ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஆர்பரிக்கும் மக்கள்புரட்சி!ஆர்வத்துடன் நாமும் இணைவோம்!


 பல ரூபங்களில் கிளர்ந்தெழும் கசாரே போர்:எம்.பிக்கள்-அமைச்சர் வீடு முன்பு தர்ணா-

தினமலர் இணையதள செய்தி ஊடககத்தில் வெளியான பகுதிக்கு நான் எழுதிய கருத்துரை.

உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 65-வது சுதந்திர தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று முடிந்த ஆகஸ்ட் 15 -அன்று ஊழலலுக்கு எதிரான விடுதலைப்போராட்டம் தொடங்கி விட்டது. 1958-ல் "முந்த்ரா"நமது தேசத்தின் முதல் உழல்.நமது இந்தியப் பிரதமர் நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்.

முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பெரோஸ்காந்தி.இவர் நேருஜியின் மருமகன்,ரேப்ரேலி தொகுதியின் மக்களைவை உறுப்பினர்,ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இந்திரா அம்மையாரின் கணவர்,ராஜிவ் காந்தியின் தந்தை,சோனியாகாந்தியின் மாமனார்,ராகுல்ஜீயின் தாத்தா.

 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா" ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.

 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.

அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.

ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரியான இராமன்- முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.

முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.

  இதன் விளைவு தான் இன்று சுரேஸ்கல்மாடியின் தலைமையில் காமன்வெல்த் ஊழல்,தில்லியில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்,ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!

இப்படி முனை மழுங்கிப் மொளனம் சாதித்த மக்கள் கூட்டம் அண்ணா கசாரேவின் மந்திரப் புண்னகையில் கட்டுண்டு கொந்தளிக்கும் கடல் அலையாக,குமுரும் எரிமலயாக,சுழலும் சூறவழியாக,பாயும் புலியாக சீற்றமென பாயத்தொடங்கி விட்டது.

இந்தப் புலிப் பாயிச்சலை தொடர்ந்து வேகப்படுத்தி வரும் தினமலர் போன்ற செய்தி ஊடகங்களுக்கு நமது தேசத்தின் ஒட்டு மொத்த மக்களும் நன்றிக்குறியவர்களாக இருக்கவேண்டும்.

தமிழக மக்களாகிய நாம் மெகா ஊழலின் உச்சத்தை தொட்ட ஆண்டிமுத்துராஜ,கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களின் வீடுகளின் முன்பு ஆர்பாட்டம் நடத்தவேண்டும்.அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வேகப்படுத்துவோம்!

1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி"
என்ற மக்கள் கட்டமைப்பு அண்ணா கசாரே தலைமையில் நாடு முழுவதும் அணி அணியாக ஆர்பரித்து வருகிறது.

நம்மை அடிமைகளாக வைத்து ஆட்டிப்படைத்த அரசியல் கூத்தாடிகள் இன்று கிலி பிடித்து அலறிவருகிறார்கள்!வாருங்கள் நாமும் ஆர்பரிப்போம்!ஊழலை ஒழிப்போம்!அண்ணாவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநில அமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி,தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: