திங்கள், 27 டிசம்பர், 2010

ஊழல் விடுதலை முன்னனி-ஊழல் கொள்ளையர்களிடம் இருந்து நாட்டைகாக்க!

வரலாற்றுப்புலனாய்வு-சரித்திரப்பதிவுக​ளை சமகால நிகழ்வுடன் ஆய்வு​செய்யும் முயற்சி
   நமது பாரத​தேசத்தின் விடுத​​லை ​வேள்வியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும்,பல ஆயிரக்கணக்கான ​தொண்டர்களும் களப்பழியானர்கள்.அதில் 5000க்கும் ​மேற்பட்ட இ​ளைஞர்கள் இந்த மண்ணில் வி​தைக்கப்பட்டார்கள் என ஒரு பட்டியல் கூறுகிறது.அவர்களில் 15வயது முதல் 26வயது வ​​ரை ள்ள துள்ளிதிரியும் இளம் பருவத்தினர்கள்.
                                                                                                                                                                                                                                        .அவர்களில் எமக்கு கி​டைத்த ஒரு சிலரின் பட்டியல் இ​தோ!


   அலகாபாத்தில் ஆல்பிரட் பூங்காவில் காவல்                   து​றையுடன் ஏற்பட்ட ​கைகலப்பில்-காவலர்களிடம் சிக்கி ​கைதாவ​தைவிட உயி​ரை விடுவ​தே ​மேல் என தன்​னைத்தா​னே தனது ​கைதூப்பாக்கியால் சுட்டுக்​கொண்டு இறந்து ​போன சந்திர​சேகர் ஆசாத்தின் வயது 25. பகத்சிங் தூக்கு​மே​டை ஏறிய ​​போது வயது 24.             கக்​கோரி பு​கைவண்டிக் ​கொள்​ளையில் பங்கு ​கொண்டு தூக்கு​மே​டையில் உயிர் துறந்த மன்மத் நாத்குப்தாவின் வயது 25.  
                                                      
   பி​ளேக் கமிசனர் சார்லஸ் ராண்​டையும்,பூனா மாவட்ட நீதிபதி அயி​ரெஸ்ட்-​டையும் சுட்டுக் ​கொன்ற சா​பேக்கர் ச​கோதரர்களில் மூத்தவர் தா​​மோதர் கரி   சா​​பேக்கர் 28வது வயதிலும்,இராண்டாது ச​கோதரர் பாலகிருட்டிண சா​பேக்கர்                                 
26வது வயதிலும், தூக்கிலிடப்பட்டனர்.             
  
   சா​பேக்கர் ச​கோதரர்க​ளை ​வெள்​ளையர்களிடம் காட்டி ​கொடுத்த து​ரோகி​யை        ​கொன்று விட்டு-தானும் தூக்கு​மே​டை ஏறிய மூன்றாவது ச​கோதரர் வாச​தேவ   சா​பேக்கரின் வயது 20.ஒ​ரே குடும்பத்​தை சார்ந்த மூவரும் ஏரவாடா மத்திய         சி​றையில் தூக்கிலிடப்பட்டனர்.     
  
   ​கொரில்லா மாவட்ட ஆட்சியரும்,நீதிபதியுமான ஸ்டீவன்ஸ் என்பவ​ரை                                    எட்டாம் வகுப்பு மாணவிகளான சாந்தி ​கோஷ்,சுநீதி ​கோஷ் ஆகிய இரண்டு         இளம் சிறுமிகளும் சுட்டுக் ​கொன்ற ​செய்தி நம் ​நெஞ்​​சை ​நெகிழச் ​செய்கிறது.     ​மேலும் ராணி,கிடா​லோ,பினாதாஸ்,பிரீதி லதா ​போன்ற இளம் ​பெண் ​போராளிகளும் விடுத​​லை ​போராட்டத்தில் தங்க​​ளை அர்பணித்து​கொண்டார்கள்.                                                                                                                                                            


  முதல்சுதந்திர ​போ​ரை ​தென்னிந்தியாவில் ​தொடங்கிய காலத்தில் தூக்கிலிடப்பட்ட ​கொங்கு ப​டையின் மாவீரன் இரத்தினம் தீரன்சின்னம​லை         தூக்கிலிடபட்ட ​போது அவரின் வயது 32. மணியாச்சி சந்திப்பில் க​லெக்டர் ஆஸ் து​​ரை​யைச் சுட்டுக் ​கொன்று விட்டு தானும் தற்​கொ​லை ​செய்து ​கொண்ட  வாஞ்சிநாதனுக்கு வயது 25.                                                                                                                          ​
  மேலும் தமிழகத்தில் கட்டப்​பொம்மன்,மருது ச​கோதரர்கள்,புலித்​தேவர்,​வேலுநாச்சியார்,கன்​னடத்துப் புலி திப்பு சுல்தான் போன்றவர்கள் எல்லாம் நாட்டின் விடுத​லைக்காக இள​மைக்காலத்தில் தங்க​ளை அழித்து​கொண்டவர்கள்.
  
   இன்றைய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இணையான அன்றைய ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் தேர்வு பெற்று- அரசின் உச்ச அதிகாரம் 
படைத்த உயர் பதவியை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை அர்பணித்து கொண்டவர் நேதாசீ சுபாஸ் சந்திர போஸ்.மகாத்மா கந்தியடிகளைப்பற்றி சொல்லத்தேவை இல்லை.
  
   செல்வம் கரைபுரண்டோடும் சீமான்களான வீரசாவர்க்கர்,ராம் மனோகர் லோகியா,வ.வே.சு.ஐயர்,ஆச்சாரியா கிருபாலனி,அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் தங்களின் வளமான எதிர்காலத்தை வெறுத்து ஒதுக்கி மண்ணின் மானம் காக்க தாய் நாட்டின் விடுதலை ஒன்றே தீர்வு என முடிவு செய்து போராடினார்கள்.
  
   வெள்ளித்தட்டில் உணவு உண்டு ,தங்கக்கட்டிலில் துயில் கொண்டு, வித,விதமான காரில் பவனி கண்டு- வாழும் வசதிகள் இருந்தும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி விட்டு தாயக விடுதலையில் தன்னை  கரைத்துக்கொண்டவர் ஜவர்கலால் நேரு.

   ஆனால் இன்று நேரு சீயின் கொல்லுப்பேரன் ராகுல்காந்தி தேசியக்கூட்டணி அரசின் அதிகாரப் பின்னனியில் கோலோச்சுகிரார்.இளைவரின் தலைமையிலான இந்திய தேசத்தில் இராண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (2ஜி)ஒரு லட்சத்து எழுபத்திஆராயிரம்கோடிஊழல். 


   காமன்வெல்த் போட்டி நடத்தியதில் 6000ம் கோடிக்கும் மேல் ஊழல்.கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஊழல்.                            


  அன்று விடுதலைப் போராட்டத்தில் இளைவர்கள் மண்ணில் விதைக்கப்பட்டார்கள்.ஆனால் இன்று துரதிருஸ்ட வசமாக ஊழலின் கோர விருச்சமாக வளர்ந்து மண்ணையும்,மக்களையும் மிரட்டி வருகிறது.2ஜி ஒதுக்கீட்டு ஊழலின் கதாபாத்திரங்கள் அனைவரும் இளை தலைமுறை சார்ந்தவர்கள்தாம்.முன்னால் தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சரும்,தலித் விவசாயிகளின் விளை நிலங்ககளை அடி மாட்டு விலைக்கு அபகரித்து- கோடிகணக்கில் கொள்ளை லாபம் கண்ட சர்வ தேச ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆண்டிமுத்து இராசா. 
   
    தமிழினத் தலைவன் பெற்றெடுத்து,
தமிழ்சங்கமத்தில்கரைந்து,செம்மொழியில் நனைந்த மு.க.கனிமொழி.           உலகத்தமிழர்களின் உறவுப்பாலமாக தன்னை அடையாளப்படுத்தி-ஊழலுக்கு உணர்வுப் பாலமாக திசை மாறிய கார்பரெட் சாமியார்,கிறித்துவ போலி பாதிரியார்ஜெகத்கஸ்பர்.                                                                                            

  சர்வதேச ஹவாலா தீவிரவாதி,கார்பரெட் விபச்சாரி நீராராடியா.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்-குற்றமே என குமுறிய பத்திரிக்கையாளர் காமராஜ்.ஆண்டிமுத்து இராசாவின் மனசாட்சி மன்னிக்கவும் பொய்சாட்சி சாதிக்பாட்சா...இப்படி கொள்ளையர்களின் பட்டியல் நீள்கிறது.                         

  உலக அரங்கில் ஊழலின் ஊற்றுக் கண்ணாக உயர்ந்திருக்கும் இந்திய தேசம் 1947 ல் வெள்ளையர்களிடம் விடுதலை பெற்றது.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல்எனும்அரக்கனிடம்அடிமைப்பட்டுள்ளது. 


                                     இதிலிருந்துதேசியத்தையும்,தேசத்தையும்மீட்டெடுக்க  ஊழல் விடுதலை முன்னனி எனும் ஒரு மக்கள் கட்டமைப்பு தேவை.                 .தீரன்சின்னமலை சமூக,அரசியல், புலானாய்வு செய்தி ஊடகத்திற்காக-டி.கே.தீரன்சாமி.                                                                                                                              
     
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: