திங்கள், 15 ஆகஸ்ட், 2011

முதல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது தலைநகரத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!


நம் தேசத்தின் தலைநகரத்தில் 1975 நினைவூட்டுவதாக அறிவிக்கப்படாத எமர்சென்சி இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தில்லியின் பெரோஸ்ஸ கோட்லா மைதானம் அருகே உள்ள ஜெயப்பிரகாஸ் நாராயன் பூங்கா அமைந்துள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது தேசத்தின் 65-வது சுதந்திர தினம் முடிந்த தருவாய்யில் சனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்கும் பிரிட்டிஸ் அரசின் அதே கொடுங்கோல் தன்மையுடன்,அதே காங்கிரஸ் அரசு சொந்த சிவில் சமூகத்தின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

லோக்பால் மசோதாவில் பிரதமர்,நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களை சேர்க்கவேண்டும்.இதுதான் ஹசாரே தலைமையிலான சிவில் சமூகத்தின் கோரிக்கை!இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் அதற்கு ஆகஸ்ட்-16 தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார் ஹசாரே!

கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை கையோடு இன்று காலை கிழக்கு தில்லியின் மயூர்விகார் பகுதியில் தனது வீட்டில் இருந்த அன்னாஹசாரே மற்றும் அர்விந்த்கெஸ்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனரும்,சமூக சேவகருமான கிரண்பேடியும் கைது செய்யப்பட்டார்.காந்திய வழியிலான உண்ணாவிரதத்தை ஒடுக்கும் காங்கிரஸின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.

புதுதில்லியில் ஹசாரேவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.நாடு முழுவது ஊழலுக்கு எதிரான போர் உத்வேகத்துடன் சீற்றம் கொள்ள தயாராகி வருகிறதும்.ஐ.ஐ.டி மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவாக போராட தயராகி வருகின்றன.

இனியும் ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதாவை புறக்கணிக்கும் உழல் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.தில்லி காவல்துறையின் மிசா செயல்பாடுகள் இன்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

வாருங்கள் நாமும் லஞ்சம்-ஊழல் என்ற கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஹசாரேவின் தலைமையிலான ஊழல் ஒழிப்பு முன்னனியில் பங்கேற்போம்.
best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

மதுரை பாபாராஜ் சொன்னது…

அன்னா ஹசாரே கைது!
======================
அறவழியை இங்கே முளையிலேயே கிள்ளிக்
கசக்குகின்ற போக்கைக் கடைப்பிடிப்பார் இங்கே!
அசராமல் குண்டுவைக்கும் வன்முறையைப் போக்க
அசடு வழிகின்றார் பார்.

வன்முறை வாதிகளைக் கூப்பிட்டுப் பேசுவார்!
வன்முறை வாதிகளின் கோரிக்கை ஏற்றிடுவார்!
வன்முறை வாதிக்குக் காட்டுகின்ற ஈவிரக்கம்
அன்னாமேல் இல்லையே ஏன்?

கோயபட்சே,ராஜபட்சே, நல்லவர்கள் நாட்டில்தான்!
தூயமிகு அன்னாவைக் கைதுசெய்வார் வீட்டில்தான்!
ஊழல் கறையாலே இந்தியத்தாய் நாணுகின்றாள்1
ஊழல் ஒழிவதுதான் என்று?

நாட்டுக்கு நாடிங்கே மக்கள் கொதித்தெழுந்து
காட்டுகின்ற ஆவேசக் காரணங்கள் இங்கேயும்
ஊற்றெடுத்து நிற்கிறது!ஆனால் வெடிக்காமல்
காப்பதற்கு யார்தான் பொறுப்பு?

---மதுரை பாபாராஜ்