ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இந்தியப் பெருஞ்சுவர்

விகடன் இணையதள விவாதக் களத்தில் "இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் ட்ராவிட்" என்ற தலைப்புக்கு- நான் பதிவு செய்த கருத்துரை

ராகுல்... வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணிக்காக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்!

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த மைதானத்தில்...மட்டையாளர்களின்
தலையை பதம் பார்க்க எழும்பி வரும் பவுன்சர்களை அநாயசமாக...பவுன்ட்ரி எல்லைக்கு விரட்டும் காட்சி அற்புதமானது.

முதன் முதலாக பவுன்சர் மூலம் ட்ராவிட்டை சீண்டி காயப்பட்டவர் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ஆலன் டொனால்டு.

நான் அறிந்த அளவில் இது போன்ற அதிவேக பவுன்சர்களை கண்டு அஞ்சாமல் ஆக்ரோசத்துடன் துள்ளியமாக பந்தை கணித்து ஆடக்கூடியவர் கன்னடத்துப்புலி ராகுல் ட்ராவிட் என்று சொன்னால் அது மிகையாகாது.

மைதானத்தில் இந்திய அணிக்காக ரன் குவிக்கும் ரன் மெசினாகவும்,
இந்தியப் பெருஞ்சுவராகவும் வர்ணிக்கப்பட்டவர்.343 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10820 ரன்களை குவித்துள்ளார்.

16- 9 - 2011 அன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 69 ரன்களை குவித்தார்.தனது கடைசி ஆட்டத்தில் முழுத்திறமையுடன் விளையாடி-தன்னால் இன்னும் 5-ஆண்டுகளுக்கு கூட சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நிருபித்த பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து 5-நாள் ஆட்டத்தில் அவரது அழகான "கவர் ட்ரைவ்" ஆட்டத்தை காண முடியும் என்பது ஆறுதலான செய்தி.
best links in tamil
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

ok ok

Astrologer sathishkumar Erode சொன்னது…

அடடே..நீங்களும் ப்ளாக்ல கலக்குறிங்களெ...வாழ்த்துக்கள்..அடிக்கடி வரேன்...சிங்கம் படம் ரொம்ப பெருசா இருக்கு..சின்னதாக்குங்க..தினம் ஒரு பதிவு போடுங்க