சனி, 29 ஜனவரி, 2011

காந்தியே திரும்பிப்போ! 1947-ஆகஸ்டு-13



 ஜனவரி-30 தேசத்தந்தை காந்தியாடிகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கித்தோட்டாக்களுக்கு இறையான நாள்.ஊழலின் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் நமது தேசம் இன்று உத்தமர் காந்தியடிகளின் நினைவு தினத்தை சர்வோதைய தினமாக அனுசரிக்கிறது.

 பாகிஸ்தான் பிரிவினைகோரி இந்து-முஸ்லீம் கலவரம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.1947-ல் சுதந்திரத்திற்கான முஸ்தீபுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.1947-ஆகஸ்டு-13.இருபதுக்கும் மேற்பட்ட சமஸ்தான மன்னர்கள் இந்திய டொமினியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

 இதே தினத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா அவமானத்தின் உச்சத்துக்கு தள்ளப்படுகிறார்.1946-ஆகஸ்டு-16 ஆம் தேதி முஸ்லீம் லீக் தொண்டர்களின் வன்முறை தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பழிக்கு,பழி வாங்கும் நேரடி நடவடிக்கைகளில் இறங்கி விடுவார்கள் என்று அச்சப்பட்ட கல்கத்தாவின் சூட்பூர் சக்கரவர்த்தி காந்திஜியுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டார்.

 அதன்படி ஆகஸ்டு-13ல் கல்கத்தா பாலிகட்டா சாலையில் அமைந்துள்ள ஹைதரி மாளிகைக்கு சுஹ்ரவர்த்தி காந்தியடிகளை வரவழைக்கிறார்.காந்தியடிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை சமதானப்படுத்தவே அங்கு வருகிறார்.காந்தியடிகள்,அவரது உதவியாளர்களுடன் ஹைதரி மாளிகைக்கு காரில் வருகிறார்.

 எந்த மக்களின் மனதை மாற்ற வேண்டும் என காந்தியடிகள் வந்திருந்தாரோ!அந்த மக்கள் அனைவரும் ஹைதரி மாளிகையின் முன்பு கூடியிருந்தார்கள்.அவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் வன்முறையாளர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.

 காந்திஜி காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு எதிராக எரிமலையாக பொங்கி எழுந்தார்கள்."காந்தியே திரும்பிப்போ!நவகாளிக்குப் போய் இந்துக்களை காப்பாற்று!முஸ்லீம்களை காப்பாற்ற இங்கு வராதே!இந்துதுரோகியே!"என்றெல்லாம் முழங்கினார்கள்.

 "மாகாத்மா" "தேசத்தந்தை" "உத்தமர்"என்று உலக மக்களால் போற்றப்பட்ட காந்தியடிகளை எதிர்த்து அந்த மக்கள் ஆக்ரோசக் குரல் எழுப்பினார்கள்.அவர்மீது மண்ணைவாரி தூற்றி சாபம் இட்டார்கள்.கற்களையும்,பாட்டில்களையும் கொண்டு அண்ணலின் காரை அடித்து நொருக்கினார்கள்.

 அந்த மக்களின் போராட்டம் காரணமாக காந்திஜி தனது மாலை பிராத்தனையைக்கூட கைவிட நேர்ந்தது.கடும் சீற்றத்துடன் பொங்கிய மக்களின் எதிர்ப்பைக் கண்டு துளியும் அஞ்சாமல் அவர்களை நோக்கிச் சென்று 
"என்னைத்தாக்க விரும்பினால் நானே உங்களிடம் வருகிறேன்.எனக்கு இந்துக்களும்,முஸ்லீம்களும் ஒன்றுதான்.என்னையே நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.வாழ்க்கையின் இருதி கட்டத்தில் நிற்கும் நான் இருக்கப்போவது இன்னமும் கொஞ்ச நாள்தான்.என்னைக் கொல்வதானால் யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை"
என்று தேசத்தந்தைக் கூறினார்.

  அவரது பேச்சையும்,செயலையும் கண்டு அங்கு கோபத்துடன் குழுமி இருந்த கூட்டத்தினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.அத்தகைய உத்தமரை 1948-ஜனவரி-30ம்தேதி இதே தினத்தில் நாதுராம் கோட்சே காந்தியை பணிந்து வணங்கி மரியாதை செலுத்திய பிறகுதான் தனது கைத்துப்பாக்கியால் தேசப்பிதாவை சுட்டுக்கொலை செய்தார்.

 தனது வாழ்வையும்,மரணத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்பணித்தார்.

 ஆனால் காந்தியடிகள் கண்ட சுதந்திர இந்தியா இன்று ஆண்டிமுத்துராசாவின் தலைமையில் 1.76 லட்சம் கோடிரூபாய் ஊழலின் ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது. உழல்களின் சர்வதேசத் தலைநகரமாக உயர்ந்துள்ளது. 

                                படித்துவிட்டு கருத்தை விட்டுச்செல்லவும்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவுக்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்



 மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.

 மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சியின் போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்து,உதைத்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினார்கள்.


 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.

 மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

   சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை பழிதீர்க்கும் வகையில் போராளிக் குழுக்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டினார்கள்.அவர்கள் திட்டப்படி மீனாட்சிஅம்மனை தரிசிக்க வந்த அய்யர் தீச்சட்டியை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி

  
best links in tamil
More than a Blog Aggregator

சுஜிதாவின் கற்பு-சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்

 பலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் பதிவு செய்கிறேன்.
 1990-வது வருடம்.அப்போது எனக்கு வயது 16.சீ.றி.சபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சார்ந்த சிலர்- நான் படித்த பள்ளிக்கு வருகை தந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய சம்பவங்களை-வீடியோ பெட்டியில் படத்தொகுப்பாக போட்டுக் காட்டினார்கள் (அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ஒன்று கூட இல்லை)


  என்னுடைய கிராமத்தில் எனக்குக் கிடைத்த குறுகிய செய்திகளின் வழியாக இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைகள்,இளம் பெண்களிடம் வன் புணர்ச்சிகள்- என! என் போன்ற மாணவர்களின் மனதில் ஈழத்தின் சோகம் விடியாத இரவாக இருந்தது.டெலோவின் வருகையும்,அவர்கள் காட்டிய வீடியோ காட்சிகளின் விபரீதங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் விலக வில்லை.

 அந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களையும்,சிறுகதைகளையும் எனக்குத் தெரிந்த தமிழ் மொழியில் எழுதி வந்தேன்.இலங்கைத் தமிழர்களின் இன்னல்களும்,அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் நிலையும்-குறிப்பாக பெற்றோர்களை இழந்து தனி மரமாக வந்த இளம் பெண்களின் நிலையும் எண்ணி என் கண்கள் கண்ணீர் வடித்தது.அத்தகைய சூழ்நிலையில் "எரிமலைக்குள் ஒரு பனித் துளி" எனும் தலைப்பில் சிறு கதையின் வடிவத்தில் இலங்கை இனப் படுகொலைகளையும்,ஈழப் பெண்களின் அவலத்தையும் எழுதினேன்.

 அந்தச் சிறு கதையை ஆனந்த விகடன்,ராணி,தேவி போன்ற வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் சிறு கதையை யாரும் வெளியிட முன் வரவில்லை.ஆனால் ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து அவர்கள் முகவரி தாங்கிய கடிதம் ஒன்றும்,எனது சிறுகதையும் திரும்பி வந்தது.அந்தக் கடிதத்தில் "தங்கள் சிறு கதை எங்கள் ஆசிரியர் குழுவின் நெஞ்சத்தை பெரிதும் பாதித்தது.இருப்பினும் வெளியிட இயலாத நிலையில் உள்ளோம்"என்று இருந்தது.அந்தச் சிறுகதையை தேடிப் பிடித்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.தயவு செய்து கருத்துக்களை பதியவும்.

                        "எரிமலைக்குள் ஒரு பனித்துளி"


   "என் இனிய தமிழ் மக்களே!..இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் எனதருமை உடன்பிறப்புகளே!..நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!..தமிழன்!..தமிழன்!..தமிழனுக்கு எங்கு இடையூரு ஏற்பட்டாலும்!..தமிழ் இனத்தை அழிக்க யார் முனைந்தாலும்!..அவர்களை ஓட!..ஓட!..விரட்டுவோம்!..நாங்கள் பேசுவது மட்டுமல்ல!..செய்வதும் அப்படித்தான்!..நாங்கள் சொல்வதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்!..ஆளும் கட்சியாக இருந்தாலும்!..எதிர்கட்சியாக இருந்தாலும்!..தமிழ் மூச்சு!..தமிழ் பேச்சு!..இவைகள் தான் எங்கள் பணியின் உயிர் நாடிகள்"..

 நீளமான கர,கரவென அரசியல் பேச்சுக்கென பழக்கப்பட்ட குரல் ஒலிப்பெருக்கியில் கம்பீரமாக ஒலித்தது.பேச்சாளரின் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு ஏற்ப கூட்டத்தில் கரவொலி,கைதட்டல்கள் தொடர்ந்தன.

 திரண்டிருந்த கூட்டத்தின் கடைக்கோடியில் நின்றவாறு தமிழ் மூச்சாளரின் அரசியல் பேச்சை தன் காதுகளின் வழியே உள் வாங்கிய சுஜிதாவின் கண்களில் கண்ணீர் சொரிந்தது.தன் கண்களில் வழிந்த நீரை தனது கையால் துடைத்தவாறு மெல்ல கூட்டத்தை விட்டு நகர்ந்து நடக்கத் தொடங்கினாள் மேடைப் பேச்சாளரின் பொய்யான பேச்சைக் கேட்டு அவள் மனம் வெகுண்டது...

 மெல்ல அவளது எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது.இடம் -யாழ்ப்பாணம்,நள்ளிரவு-12 மணி,சுஜிதாவின் வீடு.டக்..டக்.டக் என கும்பலாக கேட்கும் பூட்ஸ் சத்தத்தை தொடர்ந்து "ரவுண்ட்ஸ் அப்"என்ற கர,கரப்பான ஆங்கில வார்தை.

 கண்ணையர்ந்து தூங்கிய சுஜிதாவின் தந்தை டக் என கண் விழித்து திரும்பியவர் மனதில்-பயம் அலை,அலையாக எழுந்தது.அரை நொடி யோசனையில் தடால் என எழுந்து குடும்பத்தினர் அனைவரையும் எழுப்பினார்.

 சுஜிதா "என்னப்பா"என்று கேட்கவும்!..வீட்டின் வெளியே கதவின் அருகில் "சூட்"என்ற குரல் ஒலிக்கவும்- வினாடியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கதவினை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.சுஜிதாவின் குடும்பம் மொத்தமும் மொளனமாக அலறியது.

 துப்பாக்கியின் வெடி ஓசை ஓய்ந்த வினாடியில் கதவை த் தள்ளிக் கொண்டு வெறிநாய்கள் போல சிங்கள ராணுவச் சிப்பாய்கள் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.பதறி எழுந்த சுஜிதாவின் அம்மாவை சுட்டார்கள்.இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தாள்.

 மொளனமாக அலறிய குடும்பத்தினர்கள்!..பெறும் கதறலோடு கூவினார்கள்.பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து,பாலூட்டி வளர்த்த அன்னை கண் முன்னாலே துடி,துடித்து கீழே விழுவதைக் கண்ட சுஜிதாவின் அண்ணன் தன்அருகில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு  சிங்களச் சிப்பாய்களை நோக்கி புலியெனப் பாய்ந்தான்...

 மீண்டும் டக,டகவென துப்பாக்கிகளின் கணைப்பு.தோட்டாக்கள் அவன் நெஞ்சில் சர மாறியாகப் பாய்ந்தன! பாய்ந்தவன் பயனற்று தரையில் சாய்யும் வினாடி நேரத்தில் வேட்டை புலியாக உருமாறி இரண்டு சிங்கள வெறிநாய்களின் மார்பிலும்,வயிற்றிலும் கத்தியை வெறிகொண்ட மட்டும் சொருகிய நிலையில் தரையில் சரிந்தான்.

 வினாடி நேரத்தில் உயிர் கொடுத்த அன்னையும்,உடன் பிறந்த அண்ணனும் சரிந்து கிடப்பதைக் கண்டு! இனி நடக்கும் கொடுமைகளை காண முடியாது! என்ற நிலையில்..நேற்று மலர்ந்த புது ரோஜா,சுஜிதாவின் தங்கையும்,தந்தையும் மயக்கமுற்று தரையில் சரிந்தார்கள்.

 சுஜிதா "அப்பா" என்று அலறியவாறு அருகே நெருங்கிச் செல்லவும்! சிங்களச் சிப்பாய்கள் இனி வீழ்த்த யாரும் இல்லை என்று எண்ணி-துப்பாக்கிகளைத் தாழ்த்திக்கொண்டு!அடுத்த ஆட்டத்திற்கு தயார் ஆனார்கள்.மூன்று வெறி நாய்கள் சுஜிதாவை நெருங்கி வந்தார்கள்.


 ஒநாய்களின் அடுத்த இலக்கு தானும், தனது தங்கையும்! என்பதை உணர்ந்து கொண்ட சுஜிதா-தங்கள் உடலுடன் விளையாடத் துடிக்கும் கொடூரத்தை நினைத்து பெண் புலியாக சிலிர்த்து எழுந்தாள். கண நேரத்தில் தன் கண்களில் பட்ட அருவாமனையை கையில் எடுத்துக் கொண்டவள்- தன்னை நெருங்கிய அரக்கர்கள்-எதிர்பாரத நேரத்தில் மூன்று நாய்களை சர,சரவென குதறி எறிந்தாள்.


 ஆனால் சுஜிதாவின் பின்பக்கம் நின்ற சிங்களவனின் துப்பாக்கிக்கட்டை பெண்புலியின் பின்மண்டையில் "நங்"என்று இறங்கியது.சுஜிதா தலையில் வழிந்த குருதியை துடைத்தவாறு தரையில் விழுந்தாள்.

 மற்றவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பால்மனம் மாறாத குழந்தையைப் போன்று தரையில் மயங்கிக் கிடக்கும் சுஜிதாவின் தங்கையை வெறிகொண்ட மட்டும் மாறி,மாறி புரட்டி எடுத்தார்கள்.

 சுஜிதாவை நெருங்கியவர்கள் அவள் உடலோடு ஒட்டியிருந்த ஆடைகளை உறுவி எறிந்து..அவள் உயிரோடு ஒட்டியிருந்த கற்பை மாறி,மாறி சூரையாடினார்கள்.கொடியவர்களின் வெறித் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுஜிதாவும் மயக்கம் அடைந்தாள்.

 அவள் கண் விழித்த போது அனாதையாக தமிழ் அகதிகள் கப்பலில் இந்தியா வந்து கொண்டிருப்பதாக மற்றவர்களால் உணத்தப்பட்டாள்.சுஜிதாவின் ஈழத்து நினைவுகளை கலைக்கும் வகையில்-அவளது இடுப்பை முரட்டுக் கரம் ஒன்று இருகப் பற்றியது.

 திடுக்கிட்ட சுஜிதா தன் பழைய நினைவுகளிருந்து மீண்டாள்.தான் மெரினாக் கடற்கரையின்- அரசியல் கூட்டம் நடக்கும் மேடையை விட்டு வெகு தூரம் வந்திருப்பதை உணர்ந்தாள்.

 பின்புறம் "இலிப்பொலி"கேட்டது.திரும்பியவளின் பார்வையில்-குடி போதையில் இரண்டு ஆண்கள் இலித்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவன் "வா குட்டி! ஏ! குட்டி தனிய தவிக்கிறே" என்றான்.

 சுஜிதாவிற்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் வினாடியில்- மற்றொருவன் சுஜிதாவை முரட்டுக்கரத்தால் இறுக அணைத்தான்!..சுஜிதாவிற்கு.. தலை சுற்றியது..மயங்கினாள்..மீண்டும் கண்விழித்த போது தன் தமிழ் வேந்தர்களால் தான் குதறப் பட்டுள்ளதை உணர்ந்தாள்..

 உணர்வற்ற சுஜிதா கடல் அம்மாவை நோக்கி நடந்தாள்.கற்பு இழந்த தமிழச்சியை காக்க! கடல் அலைகள் அணைத்துக் கொண்டன... சுஜிதாவை இனி யாரும் நெருங்க முடியாது.இயற்கை அன்னையின் தாலாட்டில் இனி 
நிரந்தரமாக தூங்கப் போகிறாள்...

தங்கள் மேலான கருத்துரைகளை பதியவும்


 தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 26 ஜனவரி, 2011

விஜயின்-காவலன் சந்தித்த சோதனைகள்

  கமலின் மன்மதன் அம்பு வெளியான நேரத்தில்-இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் வெளியிடப்பட இருந்துதது.கடந்த காலங்களில் விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.அடுத்த படத்தை சூப்பர்கிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை விஜய்க்கு ஏற்பட்டது.

 பிரண்ட்ஸ் படத்தை சூப்பர்கிட் படமாக கொடுத்தவர் இயக்குனர் சித்திக்.விஜய்-சித்திக் கூட்டணி மலையாலத்தில் வசூல் மழை பொழிந்த படத்தின் ரீமேக் கதையை கையில் எடுத்தது.காவலன் என்ற பெயரில் காமெடிக் கலக்களுடன் விஜய்க்கு தேவையான மசாலாவை கலந்து காவலன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.

 சத்தியராஜ்யை வைத்து தொடர்ந்து படம் எடுத்து கையைச்சுட்டுக்கொண்ட சக்திசிதம்பரத்தின் அலுவலகமும்-காவலன் திரைப்படத்தின் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் காவலன் திரைப்படத் தயாரிப்பாளர் ரோமேஸ்க்கும் சக்திசிதம்பரத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது.

 அதன் விளைவு காவலன் திரைப்பட வெளியீட்டு உரிமையை 42 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார் சக்திசிதம்பரம். இந்தபடம் வெளியானால் தனது கடன் பிரச்சனைகள் தீரும் என முடிவு செய்து தனது தகுதிக்கு மேல் கடன் பெறுகிறார்.

 கடந்த மாதமே வெளியிட தேதியும் குறிக்கப்பட்டது.சக்திசிதம்பரத்திற்கு முன்பே காவலன் படத்தை வாங்க கையில் பணத்துடன் நிறைய சம்பவான்கள் காத்திருந்தனர்.விஜயின் முந்தைய படங்கள் சறுக்கியதின் காரணமாக 40 கோடிக்கும் குறைவாக பேரம் பேசினார்கள்.ஆனால் சக்திசிதம்பரத்தின் விலை 42 கோடி ரூபாய்.

 மற்றவர்களைவிட கூடுதலாக விலை பேசியதன் காரணமாக சக்திசிதம்பரத்தின் கைக்கு வெளியீட்டு உரிமை சென்றது.ஆனால் விஜய் தரப்பு சொல்லும் காரணம் சிதம்பரத்தை நிதிநெறுக்கடியில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவருக்கு வெளியீட்டு உரிமை தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.காவலனின் முதல் பிரச்சனை சக்திசிதம்பரம்.

 இந்த நேரத்தில் எந்திரன் படம் 40 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.சில இடங்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டு காவலன் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் வேகம் காட்டினார்கள்.

 இதே நேரத்தில்உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியானது.தொடர்ந்து காவலனும் வெளியாக இருந்தது.காவலன் வெளியானல் மன்மதன் அம்பு சொம்பு ஆகிவிடும்-மேலும் தங்களின் சொல்பேச்சு கேட்காத விஜய்க்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தனர் கலைஞர் குடும்பத்தின் திரை உலக வாரிசுகள்.

 அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன.திரையரங்குகள் கிடைக்காத நிலையில் காவலன் வெளியீடு தைப் பொங்களுக்குத் தள்ளிப்போனது.

 விநியோகஸ்தர்களிடமும்,மீட்டர் வட்டி கும்பலிடமும் பணம் வாங்கிய சக்திசிதம்பரத்திற்கு நெறுக்கடிகள் முற்றியது.பணம் கொடுத்த சிலர் சிதம்பரத்தை வளைத்துத் தாக்கவும் செய்தார்கள்.சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.                
   
 காவலன்தைப்பொங்களுக்குஅவதரிப்பான்எனக்காத்திருந்தரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்,திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.அந்த நேரத்தில் கலைஞரின் இளைஞன்,மாறனின் ஆடுகளம் வெளியானது.

 கார்த்தியின் சிறுத்தையும்,விஜயின் காவலனும் கலைஞரின் குடும்பப்படங்களை அப்பர் பிளாப் செய்து விடும் என கலைஞரிடமே சொல்லப்பட்டது.அப்புறம் என்ன கடுமையான அஸ்திரங்கள் காவலன் மீது வீசப்பட்டது.

 சிறுத்தையின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் படத்தின் வெளியீட்டு உரிமையை தன் சொந்தப்பொறுப்பில் வைத்துக்கொண்டார்.அதனால் முன் கூட்டியே திரையரங்குகளை பதிவு செய்து கொண்டார்.

  இருப்பினும் நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவுக்கு சிறுத்தை படம் வெளியானால் அவமானம் என்று கூறி நடிகர் கார்த்தியின் வீட்டு முன்பு நாடார் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன் பின்னனியில் இளைமை படத்தின் தயாரிப்பாளர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.அதையும் மீறி சிறுத்தை படம் பொங்களில் சீறியது.

 ஆனால் சக்திசிதம்பரத்தின் பொருளாதார நெருக்கடி விஜயின் எதிர் முகாமில் இருந்தவர்களுக்கு சாதமாக அமைந்தது.தங்கள் அரசியல் பின் புலத்தை சரியாகப் பயன்படுத்தி காவலனுக்குத் தாங்க முடியாத சோதனைகளை ஏற்படுத்தினார்கள்.
 இது போன்ற சோதனைகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க பொதுச்செயலாளரை சந்தித்து காவலன் வெளியீட்டுக்கு ஆதரவு பெற்றார்.

 இறுதியில் இளையதளபதியும்,அவரது தந்தையும் இணைந்து அதிரடியாக களம் இறங்கி நீதிக்கு தண்டனை கொடுத்தவர்களைத் தண்டித்து,சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து,பல கோடி ரூபாய்களை இழந்து காவலன் படத்தை பிரசவித்தார்கள்.

 காவலன் காற்று வாங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! விளம்பரம் எதுவும் இல்லாமல் காவலன் இளைய தளபதியை காப்பாற்றியது. 



        பார்த்துவிட்டு கருத்தைக் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-     டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

"முந்த்ரா"இந்தியாவை உலுக்கிய முதல்ஊழல்!

  உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 62வது குடியரசு தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.1958"முந்த்ரா"உழல்.நமதுதேசத்தின்பிரதமர்நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும்உலுக்கியமிகப்பெரியஊழல்.


 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா"ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.
 
 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
 அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.
 ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.
 பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரி இராமன் முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.
 முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.


  இதன் விளைவு ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!
1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி" 
என்ற மக்கள் கட்டமைப்புத்தேவை!

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.   
பதிவைப்பார்த்தவர்கள்கருத்துரைகளைபதியவும் 

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 24 ஜனவரி, 2011

கடத்தப்பட்ட காமராசர்-காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்!

  பாரததேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராளிகளை ஒடுக்குவதிலும்,காங்கிரஸ் கட்சியினரை அழிப்பதிலும் வெள்ளையர்களுக்கு கொஞ்சமும் சலைக்காமல் நீதிக்கட்சியினர் வெகுவேகத்துடன் செயல் பட்டனர்.
 காங்கிரஸ்சில் பார்ப்பாணியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது.அதனால் பிராமணர்கள் அல்லாத கட்சி ஒன்று தேவை என்ற அடிப்படையில் உருவானதுதான்நீதிக்கட்சி.
 மிட்டா,மிராசுகளும்,பாளையக்காரர்களும்,ஜமீன்தாரிகளும்,நிறைந்த கட்சியாக உருவெடுத்தது.வெள்ளைஅரசாங்கத்தை ஆதரித்து செயல்பட்டு வந்தது.அடியாட்களைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டங்களில் கலகம் உருவாக்குவது.விடுதலை வீரர்களை தாக்குவது,போராளிகளை கடத்துவது,காட்டிகொடுப்பது என வீர,தீர செயல்களில் முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.அதற்கு வெகுமதியாக வெள்ளை அரசாங்கத்திடம் இருந்து பட்டங்களும்,பதவிகளும்,அதிகாரமும் தாரளாமாக கிடைத்தது.

 அப்படிப்பட்ட வீரத்தின் விளை நிலமான நீதிக்கட்சியின் கும்பல் ஒன்று கர்மவீரர் காமராசரை கடத்திச் சென்று விருதுநகரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த பழைய வீடு ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.விருதுநகரில் அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
 தேவர் பெருமகனார் வந்து சேர்ந்தார்.அவர் மேடை ஏறுவதற்கு முன்பாக-காமராசரை காணவில்லை மர்மமாக உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.நுண்ணறிவு கொண்ட தேவர் பெருமகனார் கணப் பொழுதில் இது நீதிக்கட்சியின் வீரச்செயல் என்பதை உணர்ந்து கொண்டு மேடை ஏறினார்.
 பொதுக் கூட்டத் திடலில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர்.தேவர் பெருமகனாரின் எழுச்சி உரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.ஒலிப்பெறுக்கியை கையில் பிடித்த தேவர்பெருமனார் "நான் இப்போது என் உரையை ஆரம்பிக்க போகிறேன்! நான் என் பேச்சை முடித்துவிட்டு கீழே இறங்கும் போது! என் எதிரில் காமராசர் நிற்க வேண்டும்! யார் அவரை அடைத்து வைத்திருக்கிறார்களோ! அவர்கள் காமராசரை இங்கே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்! நான் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது காமராசர் இங்கே இல்லா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல"! என சிங்கமாக சீறினார்.

 அதைத் தொடர்ந்து அரசியல் சூழல்பற்றி பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே வந்தார் அவர் எதிரே கர்மவீரர் காமராசர்.நீதிக்கட்சியால் கடத்தப்பட்ட காமராசரை காப்பாற்றினார் முத்துராமலிங்கத்தேவர்.

 தேவர் பெருமகனாரின் அதிரடிமுழக்கத்தில் நிலை குலைந்து போன நீதிக்கட்சியினர் காமராசரை விடுதலை செய்தனர்.உண்மையின் உரைவிடமான தேவரின் செயல்பாடுகள் இன்றும் போற்றுதலுக்குறியது.அப்படிப்பட்ட தேவர் பெருமகனார் அவர்களை குறுகிய சாதி வட்டத்தில் அடைப்பதை கைவிட வேண்டும்.
                         தங்கள் மேலான கருத்துக்களை பதியவும்.
தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி..கே.தீரன்சாமி   
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

யூசுப்பதான் புலிப்பாய்ச்சல் -படுதோல்வியிலிருந்து மீட்பு

  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5-வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ்சில் வென்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.மேகம் மூட்டமாக காணப்பட்டதால் மழை குறுக்கிடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம்.


 ஸ்மித்-அம்லா இணை ஆட்டத்தை தொடக்கியது.இந்த ஜோடி பந்துகளுக்கு இணையாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.இடையில் மழை குறுக்கிட்டது.இதன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 46-ஓவர்களாக குறைக்கப்பட்டது.


 மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் யுவராஜ் சிங்கின் சுழலில் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவின் 2 மட்டையாளர்கள் ஆட்டம் இழந்தனர்.ஆனால் அம்லாவின் அதிரடியை இந்தியப் பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.ஒரு கட்டத்தில் அம்லாவுடன் இணைந்த வார்னும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.


 முடிவில்தென்னாப்பிரிக்கா அணி 9-விக்கெட்களை இழந்து 250- ரன்களை குவித்தது.அம்லா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 116 ரன்களையும்,வார்ன் 53 ரன்களையும் குவித்தனர்.இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர்கான்-2,முனாப்படேல்-3,யுவராஜ்-2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


  மழை குறுக்கிட்டதன் காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 46 ஓவரில் 268-ரன் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.முன்னனி தொடக்க மட்டையாளர்களான சச்சின்,சேவாக்,கம்பீர்,இல்லாத நிலையில்-பர்திவ் படேல்,ரோகித் சர்மா இணை ஆட்டத்தை தொடக்கியது.ஆனால் இந்திய வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.


 ஒரு கட்டத்தில் 45-க்கு3-,74-க்கு6,-119-க்கு8 என்ற பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.அணியை மீட்டெடுக்கும் பணி யூசுப்பதானின் தலையில் விழுந்தது.யூசுப் களம் இறங்கியது முதலே புலிப் பாய்ச்சல் காட்டத் தொடங்கினார்.மட்டையை எட்டுத் திசைகளிலும் சுழற்றினார்.சிக்சர்களும்,பவுன்ட்ரிகளும் பறக்கத் தொடங்கின.தென்னாப்பிரிக்காவின் ராக்கெட் ஸ்டையினின் பந்துகளை துவசம் செய்தார்.47-பந்துகளில் தனது அரைச் சதத்தை பூர்த்தி செய்தார்.


 யூசுப் மேலும் வேகத்தை கூட்டத் தொடங்கினார்.துரதிருஸ்டவசமாக அணியின் வெற்றிக் கோட்டை தொடும் நேரத்தில் யூசுப் ஆட்டம் இழந்தார்.8 சிக்சர்,8 பவுன்ட்ரிகளுடன் 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார்.இந்தியத் தரப்பில் பர்திவ் படேல் 34 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார்.தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் மோர்கில் 4,ஸ்டையின் 2 விகெட்டுகளை கைப்பற்றினார்கள்.


 இறுதியில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.5-போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்கா3-க்கு 2- என்ற அடிப்படையில் கைப்பற்றியது.



தீரன்சின்னமலை- சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி
best links in tamil
More than a Blog Aggregator