விடுத்து,உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யக்கூடாது எனவும்,விடுதலை குறித்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் வழக்கு தொடுத்தது.

விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிக்கையுடனும்,மகிழ்வுடனும் காத்திருந்த ஏழு பேர் உள்ளிட்ட குடும்பத்தினர்களும்,தமிழக மக்களும்,உலகத்தமிழர்களும் மத்திய அரசின் இந்த பழிவாங்கும் அணுகுமுறையை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

25/04/2014 நேற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விடுதலை குறித்து 05 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.26/04/2014 இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் விடுதலை என்பது இன்னும் நீண்ட நெடிய போராட்டத்தை உள்வாங்கும் என்பது திண்ணம்.தமிழர்களாகிய நாம் போராடத்தயாராக இருப்போம்.










best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 17 ஏப்ரல், 2014

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா.


17-04-2014-கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாவீரன் பிறந்த திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம், மேலப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர்,ஓடாநிலையில் மாலை,மரியாதை செலுத்தப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 2 மார்ச், 2014

2014-மக்களவைத்தேர்தல்-அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்கு தமிழர் கட்சியின்-துண்டறிக்கை


best links in tamil
More than a Blog Aggregator

கொங்குதமிழன் மருத்துவர்.த.இளையராஜ ஐ.ஏ.எஸ் அவர்களின் திருமண விழா வாழ்த்து.



த.இளையராஜ.ஐ.ஏ.எஸ்

திருப்பூர் மாவட்டம்,சென்னிமலை கே.சி.வலசு பகுதியைசார்ந்த
திரு.எஸ்.தங்கமுத்து,திருமதி.டி.கண்ணம்மாள்
ஆகியோரது தவப்புதல்வன் மருத்துவர்.த.இளையராஜ ஐ.ஏ.எஸ், 

மாவீரன்.தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம் பகுதி எஸ்.பாலசுப்பிரமணி,ஆசிரியை.திருமதி.பி.தேவி அவர்களின் தவப்புதல்வி பா.சொளகார்த்திகா பி.இ ஆகியோரது

 இரு மணம் இணையும் திருமண விழா ( 03-03-2014-திங்கள் கிழமை) இன்று காலை காங்கயம் என்.எஸ்.என் திருமண மஹாலில் நடைபெற்றது.

மணமக்கள் 
உடல்நலம்,நீளாயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,
மெய்ஞானம்,
உயர்பதவி,உயர்மக்கள் பெற்று நல்வாழ்வு வாழ இறைநிலையோடு கலந்து வாழ்த்துகிறோம்.

இவன்:-தெ.கு.தீரன்சாமி,
 தேசிய அமைப்பாளர்
கொங்குதமிழர்கட்சி மற்றும்
 தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை

மணமகன்.மரியாதைக்குறிய கொங்கு தமிழன்,மருத்துவர். த.இளையராஜ ஐ.ஏ.எஸ் அவர்கள் 2008 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் 131 ரேங்கில் தேர்ச்சிபெற்றுள்ளார்.தற்பொழுது மத்தியப்பிரதேசம் மாநிலம்,ராஜ்கார்க் மாவட்டத்தில்,ஜில்லா பஞ்சாயத்து சி.இ. ஒ வாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 13 ஜனவரி, 2014

"வேளாண்" திருநாள்! தமிழர் சிறப்பு

பொங்கல் திருநாள் வாழ்வில் அதன் தொன்மையான சுவடுகளை கொண்ட ஒரு பண்டிகையாகும். உழவர்கள் தங்கள் அறுவடைகளை முடித்து அந்த போகம் சிறப்புற நிகழ்ந்ததற்கு சூரியனுக்கு பொங்கல் படைத்து கொண்டாடும் உழவர்களின் திருநாளே பொங்கல். 

சூரியனையும், நிலத்திற்கு வளப்பம் சேர்க்கும் வான்பொருட்கள் அனைத்திற்குமான படைப்பு வழிபாட்டு நாளாகவே பொங்கல் உழவர்களால் கொண்டாடப்படுகிறது. நிலம் என்பது, வேறு எந்த பண்பாட்டிலும் இல்லாத அளவிற்கு தமிழர் பண்பாட்டில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று. பண்பாட்டையே 5 நிலப்பகுதிகள் கொண்ட திணை ஒழுக்கங்களாக வகுத்திருப்பது தமிழர் பண்பா‌ட்டில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய வாழ்வை அதன் அனைத்து பண்பாட்டுத் தன்மைகளோடும் சிறப்புறக் கொண்டாடும் இந்தப் பொங்கல் பண்டிகை நகரவாசிகளும் கொண்டாடி நமக்கெல்லாம் உணவு அளிக்கும் அந்த உழவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

தமிழ் பண்டைய நூல்களில், செய்தித் தாள்களிலும், பத்திரிக்கைகளிலும், பேச்சு வழக்கிலும் நின்று நிலைத்துப் போன "வேளாண்மை" என்ற சொல்லுக்கு இப்போது கொடுக்கும் பொருள் கொடுக்கப்படவில்லை.

webdunia photoWD
வேளாளர் பிரிவினர் பெரும்பாலும் உழவுத் தொழிலை கொண்டிருந்ததால் அது வேளாண்மை என்று வந்ததாக விளக்கம் கூறினாலும் இதற்கு தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் ஆதாரமில்லை.

தொல்காப்பியத்தில்தான் முதன் முதலில் "வேளாண்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் பொருளதிகாரம் என்ற தலைப்பின் கீழ் உள்ள களவியல் பிரிவில் 105ஆம் இலக்க சூத்திரத்தில் 'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு உரையாசிரியர்கள் விளக்கம் அளித்திருப்பினும், பெரும்பாலும் இளம்பூரணர் உரையே பின்பற்றப்படுகிறது. இந்த சூத்திரத்திற்கு உரை எழுதிய இளம் பூரணர் 'தலைவி உபகாரம் எதிர்பட்ட விருப்பின் கண்ணும்' என்று விளக்கம் கூறியுள்ளார்.

நன்றி;-webdunia தமிழ்
best links in tamil
More than a Blog Aggregator

சனி, 2 நவம்பர், 2013

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்-


அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்- என்ற செய்தி தி.தமிழ் ஹிந்து, 4தமிழ்மீடியா போன்ற ஊடகங்களில் வெளியானது. அதற்கு எனது கருத்துரை:-

தெற்குஆசியப் பிராந்தியத்தில்! ஏன்? உலகஅரங்கில் இந்தியத்துணைக்கண்டம் சக்திமிக்க வல்லரசாக வளர்ந்து வருகிறது.இது அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் கண்ணை உருத்துகிறது.

இவர்களின் கைத்தடி பாக்கிஸ்தான்.அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கட்டுப்பாட்டில் செயல்படும் சில தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் இறங்கியிருக்கலாம்.

ஏனெனில் தமிழகமுதலவர் அம்மா அவர்கள் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் அடுத்த பிரதம மந்திரிக்கான பார்வையில் உள்ளவர்.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப்போன்று உறுதியான,அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர் நமது முதல்வர் அம்மா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முதல்வர் இந்தியாவின் தலைமை மந்திரியாக வந்தால்! ஆட்டம்காட்டும் அண்டை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.

அடுத்த பிரதமர் பட்டியலை சீர்குலைக்கும் ஒருபகுதியாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் உள்நாட்டு மற்றும் சர்தேச ஊடகங்கள்,வலைதளப்பதிவர்கள்,அரசியல் கட்சிகள் பாரபட்சமில்லாமல் கண்டிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள் இது போன்ற கேக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

தமிழக காவல் துறையினரும் விரைவில் கேக்கர்களை முடக்குவார்கள் என நம்புவோம்.

தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,
கொங்குதமிழர்கட்சி,
தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை மற்றும் தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.
http://theeranchinnamalai.blogspot.in  http://kongutamilar.blogspot.in
facebook.com/D.k.Theeransamy
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி-1சூரனின்வதம், தீபாவளி-2 இராசபக்சேவின் வதம்?


 தீபாவளியைப்பற்றி இதிகாசங்கள் என்ன சொல்கின்றது.

கிருட்டிண பகவானின் இரண்டாவது மனைவியும்-நிலமகளுமான சத்தியபாமவின் புதல்வன் நரகாசூரன்.தன்னைப்பெற்ற தன் தாயால் மட்டுமே தன் உயிரை எடுக்க முடியும் என்ற வரத்தை பெற்றவன்.தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற இருமாப்பில் மக்களுக்கு எண்ணற்ற அநீதிகளை இழைத்து வந்தான்.அரக்க குணமும்,அகம்பாவம் அவனுடைய இரண்டு கண்களாகும்.

மக்களின் கொடுமைகளை கண்டுணர்ந்த கிருட்டிணபகவான் நீதியை நிலைநாட்ட வேண்டி தனது மனைவி சத்யபாமவுடன் சென்று நரகாசூரனை வதம் செய்கிறார்.மக்களுக்கு நீதியைப்பெற்றுத்தருகிறார்.

நரகாசூரன் உயிர் பிரியும் தருவாயில் அகம்பாவம் ஒழிந்து,அநீதி என்னும் இருள்நீங்கி-நீதி என்னும் பேரொளி பிறந்து மனம் திருந்துகிறான்.அந்தக்கணத்தில் சூரன் "தான் இறக்கப்போகும் இந்த நாளை உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்வுடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடி எல்லா வளங்களையும் பெற்று நழ்வாழ்வு வாழவேண்டும்" என்று கிருட்டிணணிடம் வேண்டிக்கொண்டான்.இது புரணாங்களின் காலத்துக்கு உட்பட்டது.

நரகாசூரனைவிட கொடியவனாக இலங்கையின் இராசபக்சே இரத்த வெறிபிடித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்து,பெண்பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்புகுத்தி சொல்லில் வடிக்கமுடியாத இன்னல்களை ஈழத்தில் இழைத்து வருகிறான்.

கிருட்டிண பகவான்-மீண்டும் மேதகு.பிரபாகரன் அவதாரம் எடுத்து இராசபக்சே என்னும் அரக்கனை வதம் செய்யவேண்டும்.அந்தநாள் நிச்சயம் நடக்கும்.அந்தநாள் ஒட்டுமொத்த உலகத்தமிழர்களால் இரண்டாவது தீபாவளியாகக்கொண்டாடப்படும்.

சரி தீபாவளி- தீபம்+ஒளி= தீபாவளி மொத்தத்தில் தீபம் என்பது மண்ணால் செய்யப்பட்ட விளக்கின் ஊடே-நீர்த்தத்துவமான எண்ணெய்யை ஊற்றி அதில் நெறுப்பு ஏற்றி வெளிவரும் சுடரொளி காற்றில் கலந்து ஆகாய மார்க்கத்தில் பயணிக்கிறது.தீபஒளியின் ஊடுருவல் காந்தசக்தியாக மிளிருகிறது.மக்களுக்கு நலன் பயக்கிறது.

நிலம்,நீர்,நெறுப்பு,காற்று,ஆகாயம்-என்ற பஞ்ச பூதங்களின் கலைவையே நமது உடல் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள உலகம். இது மெய்ஞாணமும்-விஞ்ஞாணமும் ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி.தீபஒளித் திருநாளம்- தீபாவளி பஞ்ச பூதங்களின் வழிபாட்டை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நாளை இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்கள் என்று சாதீ-மதங்களின் பாகுபாடு இன்றி அனைவரும் சிறப்புடன் கொண்டாடிவருகிறார்கள்.

எண்ணெய்தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து,மத்தாப்புக்கொளுத்தி,தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பு நிகழ்வுகளை கண்டுகளித்து, இன்று வெளியாகும் திரைப்படங்களைப்பார்த்து- சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மனமகிழ்வுடன் அனைவரும் சிறப்புடன் தீபாவளியை எடுத்துச்செல்கிறார்கள்.இந்த நாளில்தான் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்) கைநிறையக் கிடைக்கிறது.

உலகத்தமிழர்களுக்கு இன்னொரு செய்தி. இதே நாளில் 1903 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி,பரிதிமாற்கலைஞர் என்று போற்றப்பட்ட வி.கோ.சூரியநாரயண சாஸ்த்திரிகள் இறந்த தினமாகும்.அய்யா! பரிதிமாற்கலைஞரை நெஞ்சில் ஏந்தி தீபத்திருநாளுடன் ஒன்று கலப்போமாக! கூடுதலாக 2007-ஆம் ஆண்டு சிறீலங்காவின் வான்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொருப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் இதே நாளில்தான்.

1577-ஆம் ஆண்டு இதே நாளில் பொற்கோயில் கட்டுமானப்பணிகள் துவங்கியது.சீக்கியர்கள் இந்த நாளை சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.மகாவீரர் நிர்வாணம் அடைந்த இந்த நாளை சமணர்களும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.

எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடகம்,கொங்குதமிழர்கட்சி
மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கருப்புச்சட்டை

எமது கொங்குதமிழர்பேரவையின் சார்பில் காங்கயம்வட்டம்,சிவன்மலையில் அமைந்துள்ள தீரன்சின்னமலையின் பட்டாலிப்போர்ப்பாசறை நினைவாக,தைப்பூசத்தேர்திருவிழா அன்று-2002ம் ஆண்டு முதல்-2009ம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்ட நினைவு மலரில் பதிவு செய்யப்பட்ட தலையங்கம் பகுதியை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துரைகள் 2008ம் ஆண்டு சூழலுக்கு ஏதுவாக எழுதப்பட்டது.நடப்பு நிலைக்கு அது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஆண்டு தீரன்சின்னமலை பட்டாலிப்போர்ப்பாசறை வீரவழிபாட்டு விழாவின் நினைவு மலரில் உங்களை சந்திப்பதில் எமக்கும் எமது கொங்கு தமிழர் பேரவையின் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு காக்கிச்சட்டை,ஒரு கதர்சட்டை,ஒரு கருப்புச்சட்டை இந்த மும்மூர்த்திகளால் சமூகநீதி மறுக்கப்பட்டு அநீதிக்கு ஆளான எமைப்போன்ற இளைஞர்களால் இளைத்தவனுக்கு ஒரு நீதி!வலுத்தவனுக்கு ஒரு நீதியா? நீதி என்பது சமமானது! அனைவருக்கும் பொதுவானது! மரணம் ஒருமுறை நீதிக்காக மல்ரட்டும்! என்ற முழகத்துடன் கொங்கு தமிழர் பேரவை புரட்சிப் பயணம் தொடங்கிய ஆண்டு 2001.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கொங்குதமிழர் பேரவையின் சாதனைகளை எந்த நிலையிலும் விளம்பரம் செய்து வியாக்கியானம் பாடவில்லை.எந்த ஒரு இயக்கமும் தாம் கடந்த வந்த பாதைகளை வரலாற்றில் பதிவு செய்து பட்டியல் இடவேண்டும் என்ற சான்றோர் பெருமக்களின் அறிவுரையின்பேரில் கொங்குதமிழர்பேரவை கடந்த வந்த பாதைகள் எனும் தலைப்பில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி நீதியை வென்றெடுத்த சில நிகழ்வுகளை இந்த மலரில் பதிவு செய்து உள்ளோம்.

தீரன்சின்னமலையின் கொங்குபடைக்கு யுத்ததளவாடங்களை உருவாக்கும் பட்டறையாகவும்,போர்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாகத்திகழ்ந்த பட்டாலிப்போர்ப்பாசறை சிவன்மலை அனுமந்தராயர் சுவாமி திருக்கோவிலின் வடபுறம் அமைந்துள்ளது. போர்ப்பாசறையின் நினைவாக தைப்பூசத் தேர்த்திருவிழா அன்று விழா எடுத்து சின்னமலையின் வரலாற்றுச் சுருக்கத்தை மலராக பதிவுசெய்து சமுதாயத்தலைவர்களை அழைத்து வெளியீடு செய்து சிறப்பித்து வருகிறோம்.விழாவில் கிராமப்புறப்பள்ளி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறன் ஆய்வுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி பரிசுகளையும்,சான்றுகளையும் வழங்கி மாணவச்செல்வங்களை ஊக்குவித்து வருகிறோம்.

கொங்கு சமூகம் எங்கு செல்கிறது? நமக்கு நாமே சுய ஆய்வு செய்து சில கருத்துக்களை பரிமாறி உள்ளோம். இவற்றின் ஊடாக பொதிந்த கருத்துக்களின் கூர்மை சிலரது மனதை புண்படுத்தும்.ஏனெனில் அவர்கள் கொங்கு சமூகத்தை புண்ணாக்கி,புரையோடச்செய்த இழி செயல்களை,நமக்கு,நாமே இழைத்துக்கொண்ட வன்கொடுமைகளை, புரிதலின் பாதையில்,புதிராகச்செல்லும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளோம். சமூகப் போராளி என்ற பெயரில் கபட வேடமிட்டு களவு செய்யும் ஒரு சில கயவர்கள் திருந்த வேண்டும்.இல்லையெனில் வருந்தி விலக வேண்டும்.

சமூகத்தலைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாக, குமுறும் எரிமலையாக, சுழலும் சுனாமியாக,பாயும் புலியாக,வாழும் தீரன்சின்னமலையாக வளம் வரவேண்டும்.பணத்தாலும்,பகட்டான மகிழ் ஊர்திகள்சூல பவனி வருவதால் மட்டும் தலைவர்கள் ஆகிவிடமுடியாது.

தீரன்சின்னமலை,மகாத்மா,நேதாசீ,வீரசவார்கர்,தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,காமராசர்,ராசாசீ,கோவை செழியனார் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் தீர்க்கதரிசனம்,எளிமை,எளியோரிடம் அரிதாரம் பூசாதஉறவு,வறுமை,தியாகம்,கடின உழைப்பு,என எண்ணிலடங்காப் பண்புகளை தன்னகத்தே உயர்த்தி பிடித்தவர்கள்.மேலும் மனிதர்களை கடந்த மகத்தான காந்த ஆற்றல்களையும்,இயற்கையின் நிர்மான சக்திகளையும் தமது ஆழ்மனதில் பிறப்பின் ஊடாக வார்த்து எடுத்தவர்கள்.

மலைக்கவைக்கும் எண்ண ஆற்றல்களையும்,திகைக்கவைக்கும் தியாகங்களையும்,மரணத்தை முத்தமிடும் துணிவைக்கொண்ட களப்போராளிகள் மட்டுமே மனிதன் தோன்றிய காலம்முதல் இன்றுவரை தலைமைப்பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள்.

இன்று தலைமை என்பது தற்குறிகளின் கூடாரமாகவும்,சமூகத்தை அடகுவைத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் புரட்டுவாதிகளின் புகலிடமாகவும்,வேளீர்சமூகத்தின் வேந்தர்கள் என்றும்,வேங்கைகள் என்றும்,சமூகத்திற்கு வெட்டி முறிப்பவர்கள் என்றும்,மேடைகளில் மார்தட்டி நடிகைகளின் முந்தானையில் முகம் துடைத்து,அயல்நாட்டு மதுபானங்களில் மூழ்கி,சூதாட்டத்தில் சுற்றித்திரிந்து உல்லாசமோகங்களில் சல்லாபக் கூத்தாடும் பொல்லாவிகளே நீங்களா கொங்கு சமூகத்தின் தலைவர்கள்? நமது சமூகத்தின் இளையபாரதம் இளஞ்சிரிப்புடன் ஒருசில தலைமைக் கூத்தாடிகளின் தள்ளாட்டத்தைக்கண்டு வெட்கி தலைகுனிந்து விலகிச்செல்கிறது.

மேற்கண்ட செய்திகள் நமது சமூகத்தின் மேல்தட்டு,நடுதட்டு,கீழ்தட்டு மக்களிடம் ஆய்ந்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள்.

விரல்விட்டும் எண்ணும் வகையில் ஒருசிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளோம்.யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.அந்த ஒரு சிலரும் திருந்தி சிறப்புடன் செயல்பட்டால் நாம் பாராட்டி,வாழ்த்தி எழுதத்தயாராக இருக்கிறோம்.

சிவன்மலையை சுற்றி தீரன்சின்னமலையின் நினைவுகள்,கொங்கு சூரியன்,சிவன்மலை முருகனின் தெய்வத்தளபதி தீரன்சின்னமலை எனும் தலைப்புகளில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 21 ஆயிரம் பிரதிகளை சிறப்பு மலராக தயாரித்து இலவசமாக விநியோகித்து வருகிறோம்.






best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 26 செப்டம்பர், 2013

நமோவின் இளம்தாமரை-செயிக்குமா?


மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள்! தமிழகத்திற்கு வருகை தந்து இளம் தாமரை மகாநாட்டை தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்...

 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்பது குஜராத் அல்ல! பெரும்பான்மை குஜராத்தி இன மக்களால் கட்டமைக்கப்பட்ட ஆசியத் துணைக்கண்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் குஜராத்.

சுமார் பத்துக்கு மேற்பட்ட மதங்களும்,500 க்கும் மேற்பட்ட சாதீகளும்,30க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும்
பலவகையான இனக்குழுக்களால்,பன்முகத்தன்மையால்
கட்டமைக்கப்பட்டதுதான் இந்தத் துணைக்கண்டம்.

உதாரணத்திற்கு தமிழகத்தின் கலாச்சாரம் வேறு,குஜராத்தின் கலாச்சாரம் வேறு,தமிழகத்தில் கூட கொங்கு நாட்டின் பண்பாடு வேறு,தென் தமிழகம்,வட தமிழகத்தின் பண்பாடுகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக உள்ள்து.

பரந்து விரிந்த இந்தத் துணைகண்டத்திற்கு அகண்ட சிந்தனை கொண்ட ஒருவரால் மட்டுமே தலைமை மந்திரியாக பொருப்பு ஏற்று வழி நடத்த முடியும்.அத்தகைய தகுதி மோடிக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியது.அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கே உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இந்தியத் தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்மிகை மாநிலமாக சொல்லப்படும் அங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மின் வசதி இல்லாமல் இருளில்
மூழ்கியுள்ளது.வேளாண்மை தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அங்கு விவசாயிகளின் தற்கொலை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம்,பீகார்,திரிபுரா போன்ற மாநிலங்கள முன்னோக்கி செல்கின்றன.

தணிக்கைத்துறை கணக்கு இப்படி இருக்கும்பொழுது! மோடியின் 7000 க்கும் மேற்பட்ட சைபர் மீடியா வெப்சைட்கள் குஜராத்தைதூக்கிப்பிடிக்கின்றன.விளம்பரங்களையும்,ஆடம்பரங்களையும் முழுமையாக நம்பி களம் இறங்குவது ஆபத்தானது.

நிர்வாகத்திறமை,வளர்ச்சிப்பாதை என்று பார்த்தால் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமை மந்திரி பதவிக்கு தகுதியானவர் என்று சொன்னால் அது மிகையாகது.

நமது தேசத்தந்தை மகாத்மா எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.அந்த மகாஜீவன் அவதரித்த மண்ணின் மைந்தர் மோடி அவர்கள் அதற்கு மாறுபட்டவராக இருக்கக்கூடாது.

நமது தேசமும்,தேசீயமும்,இந்த மண்ணில் வாழும் மக்களும் லஞ்சம்,ஊழல் இல்லாத எளிமையான தலைமையை எதிர்நோக்கி காத்திருப்பதை தலைவர்கள் கவனத்தில் எடுத்துகொண்டு பூர்த்தி செய்தால் வாழ்த்துக்கள்.
best links in tamil
More than a Blog Aggregator