வியாழன், 20 அக்டோபர், 2011

"அண்ணாகசாரேவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதா"?


விகடன் இணையதள விவாதக்களத்தில் "அண்ணாகசாரேவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதா"? என்ற களத்தில் நான் பதிவு செய்த கருத்துரை!

அண்ணாகசாரே!அண்ணாகசாரே! ஏன்? எதற்காக? எப்படி? நாடு முழுவதும் விவாதப்பொருளானார்.ஒருநாள் இரவில் தன்னை உயர்த்தி கொண்டார?

தங்கள் கருத்தாளுமையை பதிவு செய்யும் முன்பு ஒரு வினாடி சிந்தியுங்கள்!அண்ணாகசாரேவிடம் ஏதோ ஆற்றல் இருக்கிறது.ஆளுமைத் திறன் இருக்கிறது.மக்களை ஈர்க்கும் சக்தியுள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நண்பர் குணா அவர்களே!லோக்பால் மசோதவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா சொல்கிறார்.நீங்கள் உடனடியாக நிறைவேற்றினால் அண்ணா பிரச்சாரம் செய்வார என்று கேட்கிறீகள்? 5 மாநில தேர்தல்களில் அண்ணா பிரச்சாரம் செய்தால் தவறு என்ன?

மக்கள் பிரச்சனைகளை நிறைவேற்ற ஒரு குழு போராடுகிறது.போராட்டக்குழுவின் கோரிக்கைகளை எந்த ஆளும் கட்சி நிறைவேற்றுகிறதோ..அந்தக்கட்சியை ஆதரிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!

நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவின் முதல் ஊழல் "முந்தரா" என்ற பெயரில் தொடங்கியது.இன்று அது 2ஜி வரை ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது.உழலுக்கு எதிராக இந்தியா முழுவதும் சிறு,சிறு குழுக்கள் போராடி வந்தன.அத்தகைய போராட்டத்தை நமது தேசம் முழுவதும் மகத்தான! மக்கள் சக்தி மிக்க புரட்சியாக கொண்டு சென்றவர் அண்ணாகசாரே என்று சொன்னால் அது மிகையாது.

நண்பர் ரகுபதி அவர்களே! தாங்கள் கூறியுள்ளது போல் பி.ஜெ.பியின் செயல்பாடுகள் காங்கிரஸை கட்டுப்படுத்த இயலவில்லை.அதற்கு அண்ணா வடிவத்தில் கடிவாளம் போடப்பட்டுள்ளது.

நண்பர் முகிலன்,சலீல் கூறியது போல் தமிழர்களை பொருத்தவரையும்!தமிழ்நாட்டில் இருந்தும் காங்கிரஸ் கட்சி தம்மை விலக்கிக் கொண்டது.அதுபோல் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக மக்கள் சக்திமிக்க ஒரு இயக்கம் தேவை!அது அண்ணா தலைமையில் உருவெடுத்தால் வரவேற்போம்.

நண்பர் அரிசங்கர் கூற்றுப்படி தற்பொழுது கசாரே எதிர்கட்சிகளுடன் கூட்டமைப்பை உருவாக்குவதே பாதுகாப்பானது.நண்பர் முகமது அவர்களே!மத்திய அரசு,காங்கிரஸ் இதில் எதை எதிர்த்தாலும் ஒன்றுதானே!வாக்குசீட்டு ஒன்றுதானே கட்சிகளை களை எடுக்க வேண்டிய ஆயுதம்.

நண்பர் மணிவண்ணன் அவர்களே!ஏதாவது ஒரு வடிவத்தில் ஊழலுக்கு எதிரான முகமை உருவெடுக்கட்டுமே!மோகனவேல் சொல்வதுபோல் சல்மான் குர்சீத் அரசியல் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறதோ!அதைவிட மேலான தகுதி கசாரேவுக்கு இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

நண்பர் கிதையத் ஏன் கசாரேவை இப்படி திட்டி தீர்கிறீர்கள்? ஏன் மதச் சாயம் பூசுகிறீர்கள்? புரியவில்லை!பாகிஸ்தான் உட்பட நமது தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வெள்ளைத் தொப்பியை தயவுசெய்து கொச்சைப்படுத்தும் முயற்சியை கைவிடுங்கள்.கசாரேவை பார்த்து யாரும் சிரிப்பதாக தெரியவில்லையே!வீரசவார்கரின் வரலாற்றை படித்துவிட்டு எழுதுங்கள்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரைக்கும் தொடர்ந்து போராடினால் மட்டுமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முயல்வார்கள் என்பது நாடறிந்த உண்மை என்பதை திருச்சிகார நண்பரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோத கொண்டுவருவதற்கு அண்ணா குழுவின் அரசியல் வியூகம் ஏற்கத்தக்கதே என்று சொல்வதைவிட!தற்போதைய சூழலில் இதை தவிர வேறு வழி இல்லை!
இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator