சனி, 2 நவம்பர், 2013

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்-


அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கம்- என்ற செய்தி தி.தமிழ் ஹிந்து, 4தமிழ்மீடியா போன்ற ஊடகங்களில் வெளியானது. அதற்கு எனது கருத்துரை:-

தெற்குஆசியப் பிராந்தியத்தில்! ஏன்? உலகஅரங்கில் இந்தியத்துணைக்கண்டம் சக்திமிக்க வல்லரசாக வளர்ந்து வருகிறது.இது அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளின் கண்ணை உருத்துகிறது.

இவர்களின் கைத்தடி பாக்கிஸ்தான்.அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கட்டுப்பாட்டில் செயல்படும் சில தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் இறங்கியிருக்கலாம்.

ஏனெனில் தமிழகமுதலவர் அம்மா அவர்கள் எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் அடுத்த பிரதம மந்திரிக்கான பார்வையில் உள்ளவர்.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப்போன்று உறுதியான,அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர் நமது முதல்வர் அம்மா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது முதல்வர் இந்தியாவின் தலைமை மந்திரியாக வந்தால்! ஆட்டம்காட்டும் அண்டை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.

அடுத்த பிரதமர் பட்டியலை சீர்குலைக்கும் ஒருபகுதியாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ இணையதளம் பாக்கிஸ்தான் கேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் உள்நாட்டு மற்றும் சர்தேச ஊடகங்கள்,வலைதளப்பதிவர்கள்,அரசியல் கட்சிகள் பாரபட்சமில்லாமல் கண்டிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள் இது போன்ற கேக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

தமிழக காவல் துறையினரும் விரைவில் கேக்கர்களை முடக்குவார்கள் என நம்புவோம்.

தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,
கொங்குதமிழர்கட்சி,
தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை மற்றும் தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.
http://theeranchinnamalai.blogspot.in  http://kongutamilar.blogspot.in
facebook.com/D.k.Theeransamy
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மைதான் பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கப்படவேண்டியவர்கள்.இது அடாவடிகள் வேண்டாத வேலை.இன்னும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தவேண்டும்