வெள்ளி, 14 ஜனவரி, 2011

விமர்சனம்-சீறும்"சிறுத்தை"ராக்கெட்ராசாவிற்க்கு கிடைத்த அங்கீகாரம்-"கார்த்தியின் அட்டகாசம்.

   "சிறுத்தை"திரைப்படம் வெளியாகும் முன்பே! நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயரைத் தவறாகப் படத்தில் கொச்சை படுத்தியுள்ளாதாக கூறி அக்கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடிகர்"கார்த்தியின்" வீட்டு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  படத்தின் தயாரிப்பாளார் ஞானவேல்ராசன் சிறுத்தை படத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.படம் வெளியாகும் போது உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்வார்கள் என்று கூறியிருந்தார்.நான் கடந்த பதிவில் "சிறுத்தைக்கு எதிர்ப்பு" என்ற தலைப்பில் நாடார் கட்சியினரின் ஆர்ப்பாட்ட செய்தியினை பதிவு செய்திருந்தேன்.

  இனிநான் பார்த்த சிறுத்தைப் படத்தை அலசுவோம்.கார்த்தி முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ராக்கெட் ராசா என்ற பெயரில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்திக்கும்.காட்டுப்பூச்சியாக சந்தானமும் இணைந்து படத்தின் இடைவேளை வரை முழுநீல கலக்கல் காமெடியாக ரசிகர்களை வ்யிறு குழுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தின் காமெடி கலக்கல் வடிவேலுவின் இடத்தை பங்கு போடுவதாக உள்ளது.

  முதல் பகுதியில் நாடர் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவின் பெயருக்கு கலங்கம் என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என நாம் யோசிக்கும் வினாடியில்-ராக்கெட் வேகத்தில் பாய்ந்து செல்லும் திரைக்கதை- நாடர் தலைவரின் நன்மதிப்பை எவரெஸ்ட் உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது.திரைக்கதை,வசனம் எழுதி படத்தை இயக்கிய சிவாவிற்கு சபாஸ்.சிறுத்தைக்கு எதிராக சீறியவர்கள் காயம் பட்டதுதான் மிச்சம்.

  படத்தின் விறு,விறு இரண்டாவது வேடம் ரத்தினவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்.ஆந்திர மாநிலம் அடர்ந்த காட்டு பகுதியின் அசைக்க முடியாத தாத பாபுஜீ- அவரது தம்பியுடன் இணைந்து கஞ்சா பயிரிட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.அந்த பகுதி முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுகிறார்கள்.மக்களும்,வியாபாரிகளும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

   கிராமத்தில் இருக்கும் பெண்களை குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியை அவர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்வது அக்கிரமத்தின் உச்சம். ரசிகர்களின் மனதில் சீக்கிரம் வாய்யா!ரத்தின்வேல் பாண்டியன்! வில்லன்களின் கொட்டத்தை அடக்கு! என்று பல்ஸ் எகிறுகிறது.

  சுறு,சுறு ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வருகிறார்.சிறுத்தையாக சீறுகிறார்.மொத்த படத்திலும் அரைமணி நேரம் அசத்துகிறார் ஐ.பி.எஸ்.

 வடசென்னையின் தாதக்களையும்,ரவுடிகளையும் கட்டுக்குள் கொண்டுவந்து பல என்கவுன்டர்களை நடத்தி தற்போது சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக இருக்கும் ஐ.ஜி.ரவி.ஐ.பி.எஸின் அதே முகம்,அதே மீசை,அதே பார்வை அசத்துகிறார் கார்த்தி.

 வில்லன் கூட்டணியின் கைப்பாவையாக அமைச்சர் சந்தான பாரதி,மனோபாலா காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள்.ஆந்திரத்துப் பெண்ணாக வரும் தமனா பிக்பாக்கெட்காரன் என்று தெரியாமல் ராக்கெட்ராசாவை காதலிக்கிறார்.ஒட்டியாக சிறுத்த,வெளிர்நிற இடையை சிறுத்தைக்கும்,ரசிகர்களுக்கும் காட்டி இளவட்டங்களின் விசிலுக்கு இறையாகிறார்.

  ஒரு சமயம் தங்கப்பெட்டி ஒன்றை திருடிவரும் கார்த்தி-சந்தானம் கூட்டணி-பெட்டியில் தங்கத்திற்கு பதிலாக குழந்தை இருப்பதும்-அது கார்த்தியை அப்பா என்று அழைப்பதும்-குழந்தையிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் காமெடி+சென்டிமென்ட்.

 ராஜீவனின் கலை அபாரம்.ராஜா,ராஜா,ராக்கெட்ராஜா என்ற பாடலும்,அதற்கு கார்த்தியின் நடனமும்-வித்தியாசாகரின் பின்னனி இசை மிரட்டலும் படத்தின் பலம்.சண்டைக்காட்சிகளும்,ஒலிப்பதிவும் சிறுத்தையின் கூடுதல்பலம்.

 ரத்தினவேல்பாண்டியன் ஐ.பி.எஸ் வில்லன்களை ஒடுக்கும் போராட்டத்தின் இருதியில் அடிபட்டதும்,பிக்பாக்கெட் ராக்கெட்ராசா போலீஸ் அதிகாரியாக மாறுவதும் படத்தின் உச்சகட்ட சுவராஜ்ஜியம்.ஒரு கட்டத்தில் திருடன் என்று தமனா,கார்த்தியை விட்டு விலகுவதும்,குழந்தை- திருடனை அப்பா என்று அழைப்பதும் படத்தின் சஸ்பென்ஸ்.

 இது விக்ரமாடு என்ற தெலுங்கு படத்தின் தழுவல். படத்திற்கு பாடல் கை கொடுக்க வில்லை.மொத்தத்தில் கார்த்தியின் சிறுத்தை பொங்களுக்கு பாய்ந்த ராக்கெட்.வசூலில் பெரிய டார்கெட்.

 தீரன்சின்னமலை-(சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு)-செய்தி ஊடகப் பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: