சனி, 25 ஜூன், 2011

அன்னாஹசாரே ஆவேசம்-ஊழல்ஒழிப்பின் கதாநாயகன்

துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்:அன்னாஹசாரே ஆவேசம்.என்ற தலைப்பில் தினமலர் செய்தி ஊடகத்தில் நேற்று நான் படித்த செய்திக்கு-நான்பதிவுசெய்த கருத்துரை.


 அன்புள்ள!வாசகர்களே அன்னாஹசாரே அய்யா அவர்களுக்கு தங்கள் முழுஆதரவையும் தரவேண்டும்.மாறாக அவரது போராட்டவடிவத்தை எந்த நிலையிலும் தயவுசெய்து கொச்சைப்படுத்தாதிர்கள்.அவரை போன்று ஊழலுக்கு எதிரான தலைமை உருவெடுக்கவேண்டும்மென நமதுதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தவமாய் தவம் இருந்தான்.
 கோடிக்கணக்கான மக்களின் எண்ணத்தில் உருவான கதநாயகர்கள்தான் அன்னாஹசாரே,ராம்பாப போன்றவர்கள். நமது தேசத்தின் விடுதலைக்காக போராடிய அண்ணல் காந்தியடிகளை இந்துசாயம் பூசினார்கள்.ஆனால் இந்துக்களின்மீது தீவிர பற்றுடைய கோட்சேவின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு மகாத்மா இறையானார்.இந்துகளுக்கு காந்தியடிகள் துரோகம் இழைத்ததை என்னால் தாங்க முடியவில்லை அதனால்தான் காந்தியடிகளை சுட்டுக்கொன்றேன் என கோட்சே கூறினார். 
 அதைப்போல ஊழல் ஒழிப்புப்போராட்டத்தில் துப்பாக்கிக்குண்டுகளை சந்திக்க தயார் என மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ள அன்னாஹசாரேவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.அண்ணாருடன் இணைந்து நாமும் துப்பாக்கிக் குண்டுகளை சந்திக்கத்தயாராக இருப்போம். 
 அன்று லட்சக்கணக்கான உயிர்களை இழந்து நமதுதேசம் விடுதலை பெற்றது.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளது.நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்றுதேவை.அதற்கு அன்னாஹசாரே,ராம்பாப,மற்றும் தினமலர் போன்ற ஊடகங்கள் தலைமை ஏற்று வழிநடத்தவேண்டும். தீரன்சின்னமலை-theeranchinnamalai.blogspot.com-வலைதள புலனாய்வு செய்திஊடகப்பதிவுக்காக-டிகே.தீரன்சாமி மாநில அமைப்பாளர்-கொங்குதமிழர்கட்சி.
நீங்களும் படிக்க:www.dinamalar.com/News 
நன்றி:தினமலர்-அன்னாஹசாரே புகைப்படம்
best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 23 ஜூன், 2011

அம்மாஅவர்களுடன்-வலைப்பதிவர் டி.கே.தீரன்சாமி சந்திப்பு


அம்மா அவர்களுடன் கொங்குதமிழர்கட்சியின்
மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி

 லஞ்சம்-ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலை இவற்றின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தையும்,தமிழக மக்களையும்,ஈழத்தமிழர்களையும் மீட்டெடுக்கும் மாற்றுசக்தியாக திகழும் அம்மா அவர்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணியை நடந்து முடிந்த சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறையின் சார்பில் 
ஆதரித்து கொங்குதமிழகம் முழுவதும் 
தீவிரதேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

 7-4-2011 அன்று கோவைமாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில்சந்தித்து எமது ஆதரவினை தெரிவித்தோம்.அப்பொழுது 10அம்ச கோரிக்கைகளை அம்மா அவர்களிடம் நேரில் வழியுறுத்தினோம்.


 அவற்றில் ஈழத்தமிழர்களை காக்க இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்ற சரித்திர சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.சாயத்தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கவும்,சட்டம் ஒழுங்கை காக்கவும் விரைந்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.இதுபோன்றமக்கள் நலம்காக்கும் செயல்பாடுகளை எமது பேரவையின் சார்பில் வரவேற்கிறோம்.
கோபிதொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து 
கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி தலைமையில் 
பிரச்சாரம் மேற்கொண்டபோது எடுத்த காட்சி.உடன் கட்சியின் பொதுச்செயலாளர் சேலம்.வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன்,கோபி அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் மனோகரன்,நடிகர் எம்,ஜி.ஆர்.சிவா ஆகியோர் உள்ளனர்.

 தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பணி சிறக்கவும் லஞ்சம்-ஊழல் ஒழித்திடவும் வாழ்த்துகிறோம்.
best links in tamil
More than a Blog Aggregator