புதன், 22 ஏப்ரல், 2015

ஏப்ரல்-22 உலக புவிதினம்..

சாயநீர் ஓடும் நொய்யல் நதி

ஏப்ரல்-22 உலக புவிதினம்.புவியை பாதுகாப்பது!.
புவியை பாதுகாப்பதுன? நம்ம ஏன் புவியை பாதுகாப்ப வச்சுக்கனும்?.                                                                                                                                                

அரசாங்கம் எதுக்கு இருக்கு? எம்.எல்.ஏக்கள்,பஞ்சாயத்துக்கள்,அமைச்சர்கள்,அதிகார மையங்கள்னு-நம்மோட வரிப்பணத்தில் 99-விழுக்காடு சம்பளமா வாங்கிக்கிறாங்கா!
ஊழலா..லஞ்சமா..மீதியை கொள்ளையடிக்கிறாங்கா! அவங்க புவியை பாதுகாக்கட்டுமே! அவங்களுக்கு என்ன வேலை?

உங்க ஆதங்கம்..கோபம் எனக்கு புரியுது...ஆனா..பாருங்க புவின்னு சொன்ன..

நம்ம சித்தர்கள் கணக்கில மண்(உடல்),நீர்(இரத்தம்),நெறுப்பு(உடல் வெப்பம்),காற்று(ஆக்சிசன்),ஆகாயம்(உயிர்) என்று ஐந்து பொருள்கள்,பஞ்ச பூதங்கள்,பொளதீக பிரிவுகள்னு சொல்லாறங்கா..

இப்ப இந்த ஐந்து பிரிவுகளின் சேர்க்கை தான் நம்ம உயிருள்ள உடலா இருக்கு..அப்போ..இவைகளை மாசுபடுத்தாம..முடிந்த அளவு ஒவ்வொரு தனிமனிதனும் அக்கரை எடுத்துக்கிட்ட..புவியை சுத்தமா வச்சுக்க முடியும்...மேலும் மரக்கன்றுகள் நிறைய நடனும்..இன்றைய புவிதினத்தில் இதை உறுதிமொழியா ஏற்றுக்கொள்வோம்... 

கீழே பாருங்கா தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி.(ஏப்ரல்-22)

காகிதங்கள்,காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால் அவை பூமியைவிட்டு நீங்க 1-முதல் 2-மாதங்கள் ஆகும்.
தெர்மாகூல் கப்புகளை போட்டால் 50- ஆண்டுகள்..பிளாஸ்டிக் கேன்கள் 80-முதல் 200 ஆண்டுகள்,பிளாஸ்டிக் பைகள் 50-முதல் 1000 ஆண்டுகள்..,
பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள்,..ஆகும்.

இதில் பிளாஸ்டிக் பொருள்கள் அணுகுண்டைவிட அபாயகரமானவை...

கீழே உள்ள புகைப்படம்-மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம்நாடு,மேலப்பாளையம் கிராமத்தில் பாய்ந்து ஓடும் இயற்கையின் அருற்கொடையான பாசன வாய்க்கால்.....

best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: