வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதா முழக்கம் ஈழத்தில் நிரந்தர தீர்வு காணும் வரை தமிழகம் ஓயாது

 தமிழக சட்டசபையில் கடந்த ஜீன் மாதம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானத்தை தமிழக மக்களும்,ஈழத்தமிழ் ஆதரவாளர்களும்,தமிழ் ஊடகங்களும்,புலம் பெயர் தமிழர்களும் வரவேற்றனர்.

 அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை அமரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேரில் சந்தித்து பேசினார்.அப்பொழுதும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஹிலாரியிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.

அமரிக்கா வெளியுறவுத்துறையும்,இந்திய வெளியுறவுத்துறையும் இலங்கைஅரசை போர்குற்றவிசாரணைகள் நடத்த வேண்டுமென வற்புறுத்தியது.இந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அமரிக்காவின் உளவு விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பறந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே கடந்த இருதினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் தமிழக முதல்வர் அம்மா அவர்களையும் விமர்சித்து இருந்தார்.இதற்கு நமது கொங்குதமிழர்கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழக சட்டமன்றப்பேரவையில் இந்தியகுடியரசுகட்சி,தே.மு.தி.க,கம்யூனிஸ்ட் கட்சிகள் கோத்தபயாவின் விமர்சனம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்..

இத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழமுதல்வர்,
 இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி இருக்கவேண்டும்.இத்தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் கோத்தபயா விமர்சித்து இருக்க மாட்டார்.தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்ற கோத்தபயாவின் கருத்து கச்சதீவு ஒப்பந்தத்திற்கு எதிரானது.கோத்தபயாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டசபை தீர்மானம் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தமிழகம் ஒயாது என தமிழக முதல்வர் சட்டசபையில்முழங்கினார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த கோத்தபயாவுக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: