செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாலுமகேந்திராவின் சுயசரிதை


   flimmakkar, அய்யா பாலு மகேந்திரா அவர்கள் நம்முடைய blogspot சேவையில் இணைந்து தனது திரை மற்றும் இலக்கிய உலகத்தில் தான் கடந்து வந்த பாதையை சுயசரிதையாக எழுத உள்ளார்.அவருடைய வளைதளப் பயணத்தை வரவேற்று நான் அவருக்கு அனுப்பிய பின்னூட்டம் மற்றும் அவருடைய வளைதள முகவரியினை கீழே தருகிறேன்.இத்தகவலை யாம் அறியச்செய்த http://cybersimman.wordpress.com,சிம்மன் அவர்களுக்கு நன்றி.

மூத்தவர்-அய்யா பாலுமகேந்திரா அவர்களே!திரை உலகின் பிதாமகன்,பல அவதாரங்களை படைத்த பிரம்மா,பின்னோக்கி சென்ற தமிழ்சினிமாவை முன்னெடுத்துச் சென்றவர்,பிழைக்கத்தெரியாதவர்,லட்சங்களும்,கோடிகளும் புரளும் திரைப்படங்களை தனது லட்சியங்களுக்காக புறந்தள்ளியவர்...என்று உங்களைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் புகழ்ச்சியை விரும்பாத நீங்கள்! இன்று blogspot தளத்தில் இணைந்து எம்மைப்போன்ற சிறிய பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும் எழுத்து ஓவியம் படைத்து! தாங்கள் கடந்து வந்த பாதையை சுயசரிதையாக சமைக்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தங்களின் சுயசரிதை "வனவாசம்" என்ற பெயரில் அய்யா!கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய அவருடைய சுயசரிதைப் போன்று ஒழிவு மறைவற்றதாக அமையவேண்டும் என்பது எனது அவா!

கவியரசனாரின் வனவாசத்தில் அறிஞர் அண்ணா,கலைஞர் கருணநிதியின் அந்தரங்ககளை தோலுரித்து உண்மையை உலகறியச்செய்தார்.எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை தன்னுடைய அந்தரங்கத்தை ஒழிவு,மறைவின்றி பதிவு செய்து,இளம் வயதினர்களுக்கு அறிவுறித்தியிருந்தார்.

அதுபோல உங்களுடைய பயணத்தை பதிவு செய்யும் சுயசரிதை வெளிப்படையாக அமையட்டும்.வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குகிறோம்!

அய்யா பாலு மகேந்திரா அவர்களின்
தள முகவரிhttp://filmmakerbalumahendra.blogspot.in/

இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநிலத் தலைவர் கொங்குதமிழர்கட்சி,தீரன்சின்னமலை
புலனாய்வு செய்தி ஊடகம்,http;//theeranchinnamalai.blogspot.com
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

buy tramadol no prescription overnight tramadol 100mg high - tramadol 37.5-325