சனி, 20 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிரான புரட்சி தொடரட்டும்! தினமலரில் நான் எழுதிய கருத்துரை!

கசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்
என்ற தலைப்பில் வெளியான தினமலர் இனணைதளத்தின் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை!

நம்மை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்த வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.எதற்காக?

நம்முடைய அரசியல்வாதிகள் பல லட்சம் கோடியில் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துக்கொண்டு!உலக அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து சுகபோக வாழ்க்கையில் திளைப்பதற்காகவா?

இவர்கள யார்? எங்கிருந்து வந்தார்கள்? வீதியில் பிச்சைக்காரர்களாக சுற்றிவந்த அயோக்கியர்கள்!கள்ளச்சாரய வியபாரிகள்!கழுத்தை அறுத்து செயின் திருடும் கும்பல்!அரிதாரம் பூசிய நடிகர்கள்,பிலேடு பக்கிரிகள்,திரவிடம்,தமிழன்,தமிழ்,ஈழத்தமிழன் என்று முழங்கி வயிரு வளர்க்கும் திருடர்கள்,வேலா வேலைக்கு சாராயத்தில் மிதக்கும் குடிமகன்கள்! மட்டை அடித்தேன் என்று சொல்லித்திரியும் கொலைகாரக்கூட்டம்!

இவர்கள்தான்! இத்தகைய மோசாடிப் பேர்வழிகள் தான்! நம்மை பெரும்பான்மையாக ஆண்டு வந்தவர்கள்! அதிகாரம் செலுத்தியவர்கள்! நினத்தாலே கசக்கிறது.நம்முடைய வாக்கு உரிமையை தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரர்களாக மாறி கையேந்திப் பெற்றுக்கொண்டவர்கள்!

ஆட்சிஅதிகாரம் என்ற பெயரில் நம்மை கொத்தடிமைகளாக்கி,
கொடுமைப்படுத்தி,கொள்ளையடித்த வந்தவர்கள்!இன்று அண்ணா காசாரேவின் மந்திரக்கோலைக் கண்டு,அவர் பின்பு நாடு முழுவதும் திரண்ட மக்கள் படையை பார்த்து நடு,நடுங்கிவருகிறது.

தேர்தல் திருடர்களின் பாதை! நாடாளும் மன்றம் ஒரு பன்றித்தொழுவம் என்று இளைஞர்களை மூலைச்சலவை செய்து நாட்டைத் திருதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அலையும் கொள்ளைக் கூட்டம் இன்று விழி பிதுங்கி உலருகிறது.

நாடு எக்கேடு கெட்டுப்போனால் நமக்கு என்ன? அரசியல் ஒரு சாக்கடை!அரசியலுக்கு போனால் வேலை கெட்டுவிடும்! என்று 2011, ஆகஸ்ட் 15 வரை ஒதுங்கி இருந்த நல்லவர்களும்,படித்தவர்களும் "இனிப்பொருப்பதற்கு ஒன்றும் இல்லை! பொங்கி எழு"என்ற கோசத்துடன்! எரிமலையாக கொந்தளித்தார்கள்.தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிரான மக்கள் படை தன்னெழுச்சியாக திரண்டு சனநாயகப்போருக்கு தயாராகி விட்டது.

தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கொழுந்து விட்டு எரிந்து வரும் ஊழலலுக்கு எதிரான தீயை அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஊழலை ஒழிப்பது மட்டும் நமது வேலை அல்ல! சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களின் பிதாமகன்களை முச்சந்தியில் நிறுத்த வேண்டும்.அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்!

நேற்றைக்கு தினமலர் செய்தி ஊடகத்தின் முதல் பக்கத்தில் கோவை கொடீசியா அரங்கத்தில் நடைபெறும் ஊழலலுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மானசீகமான அழைப்பு!

 கொங்குதமிழர்களை,கொங்குநாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களையும் தட்டி எழுப்பியது.லஞ்சம்-ஊழல் எனும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று அண்ணா கசாரே தலைமையில் தொடங்கி விட்டது.

வாருங்கள் நாமும் இணைந்து போராடுவோம்!உழல் பேய்களை ஓட,ஓட விரட்டுவோம்!சத்தியமாக ஊழலை ஒழிக்க முடியும்!


best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிரான மக்கள்படையை தட்டிஎழுப்பட்டும்!


விகடன் செய்திகள் இணையதளத்தில் அண்ணா கசாரே குழுவின் அணுகுமுறை சரியா? விவாதக்களத்தில் நான் பதிவுசெய்த கருத்துரை:-

அண்ணா கசாரே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.காந்தியவாதி,ஆன்மீகத்தில் விவேகானந்தரை மானசீகமாக் ஏற்றுக்கொண்ட்வர்,ஒரு சாதாரண குடில்போன்ற இல்லத்தில் வசித்து வருபவர்,திருமணம் ஆகாத பிரம்மச்சாரி,சமூகசேவகர்.தனக்கென சுயதேவை எதுவும் இல்லாதவர்.

தமது சித்திக் கிராமத்தில் மழை இருந்தும் விவசாயம் செய்ய நீர் இல்லாத அவலத்தைக்கண்டு அந்தமக்களின் மறுவாழ்வுக்கு தனது ஓய்வுக்காலத்தை அர்பணித்தவர் அண்ணா கசாரே.

சித்திக்கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறு,சிறு தடுப்பணைகள் மூலம் நீரைத்தேக்கி சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான பூமிகளை பொன்விளையும் பசுமைச்சோலையாக மாற்றியவர்.லோக்பால் வரைவுக்குழுவில் சிவில்சமூகதிற்கு தலைமை ஏற்றவர்.

அண்ணாவின் சிவில்சமூக இயக்கத்தின்கீழ் துணை நிற்பவர்கள் ஒன்றும் சாதாராண ஆட்கள் அல்ல! என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும்,சமூக சேவகருமான கிரண்பேடி,உச்சநீதிமன்றத்தின் மூத்தசட்டப்போராளிகள் பூசன் சகோதரர்கள்,சமூகப்புரட்சியாளர் மேதாபட்கர் உள்ளிட்டவர்கள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசாரேவுடன் இணைந்துள்ளாகள்.

இவர்களின் ஒத்துழைப்பு,வழிகாட்டுதல் அண்ணாவை சரியான வழியில் இட்டுச்செல்லும்.ஏனெனில் லட்சக்கணக்கில் உயிர்களை பழிகொடுத்து,
பல லட்சம் கோடிரூபாய் மதிப்பில் இயற்கை வளத்தை இழந்து,200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றோம்.

விடுதலைக்கு பிறகு ஊழலின் தொடக்க ஆட்டம் 65 கோடி ரூபாயில் ஆரம்பித்தது.அதன்பிறகு தொடர்ந்து 65 ஆண்டுகள் நமது அரசியல் மட்டையாளர்கள் அதிரடியாக விளையாடி தொடர் சிக்ஸர்களாக அடித்து இன்று 1.75 இலட்சம் கோடியாக குவித்து சர்வதேசத்தரத்தில் முதலிடத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஊழல் ஒழிப்பில் அண்ணாஹாசரே குழுவின் அணுகுமுறை சரியானதே!அவர் தலைமையிலான சிவில்சமூகம் தயாரித்த தன்லோக்பாலை மத்திய அரசு ஏற்கத்தான் வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது பிரதமருக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே ஊழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.அதற்கு ஊழல் ஒழிப்பு முன்னனி என்ற மக்கள் கட்டமைப்பு தேவை.

அது அண்ணா ஹாசாரே தலைமையில் பிரசவிக்க தயாராகி வருகிறது.நாமும் அதை நல்ல படியாக வளர்த்தெடுக்க முயல்வோம்.அநீதிகளுக்கு எதிராக ஆர்பரிக்கும் விகடன் குழுமமும் ஊழலுக்கு எதிரான மக்கள் படையை தட்டி எழுப்பட்டும்!

நீங்களும் இங்கு கருத்துரை பதியவும்- விகடனில் பதிய www.vikatan.com
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 17 ஆகஸ்ட், 2011

ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இலங்கையில் தடை! சிங்கள அரசின் தொடரும் ஊடகஒழிப்பு!

நமது விகடன் செய்திக்குழுமம் உலகத்தமிழ் மக்களின் நாடித்துடிப்பு!ஆனந்த விகடனின் வயது இரண்டு தலைமுறைகளை தொட்டு விட்டது.அனைத்துப் பாலினர்களையும் தன்னகத்தே வசியம் செய்து வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.விகடன் குழுமத்தின் இரண்டாவது வாரிசு ஜீனியர் விகடன் அரசியல் புலனாய்வுச்செய்திகளில் முந்திச்செல்கிறது.


விகடன் குழுமம் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலாக முழங்கி வருகிறது.அந்த வகையில்ஆனந்த விகடன் வார இதழில்  'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர்,  இந்திய பொதுவுடமைக் கட்சியின்  தமிழ் மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது.


 சி.மகேந்திரன் என்றால் சிங்களப் பேரினவாதத்துக்கு கிலி பிடிக்கும்.தோழருடன்,ஆனந்தவிகடன் 
கைகோர்த்து உள்ளது.இதைக்கண்டு அச்சம் அடைந்த இலங்கை அரசு ஆனந்த விகடன் இதழின் "வீழ்வேனென நினைத்தாயோ" பகுதியின் 30லிருந்து 34 பக்கங்கள் உள்ளிட்ட 5 பக்கங்களை நீக்கி வெளியிட்டு உள்ளது.


இதன் முதல் பகுதி 12.08.2011- இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 


சிங்கள ஓநாய்களை குலைநடுங்கச்செய்யும்-தடைசெய்யப்பட்டபகுதி கீலே தரப்படுகின்றது.
உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.
ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது.  அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது.  அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது?

யாரை மன்னிப்பது?

தோழர் சி.மகேந்திரன் எழுதிய கட்டுரை இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
நன்றி:மனிதன் செய்தி ஊடகம்,ஆனந்தவிகடன் இதழ்
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

முதல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது தலைநகரத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


நம் தேசத்தின் தலைநகரத்தில் 1975 நினைவூட்டுவதாக அறிவிக்கப்படாத எமர்சென்சி இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தில்லியின் பெரோஸ்ஸ கோட்லா மைதானம் அருகே உள்ள ஜெயப்பிரகாஸ் நாராயன் பூங்கா அமைந்துள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது தேசத்தின் 65-வது சுதந்திர தினம் முடிந்த தருவாய்யில் சனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்கும் பிரிட்டிஸ் அரசின் அதே கொடுங்கோல் தன்மையுடன்,அதே காங்கிரஸ் அரசு சொந்த சிவில் சமூகத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

லோக்பால் மசோதாவில் பிரதமர்,நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களை சேர்க்கவேண்டும்.இதுதான் ஹசாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் கோரிக்கை!இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் அதற்கு ஆகஸ்ட்-16 தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார் ஹசாரே!

கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை கையோடு இன்று காலை கிழக்கு தில்லியின் மயூர்விகார் பகுதியில் தனது வீட்டில் இருந்த அன்னாஹசாரே மற்றும் அர்விந்த்கெஸ்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனரும்,சமூக சேவகருமான கிரண்பேடியும் கைது செய்யப்பட்டார்.காந்திய வழியிலான உண்ணாவிரதத்தை ஒடுக்கும் காங்கிரஸின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.

புதுதில்லியில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.நாடு முழுவது ஊழலுக்கு எதிரான போர் உத்வேகத்துடன் சீற்றம் கொள்ள தயாராகி வருகிறதும்.ஐ.ஐ.டி மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக போராட தயராகி வருகின்றன.

இனியும் ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதாவை புறக்கணிக்கும் உழல் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.தில்லி காவல்துறையின் மிசா செயல்பாடுகள் இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

வாருங்கள் நாமும் லஞ்சம்-ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஹசாரேவின் தலைமையிலான ஊழல் ஒழிப்பு முன்னனியில் பங்கேற்போம்.
best links in tamil
More than a Blog Aggregator

தடையை மீறி அன்னாஹசாரேவின் உண்ணாவிரதம்!இதுவரை நடந்ததுஎன்ன?

ஆகஸ்ட்டு 15 - இன்று 65 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து,பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்களை இழந்து , தொடர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி நமது தேசத்தை கொள்ளை அடித்த வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
 ஹசாரே இந்தியராணுவத்தில்
இருந்தபோது எடுத்த படம்

ஆனால் இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைபட்டு உள்ளோம் . ஊழலுக்கு எதிராக இனி ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. லஞ்சம் ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும் ,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற காந்தியவாதியும் சமூக சேவகருமான அன்னா ஹசாராவின் சிவில் சமூகம் லோக்பால் மசோதா கமிட்டியில் இடம் பெற்று இருந்தனர் .ஹசாரே குழுவினர் பிரதமர் , நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வழியுருத்தி வந்தார்கள் .

ஹசாரே குழுவின் இத்தகைய முக்கிய கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு கடந்த வாரத்தில் மத்திய அரசு நாடாளு மன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது .சிவில் சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளை மசோதாவில் சேர்க்கத் தவறினால் ஆகஸ்ட் 16 முதல் புதுதில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக ஏற்கனவே அன்னாஹசரே அறிவித்து இருந்தார்.

ஆனால் தில்லி காவல்துறை காந்திய வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் 22 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.முதலில் உண்ணாவிரதத்திற்கு இடம் தர மறுத்தது.ஹசாரே குழுவினர் எந்த இடமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்ன பிறகு பெரோஸ்கோ கோட்லா மைதானம் அருகில் உள்ள ஜெயப்பிரகாஸ் நாரயண் பூங்காவில் அனுமதி அளித்தனர்.

தற்பொழுது அனுமதித்துள்ள இடத்தை காவல்துறைதான் பரிந்துறைத்தது.அதற்க்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி 18-ம் தேதி மாலை 5-மணிக்கெல்லாம் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறது.ஹசாரேவின் சிவில்சமூகம் காலவரையற்ற போராட்டம் தேவை என்கிறது! காவல் துறை அதை கட்டுக்குள் கொண்டு வரமுயல்கிறது.

மேலும் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களை மருத்துவ குழு ஒன்று மூன்று வேலையும் பரிசோதித்து,தேவைப்பட்டால் மருத்துவமணைக்கு எடுத்துச்
சென்று ஊசிமூலம் உணவு செலுத்தப்படும்.போராட்டத்தில் 5,0000 தொண்டர்கள் மற்றும் 50 கார்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை மிரட்டுகிறது.

கூடவே தொண்டர்கள் கத்தி,கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு
வரக்கூடாது என ஹசாரே குழுவின் காந்திய வழியிலான சத்தியாகிரகப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆயுதங்கள் இருந்தால் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்களாம்.

ஹசாரேவின் சிவில்சமூகம் காவல்துறையின் இத்தகைய கட்டுப்பாடுகளை
ஏற்க மறுக்கிறது.இதனால் போரட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.தடையை மீறி போராட்டம் நடத்தவும்,சிறை நிரப்பவும் ஹசாரேவின் சிவில் சமூகம் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும்,ஒய்வுபெற்ற காவல்துறை இயக்குனருமான கிரண்பேடி,உச்சநீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பிரசாந்த்பூசன்,ஆர்.எஸ்.எஸ்,
கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
Social activist Anna Hazare during his visit to Rajghat on Monday on the eve of his hunger strike for a stronger Lokpal Bill. Photo: Sushil Kumar Verma
காந்திசமாதிமுன்பு
ஹசாரே

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று ஹசாரே தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சமாதி முன்பாக அமர்ந்து தியானம் செய்யத்தொடங்கி விட்டார்.இதைப்பார்த்த ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

இவற்றை எல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஸ்திவாரி,கபில்சிபல் போன்றவர்கள் ஹசாரேவின் தலைமையில் செயல்படும் அறக்கட்டளை ஊழல்புரிந்துள்ளது.ஊழலுக்குஎதிராக போராடும் ஹசாரே ஊழல் பேர்வழி முதலில்அவரது தலைமையில் செயல்படும் அறக்கட்டளையின் முறைகேட்டுக்கு பதில் சொல்லட்டும்.சாவந்த் கமிசனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கட்டும் என்கிற ரீதியில்ஊழல் எதிர்ப்பு போரட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வதை கண்கூடாக காணமுடிகிறது.

மோசடி செய்ததாக சாவந்த் கமிசன் ஹசாரேவின் மீது குற்றம் சாட்டினால் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? யார் தடுத்தது? மத்திய அரசுக்கு ஏன் இந்தக் குழப்பம்? காமன்வெல்த்,2ஜி என்று பலலட்சம் கோடிரூபாய்களை முறைகேடு செய்துள்ளார்கள்.எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைகள்.அதனால்தான் ஹசாரேவின் போராட்டத்தைக்கண்டு அச்சப்படுகிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பிரதமர்,சனாதிபதி உள்ளிட்டவர்களுக்கும், சாதாரண சிவில் குடிமக்களுக்கும் பொதுவானதுதானே?அப்படி இருக்கும் பொழுது ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் மட்டும் ஏன் இந்த விதி விலக்கு? இது சமூக ஆர்வாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி.யார் பதில் சொல்வது?

தற்போதைய சூழலில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில்அன்னாஹசரேவின் செயல்பாடுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.எனவே எமது கொங்கு தமிழர் கட்சி ம்ற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை உறுதியுடன் ஆதரிக்கும்.தமிழ் வலைதளப்பதிவர்கள் இத்தகைய ஊழல் ஒழிப்பு போரட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
                                             இவன்:டி.கே.தீரன்சாமி 
.நன்றி:புகைப்படம் திஹிந்த்,ஹசாரே வ.தளம்

best links in tamil
More than a Blog Aggregator

"வனயுத்தம்"படப்பிடிப்பு துவக்கம்!சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை திரைப்படமாகிறது!

                                        
ஒருவழியாக சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெள்ளித்திரையில்
படமாக்கும் வேலை தொடங்கிவிட்டது. காட்டையும் நாட்டையும் கலக்கி
வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச்
சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து
இயக்குகிறார் குப்பி புகழ் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.சந்தனக்காட்டின்கதையை
படமாக்கும் முயற்சியில பல இயக்குநர்கள்முனைப்புக்காட்டினார்கள்.
அதில் முந்திக்கொண்டவர் ஏ.எம்.ஆர்.ரமேஸ்.

ஏற்கனவே, மக்கள் தொலைக்காட்சியில் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் கதை வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டு தொடராக ஒலிபரப்பப்பட்டது.இது மக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.இத்தொடரை கொளதமன் எழுதி இயகினார்.

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா! வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உதவியுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏ.எம்.ஆர். ரமேஸ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு "வன யுத்தம்" என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில்
நடிப்பவர் கிஷோர். சமீபத்தில் தனுசூ நடித்த பொல்லாதவன் உள்ளிட்ட ஏரளாமான படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இரு மொழிப்படமாக தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும்,
எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில்
முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

வீரப்பனின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே படமாக்க உள்ளனர்.குளத்தூர்,மேட்டூர்,கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் படப்பிடிப்பு முழுவது நடத்தப்படுகிறது.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன்
வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

66-வது சுதந்திர தினம்.
 லட்சக்கணகான உயிர்களை விலையாக கொடுத்து,200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி நம் நாட்டை கொள்ளை கொண்ட வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.ஆனால்,இன்று லஞ்சம் ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.

இத்தகைய புற்று நோயின்பிடியில் இருந்து நமது தேசத்தையும்,
தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை!வாருங்கள் காந்தியவாதி அன்னாஹசாரே தலைமையில் அணிதிரண்டு பார்ப்போம்.வாருங்கள் உழலுக்கு எதிரான சுதந்திரப்போரை தொடங்குவோம்.

தயவு செய்தி பதிவுகளை படித்து விட்டு ஒரு வரியிலாவது கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்.

செய்தி மற்றும் புகைப்பட உதவி:மனிதன் ஊடகம் www.manithan.com
best links in tamil
More than a Blog Aggregator