புதன், 10 ஆகஸ்ட், 2011

பிரிட்டனில் சிங்கள மருத்துவர் கர்ப்பிணிப் பெண்களிடம் பாலியல் விளையாட்டு!






மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களிடம் பாலியல்
தொந்தரவு செய்ததாக இலங்கையைச் சார்ந்த சிங்கள மருத்துவர் ஒருவர் மீது பிரிட்டனில் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன்னிடம் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்கள் இருவரை பாலியல்
தொந்தரவு செய்ததுமட்டும் அல்லாமல்,பெண்மருத்துவரின் மார்பில் முத்தமிட முயன்றதாகவும் இம்மருத்துவர் மீது பிரிட்டனின்
பொதுமருத்துவ கவுன்சிலில்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டின் டெய்லிமெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவர் 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மருத்துவராக பதிவு
பெற்றுள்ளார். கர்ப்பிணிப்பெண்களிடம் சோதனைகளை மேற்கொள்வதற்கு
முன் "இது உன் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்" என மயக்க வார்த்தைகளை கூறியதாக பொது மருத்துவச் கவுன்சிலில் விசாரணைக் குழு முன்னிலையில புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சோதனைக்குமுன் நோயாளிகளின் கீழ் ஆடைகளை அகற்ற வேண்டும்.இத்தகைய செயல் அப்பெண் மிக ஆபத்திற்குள்ளானதாகவும் சங்கடமாகவும்உணர்ந்ததாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

மற்றொரு பெண், நீத் அன்ட் போர்ட் டால்பாட் மருத்துவமணைக்கு கடந்த
வருடம் பிப்ரவரி மாதம் தான் ஸ்கேன் பரிசோதனைக்குச் சென்றபோது,
மேற்படி மருத்துவர் அப்பெண்ணின் பிருஷ்டத்தை அமுக்கி,திருகியதாக
அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறினார்.

அதேவேளை கடந்த வருடம் ஜூலை மாதம் மேற்படி சிங்கள மருத்துவர்
தன்னை கட்டிப்பிடித்து மார்பில் முத்தமிடமுயன்றதாகபெண் மருத்துவர்
ஒருவர்புகார்அளித்துள்ளார்.

சாதீகள்,இனங்கள,மதங்கள்,மொழிகள்,நிறங்கள்,நாடுகள்,கலாச்சாரங்கள்
வித்தியாசப்படலாம்.ஆனால்பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை மட்டும் எந்த வித்தியாசம் இல்லாமல் ஒன்றாகவே உள்ளது.


நன்றி-செய்தி மூலம்:மனிதன் செய்திகள்,டெய்லிமெயில்

best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: