சனி, 20 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிரான புரட்சி தொடரட்டும்! தினமலரில் நான் எழுதிய கருத்துரை!

கசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்
என்ற தலைப்பில் வெளியான தினமலர் இனணைதளத்தின் செய்திக்கு நான் எழுதிய கருத்துரை!

நம்மை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்த வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.எதற்காக?

நம்முடைய அரசியல்வாதிகள் பல லட்சம் கோடியில் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துக்கொண்டு!உலக அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து சுகபோக வாழ்க்கையில் திளைப்பதற்காகவா?

இவர்கள யார்? எங்கிருந்து வந்தார்கள்? வீதியில் பிச்சைக்காரர்களாக சுற்றிவந்த அயோக்கியர்கள்!கள்ளச்சாரய வியபாரிகள்!கழுத்தை அறுத்து செயின் திருடும் கும்பல்!அரிதாரம் பூசிய நடிகர்கள்,பிலேடு பக்கிரிகள்,திரவிடம்,தமிழன்,தமிழ்,ஈழத்தமிழன் என்று முழங்கி வயிரு வளர்க்கும் திருடர்கள்,வேலா வேலைக்கு சாராயத்தில் மிதக்கும் குடிமகன்கள்! மட்டை அடித்தேன் என்று சொல்லித்திரியும் கொலைகாரக்கூட்டம்!

இவர்கள்தான்! இத்தகைய மோசாடிப் பேர்வழிகள் தான்! நம்மை பெரும்பான்மையாக ஆண்டு வந்தவர்கள்! அதிகாரம் செலுத்தியவர்கள்! நினத்தாலே கசக்கிறது.நம்முடைய வாக்கு உரிமையை தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரர்களாக மாறி கையேந்திப் பெற்றுக்கொண்டவர்கள்!

ஆட்சிஅதிகாரம் என்ற பெயரில் நம்மை கொத்தடிமைகளாக்கி,
கொடுமைப்படுத்தி,கொள்ளையடித்த வந்தவர்கள்!இன்று அண்ணா காசாரேவின் மந்திரக்கோலைக் கண்டு,அவர் பின்பு நாடு முழுவதும் திரண்ட மக்கள் படையை பார்த்து நடு,நடுங்கிவருகிறது.

தேர்தல் திருடர்களின் பாதை! நாடாளும் மன்றம் ஒரு பன்றித்தொழுவம் என்று இளைஞர்களை மூலைச்சலவை செய்து நாட்டைத் திருதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அலையும் கொள்ளைக் கூட்டம் இன்று விழி பிதுங்கி உலருகிறது.

நாடு எக்கேடு கெட்டுப்போனால் நமக்கு என்ன? அரசியல் ஒரு சாக்கடை!அரசியலுக்கு போனால் வேலை கெட்டுவிடும்! என்று 2011, ஆகஸ்ட் 15 வரை ஒதுங்கி இருந்த நல்லவர்களும்,படித்தவர்களும் "இனிப்பொருப்பதற்கு ஒன்றும் இல்லை! பொங்கி எழு"என்ற கோசத்துடன்! எரிமலையாக கொந்தளித்தார்கள்.தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிரான மக்கள் படை தன்னெழுச்சியாக திரண்டு சனநாயகப்போருக்கு தயாராகி விட்டது.

தினமலர் போன்ற செய்தி ஊடகங்கள் கொழுந்து விட்டு எரிந்து வரும் ஊழலலுக்கு எதிரான தீயை அணைந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஊழலை ஒழிப்பது மட்டும் நமது வேலை அல்ல! சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களின் பிதாமகன்களை முச்சந்தியில் நிறுத்த வேண்டும்.அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்!

நேற்றைக்கு தினமலர் செய்தி ஊடகத்தின் முதல் பக்கத்தில் கோவை கொடீசியா அரங்கத்தில் நடைபெறும் ஊழலலுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மானசீகமான அழைப்பு!

 கொங்குதமிழர்களை,கொங்குநாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களையும் தட்டி எழுப்பியது.லஞ்சம்-ஊழல் எனும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று அண்ணா கசாரே தலைமையில் தொடங்கி விட்டது.

வாருங்கள் நாமும் இணைந்து போராடுவோம்!உழல் பேய்களை ஓட,ஓட விரட்டுவோம்!சத்தியமாக ஊழலை ஒழிக்க முடியும்!


best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

இந்த கொள்ளைக்கார கும்பலிடம் இருந்து நம் நாட்டை காக்க வேண்டும். எதாவது செய்தே ஆக வேண்டும். ஹசாரேவுக்கு தோழ் கொடுப்போம். வாருங்கள்.