ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உள்ளாட்சியில் போட்டியிட என்ன தகுதி வேண்டும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை தாண்டி,சிறிய கட்சிகள்,பொதுநல அமைப்புகள்,பகுதிவாரியான பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் போட்டியிட தயாராகி வருகின்றார்கள்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி மற்றும் கட்டுப்பாடுகள் சம்பந்தமான விதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1.போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும்.

2.21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும்.அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழியராக இருக்கக்கூடாது.

3.அரசு ஊழியராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் 5-ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

4.குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டவர் 6-ஆண்டுகள் போட்டியிட முடியாது.

5.சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்து 6-ஆண்டுகள் போட்டியிட முடியாது.

6.ஆரோக்கிய குறைவான மனநிலை,காதுகேளாத,வாய்பேச முடியாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

7.திவாலானவராக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட முடியாது.

8.உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த வகையிலும் நிலுவைத் தொகை செலுத்தத் தவறி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

9.ஊராட்சியின் சார்பில் சம்பளம் பெற்று பணியாற்றும் சட்ட ஆலோசகர்,உள்ளாட்சி எதிராக பணியாற்றும் சட்ட தொழிலாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

10.ஆரோக்கியம் குறைவான மனநிலை உள்ளவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் வாக்களிக்க இயலாது.

11.தேர்தல் குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவரும் வாக்களிக்க முடியாது.

என்ன? நம் தமிழ் இணையதளப்பதிவர்களே நீங்களும் போட்டியிடத்தயாரா?

படித்தவர்கள் ஒரு வரியிலாவது கருத்துரை போடுங்கள்.
best links in tamil
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

பாலா சொன்னது…

தேவையான தகவல்கள். இப்போ இதேல்லாம் பிரச்சனையே இல்லை. நம்ம ஆட்கள் எல்லாம் தங்கள் மனைவியை நிற்கவைத்து, பவரை தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

Pavi சொன்னது…

நடப்பவை நடக்கட்டும்