புதன், 22 டிசம்பர், 2010

2;ஜி ஆ.இராசா குடும்பத்தில்கடைக்குட்டி-ஊழலுக்குமுதல்குட்டி

     2;ஜி- அலைக்கற்றை ஊழல் ஒருலச்சத்துஎழுபத்திஆறாயிரம் கோடி.நமது தேசத்தின் ஆண்டு பட்செட்டில் பத்தில் ஒரு பாகம்.ஊழலின் கதாநாயகன் ஆண்டிமுத்துஇராசா.
                                                                                                                                                                 சுமார் 60வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பிய எஸ்.கே.ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளையின் குடும்பம்-நான்குபெண்கள்,நான்கு ஆண்கள் என எட்டு குழந்தைகளை கொண்ட மிகப்பெரிய குடும்பம்.எட்டாவதாக பிறந்த கடைக்குட்டி ஆ.இராசா ஊழல் வரலாற்றில் முதல் குட்டியாக வளம் வருகிறார்
 .                                                                                                                                                   ஆ.இராசா முசிறி அரசினர் கலைக்கல்லூரியில் இளம்நிலை பட்டமும்,திருச்சிமற்றும் மதுரையில் சட்டக்கல்வியும் பயின்றவர்.1980 காலகட்டங்களில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டார்.                                                                                                                               இராசா அப்போது போக்குவரத்துக்காக பழைய லாம்பெரட்டா ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

   1990களில் தீவிர அரசியலில் கவனம் செலுத்தினார்.அதற்கு முன்பே ஒரு சில தலித் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.                                    தனது தாய்மாமன் மகள் எம்.ஏ.பரமேஸ்வரியை வழ்க்கை துணையாக கரம்பிடிதார்.

  1996ல் மக்களவை உறுப்பினாராக தேர்வு செய்யப்பட்டார்.அப்போது இணைஅமைச்சர் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.மீண்டும் 2004ல் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானர்.கலைஞரின் மகள் கனிமொழியின் நெறுக்கம் இராசாவிற்கு அதிஸ்டமாக அமைந்தது.2007ல் மாறன் சகோதரர்களுக்கும், தி.மு.க தலைமைக்கும் மோதல் முற்றியபோது மீண்டும் இராசாவின் காட்டில் பதவி மழை பொழிந்தது.தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானர்.                                        .                                                                                                                    
  இராசாவின் சகோதரர் அண்ணாபல்கழைக்கழகத்தின் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த துறையின் தலைவராக உள்ளார்.அடுத்த சகோதரர் ஆ.சிவசண்முகம் நெய்வேலி நிலக்கரியில் பணிபுரிந்து வருகிறார்.இன்னொறு சகோதரர் ஆ.கலியபெருமால் கங்கிரஸ் கட்சியின் மாவட்ட து.செயலாளராக உள்ளார்.மேலும் பனிமலர் உயர்நிலைப்பள்ளியின் தாளாள்ராகவும்,சிவகாமம் மோட்டார்ஸ்,சிவகாமம் டிரேடிங்ஸ் என பல தொழில்கள் செய்து வருகிறார்.         ஆ.இராசாவின் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையின் சொத்துக்களையும்( சுமார் 200-கோடி) தொழில்களையும் கலியபெருமால் நிர்வகித்து வருகிறார்.                                                                                                                  

 சாதிக்பாட்சா...கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சியை பிறப்பிடமாக கொண்டவர்.இராசாவின் மனசாட்சி.சுமார் 2000ஆயிரம் கோடி ரூபாய் புரலும் கிரீன்வேஸ் புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர்.இந்நிறுவனத்தில் இராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த  மாதம் வரை இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார்.தற்போது இராசாவின் சகோதரி மகன் பரமேஸ்குமார் நிர்வகித்து வருகிறார்.
  
    சி.பி.ஐ யின் பிடியில் இராசாவின் நெருங்கிய வட்டாரங்கள் சிக்கியுள்ளன.2ஜி இராசா குடும்பத்தில் கடைக்குட்டியாக இருந்தாலும் ஊழலுக்கு முதல் குட்டியா? என்பதை உலகம் தெரிந்து கொள்ளும் தூரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது,,,,                                                                                                                                                                                                                                                                                                                                           
best links in tamil
More than a Blog Aggregator