செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானது. கொங்கு தமிழர் கட்சி தீர்மானம்



செப் 30:
             காங்கயத்தில் கொங்கு தமிழர் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேசிய அமைப்பாளர் டி .கே.தீரன்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதானமாக புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                 கடந்த 50 ஆண்டுகளாகவே கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் ஒரே தேசிய  குடையின் கீழ் இருந்தாலும் கன்னடர்,     தமிழர் என்ற பிரிவினையை கர்நாடகா தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றது.
அதற்கு  காவிரிப் பிரச்னை ,கர்நாடகா வாழ்தமிழர்கள் மீது தாக்குதல் ,அரசியல் பழிவாங்குதல் என பல உதாரணங்களை முன் வைக்கலாம்.அப்படி  இருக்கும் போது தமிழர்களுக்கு எந்த வகையிலும் கர்நாடகத்தில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை-என்ற நிலையிலும் நீதியை மதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் டாக்டர் .புரட்சி தலைவி அம்மா மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பினோம்.ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
இதுவே  ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து. இதே கருத்தை வலியுறுத்தி கொங்கு தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

/அமைப்பின் சார்பில் / செய்தி வழங்குதல்
டி.எஸ்.சண்முகம்
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்                                                          
/அமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் /                                           உயர்திரு.டி .கே.தீரன்சாமி அவர்கள்                                                               தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் .                                                                    நாள் : 30.09.2014
best links in tamil
More than a Blog Aggregator